Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Monday, October 21, 2013

மன்னிக்க முடியாத மன்னிப்பு ! ஆனந்தம்

      


      வெறும் நம்பிக்கைகளாகவும் ஒழுக்க விதிகளாகவும் திணிக்கப்படும் அட்வைசுகளில் ஒன்றான மன்னிப்பை, மறுப்பதே நம்மில் பலர் வழக்கமாய் கொண்டிருக்கிறோம். மன்னிக்கச் சொல்லி பல மதங்கள் நமக்கு அறிவுரை வழங்கினாலும் ஏற்றுக் கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் நம்மை படுத்துகிறது.

அமெரிக்கப் பெண்மணி ஒருவர் பகிர்ந்து கொண்ட விஷயம் இது.

      “நேற்று காலையில் என் மகளுடன் சண்டை. அவள் என்னை அடித்தாள்; கிள்ளினாள்; கடித்தாள். இரவு தூங்கப்போகும் முன், வழக்கம்போல் எனக்கு முத்தம் கொடுக்க வந்தாள். ‘ஒன்றும் தேவையில்லை’ என்றேன் வெறுப்புடன். ‘இதேபோல் நான் உன்னை அடித்துக் காயப்படுத்திவிட்டு, முத்தம் கொடுக்க வந்தால், நீ என்ன செய்வாய்?’ என்றேன். அவள் சற்றும் யோசிக்காமல், ‘உன்னை மன்னித்துவிடுவேன். என்ன இருந்தாலும் நீ என் அம்மா அல்லவா?’ என்றாள்” – இதைச் சொல்லும்போது அந்தப் பெண்மணிக்குக் கண்ணீர் வந்துவிட்டது.

மன்னிப்பு என்பது அவ்வளவு உணர்ச்சிகரமானது.

      என் வாழ்க்கையுடன் யாரும் விளையாடவில்லை என்று அர்த்தமல்ல. என் உயிரைப் பறிக்கும் முயற்சிகள் கூட நடந்து இருக்கிறது. அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அவசியமான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறேனே தவிர, எதையும் குற்றமாக நினைக்கவில்லை.
ஆனால், என் வாழ்வில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கே இடமில்லை. யாரையாவது குற்றவாளி என்று நினைத்தால்தானே மன்னிக்க முடியும்?

      அதற்காக என் வாழ்க்கையுடன் யாரும் விளையாடவில்லை என்று அர்த்தமல்ல. அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அவசியமான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறேனே தவிர, எதையும் குற்றமாக நினைக்கவில்லை. யாரையும் குற்றவாளியாகப் பார்க்கவில்லை.

     உண்மையில் மன்னிப்பு என்பதே ஒருவித தந்திரம். அது இன்றைக்கு உலகில் பெரிய வியாபாரமாகிவிட்டது. முதலில் தவறு செய்யது விட்டு அல்லது செய்ய வைத்து விட்டு பின் மன்னிப்பு என்பது?

      ஒருவன் கடற்கரையில் நடந்து கொண்டு இருந்தான். எதிரில் ஒரு விற்பனையாளன் வந்தான்.

“ஐயா, ஒரு டூத்பிரஷ் வாங்கிக் கொள்ளுங்கள். ஐந்நூறு ரூபாய்.”

“என்னது… பல் தேய்க்கும் பிரஷ் ஐந்நூறு ரூபாயா? கொள்ளையாக இருக்கிறதே?”

“வீட்டில் தயாரித்த சாக்லேட் இருக்கிறது. வெறும் ஐந்து ரூபாய்தான். அதையாவது வாங்கி உதவுங்கள்.”

“இது நியாயமாகத் தெரிகிறது” என்று அவன் ஐந்து ரூபாய் கொடுத்து அதை வாங்கி வாயில் போட்டான். உடனே, ‘த்தூ… த்தூ…’ என்று துப்பினான்.

“ஏய் இதில் கழிவறை நாற்றம் வருகிறதே?”

“அங்கிருந்து எடுத்ததுதான் சார். இப்போது சொல்லுங்கள். வாயைச் சுத்தம் செய்ய டூத்பிரஷ் வேண்டுமா?”

      இப்படித்தான், முதலில் உங்களைப் பாவம் செய்ய வைத்து பின்னர் அதற்கு மன்னிப்பு வழங்கி அல்லது கேட்க வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இது ஒரு வித அரசியல்

      ஒருவரை ஏன் குற்றவாளியாகப் பார்க்கிறீர்கள்? அவர் உங்களைப்போல் சிந்திக்கவில்லை. நடந்து கொள்ளவில்லை. உணரவில்லை என்பதால்தானே?

      நீங்கள் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீர்களோ, அப்படி சுதந்திரமாக வாழ விரும்புகிறீர்கள். உங்களைச் சுற்றி உள்ள மற்ற மனிதர்களும் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறார்களோ, எப்படி அறிந்திருக்கிறார்களோ, அப்படி வாழ விரும்புகிறார்கள். அவ்வளவுதானே?

      யாரையும் பெருந்தன்மையோடு மன்னித்துவிட்டதாக நினைக்காதீர்கள். அப்படிச் செய்தால், வாழ்நாள் முழுவதும் அவர்களை உங்கள் அடிமைகளாக நினைக்கத் தோன்றும்.

அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பு எழுதாமல் இருப்பது அதைவிடச் சிறப்பல்லவா?

Tuesday, October 15, 2013

செயலா? செய்யும் விதமா? குட்டிக்கதை! ஆனந்தம்.

      அடிப்படையாக, வாழ்க்கையில் நாம் என்ன செயல் செய்கிறோம் என்பதைவிட, அந்த செயலை எப்படி செய்கிறோம் என்பதில்தான் நம் வாழ்க்கையின் தன்மை அமைகிறது.
     
      ஒரு ஊரில் மூன்று பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த ஒரு வழிப்போக்கர் முதல் நபரிடம், “நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அந்த நபர் நிமிர்ந்து பார்த்து, “பார்த்தால் தெரியவில்லையா?, நான் கல் கொத்திக்கொண்டு இருக்கிறேன். உனக்கு என்ன கண் குருடா?” என்று கேட்டார்.

      உடனே அந்த நபர் அடுத்தவரிடம் சென்று, “நீ இங்கே என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டார். அவர் உடனே நிமிர்ந்து பார்த்து, “ஏதோ வயிற்றுப் பிழைப்பிற்காக செய்கிறேன். அவர்கள் என்ன செய்யச் சொல்கிறார்களோ அதைச் செய்வேன், அவ்வளவுதான்” என்று சொன்னார்.

      அடுத்து அவர் மூன்றாவது நபரிடம் சென்று, “நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்,” என்று கேட்டார். அதற்கு அந்த மூன்றாவது நபர் மிகவும் ஆனந்தமாக எழுந்து நின்று, “நான் இங்கே ஒரு அழகான கோவிலை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார். அவர்கள் எல்லோருமே ஒரே வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ஒரே வேலையை மூன்று பேருமே மூன்று விதமாக உணர்கிறார்கள். அதற்கேற்றார் போல்தான் அவர்கள் வாழ்க்கையின் தன்மையும் அமைகிறது. எனவே எளிமையான செயல் செய்கிறீர்களா அல்லது மிகவும் கடினமான செயல் செய்கிறீர்களா என்பதைவிட செய்யும் வேலையை எப்படி செய்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்க்கைத் தன்மையை நிர்ணயிக்கிறது.

Thursday, August 22, 2013

சிகரத்தை அடைவதற்க்கு சுலபமான‌ வழிகள்! ஆனந்தம்

      


      வாகனம் ஓட்டுவது என்று தேர்ந்தெடுத்துவிட்டால் போக்குவரத்து நெரிசலை ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆரோக்கியம் குறித்து அக்கறை கொண்டிருந்தால், நாக்கு கேட்டதையெல்லாம் அதற்கு கொடுக்க முடியாது! வருமானம் என்றால் வருமான வரியும் உடன் வரும்.

      வாழ்க்கையில் நீங்கள் எதைத்தேர்ந்தெடுத்தாலும் அதோடு ஒட்டிப்பிறந்த நன்மைகளோடும் தீமைகளும் தான் அதுவரும். முட்களற்ற ரோஜாவைத் தேடுவது எவ்வளவு மடத்தனம்! நானயத்தின் ஒரு பக்கத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அதன் மறுபக்கத்தையும் சேர்த்துதான் நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். பிரச்சனைகளற்ற ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்று கேட்க்காதீர்கள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை மகான்க‌ளால் கூட வாழமுடியாது! அப்படிப்பட்ட வாழ்க்கை எதுவும் கிடையாது!

      கனவுகள் பெரிதாகும் போது பிரச்சனைகளும் பெரிதாகும். நீங்கள் நடக்க விரும்பும் போது ஒருசில பிரச்சனைகள் மட்டுமே இருக்கும். அதே நேரம் ஒரு ஓட்டப்பந்திய வீரனாக பந்தயங்களில் கலந்து கொள்ள நீங்கள் விரும்பினால், பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது வெளிப்படை. வெறுமனே வாழ்க்கையை ஓட்டினால் மட்டும் போதும் என்று நீங்கள் நினைத்தால், பிரச்சனைகள் குறைவு தான். ஆனால் உங்கள் முழுத்திறனையும் வெளிப்படும் விதத்தில் வாழ நினைத்தால், நீங்கள் பெரிய பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

      செதுக்கப்பட நீங்கள் தயாராக இருந்தால் தான், துதிக்கப்படும் ஒரு சிலையின் நிலையை அடையும் தகுதியை உங்களால் பெற‌ முடியும். சிகரத்தை அடைவதற்க்கு சுலபமான‌ வழிகள் ஏதும் கிடையாது. சிகரத்தை அடைந்தவர்கள் அதை சுலபமாக சென்றடையவில்லை.

      என்ன இருந்தாலும் வரலாற்றை படிப்பவனுக்கும், வரலாற்றைப் ப‌டைப்பவனுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே வேண்டும்?

வெள்ளியின் கதை:    

      பைபிள் வாசிப்புக் குழு ஒன்றில் இப்படி ஒரு வாசகத்தைப் படித்தனர்: "வெள்ளியை சுத்தப்படுத்தும் மாசு அகற்றும் நபர் போல அவர் அமர்ந்திருப்பார்." கடவுளின் குணம் மற்றும் இயல்பு குறித்து இங்கு கூற முற்படுவது என்ன?
      அந்த வாரம் அக்குழுவில் இருந்த ஒரு பெண்மனி வெள்ளி உலோகக்கொல்ல‌ன் ஒருவன் வேலை செய்வதைப் பார்ர்கச் சென்றாள். அங்கே
முதலில் கொல்லன் ஒரு துண்டு வெள்ளியை  எடுத்து தீயில் வைத்து அது சூடாவதற்காக காத்திருந்தான். "வெள்ளியை தீயின் நடுவில் வைக்கவேண்டும். ஏனெனில் அங்கே தான் சூடு அதிகமாக இருக்கும், அது அனைத்து மாசுகளையும் எரித்துவிடும்" என்று எடுத்துரைத்தான் கொல்லன். "முழுநேரமும் உலையின் முன்னாலேயே உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது உண்மையா?" என்று அந்தப் பெண்மனி கேட்டாள். "உண்மைதான்! முழுநேரமும் உட்கார்ந்திருப்பது மட்டுமல்லாமல், வெள்ளியில் இருந்து கண்களை அகற்றவும் கூடாது" என்றும் தெரிவித்தான். "அதிகப்படியான் ஒரே ஒரு கணம் வெள்ளியை நெருப்பில் விட்டுவிட்டால் அது உருகி ஓடிவிடும்". உடனே அப்பெண்மனி "வெள்ளி முழுவதும் மாசு அகற்றப்பட்டுவிட்டது என்பது உனக்கு எப்படித் தெரியும்?" "ஓ! அது ரொம்ப சுலபம்...... என் உருவத்தை நான் அதில் பார்க்கும் போது!"
      வாழ்க்கைப் பிரச்சனை உங்களை அதிகமாகத் தாக்குவதாக நீங்கள் உணர்ந்தால், கடவுள் உங்கள் மீது தான் வைத்த கண்னை எடுக்கவில்லை என்பதையும், அவரது பிம்பம் உங்களில் தெரியும் வரை அவர் தனது கண்களை அகற்ற மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு தீர்கதரிசி உறங்கிக்கொண்டிருக்கிறான். கடவுள் மனிதனாக மாறியதற்க்கு காரணம், மனிதன் மீண்டும் கடவுளாக ஆக வேண்டும் என்பதற்காகதான். வாழ்க்கை என்பது உங்களை எரித்துக் கொண்டிருக்கும் ஒரு உலை அல்ல. ஜொலிக்கும் வெள்ளியாக மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு உலை!
      வாழ்க வள‌முடன்! 

Sunday, June 23, 2013

காதல் படுத்தும் பாடு! ஆனந்தம்

      


      பஸ்ஸில் மிக அழகான ஒரு பெண்ணை அடிக்கடி பார்க்கிறேன். அவள் முகம் என் மனதில் அப்படியே ஒட்டிக் கொண்டுவிட்டது. கல்லூரி செமஸ்டர் நேரம் இது. படிப்பதற்காகப் புத்தகங்களைத் திறந்தால், அந்தப் பெண்ணின் முகமே வந்துவந்து என்னைத் தொந்தரவு செய்கிறது. அவள் முகம் தரும் சந்தோஷம் ஒருபுறம், படிக்க முடியவில்லையே என்கிற துக்கம் மறுபுறம்… இரண்டும் சேர்ந்து வறுத்தெடுக்கின்றன. நான் என்ன செய்வது?”

சத்குரு:

      யாரோ ஒருத்தியின் நினைவு உங்களுக்குச் சந்தோஷம் தரமுடியும் என்பதெல்லாம் சுத்தப் பேத்தல். ஒரு பெண்ணைப் பார்த்தீர்கள். அது மகிழ்ச்சியைத் தந்தது. அவ்வளவுதானே? கவனியுங்கள். அந்தப் பெண்ணைப் பற்றி நினைத்ததும் மகிழ்ச்சி எங்கே பிறக்கிறது? உங்களுக்கு வெளியிலா, உள்ளேயா? உள்ளேதானே? தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். ஆனந்தத்தை உங்களால் கொடுக்கவும் முடியாது. வாங்கவும் முடியாது. அதை அனுபவிக்கத்தான் முடியும். அது எப்போதும் உங்களுக்குள்தான் இருக்கிறது. அதைத் தூண்டி உயிர்ப்பிக்கும் சக்தியை வெளியில் யார் கையிலோ ஒப்படைத்துவிட்டீர்கள். அதனால், குரங்காட்டியின் கோலுக்கு ஆடும் குரங்கைப் போல் ஆடுகிறீர்கள்.

      படிப்பு முக்கியமா, காதலி முக்கியமா என்பது இல்லை இங்கே பிரச்சனை. உங்கள் ஆனந்தம்தான் முதல் முக்கியம். சந்தோஷம் என்று நீங்கள் நினைத்தது உங்களுக்கு வேதனையாக மாறிவிட்டபோது, அதைச் சுமப்பதா புத்திசாலித்தனம்?
     
      படிப்பு முக்கியம் என்று தோன்றினால், முழுமையான ஈடுபாட்டுடன் உங்களை அதனுடன் பிணைத்துக் கொள்ளுங்கள். மற்றதெல்லாம் தானாக மறைந்துவிடும். மாறாக, ஒரு குறிப்பிட்ட நினைவை மனதிலிருந்து போராடிப் பிய்த்து எறிவது என்பது நடவாத காரியம். அப்படி முயற்சி செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால், அதுவே உங்கள் முழுநேர வேலையாக ஆகிவிடும்.
பனிப் பிரதேசத்தில் இருந்த ஒரு சித்தரைத் தேடிப் போனார் சங்கரன்பிள்ளை. “மண்ணைத் தங்கமாக்கும் மந்திரம் உங்களுக்குத் தெரியுமாமே? எனக்கு சொல்லித் தருவீர்களா?” என்று மண்டியிட்டார். சித்தர் சம்மதித்தார். மந்திரங்களை சங்கரன்பிள்ளை காதில் ரகசியமாகச் சொன்னார்.

      சங்கரன்பிள்ளைக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. “இது வெகு சுலபமாக இருக்கிறதே! இந்த மந்திரங்கள் நிச்சயம் வேலை செய்யும்தானே?” “நிச்சயம் இது மண்ணைப் பொன்னாக்கும். ஆனால், ஒரு நிபந்தனை. மந்திரங்களை உச்சரிக்கும்போது, குரங்குகளைப் பற்றி நீ நினைக்கக்கூடாது” என்றார் சித்தர்.

      சங்கரன்பிள்ளை சிரித்தார். “போயும் போயும் குரங்குகளை நான் ஏன் நினைக்கப் போகிறேன்?”

      ஆனால், சங்கரன்பிள்ளை மந்திரங்களைச் சொல்லக் கண்களை மூடினால் போதும், குரங்குகளைப் பற்றி நினைக்கவே கூடாது என்ற நினைப்பே அவர் நினைவு பூராவும் ஆக்கிரமித்தது. இருபத்து நான்கு மணி நேரமும் சிந்தனையில் குரங்குகள் நிரம்பி வழிந்தன.

      இரண்டு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல், சித்தர் காலில் போய் விழுந்தார் சங்கரன்பிள்ளை. “பொன்னே எனக்கு வேண்டாம். என்னைச் சுற்றிக் கும்மாளமிடும் குரங்குகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். அது போதும்!” என்று கதறினார்.

      மனித மனம் அப்படித்தான். எதையாவது தவிர்க்க நினைத்தீர்கள் என்றால், அதையேதான் வட்டமிடும். உங்கள் மனதை உங்கள் வசப்படுத்திக் கொள்ளும் தந்திரத்தை நீங்கள் தெரிந்து கொள்ளும் வரை, எதை நிராகரிக்கப் பார்க்கிறீர்களோ, அதுதான் உங்கள் மனதில் நிரம்பி வழிந்து ஆக்கிரமிக்கும்.

      உங்களுக்கு என்ன நடக்கிறது என்கிற விழிப்புணர்வு இல்லாமல், உங்கள் வாழ்க்கையைக் கடைசி வரை செலுத்தப் போகிறீர்களா?

      இன்றைக்கு ஒரு வேலை செய்யுங்கள். கண்களை இறுக மூடிக் கொண்டு, போக்குவரத்தில் வண்டியை ஓட்டிப் பாருங்களேன். அதிர்ஷ்டம் இருந்தால், அங்கே இங்கே சிலரை இடித்துத் தள்ளிவிட்டு, இந்த முறை வீட்டுக்குக்கூட போய்ச் சேரலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த அதிர்ஷ்டம் உங்களுக்குத் துணையிருக்குமா? சீக்கிரமே உங்களை அள்ளிப்போக ஆம்புலன்ஸ் வந்து சேரும்.

      சங்கரன் பிள்ளை டாக்டரைத் தேடிப் போனார்.
“டாக்டர், என் காதுகளைப் பாருங்கள்!”
“ஐயையோ! இந்தளவுக்கு எப்படித் தீய்ந்து போனது?” என்று டாக்டர் பதறினார்.

“நான் சட்டைக்கு இஸ்திரி போட்டுக் கொண்டு இருந்தேன். அந்த நேரம் பார்த்து என் மனைவியிடமிருந்து போன் வந்தது. குழப்பத்தில் போன் என்று நினைத்து கொதிக்கும் இஸ்திரிப் பெட்டியை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டுவிட்டேன்…!”

“அடக் கடவுளே… சரி, இடக்காது எப்படித் தீய்ந்தது?”
சங்கரள்பிள்ளை பற்களை நறநறத்தார்.
“அந்த ராட்சஸி மறுபடியும் போன் செய்து தொலைத்தாளே!”

      நீங்கள் கவனத்துடன் நடந்து கொள்வதோ, சங்கரன்பிள்ளை போல் நடந்து கொள்வதோ யார் கையில் இருக்கிறது? உங்கள் கையில்தானே?

      ஆனந்தமோ, துக்கமோ.. கவனமின்றி நீங்கள் அதன் திரியை வெளியே வைத்திருக்கும்வரை, அதை வெளியிலிருந்து ஒருவர் சுலபமாகப் பற்ற வைக்க முடியும். உங்களை அலைக்கழிக்கக் கூடிய ஸ்டார்ட் பட்டனை ஏன் வேறு யார் கையிலோ கொடுத்துவிட்டு அவதிப்படுகிறீர்கள்?

      உங்கள் அடிப்படைப் பிரச்சனை என்ன தெரியுமா? நீங்கள் இங்கே இருக்கும்போது, அங்கே இருக்க விரும்புகிறீர்கள். அங்கே இருக்கும்போது, இங்கே இருக்க விரும்புகிறீர்கள்.

      நீங்கள் எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இல்லையென்றால், உங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். முழுமையான ஈடுபாட்டுடன் இப்போது செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். தேவையற்றது தானாக விலகிப் போகிறதா இல்லையா, பாருங்கள்.

      படிப்பு முக்கியமா, காதலி முக்கியமா என்பது இல்லை இங்கே பிரச்சனை. உங்கள் ஆனந்தம்தான் முதல் முக்கியம். சந்தோஷம் என்று நீங்கள் நினைத்தது உங்களுக்கு வேதனையாக மாறிவிட்டபோது, அதைச் சுமப்பதா புத்திசாலித்தனம்?

     எது ஆனந்தமோ, அதை எப்போதும் செய்யுங்கள். தப்பே இல்லை.

      ஆனால், அப்படி எதைச் சந்தோஷமாகச் செய்தாலும், அதன் பின்விளைவுகளையும் அதே சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!
                         வாழ்க வளமுடன்!

Monday, December 3, 2012

உங்களால் கணக்கிடமுடியாதவையே மதிப்பானவை - ஆனந்தம்



   
      நான் ஒரு உயர்ந்த வணிகக் கல்வி நிறுவனத்தை பார்வையிடச் சென்ற பொழுது, அங்கு அவர்கள், “உங்களால் கணக்கிட முடியாதவை மதிப்பற்றவை” என்று கற்பிப்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இல்லை, உங்களால் எதை கணக்கிட முடியாதோ அதுவே மதிப்பானது. உங்கள் வாழ்க்கையில் எதை உங்களால் கணக்கிட முடியுமோ அதன் முக்கியத்துவம் குறைவுதான். உங்களால் கணக்கிட முடிந்தது என்பது உங்கள் வருமானம்தான். வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தலாம். ஆனால் ஒரு வாழ்க்கையை உருவாக்க முடியாது. பிழைப்பு நடத்தியே உங்கள் வாழ்க்கையை கழிக்க வேண்டுமா அல்லது ஓர் நல்ல வாழ்க்கையை உருவாக்க வேண்டுமா? ஒவ்வொரு மனிதனும் தேர்ந்தெடுக்க வேண்டியது இதைத்தான்.
      துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கைமுறை செயற்கைத்தனமாகவும் விலை உயர்ந்ததாகவும் இருப்பதால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பிழைப்புக்காகவே செலவிடுகிறார்கள். வீடு வாங்குகிறார்கள், 30 வருடம் வீட்டிற்கு அடைமானமாகி விடுகிறார்கள். வீடு அடமானமாகாது, அவர்கள் தான் அடமானமாகி விடுகிறார்கள். பின்னர் கார் வாங்குகிறார்கள், அதற்கு 10 வருடம் அடமானம். அவர்கள் கல்விக்கான கடன் தொகையை அடைப்பதற்கே 15 வருடங்கள் ஆகிவிடுகின்றன. இன்றைக்குத்தான் ஒரு செய்திதாளில் படித்தேன். வரும்காலத்தில், பூமியில் இனி பிறக்கும் மனிதர்களில் மூன்றில் ஒருவர் 100 வருடம் வரை வாழ்வார்களாம். கல்வியை 32 வயதில் முடித்து அதற்கான கடன் தொகையை 50 வயதில் அடைத்து, 45 வயதில் திருமணம் செய்து 70, 72 வயதில் ஒய்வுபெற்று விடுவார்கள். அதன் பிறகு உள்ள 30 வருடங்களுக்கு இருக்கவே இருக்கிறது மருத்துவ காப்பீட்டுத் திட்டம். மருத்துவர் பின் மருத்துவராக தேடிச் செல்ல வேண்டியதுதான்.
      நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்கத் தேர்ந்தெடுத்தால், இந்த சமூகத்திற்கு என்ன செய்ய முடியும் என்கிற ரீதியில் யோசிக்காதீர்கள். உங்களுக்கென்று ஏதாவது அற்புதமான செயலை செய்தீர்களேயானால், இயல்பாகவே அதை மற்றவருடன் பகிர்ந்துகொள்வதை நீங்கள் தவிர்க்க முடியாது. மிகவும் அற்புதமான ஒன்று உங்களுக்குக் கிடைத்தால் அதை பகிர்ந்துகொள்ளத் தோன்றாதா என்ன? உங்களுக்கு கணக்கிடக் கூடிய விஷயங்களைத் தான் பகிர்ந்துகொள்ளத் தோன்றாது. வாழ்க்கையில் கணக்கிட முடியாத சில அம்சங்கள் இருப்பதை நீங்கள் புரிந்துகொண்டால், அவை என்றுமே குறைவதில்லை என்று உணர்வீர்கள். மதிப்பிட்டு சேமித்து வைக்கக் கூடிய பொருட்கள்தான் ஒரு நாள் சென்று விடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும். ஒரு கோடி ரூபாயை சேமித்து நீங்கள் வைத்திருந்தால், அதை வெளியே எடுத்தால் செலவழிந்துவிடும் என்ற பயம் இருந்து கொண்டேயிருக்கும். உங்களுக்குள் மகிழ்ச்சி இருந்தால், பரவசம் இருந்தால், ஞானோதயம் இருந்தால் அது செலவழியாது, எனவே பூட்டி வைக்கத் தேவையில்லை என்று அறிவீர்கள். அப்பொழுதுதான் உதவிக்கரம் நீட்டி என்ன தேவையோ அதை உங்களால் செய்ய முடியும்.
      இந்த உலகிற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்குப் பிடித்தமானது அல்ல. இந்த உலகிற்கு என்ன தேவையோ அதைத்தானே செய்ய வேண்டும்? உங்களுக்கு எது பிடித்ததோ அதைச் செய்யாமல் எது தேவையோ அதைத் செய்ய வேண்டும். குறிப்பாக மேற்கத்திய கலாச்சாரங்களில் இதை மாதிரி தவறான பிரச்சாரம் செய்கிறார்கள், “உங்களுக்கு விருப்பமானதைச் செய்வதே சுதந்திரம்.”
      உங்களுடைய விருப்பு வெறுப்புகள் என்பது ஒரு கட்டுப்பாட்டு நிலை. உங்களுக்கு விருப்பமானதைச் செய்ய முடியவில்லையென்றால் வேதனைப்படுவீர்கள். நீங்கள் வெறுப்பதைச் செய்ய நேர்ந்தால் வேதனைப்படுவீர்கள், இது ஒரு கடுமையான கட்டுப்பாடு, ஒரு பொறி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய விருப்பங்களுக்காகவே உங்கள் வாழ்க்கையை நீங்கள் செலவழித்தால், ஒரு ஆழமான பொறிக்குள் சிக்கிக்கொள்வீர்கள். உங்களுடைய விருப்பங்ள் எந்நேரமும் உங்களைத் துன்புறுத்திக்கொண்டே இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
      உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். முதலில் அந்த மாதிரி ஒரு மனநிலையை உருவாக்காதீர்கள். என்ன தேவையோ அதை மட்டும் செய்யுங்கள். தேவையானதை நீங்கள் செய்துகொண்டே இருந்தால், எந்நேரமும் எல்லாம் நன்றாகவே இருக்கும். கட்டுப்பாடு என்ற ஒன்றிற்கு இடமே இல்லை. இயல்பாகவே நீங்கள் விழிப்புணர்வு நிலையை அடைந்து விடுவீர்கள். வாழ்க்கையை அனுபவிக்க ஒரே ஒரு வழி விழிப்புணர்வு நிலையடைவதுதான். உங்கள் விழிப்புணர்வு குறைந்து கொண்டே போனால் நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது.
      நீங்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க முடியும். உண்மையான விழிப்புணர்வுடன் இருந்தால் எல்லாமே அற்புதமாக இருக்கும். நீங்கள் விழிப்புணர்வு இழந்துவிட்டால் இறந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
      எனவே எவ்விதமான வாழ்க்கை வாழ்வது என்பது உங்கள் விருப்பமாக இருக்கக் கூடாது. வாழ்வா சாவா என்பதைப் பற்றிதான் இருக்க வேண்டும். ஏனென்றால் விழிப்புணர்வு ஒன்றுதான் வாழ்க்கையை நடத்திச் செல்லும்.
      விழிப்புணர்வில்லாத நிலையில் நீங்கள் இருந்தால் மரணத்தை நோக்கி தவணை முறையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கையில் கணக்கிடக்கூடிய விஷயங்களில் நீங்கள் அதிக நேரம் செலவழித்தால் நீங்கள் மேலும் மேலும் விழிப்புணர்வில்லாத நிலையடைகிறீர்கள்.
      கர்நாடகாவில் ஒர் அற்புதமான துறவி இருந்தார். அல்லமா மஹா பிரபு என்று பெயர். பல்லாயிரக்கணக்கான கவிதைகள் எழுதியவர். ஒரு கவிதையில் அவர் இப்படி வருந்துகிறார் “ஒரு மனிதன் நீரில் மூழ்கிக்கொண்டிருக்கும்பொழுது கூட அவனுடன் பேச முடியும். ஒருவனைப் பாம்பு கடித்து விட்டால் அந்த நிலையில் கூட அவனுடன் பேச முடியும். ஆனால் பணம், செல்வம் முதலியவை ஒரு மனிதனைக் கடித்து விட்டால் அவனுடன் பேசவே முடியாது ஏனென்றால் அவன் உணர்விழந்த நிலையில் இருப்பான்,” என்கிறார்.
      கையில் கொஞ்சம் காசு இருந்தால் அது நிலைமையை எளிதாகவும், சாதாரணமாகவும் ஆக்குகிறது. அதற்கு பின்விளைவு எதுவும் இல்லை. உங்களால் கணக்கிட முடியாதவையே வாழ்க்கையில் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. எனவே வாழ்க்கையில் கணக்கிட முடியாதவற்றில் உங்கள் வாழ்க்கையை செலவழியுங்கள். என்ன செய்தாலும், நீங்கள் இந்த உலகத்திற்கு பெரிய அர்ப்பணிப்பாக இருப்பீர்கள்.
‍                                               சத்குரு. வாழ்கவளமுடன்!

Sunday, November 25, 2012

நீங்கள் சாகத்தான் வேண்டும்! ஆனந்தம்


     
      முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, அந்த மாலைப்பொழுதில், பேரானந்த வெள்ளத்திலிருந்து, தன்உணர்தல் அனுபவத்திலிருந்து வெளிவந்த நான், இயல்புநிலைக்கு வந்த போது, “இது மிகவும் எளிமையானது. இது உலகம் முழுவதும் பற்றிக்கொள்ளுமாறு செய்யப் போகிறேன்” என்று நினைத்தேன். அன்று முதல், மிகவும் மெதுவாக ஆனால் தொடர்ச்சியாக, இந்த உலகம், என்னைப் பணிய வைத்து, என் பூகோள எல்லைகளைக் குறைக்க முயற்சித்து வருகிறது.
      நான் இவ்வுலகை குறை சொல்லவில்லை. வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால், உள்நிலையில் எனக்கு அது மிகச் சிறந்ததாகவே அமைந்துள்ளது. வெளியிலும் கூட அது மிகச் சிறந்ததாகவே உள்ளது. எனவே நான் அதையும் குறை சொல்லமுடியாது. ஆனாலும் கூட இது எனக்கு நெருடலாகவும் மிகவும் சஞ்சலமாகவும் இருக்கிறது. முப்பது ஆண்டுகள் ஆகியும், நான் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.
      மக்களிடம், என் குறிக்கோள்களின் எல்லையைக் குறைத்துக் கொண்டு நான் பேச ஆரம்பித்து விட்டாலும், உள்ளுக்குள், ‘இது ஏன் எல்லோருக்கும் நிகழக்கூடாது?’ என்ற இச்சையுடன் இன்றளவிலும் தகித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஏனெனில் காரண அறிவு கொண்டு பார்த்தாலும், இது ஏன் அனைவருக்கும் நிகழக்கூடாது என்பதற்கு எனக்கு ஒரு காரணம் கூட கிடைக்கவில்லை. இது ஏன் அனைவருக்கும் சாத்தியமற்றது என்பதற்கு என் அறிவிற்கு எட்டியவரை ஒரு காரணமும் கிடைக்கவில்லை.
      இதை, மக்கள் தங்களுக்குப் புரிந்தபடி பல அற்புதமான பெயர்களில் அழைக்கிறார்கள். மக்கள் இதை ‘ஞானமடைதல்’ என்கிறார்கள். அப்படிச் சொல்லும்போது அது உங்களைக் கடந்து இருக்கும் ஒன்று என்று அர்த்தமாகிறது. சிலர் அதை ‘கடவுள் உணர்தல்’ என்பதாக – உங்கள் உயரத்திற்கு எட்டாத அளவில் அது ஏதோ சொர்க்கத்தில் இருப்பதாக – சொல்கிறார்கள். இன்னும் சிலர் அதை ‘தன்னை உணர்தல்’ என்று சொல்லும்போது, அது இன்னும் கொஞ்சம் பணிவான வர்ணனையாக இருக்கிறது. அல்லது இது ஒரு விழித்தெழுதலாக இருக்கலாம். நான் இதை ‘நினைவூட்டல்’ என்பேன்.
      ஏதோ ஒன்றைக் குறித்து உங்களுக்கு பல வழிகளில் நினைவூட்ட முடியும். நாளை காலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் எழ வேண்டும். இதை உங்களுக்கு நீங்களே நினைவூட்டிக் கொள்ளலாம். அது முடியவில்லை என்றால் ஒரு கடிகாரத்தில் அலாரம் வைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் யாரோ ஒருவர் சிறுமுரசு கொட்டி எழுப்பலாம். அல்லது உதைத்து எழுப்பலாம். அந்த தேர்வு உங்களிடம் உள்ளது. ஆனால் நீங்கள் விழிப்படைய முடியும். அல்லது நாங்கள் உங்களை நினைவூட்ட முடியும். அது வெறும் நினைவூட்டல் மட்டும்தான், அது ஒரு பெரிய சாதனை அல்ல. அது எங்கோ சென்றடைவது பற்றியும் அல்ல.
      ஒருமுறை இப்படி நிகழ்ந்தது. ஒரு பெண்மணி ஒரு ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தாள். அங்கிருந்து பார்த்தபோது, அந்த ஆற்றின் அகலமும் மறுகரையும் மிகவும் அழகாக இருந்தது. மறுகரையில் இன்னொரு பெண் இருப்பதை அப்போதுதான் கவனித்தாள். எனவே அவளை உரக்க அழைத்து, “நான் எப்படி அக்கரைக்கு வருவது?” என்று கேட்டாள். அதற்கான வழி கண்டுபிடித்து சொல்வதற்காக ஆற்றை அங்குமிங்கும் பார்த்த அவள் பிறகு சொன்னாள், “நீ ஏற்கனவே அக்கரையில்தான் இருக்கிறாய்!”
      இது அத்தனை எளிமையானது. அத்தனை தெளிவானது. ஆனால் நமக்கு குறிப்பிட்ட திறனுடன் கூடிய மனம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் நிறைய மக்கள் ‘மனமற்ற நிலைக்கு’ நீங்கள் செல்ல வேண்டும் என்று பேசி வருவது எனக்குத் தெரியும். ஏற்கனவே நிறைய பேர் அப்படித்தான் ஆகிவிட்டார்கள். இதுதான் இந்த உலகில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உலகின் மிகப்பெரிய பிரச்சனையே, சில மனிதர்கள் தங்கள் மனங்களை பயன்படுத்த மறுப்பதுதான். இந்த மனத்தைக் கொண்டு அடுத்த கணம், அடுத்த நாள், அல்லது ஆயிரம் வருடங்கள் கழித்து, இலட்சம் வருடங்கள் கழித்து, போன்றவற்றை யோசிக்கமுடியும். நீங்கள் ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளரா அல்லது ஜோதிட நிபுணரா என்பதைப் பொறுத்து காலத்தால் முன்னும் பின்னும் சென்று யோசிக்கமுடியும். அதற்காகத்தான் இந்த மனம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
      நீங்கள் எப்போதும் இந்த விளையாட்டைத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த இரண்டு தொழில்களுக்கு இடையேதான் எப்போதும் ஊசலாடிக் கொண்டே இருக்கிறீர்கள். சிலர் நேற்று நிகழ்ந்தது குறித்து வருந்திக் கொண்டிருக்கிறீர்கள். சிலர் எதிர்காலத்தில் அற்புதம் நிகழும் என்றோ அல்லது எதிர்காலம் குறித்து பயத்துடனோ இருக்கிறீர்கள். எனவே நீங்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர் அல்லது ஜோதிட நிபுணர் என்ற நிலையில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதுதான் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் தவறேதும் இல்லை. அது மனதின் திறன். அதை அது அற்புதமாகவே செய்கிறது.
      ஒரே பிரச்சனை என்னவென்றால், உங்கள் கணிப்புகள் மிகவும் உண்மை போலாகி, நிகழ்வில் இருக்கும் உண்மையை முற்றிலும் அழித்துவிடுகிறது. அந்தக் கணிப்புகள், உங்கள் உடல் சார்ந்த, இரசாயனம் சார்ந்த, சுரப்பிகள் சார்ந்த, கர்மா மற்றும் சமூகம் சார்ந்த பலவித கட்டாயங்களின் குவியலில் இருந்து தோன்றுகிறது. உடலும் மனமும் இது போன்ற கட்டாயங்களின் பேரில் செயல்படுவதால், உங்கள் இயல்பான தன்மையை உங்களுக்கு நினைவூட்டுவதுகூட, மிகவும் சிக்கலானதாகத் தோன்றுகிறது.
      தேவாலயத்தைச் சார்ந்த ஒரு ஞாயிறு பள்ளியில் இருந்த ஆசிரியர், வாழ்வின் உயர் இலட்சியம் குறித்து குழந்தைகளுக்கு ஆர்வமூட்ட விரும்பினார். அப்பள்ளிகளில், இறைவனை விடவும் சுவர்க்கம்தான் உயர்வானது. அந்த ஆசிரியர் தன் மாணவர்களிடம், “நான் என் சொத்து முழுவதையும் இந்த தேவாலயத்திற்கு வழங்கி, இங்கேயே தொண்டு செய்தால், நான் சொர்க்கத்தை அடைவேனா?” என்று கேட்டார். மாணவர்கள் ஒரே குரலில், “இல்லை” என்றார்கள். “நான் ஏழைகளுக்குத் தொண்டு செய்து, தொழுநோயாளியின் கால்களைக் கழுவி, குழந்தைகளின் கண்ணீரைத் துடைத்தால் சொர்க்கம் சேர்வேனா?” என்று கேட்டார். குழந்தைகள் “இல்லை” என்றனர். “நான் என் மனைவி மக்களை நேசித்து, என் குடும்பத்தை நன்றாக கவனித்து, என் தேசத்துக்கு ஆற்றவேண்டிய கடமைகளை ஆற்றினால் சொர்க்கத்தை அடைவேனா?” என்றார். அவர்கள் மீண்டும், “இல்லை” என்றார்கள். “அப்படியானால் நான் சொர்க்கத்துக்குப் போகவேண்டும் என்றால், என்னதான் செய்யவேண்டும்? “என்று கேட்டார். கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த சிறிய பையன் டாமி எழுந்து, “சொர்க்கம் அடைய வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் சாக வேண்டும்” என்றான்.
      அவ்வளவுதான் விஷயம்! நீங்கள் சாகவேண்டும். இதுதான் இருக்கும் ஒரே பிரச்சனை. ‘நான்’ என்று எதை நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அது உங்கள் மனம் உருவாக்கியுள்ள பிம்பம் என்பது தான் அந்த நினைவூட்டல். அந்த பிம்பத்தை நீங்கள் கொன்றுவிட்டால், பின்னர் எல்லாமே இங்குதான் இருக்கிறது; வாழ்க்கை என்பது ஆனந்தத்தின் பிரவாகமாக ஆகிவிடும். நீங்கள் உலகைக் கொல்லவேண்டாம்; இந்த ஒன்றை, ‘நான்’ என்பதை, மட்டும் கொன்றால் போதும்.
      உங்கள் உடலைக் கொல்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை; ஏனென்றால் அதை நீங்கள் உருவாக்கவில்லை. ஆனால் நீங்களே உருவாக்கிய அனைத்தையும் கொல்லும் உரிமை உங்களுக்கு உண்டு; படைத்தவன் உருவாக்கியதை கொல்லும் உரிமை உங்களுக்கு இல்லை. உங்களால் உருவாக்க இயலாத எதையும் அழிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. ஆனால் ‘நான்’ என்று நீங்கள் சொல்லிக்கொள்ளும் நபர் உங்கள் உருவாக்கமே. அந்த ஒரு நபரை நீங்கள் கொன்றுவிட்டால், பிறகு எல்லாமே உங்களுடையது; பிரபஞ்சமே உங்களுடையது.
      இது ஒரு வணிகம் – உங்களுக்கு ‘நான்’ வேண்டுமா? பிரபஞ்சம் வேண்டுமா? உங்களுடன் வணிகம் செய்பவர் பணம் கேட்கவில்லை; உங்களைத்தான் கேட்கிறார். இந்த வணிகமே இவ்வளவுதான். ஞானோதயம் குறித்த முழு வணிகமும் இவ்வளவுதான். கடவுள் உணர்தல், விழித்தெழுதல், நினைவூட்டல் என்று எப்படி அழைத்தாலும் சரி, மொத்தமும் இவ்வளவுதான். நீங்களே உருவாக்கியவற்றை முழுமையாகக் கொல்லுங்கள், பிறகு படைத்தவனின் படைப்பு உங்களுக்குள் வெடித்தெழும். வாழ்க வளமுடன்!
                                                                                                  அன்பும் அருளும்,
                                                                                                  சத்குரு

Monday, October 15, 2012

யோகா எப்படி உதவுகிறது? ஆனந்தம்


     
      அவ்வப்போது பலரும் நான் ஏன் பிறந்தேன்? எனது வாழ்க்கைக்கு நோக்கம் என்ன இருக்கிறது? என்று கேட்கின்றனர். உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கமும் இல்ல்லாமல் இருந்தால் என்ன? முதலில் உங்களுக்குள் இந்த கேள்வி எழுவதற்கு காரணமே நீங்கள் இன்னமும் வாழ்கையின் முழுமையை, பேரான‌ந்தத்தை ருசிக்கவில்லை. எனவே தான் வாழ்கையின் அனுபவங்களுக்கு அர்தத்தை தேடுகிறீர்கள். மனிதனாக இருக்கும் மகத்துவம் இன்னும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. உங்கள் ஒவ்வொரு அனுபவமும் ஆனந்தத்தில் திளைத்தால் இப்படி கேட்கமாட்டீர்கள்.
      இந்தத் தன்மையைக் கடக்காமல் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் போது எல்லாவிதமான தவறான முடிவுகளுக்கும் தான் வருவீர்கள். தற்போதைய உங்களின் வாழ்க்கை அனுபவங்களை துன்பம் என்று முத்திரை குத்துவீர்கள். பிறகு கடவுள் உங்களுக்கு வைக்கும் பரீட்ச்சை என்று நினைப்பீர்கள். கடைசியாக இதில் நான் தேர்ச்சி பெறாக வேண்டும் என்று முடிவெடுப்பீர்கள். ஆக எல்லா தவறான முடிவுகளுக்கும் வருவீர்கள்.
      உங்களின் வாழ்க்கைப் பாதை எப்போதோ ஒரு ஷணம் வெற்றி, எப்போதோ இன்பம், எப்போதோ ஒரு ஷணம் மகிழ்ச்சி என்று இப்படிப் போகிறது. இதைஎல்லாம் கழித்துப் பார்த்தால், காலையில் எழுகிறீர்கள், சமைக்கிறீர்கள், வயிற்றுக்கு அள்ளிப்போடுகிறீர்கள், அலுவலகம் செல்கிறீர்கள். வீட்டிற்கு சோர்வுடன் திரும்புகிறீர்கள், மீண்டும் காலையில்...... இப்படித் தான் உங்கள் வாழ்க்கை போகிறது.
      இருப்பே பேரான‌ந்தமாக இருந்தால், நோகத்தை பற்றி யாருக்கு என்னெ கவலை? துன்பமான மனிதர்கள் ஒன்று சேர்ந்து தான் தத்துவங்கள், மதங்கள், சமூகங்கள் என்று உருவாக்கி வாழ்கைக்கு எல்லாவிதமான நோக்கங்களை கண்டுபிடித்தார்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு ஷணமும் உங்களுக்குள் பேரானந்தத்துடன் வெடிக்கும் போது, ஏன் எதற்காக என்ற கேள்வி எப்படி வரமுடியும்? இந்த நிலையில் தான் உங்களுக்கு யோகா உதவப்போகிறது. யோகாவைப் பயன்படுத்தி உங்கள் எல்லைகளை தகர்த்து எறிந்து முன்னேறும் போது, வெறுமனே வாழ்வதே பேரானந்தம் தான். வாழ்க வளமுடன்!

Thursday, May 24, 2012

குழந்தையின் எதிர்காலம் நன்றாக அமைய? ஆனந்தம்


      குழந்தையின் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்காதீர்கள். முதலில் உங்களுடைய எண்ணங்களை உங்கள் குழந்தைகளின் மேல் திணிக்காதீர்கள். அவர்களுக்கு உங்கள் அன்பை மட்டும் கொடுங்கள். உங்கள் எண்ணங்கள் இறந்தகாலம் சார்ந்தவை.  உங்களுடைய முட்டாள் தனமான எண்ணங்களை குழந்தைகளின் மேல் திணிக்காதீர்கள். குழந்தையே தன்னுடைய வாழ்க்கையை அதன் சொந்த வழியில், சொந்தப் புரிதலில், சொந்த அறிவுணர்ச்சியோடு உணர்ந்து,  உள்வாங்கிக் கொள்ளட்டும்.
      குழந்தை பிறந்த நாள் முதல் நம்முடைய மதம், ஒழுக்க விதிகள், கோட்பாடுகள், தத்துவங்கள், சிந்தனைகள் என்று எல்லா முட்டாள்தனங்களையும் அதன் மீது சுமத்தி வருகிறோம். இல்லையா? குழந்தை மலர ஆரம்பிப்பத்ற்கு முன்பாகவே அதை அழித்து விட முனைகிறீர்கள். இந்த உலகில் மிக அதிகமாக சுரண்டப்படுபவர்கள், தொழிலாளிகளோ, பெண்களோ அல்லது விலங்குகளோ அல்ல. குழந்தைகள் தான் மிகவும் சுரண்டப்படுபவர்கள்.
      நீங்கள் தான் தனக்கு மிகவும் நம்பகமானவர் என்று நினைத்து குழந்தை உங்களிடமிருந்தே ஒவ்வொன்றையும் எதிர்பார்க்கிறது. ஆனால் நீங்களோ அதன் வாழ்க்கையை மிக மோசமாக சீர்குலைக்கிறீர்கள். உங்களைப் போலவே உங்கள் குழந்தையும் துன்பப்படுமாறு எப்படியும் பார்த்துக் கொள்கிறீர்கள்.
      அன்பை மட்டும் கொடுங்கள்....போதும்..... வாழ்க வளமுடன்

Wednesday, August 31, 2011

மனித நாகரீகம் என்பது இதுவா? ஆனந்தம்


      எந்தப் புலியாவது தன்னை நல்ல புலியாக காட்டிக்கொள்ள வேண்டும் என்று தன் இயல்பை மறைத்து மாறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறதா? எந்த எருதாவது தன்னை கெட்ட எருதாக காட்டிக்கொள்ளக் கூடாது என்று கபடமாக நடந்து கொள்கிறதா?
      பசி எடுத்தால் உணவு, இச்சை பிறந்தால் இணை என்ற இரண்டே வேட்கைகளில் தான் அதற்க்குள் சண்டை நடக்கிறது. அது மிருக இனம் பிழைத்திருப்பதற்கும் இனப்ப்பெருக்கம் செய்வதற்க்கும் இயற்க்கை விதித்திருக்கும் விதி.
      மற்ற‌படி மிருகங்கள் ஒன்றை ஒன்று பார்த்து, பொறாமைப்படுவது இல்லை, வஞ்சம் கொள்வது இல்லை, சதிச் செயல்களில் ஈடுபடுவது இல்லை.
      மனிதன் தான் இயல்பை உணராமல் தடுமாறுகிறான். ஆரம்பத்தில் அவனும் தன் உணவுக்காக, உடைக்காக, உறைவிடத்திற்க்காக சண்டைபோடத்துவங்கினான். பிற்பாடு நாகரீகம் வளர வளர அவனுடைய தேவைகளும் பெருகிவிட, கூடுதலான வசதிகளுக்காகவும் தன் பெருமைகளுக்காகவும் போரிடும் குணம் அவன் அடிப்படை குணம் ஆகிவிட்டது. அதை மறைத்து தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ளும் முனைப்பு அவன் இயல்பு ஆகிவிட்டது.
      சட்ட திட்டங்களால் ஆளப்படுவதால் மட்டுமே எந்த சமூகமும் நாகரீகம் அடைந்து விட்டதாக சொல்ல முடியாது. லண்டன், பாரீஸ், மும்பை, நியூயார்க் என இன்றைக்கு மிக நாகரீக நகரம் என்று நீங்கள் கருதும் எந்த நகர‌த்தை வேன்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள் அங்கே சட்டத்தை விலக்கி காவல்த்துறையை கலைத்து விட்டு பாருங்கள்....மூன்றே நாளில் எல்லாம் தலைகீழாகிவிடும். மிக நாகரீகமான மனிதன் என்று நீங்கள் கருதியவர் கூட குகை மனிதனை விடக் கேவலமானவனாக நடந்து கொள்வதை நீங்கள் பார்க்கலாம்.
      சங்கரன்பிள்ளை ஒருநாள், தன் தோட்டக்காரன் திண்ணையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்.
      "ஏய், ஏன் தோட்டத்திற்க்கு த‌ண்ணீர் ஊற்றப் போகவில்லை?" என்றார்.
      தோட்டக்காரன் அவரை சந்தேகத்தோடு பார்த்து, "வெளியே மழை கொட்டிக்கொண்டு இருக்கிறதே ஐயா" என்றான்.
      "அதனால் என்ன குடையை எடுத்துகொண்டு போ" என்று விரட்டினார் சங்கரன்பிள்ளை.
      மனிதன் வகுத்த சட்டங்கள் இப்படித்தான்...., சூழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால், அந்த சமயங்களில் சட்டங்கள் அர்த்தமற்றுப் போகின்றன.
      காடுகளில் வாழ்க்கை கடினாமாக இருக்கின்றது என்று தான் மனிதன் நகரங்களை உருவாக்கினான், இப்போது நகரங்களில் நகரங்களில் வாழ்க்கை அதை விடக் கடுமையானதாக ஆகிவிட்டிருக்கிறது.
      அட்த்தவனை விட தான் குறைவான நிலையில் இருந்தால் கூசிக்குறுகிப் போகின்றான். எந்த நிலையில் வாழ்கிறானோ அதில் சிறிதளவு குறைந்து விட்டால் கூட, தன் நிலை தாழ்ந்து விட்டதாக எண்ணி, நிம்மதியை தொலைக்கிறான், உயிரே போய்விட்டது போல் துக்கப்படுகிறான்.
      எப்போது மனிதன் தன்னை உடலோடு அடியாளப் படுத்திக் கொள்ள ஆரம்பித்தானோ, அப்போதே இந்தப் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது.
      உடல் என்பது மிருகம் தான். உடலின் அபாரத் தேவைகளுக்காக நீங்கள் இறங்குகையில் அந்தப் போரட்டத்தில் உங்களுடைய பெரும்பாலான சக்தி விரயமாகிறது.
      நாகரீகம், கல்வி உங்களின் மிருக குணங்களைப் பின்னிழுக்க வைத்து உங்களை போலியாக வெளியுலகில் காட்டிக் கொள்ளத் தூண்டுகின்றன. எப்பொழுதெல்லாம் நாகரீகமும், கல்வியும் மறந்து போகின்றதோ அப்பொழுதெல்லாம் உங்களின் அடக்கி வைத்த குணம் தன்னை முன் தள்ளி வெடித்துக் கிளம்புகின்றது.
      உங்களை உடலுடன் அடையாளபடுத்திப் பார்க்கும் தன்மை விலகி, உள்ளத்தின் நிலையை புரிந்து கொள்ளும் தன்மை வரவேண்டும். அப்போது தான் உங்களின் உயிர்த்தன்மை வெளிப்ப‌ட்டு உங்களை சீர்படுத்தும். உண்மையான ஆன்மீகமும் அதுவே. என்றென்றும் உங்களை ஆனந்தமாக வைத்திருக்கும்.

Friday, July 1, 2011

உற்சாகமின்மை ஆனந்தம்


      வாழ்வில் எந்த முயற்சியை மேற்கொண்டாலும் தடைகளைத் தவிர்க்க முடியாது. ஆன்மிகம் தான் என்றில்லை, எந்த செயலுக்கும் இது பொருந்தும். ஆனால், தவறான கோட்பாடுகள், கருத்துக்கள் பாம்பின் ஷத்தை விட மோசமானவை என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் உணர்வதில்லை. ஒருமுறை இவ்வாறு நடந்தது.
      சாத்தான் தன் செய்து வந்த வியாபாரத்தை விட்டுவிட நினைத்தது. வியாபார கருவிகளை எல்லாம் விற்றுவிட எண்ணி "இவை விற்பனைக்கு' என்று எழுதி வைத்தது. கோபம், பொறாமை, வெறுப்பு, பேராசை,
சுயநலம், ஆணவம் இப்படி பல பொருட்கள் விற்பனைக்கு வந்தன. மக்களும் விருப்பமாக பொருட்களை சாத்தானிடம் வாங்கினர்.ஆனால், இரண்டே இரண்டு பொருட்கள் மட்டும் சாத்தானின் பையிலிருந்து வந்தது. ""அவற்றை ஏன் விற்பனைக்கு வைக்கவில்லை?'' என்று கேட்டனர். அவை விற்பனைக்கு அல்ல. மன அழுத்தமும், உற்சாகம் இழப்பதும் தான் அவை.
      சாத்தான் விற்பனைக்கு வைக்காத அவ்விரு பொருட்களையும் கூட உங்களில் பலரும் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் மீதும், உங்களை சுற்றியுள்ளவர்கள் மீதும் அதைத் தொடர்ந்து பிரயோகிக்கிறீர்கள். துரதிர்ஷ்டமாக தன்னை அறிவு ஜீவிகளாக நினைப்பவர்களும் கூட உற்சாகம் இழந்து, மன அழுத்தத்தோடு சிரமப்படுகின்றனர். தர்க்கரீதியாக நீங்கள் வாழ்க்கையை பிளவுபடுத்திக் கொண்டிருந்தால் உற்சாகமின்மை உண்டாகிவிடும்.
      வாழ்க்கை தற்போது எப்படி உள்ளதோ, அதை அப்படியே உணரப் பழகிகொள்ள வேண்டும். இப்போதைய கனம் எப்படி இருக்கிறதோ, அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
      ஒருமுறை ஒரு கிராமத்துக்கு, நாடாளும் மன்னன் வருகை தரப்போவதாக அரண்மனை ஆட்கள் தெரிவித்தனர். எளிமையான அந்த மக்கள், மன்னனிடம் முட்டாள்தனமாக நடந்து கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ என்று பயந்தனர். அதனால் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த சங்கரன்பிள்ளை என்பவரை கிராமத்தின் பிரநிதியாக இருக்க கேட்டுக் கொண்டனர்.
      சம்மதம் தெரிவித்த சங்கரன்பிள்ளைஅரசன் வரும் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். அரண்மனை ஆட்கள் சங்கரன்பிள்ளையிடம், ""மன்னர் உங்களிடம் மூன்று கேள்வி கேட்பார். முதலில் வயது என்ன என்பார் கேட்பார், அதற்கு எழுபது என்று மட்டும் தான் கூறவேண்டும் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட கூற கூடாது. இரண்டாவதாக, உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்பார். நீங்கள் "ஆறு' என்று மட்டும் கூற வேண்டும். மூன்றாவது கேள்வியாக இந்த ஆண்டு மழை எப்படி இருக்கிறது என்பார். நீங்களும் நன்றாக உள்ளது என்று கூற வேண்டும்,'' என்றனர்.
      சங்கரன்பிள்ளையும் ஒத்துக் கொண்டார். அரண்மனை ஆட்கள் மன்னனிடம்,"" மன்னா! கிராமத்து மக்கள் உங்களை பார்க்க அளவு கடந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அறியாமையால் தவறாகப் பேசினாலும்கோபம் கொள்ளாதீர்கள், கிராமத்து பிரதிநிதியிடம் அவருடைய வயது, எத்தனை குழந்தைகள், மழை நிலவரம் மட்டும் கேளுங்கள். அதுபோதும்,'' என்று கூறி அழைத்து வந்தனர்.
      மக்களை சந்தித்த அரசர், மக்களிடம்,"" உங்கள் பிரதிநிதி யார்?'' என்று கேட்டார். கூட்டத்திலிருந்து எழுந்து வந்தார் சங்கரன்பிள்ளை.
      அவரிடம் மன்னன், ""உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?'' என கேட்டார். ""எழுபது'' என்றார் சங்கரன்பிள்ளை.
      "" உங்கள் வயது என்ன?'' என்று கேட்டார் மன்னர். அவர்,"ஆறு' என்று ஒருவார்த்தையில் முடித்துக் கொண்டார். மன்னர் கோபமாக,"" உங்களுக்கு என்ன பைத்தியமா?''என்று கேட்டார். சங்கரன் பிள்ளையும்,""நன்றாக உள்ளது,'' என்றார். மன்னர் மிகுந்த
கோபமடைந்து, "இந்த ஆள் சரியான பைத்தியம், கிராமத்து பிரதிநிதியாக இவன் ஏன் இருக்கிறான்,'' என்றார். சங்கரன்பிள்ளையும் மன்னனிடம்,"" நீங்கள் தான் பைத்தியக்காரன். நான், பதிலை வரிசையாகத்தான் கூறினேன். நீங்கள் தான் தவறாக கேள்விகளைக் கேட்கிறீர்கள்,''என்றார்.
      நம் மனம் கடந்த காலத்திலேயே நின்று கொண்டு செயல்படுகிறது.
மனதின் போக்கில் போனால் நாம் குழப்பமாகிவிடுவோம். நான் தர்க்கமனத்தைப் பற்றித் தான் சொல்கிறேன்.
      தர்க்கரீதியாக யோசிப்பது என்றால், ஒவ்வொரு நாள் காலையிலும் கண் விழித்தவுடன் பல் துலக்குகிறீர்கள். காலைக்கடமைகளைச் செய்கிறீர்கள். சாப்பாடு, வேலை, சாப்பாடு, தூக்கம் என்று நாள் முழுக்க ஏதோ ஒன்றில் ஈடுபடுகிறீர்கள். இப்படி ஆண்டுக்கணக்கில் செய்கிறோம்.
      இச்செயல்களைத் தொடர்ந்து செய்வதில் என்ன மதிப்பிருக்கிறது? சில கணநேர அனுபவங்களும் இதற்கிடையில் உண்டு. சூரியோதயம், வானில் வட்டமிடும் பறவைகள், தோட்டத்தில் பூத்த புதுமலர்கள், மழலை பேசும் குழந்தையின் முகம் என்று மகத்தான விஷயங்களால் இந்த வாழ்க்கை மதிப்புடையதாகவும் எண்ணத் தோன்றலாம். ஆனால், இதெல்லாம் அவ்வப்போது ஏற்படும் நிகழ்வுகள்.
      தர்க்கரீதியாக எண்ணும் போதெல்லாம் மன அழுத்தம் அதிகமாகி உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்கிறீர்கள். யாரொருவர் தன்னையும், தனக்கு சாத்தியமான சூழ்நிலையையும் மதித்து நடக்கிறாரோ அவரே அனைத்திற்கும் மதிப்பளிக்கும் இயல்புடையவராக இருப்பார்.
      எப்படியோ வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டீர்கள். வாழ்வைப் புரிந்து கொள்வது என்பது பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதில் சிக்கல் என்பது நீங்களாகவே உருவாக்கிக் கொண்டது. பின் நீங்களே அதற்கு தீர்வு தேடி அலைகிறீர்கள். நீங்களே திருடனாகவும் இருக்கிறீர்கள். காவல்காரனாகவும் செயல்படுகிறீர்கள். திருடன்பிடிபடுவானா?  ஒருபோதும் மாட்டான். தர்க்க மனத்தின் தன்மையும்  அப்படித்தான்!

Monday, June 27, 2011

கனவுகள் ஆனந்தம்

      இளமையாய் இருக்கும்போது எல்லோருக்குமே நிறைய கனவுகள் இருக்கும். சில லட்சியங்கள், எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்பது பற்றிய கற்பனைகள், வாழ்க்கையை எந்தவிதத்தில் அமைத்துக்கொள்ளலாம். என்பதைப்பற்றிய எண்ணங்கள் என நிறைய கனவுகள் இருக்கும். ஆனால், எல்லோருக்கும் அதே மாதிரியான கனவுகள் ஏற்படுவதில்லை. ஏனெனில் கனவு காண்பதற்குக்கூட கொஞ்சம் துணிச்சல் வேண் டும். நிறைய பேர் தங்கள் கனவுகள் நனவாகுமோ இல்லையோ என்கிற அச்சத்திலேயே கனவு காண்பதை நிறுத்திக்கொண்டு விட்டார்கள். 18லிருந்து 20 வயது வரை பார்த்தால் மிகப்பெரிய லட்சியக் கனவுகள் மனதுக்குள் குடிகொண்டிருக்கும். 25 வயது எட்டுவதற்குள் அவர்கள் தங்கள் கனவுகளை
      சராசரி தேவைகளாக சுருக்கிக்கொண்டு விடுகிறார்கள். அதுவும் அவரவர், அவரவரின் தனிப்பட்ட ஆசைகளைச் சார்ந்த தேவைகளாகவே இருக்கிறது. அவர்களைக் கேட்டால், "இதுதான் யாதார்த்தம்' என்று சொல்வார்கள். இதன் பெயர் யதார்த்தம் அல்ல. கோழைத்தனம். கனவுகளை நனவாக்கத் தெரியாத கோழைத்தனம்.35 வயதாகும்போது நிறைய பேரிடம் கனவுகளே இருப்பதில்லை. தொந்தரவு இல்லாமல் வாழ்ந்தால் போதும் என்கிற நிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஒரு தலைமுறை, கனவுகளை இழக்கிறபோது, எத்தனைதான் நற்பணிகள் செய்தாலும் அவற்றின் பயனை யாரும் அனுபவிக்க முடியாது. நீங்கள் எந்த ஒரு சமூகத்தையும், நாட்டையும் பாருங்கள். மனதில் மிக வலிமையான கனவுகளை சுமந்துகொண்டு வாழ்ந்தவர்களின் வாழ்க்கைதான் தீவிரத் தன்மையும் அர்த்தமும் நிறைந்ததாக இருக்கிறது. அவர்களிடம் ஒரு மகத்தான சக்தி இருந்திருக்கிறது. நமது நாட்டிலேயே சில ஆண்டுகளுக்கு முன்பு எத்தனையோ பேர் இந்த நாட்டிற்காக தங்கள் உயிரை துச்சமாக மதித்து தூக்கி எறிய தயாராக இருந்தார்கள். ஏனெனில் சுதந்திர இந்தியா பற்றி அவ்வளவு வலிமையான கனவு அவர்களுக்கு இருந்தது.
      உங்களுடைய கனவுகளையும் நினைத்துப்பாருங்கள். உங்களில் ஒருவருக்கொருவர் காணுகிற கனவுகளில் அப்படியொன்றும் பெரிய வேறுபாடு கிடையாது. தனிப்பட்ட சுயநலத்தை தள்ளிவிட்டுப் பார்த்தால் எல்லோருடைய கனவுகளின் அடிப்படையும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கிறது. உங்களுடைய கனவு, அவருடைய னவு, இன்னொருவருடைய கனவு... இதற்கெல்லாம் பெரிய வேறுபாடு இல்லை.இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பணிகளைச் செய்து வருகிறீர்கள். சிலபேர் படிக்கிறார்கள். சிலர் திருமணம் செய்துகொள்கிறார்கள். சிலர் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இவற்றைச் செய்வதெல்லாம் மகிழ்ச்சிக்காகத்தான். மகிழ்ச்சிக்கு இதுதான் வழி என்று ஒவ்வொருவரும் அவரவருக்கு பிடித்த
காரியங்களை செய்கிறார்கள். அப்படியானால் ஒவ்வொரு மனிதரும்
மகிழ்ச்சியாக இருக்கத்தான் விரும்புகிறார்கள் இல்லையா... இப்போது மகிழ்ச்சிக்காக நீங்கள் பின்பற்றுகிற வழிகள் எல்லாம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அடிப்படையில் அனைவரும் தேடுவது மகிழ்ச்சிதான்.

      எனவே "மகிழ்ச்சி' என்ற பொதுவான கனவு எல்லோருக்கும் தேவையாய் இருக்கிறது. அன்பு எல்லோருக்கும் தேவையாய் இருக்கிறது. ஆனால் இந்த கனவுகளை சின்னச்சின்ன ஆதாயங்களுக்காக அடைத்து வைத்து விடுகிறீர்கள். இந்தக் கனவுகளை எட்டுவது சாத்தியமில்லை என்றுகருதி, சின்னச்சின்ன சுய லாபங்களிலேயே அமைதி அடைந்துவிடுகிறீர்கள். இது வெறும் கோழைத்தனம். குறிப்பாக, இளமையில் கனவுகளை கைவிடலாகாது. கோழைத்தனம் கூடவே கூடாது. இளைஞர்களுக்கு இருக்கிற சக்திக்கு அவர்களை கோழைத்தனம் நெருங்கவே கூடாது. பல இளைஞர்கள் 18 வயதிலேயே வாழ்க்கை குறித்தும் மரணம் குறித்தும் 60 வயது ஆனவரைப் போல் அச்சப்படுகிறார்கள். எனக்கு இப்படி நடந்துவிட்டால் என்ன செய்வது, அப்படி நடந்துவிட்டால் என்ன செய்வது... என்றெல்லாம் கவலைப்படுகிறார்கள். எதுவுமே நிகழாவிட்டால் உங்களுக்கு வாழ்க்கை என்ற ஒன்றே இல்லை. வாழ்க்கை என்றால் ஏதாவது ஒன்று நிகழ்ந்தாக வேண்டும். எதிர்பாராத ஒன்று ஏற்படுமேயானால் அதற்குப் பெயர்தான்வாழ்க்கை.எனவே இன்றைய இளைஞர்களுக்கு வாழ்க்கை பற்றிய நம்பிக்கை, கனவுகள், லட்சியங்கள், அதே நேரம் அச்சம், பதட்டம் அனைத்தும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கிறோம்.
      இப்போது உங்களை நீங்களே சில கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் செய்ய விரும்புவதை, அது எதுவாக இருந்தாலும் சரி, அதனை முழுமையாக எவ்வளவு சிறப்பாக முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமா என்று கேட்டுப் பாருங்கள். முதலில், நீங்கள் யார் என்றுகூட தெரிந்துகொள்ளாமல் என்ன செய்ய முடியும் என்பதை உணர்ந்து செயல்பட முடியுமா? இப்போது உங்களைப்பற்றி நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிற விஷயங்கள் அனைத்துமே, மற்றவரோடு ஒப்பிட்டு நீங்களே எடுத்திருக்கிற முடிவுகள்தான்.
      உதாரணத்திற்கு ""நான் உயரமானவன்'' என்று ஒருவர் சொல்கிறார் என்றால் தன்னைவிடகுள்ளமானவர்களோடு ஒப்பிடும்போது தான் உயரம் என்று சொல்கிறார். அவர் ஆறடி உயரம் இருக்கிறார் என்றால் அவரைச் சுற்றி இருப்பவர்கள் ஐந்தடி, ஐந்தரை அடி இருக்கலாம். ஏழடி உயரம் உள்ளவர்கள் அருகில்சென்றால் மிகவும் குள்ளமாக தன்னை உணர்வார். அப்படியானால் தன்னைப்பற்றி அவருக்கு இருந்த மதிப்பீடு ஒப்பீட்டில் விளைந்த மதிப்பீடே தவிர, உண்மையான மதிப்பீடு அல்ல.
      ஒவ்வொரு மனிதரும் தனக்குள்ளேயே ஒரு அற்புதத்தை நிகழ்த்துகிற வல்லமை படைத்தவர்கள். உங்களுக்குள் அது நிகழ்ந்துவிட்டால் கண்டிப்பாக வெளிச்சூழலிலும் அது நிகழ்ந்தே தீரும்.வாழ்க்கை முழுவதும் ஒருவர் கண்மூடி அமர்ந்துவிட்டால்கூட இந்த உலகத்தை அவரால் இன்னும் அழகாக்க முடியும். எனவே உள்நோக்கி பாருங்கள். உங்கள் உடலையும் மனதையும் மேல்நிலைக்கு கொண்டு செல்லுங்கள். இந்த உடலையும் மனதையும் முற்றிலும் புதிய பரிமாணத்திற்கு கொண்டுபோய் அவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்று பாருங்கள், ஆனந்தம் தொடரும்.

Wednesday, June 22, 2011

எது வேண்டாம் என்பதை விட என்ன வேண்டும் என சிந்திப்போமா!



      ஆனந்தமான சூழ்நிலை உருவாக வேண்டுமானால் ஆனந்தமாக இருக்கிற மனிதர்களால் மட்டுமே முடியும். பதட்டமானவர்களால் ஆனந்தத்தை ஏற்படுத்த முடியாது. எனவே, எப்போதும் ஆனந்தமாக இருக்க பழகுங்கள்.
      வாழ்க்கையோடு விளையாடுவது, ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் மிகப்பெரிய அற்புதமாகும், ஆனால், வாழ்க்கை நம்மோடு விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
      உடலையும், மனதையும் மேல் நிலைக்குக் கொண்டு செல்வதுடன், அவற்றை புதிய பரிணாமத்திற்கு கொண்டு போய், அவற்றின் மூலம் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்று எண்ணிபாருங்கள்.
      எத்தகைய உலகில் வாழ விரும்புகிறீர்கள் என்று கேட்டால், அனைவரும் அமைதியான உலகில் வாழ விரும்புவதாகவே கூறுகின்றனர். அப்படியானால் அனைவருடைய கனவும் ஒன்றாகவே இருக்கிறது.
      வாழ்க்கையில் இறுக்கமில்லாமல் இயல்பாக செயல்படுகிற போதுதான் மனிதர்கள் பல மகத்தான கண்டுபிடிப்புகளை செய்கின்றனர்.
      எண்ணங்கள் குவியலாக கிடக்கும் போது, குழப்பங்கள் தான் மிஞ்சுகிறது. மனதுக்குள்ளே ஒரு வரிசையை, ஒழுங்கை, அழகை ஏற்படுத்த தியானம் உதவுகிறது.
      மனிதன் தனக்குள் இருக்கிற மிகப்பெரிய சக்தியை வெளிப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இயல்பாக இருப்பது தான். இயல்பாக இருப்பது என்பதை, சோம்பலோடு இருப்பது என்று தவறாக பொருள் கொள்ளக்கூடாது. ஆனால், முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் சுமையோ, சோர்வோ தெரியாத ஒரு நிலைக்குப் பெயர் தான் இயல்பான வாழ்க்கை.
      வாழ்க்கையில் விலக்க வேண்டிய விஷயங்கள் குறித்து திரும்பத் திரும்ப சிந்தித்து பட்டியல் போடுகின்றனர். எது வேண்டாம் என்பதைச் சிந்திப்பதைவிட, என்ன வேண்டும் என்று எண்ணங்களைப் புகுத்துவதுதான் சரியான அணுகுமுறை.
      நதிகள் சங்கமித்திருக்கும் கடலின் நடுப்பகுதியும், தேங்கிப் போகிற குட்டையும் அமைதியாக காணப்படுகிறது. தியானம் என்பது மனிதனை, இயக்கங்கள் கடந்த ஒரு சமுத்திர நிலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியாகும். இயல்பான வாழ்க்கை அமைய, தியானம் மிகப்பெரிய சக்தியைக் கொடுக்கும்.
      உங்கள் வாழ்க்கையை நீங்களே தான் வடிவமைக்க வேண்டும், உங்களுடைய வாழ்வை நீங்கள் வடிவமைக்கிற முறையில் தான் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை, இந்தச் சமூகத்தின் வாழ்க்கை, இந்த தேசத்தின் வாழ்க்கை அனைத்துமே அடங்கி இருக்கிறது என்பதை அனைவரும் உணரவேண்டும்.
      விருப்பு, வெறுப்பு என்று சிலவற்றை வைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை போராட்டமாகத்தான் இருக்கும் என்பதால், இவற்றை தவிர்த்து வாழ்க்கைக்கு தேவையான நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.
      தனக்குள் கடவுளை தேடி உணர்ந்தவர்கள் மற்றவர்களோடு சண்டையிடும் முட்டாள்தனத்தில் ஈடுபடமாட்டார்கள். 

Wednesday, April 6, 2011

அனந்தமாக இறப்பதே மேல்


      ஆராய்ச்சிப் பயணம் என்பதன் பொருள் என்ன? நீங்கள் இதுவரை பயணப்படாத இடங்களுக்குச் சென்று அங்குள்ளதை முழுமையாக அறிவதுதான் ஆராய்ச்சிப் பயணம், அது ஒரு கருத்து அல்ல. நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு, ஆப்பிரிக்கக் கண்டத்தை ஆராய்ச்சி செய்தால், அது வெறும் கற்பனை மட்டுமே. ஆனால் நீங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திற்குச் சென்று, அங்கு குறுக்கும் நெடுக்கும் சென்று அனைத்தையும் கண்டறிவது வெறும் கருத்தோ அல்லது கற்பனையோ ஆகாது. இதைத்தான் ஆராய்ச்சிப்பயணம் என்கிறோம்.

      ஒன்றை ஆய்ந்து கண்டறிவதற்கும் அல்லது அதைப்பற்றிய ஒரு கருத்தை மட்டும் உருவாக்கிக் கொள்வதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஒன்றைக் கண்டறிவதுதான் நமக்குத் தேவையே தவிர அதைப் பற்றிய வெறும் கருத்து உருவாக்கிக் கொள்வது அல்ல. ஒன்றைப் பற்றிய முடிவுக்கு வந்து விட்டீர்கள் என்பது கருத்து.
    
      வாழ்க்கை பற்றி நீங்கள் ஒரு கருத்துக்கு வந்து விட்டீர்கள் என்றால வாழ்க்கை பற்றிய ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். 10 நிமிடங்களில் நீங்கள் கணக்குப் போடுமளவுக்கு வாழ்க்கை அவ்வளவு சிறியதாக இல்லை. அது உங்கள் கணக்கிற்குள் வருவதாக இருந்தால், இவ்வளவு வருடங்கள் நாம் வாழத் தகுதியானதே இல்லை. வாழ்க்கையை உங்களால் அப்படித் தொகுக்க முடியாது. சிறிது சிறிதாக ஆராய்ந்து அறியத்தான் முடியும். அதைத்தான் உங்களால் செய்ய முடியும். அப்படிச் நீங்கள் வாழ்க்கையை தொகுக்க முனைந்து விட்டால் எதையோ தவற விட்டீர்கள் என்பதுதான் பொருள்.

      அதே போல் வாழ்க்கையில் பாதுகாப்பைத் தேடுவதும் சரியல்ல. வாழ்க்கையில் பாதுகாப்பைத் தேடுவது என்பது வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சிப் பயணத்தில் ஒரு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும். நீங்கள் வாழ்க்கையில் ஏதாவது சிறிய அளவில் சாதித்திருந்தாலும் அதை முக்கியமாகக் கருதுகிறீர்கள். அதை வைத்து அஸ்திவாரம் எழுப்பப் பார்க்கிறீர்கள்.
    
      திரவம் போல இலகுவாக இருப்பதை விடுத்து எதையோ வைத்து அஸ்திவாரம் எழுப்பி ஒரே இடத்திலேயே இருக்க விரும்புகிறீர்கள். வாழ்க்கை இப்படி தேங்கிப் போகும்போது, மிகவும் மோசமான நிலைக்குப் போய்விடுகிறது. அப்போது உங்களுக்கு என்ன நடக்கும் என்றால் நீங்கள் நன்றாகக் கண்ணீர் விட்டுக் கதறவும் மாட்டீர்கள், மனம் விட்டுச் சிரிக்கவும் மாட்டீர்கள். உங்கள் கண்ணீருக்கும் வேலையிருக்காது, மலர்ந்த சிரிப்புக்கும் வேலையிருக்காது. ஒரே இடத்தில் தங்கி விடுவீர்கள்.
    
      மாறாக வாழ்க்கையை முழுமையாக ஆய்ந்து வாழும்போது, ஒன்று மிகவும் உயிரோட்டத்துடன் வாழ்வீர்கள். அது மிகவும் மகத்தானதாகது. அல்லது வீழ்ந்து மடிவீர்கள். அதுவும் சரிதான். ஆனால் இப்போது நீங்கள் உயிர்ப்போடும் இல்லை. இறக்கவும் இல்லை. கடைசியில் உண்மையிலேயே நீங்கள் இறக்க வேண்டிய நேரம் வரும்போது, அந்த கடைசி தருணத்தில்தான், இதுவரை வாழாமலே போய்விட்டோம் என்பதை அறிந்து கொள்வீர்கள். அது மிகவும் துயரமானது. உலகில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இப்படித்தான் இறக்கிறார்கள்.

மனிதர்கள் 70 - 80 வருடங்கள் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் இறந்து போகும் நேரத்தில் அவர்களைப் பார்த்தால் வெறும் பயமும், குழப்பமுமாகத்தான் இருப்பார்கள். வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காமலேயே இறக்கிறோம் என்பதை அந்த கடைசி நேரத்தில் கண்டு கொள்கிறார்கள். வாழ்க்கையின் ஒரு அணுவைக்கூட அறிந்து கொள்ளாமல் அவர்கள் இறந்து போகிறார்கள்.

      எனவே வாழ்க்கைப் பயணத்தில் முழுமையாக இறங்கி ஒவ்வொன்றையும் கண்டறியுங்கள். அப்படி வாழ்ந்து இறக்கும் தருவாயில் ஆனந்தமாக இறந்தால் அது அற்புதமானது. குறைந்தபட்சம் அமைதியாக இறந்தாலும் சரிதான். அல்லது உள்நிலையில் ஆனந்தத்தை அடையும் முயற்ச்சியில் வலியுடன் இறக்கிறீர்கள். அதுவும் நல்லதுதான். ஆனந்தம்தான் ஏற்படவில்லை, அதற்கான முயற்சியில் குறைந்த பட்சம் வலி வந்தாலும் நல்லதுதான். அந்த வலி கூட உங்களுக்கு நிகழாமல் நீங்கள் இறப்பது மிகவும் துயரமானது, இல்லையா?

      இறுதி நேரத்தில், வாழாமலேயே போகிறோமே என்று நீங்கள் குழப்பத்திலும் திகைப்பிலும் இறக்கிறீர்கள் என்றால் அது மிகவும் கொடூரமானது. நீங்கள் ஆனந்தத்துடன் இறந்து போங்கள், அமைதியாக இறந்து போங்கள், அல்லது (ஆனந்தத்தை அடையும் முயற்ச்சியில்) வலியுடனாவது இறந்து போங்கள். ஆனால் நாம் யாருமே திகைப்பிலும், குழப்பத்திலும், ஏக்கத்திலும் இறப்பது சரியானதல்ல‌..............

Sunday, February 27, 2011

மனித வாழ்வு எதற்காக? ஆனந்தம்

      மனித வாழ்வு எதற்காக? ஏன் இந்தப் பிரபஞ்சம் இருக்கின்றது? என்று கேட்கும்போதெல்லாம், நான் உங்களுக்குக் கதைகள்தான் சொல்ல வேண்டும்.
      ஒருநாள் கடவுள் வேலையேதுமின்றி அமர்ந்திருந்தார். அப்போது அவர் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு கோலி இங்கே விழுந்து அது பூமியானது. மற்றொன்று அங்கே விழுந்து சூரியன் ஆனது. வேறு ஏதோ செய்தார். மனிதர்கள் உருவானார்கள். இதுபோன்ற கதைகளை நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டே போகலாம்.
      நான் என்ன கதைகளை உங்களுக்குச் சொன்னாலும், சிலர் அவற்றை நம்பலாம்; சிலர் அவற்றாஇ நம்பாமலும் இருக்கலாம். நீங்கள் இந்தக் கதைகளி நம்பினாலும், நம்பாவிட்டாலும் உங்கள் வாழ்க்கை எந்த வழியிலும் வளமடையப் போவதில்லை. உங்களில் பலர் இதுவரையில் ஏதோவொன்றில் எப்போதுமே நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்.
      இங்கே இருக்கும் உங்களில் எவ்வளவு பேர் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்? சரி. எவ்வளவு பேர் கடவுள் மீது நம்பிக்கையின்றி இருக்கிறீர்கள்? (மிகச் சிலர்தான்). சிலர் கடவுளை நம்புகிறார்கள், சிலர் கடவுள் மீது நம்பிக்கையற்று இருக்கிறார்கள். சரி. உங்களில் எத்தனைபேர் இரண்டு கைகள் உங்களுக்கு இருப்பதாக நம்புகிறீர்கள்? உங்களுக்கு இரண்டு கைகள் இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா? அல்லது உங்களுக்கு இரண்டு கைகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? கைகளைக் காண்பதற்கு நமக்குக் கண்களே இல்லாவிட்டால் கூட, நமக்கு இரண்டு கைகள் இருப்பதை அனுபவப்பூர்வமாய் அறிவீர்கள், இல்லையா?
      யாரேனும் உங்களிடம் ஒரு விவாதம் தொடங்கி, உங்களுக்கு கைகளே இல்லையென நிரூபிக்க முடியுமா? அது சாத்தியமா? இந்த விவாதம் மிகவும் சூடாகும்போது, அவருக்கு ஓங்கி ஒரு அறை கொடுத்தால், உங்களுக்குக் கைகள் இருக்கின்றன என்பதை அவர் அறிந்துகொள்வார். உங்களுக்கு கைகள் இருப்பதை அறிவீர்கள்.
      ஆனால் கடவுளை மட்டும் எப்படி நம்புகிறீர்கள். இது ஏன்? நமக்கு எதுவெல்லாம் தெரியாதோ, அவற்றை நாம் நம்புகிறோம். சிலர் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறார்க்ள். சிலர் கடவுள் இல்லையென்று நம்புகிறார்கள். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவற்றால் எந்தப் பயனும் இல்லை.
      எனக்குத் தெரியாது என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டால்தான் ஒரு தேடுதல் உங்களுக்குக் தொடங்கும். தேடுதலுக்கான தேவை ஒருமுறை வந்துவிட்டால், அதற்கான விடை வெகுதூரத்தில் இல்லை. ஒருமுறை நீங்கள் ஏதாவது ஒன்றை நம்பத் துவங்கிவிட்டால், உங்களுக்குள் உள்ள தேடுதல் அழிந்து விடும். நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறீர்கள். ஏதாவதொன்றைப் பற்றி ஒருமுறை நீங்கள் முடிவு செய்துவிட்டால், உண்மையைப் பற்றி அறிவதற்கான அடிப்படை வேட்கையே உங்களுக்குள் அழிந்துவிடும்.
      நீங்கள் கௌதம புத்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒருமுறை புத்தர் அதிகாலைப் பொழுதில், சூரியோதயத்திற்கு முன்பு தனது சீடர்களுடன் சத்சங்கத்தில் அமர்ந்திருந்தார். இன்னும் இருட்டாகவே இருந்தது. அப்போது ஒரு மனிதர் அங்கே வந்தார். அவர் ஒரு ராமபக்தர். அவர் வாழ்க்கை முழுவ்டஹும் சொல்லிக் கொண்டிருந்தது, ‘ராம், ராம், ராம்!’ தான். வேறெதையும் அவர் சொன்னதில்லை. அவரது ஆடைகளில் கூட முழுவதுமாக ‘ராம், ராம்’ என்றே எழுதி இருந்தது. அவர் கோவிலுக்குச் செல்பவர் மட்டுமல்ல; நிறைய கோவில்கள் கட்டியவரும்கூட. வயதாக வயதாக ஒரு சிறு சந்தேகம் அவருக்கு எழுந்தது. ‘என் வாழ்க்கை முழுவதும் நான் ராம், ராம் என்றே சொல்லி வந்துள்ளேன். ஆனால் கடவுள் மீது நம்பிக்கை இல்லையென்று சொல்பவர்கள் கூட உள்ளனர், அவர்களுக்கும் கூட சூர்யோதயம் நடக்கின்றது, சுவாசமும் நடக்கின்றது. அவர்களும் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்விலும் பல‌ சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நான் வெறுமனே அமர்ந்து ‘ராம், ராம்’ எனச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை இவர்கள் கூறுவதைப் போல கடவுள் இல்லையென்றால்… எனது வாழ்க்கை முழுவதும் வெறுமையாகி, ஒன்றுமில்லாமல் போய்விடுமே!’ கடவுள் இருக்கிறார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை அவருக்குத் உண்டு. ஆனாலும் சிறு சந்தேகம் வந்துவிட்டது; அவ்வளவுதான்.
      ஆனால் எப்படி இந்தக் கேள்வியை புத்தரிடம் அனைவர் முன்னிலையிலும் கேட்பது? எனவே அவர் அதிகாலையில் இருட்டாக இருக்கும்போதே வந்து ஒரு மூலையில் நின்றவாறு, ‘கடவுள் இருக்கின்றாரா, இல்லையா?’ என்ற கேள்வியைக் கேட்டார். கௌதம புத்தர் அவரைப் பார்த்து ‘இல்லை’ என்று கூறினார். இந்தப் பதிலைக் கேட்டவுடன் சீடர்கள் மத்தியில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது. கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்ற போராட்டம் அவர்களுக்குள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பலமுறை அவர்கள் இந்தக் கேள்வியை கௌதமரிடம் கேட்கும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அவர் அமைதியாகவே இருந்துவிடுவார். இப்போதுதான் முதன்முறையாகத் தெளிவாகவும், அழுத்தமாகவும் ‘கடவுள் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.
      கடவுள் இல்லாமல் இருப்பதென்பது எவ்வளவு மகிழ்ச்சியானது! உங்கள் வாழ்வில் நீங்கள் எது வேண்டுமாலும் செய்ய முடியும். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், என்ன செய்யவில்லை என்பதை கவனித்துக் கொண்டிருக்க ஒருவரும் இல்லை. உங்களை நரகத்தில் தள்ளித் துன்புறுத்துவதற்கு யாருமே இல்லை. இது உங்களுக்கு முழுமையான சுதந்திரம் இல்லையா? கடவுள் இல்லையென்றால் உங்களுக்கு முழுமையான சுதந்திரம். சீடர்கள் மத்தியில் நிறைவான சந்தோஷம். அந்த நாள் சந்தோஷமான நாளாக இருந்தது.
      மாலை நேரத்தில் புத்தர் அவருடைய சீடர்கள் மத்தியில் அமர்ந்திருந்த போது, மற்றொரு மனிதர் அங்கே வந்தார். அவர் ஒரு சார்வாகர். அந்த நாட்களில் சார்வாகர்கள் என்றொரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் பொருளீட்டுவதில் மட்டுமே நாட்டம் உள்ளவர்கள். அவர்கள் பார்ப்பதை மட்டுமே நம்புபவர்கள். வேறு எதையும் நம்புவதில்லை. அவர்கள் உங்கள் நகருக்கு வந்து உங்களிடம் சவால் விடுவார்கள். ‘யாராவது கடவுள் இருக்கின்றார் என்று நிருபித்தால் தான் நூறு பொற்காசுகள் தருவேன். இல்லையென்றால், நீங்கள் அனைவரும் சேர்ந்து நூறு பொற்காசுகளை எனக்குத் தர வேண்டும்.” அவருடைய வாழ்க்கை முழுவதும் இந்த வழியில் மட்டும் சம்பாதித்தார். ஊர் ஊராகச் சென்று ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை’ என நிருபித்து வந்தார். இது அவருடைய வேலை. கடவுள் இல்லை என்பதை ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிரூபித்து அவர் தனது துறையில் பெரிய மனிதராகத் திகழ்ந்தார்.
      தற்போது வயது ஆக ஆக சிறு சந்தேகம் வந்துவிட்டது. ‘எனது வாழ்க்கை முழுவதும் கடவுள் இல்லையென்றே நான் மக்களிடம் கூறி வந்திருக்கிறேன். ஒருவேளை கடவுள் இருந்தால்? நான் அங்கே போகும்போது அவர் என்னை விடுவாரா? நரகம் என்று ஏதோ இருப்பதாக மக்கள் சொல்கிறார்களே.’ சிறு சந்தேகம்… கடவுள் இல்லையென்று அவருக்குத் தெரியும். இதனை அவரது வாக்கை முழுவதும் நிருபித்தும் வந்திருக்கிறார். ஆனால் ஒரு சிறு சந்தேகம்… ஒருவேளை கடவுள் இருந்தால்? எதற்கு வம்பு, நகரிலே ஞானமடைந்த மனிதர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் கேட்போம். ஆகவே மாலை வேளையில் இருட்டிய பிறகு, அவர் புத்தரிடம் சென்று, ‘கடவுள் இருக்கிறாரா?’ என்று கேட்டார்.
      கௌதமர் அவரைப் பார்த்து, ‘ஆமாம்’ என்று கூறினார். மீண்டும் ஒரு மிகப் பெரிய போராட்டம் சீடர்களிடையே தொடங்கியது. கடவுள் இல்லையென்று அவர் கூறியதால் காலை முதல் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் மாலையிலோ கடவுள் இருக்கிறார் என்று கூறுகிறார். ஏன் இப்படி?
      வளர்ச்சியடைவதற்கான தேவை உங்களுக்குள் ஆதாரமாக இருக்கும்போது, இது உங்களுடைய நோக்கமாக இருக்கும் போது, எது உங்களுடைய அனுபவத்தில் இருக்கின்றது. எது இல்லை என்பதைப் பற்றிய தெளிவு முதலில் உங்களுக்கு இருக்க வேண்டும். உங்கள் அனுபவத்தில், இருப்பது எது?, இல்லாதது எது? என்பதைப் பற்றித் தெளிவாக வ்ரையறுத்துக் கொள்ளூங்கள். உங்கள் அனுபவத்தில் எது இல்லையோ அதனை இல்லையென நீங்கள் கூறத் தேவையில்லை. வெறுமனே ‘எனக்குத் தெரியாது’ என்று கூறுங்கள். நீங்கள் ‘தெரியாது’ என்று ஏற்றுக்கொண்டால், பிறகு வளர்ச்சி ஏற்படும். ஆனால் தற்போது உங்களுக்கு எதுவெல்லாம் தெரியாதோ, அவற்றை நம்பத் தொடங்குகிறீர்கள். உங்களுக்கு அனைத்துமே தெரிந்ததாக எண்ணுகிறீர்கள்.
      இந்தியாவில் உங்களுக்குக் கடவுளைத் தெரியும். அவ்ர் எங்கிருக்கிறார் என்று தெரியும். அவ்ருடைய பெயரும் உங்களுக்குத் தெரியும்.. அவருடைய மனைவி யாரென்று உங்களுக்குத் தெரியும். அவருக்கு எத்தனை குழந்தைகள் என்றும் உங்களுக்குத் தெரியும். அவருடைய பிறந்தநாளும் தெரியும். அவருடைய பிறந்த நாளிற்கு அவர் விரும்பும் இனிப்பு என்ன என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆனால் உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. தற்போதிய முழுப்பிரச்சனையும் அதுதான். உங்களுக்கு சொர்க்கத்தின் முகவரி கூடத் தெரியும். ஆனால் இந்தக் கணத்தில் உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு இல்லை.
      இப்போது உங்களுக்குள் வளர்ச்சி நடைபெற வேண்டுமெனில், இப்போது உங்கள் அனுபவத்தில் என்ன இருக்கின்றது என்பதைப் பார்க்க வேண்டும். இப்போது உங்கள் அனுபவத்தில் என்ன இருக்கின்றது? உங்கள் உடலை ஓர் அளவிற்கு உணர்ந்திருக்கிறீர்கள். இந்த மனதை ஓரளவிற்கு உணர்ந்திருக்கிறீர்கள். இந்த உடலையும், மனத்தையும் இயக்குகின்ற சக்தியினை ஒரு குறிப்பிட்ட ஆளவிற்கு ஒரு சிஅல் கணங்கள் நீங்கள் உணர்ந்திருக்க முடியும். இதைத் தாண்டி நீங்கள் எதையும் உணரவில்லை. மற்றவை எல்லாமே கற்பனைதான்.
      இந்தச் சமூகம் எந்த வழியில் கற்பித்ததோ, அதே வழியில்தான் உங்கள் கற்பனையும் உள்ளது. உங்கள் அனுபவத்தில் எது இருக்கின்றது? எது இல்லை? என்று பாருங்கள். உங்களது அனுபவத்தில் இல்லாததை எல்லாம் ‘எனக்குத் தெரியாது’ என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். இது மிக மிக அவசியமானது. இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கை முழுவதும் பாசாங்காகிவிடும். நிஜமான ஆனந்தத்தை இழந்து விடுவீர்கள். இப்பொழுது என்ன நடக்கிறது என்பதை உணரத் தொடங்கினால் அது உங்களை ஆனந்தமயமான வாழ்கைக்கு இட்டு செல்லும்....

Friday, December 31, 2010

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? - 2 ஆனந்தம்:

      கடவுள் இருக்கிறார் என்று யாரோ சொன்னதற்க்காக நம்புவதோ, கடவுள் இல்லை என்று யாரோ சொன்னதற்க்காக மறுதலிப்பதோ எப்படி புத்திசாலித்தனம் ஆகும்?
       கடவுளை நம்புவதும் நம்பாததும் கடவுளின் பிரச்சனை இல்லை அது முழுக்க முழுக்க உங்கள் பிரச்சனை.
       ராமர் இருந்தாரா, கிருஷ்ணர் வந்தாரா, ஜீஸஸ் இருந்தாரா, நபிகள் வந்தாரா என்பதா பிரச்சனை?
       உங்கள் அனுபவம் என்ன?
       யூதர்கள் கடவுளுடன் நேரடித் தொடர்பு வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள். அவர்களைப் பற்றி ஒரு வேடிக்கைக் கதை.....
       யூதர்களின் தலைவரான ஜோஷ்வா கோல்டுபெர்க் வருடத்திற்கொரு தடவை சொர்கத்திற்குப் போய் கடவுளுடன் அமர்ந்து விருந்து உண்ணும் உரிமை பெற்றிருந்தான்.
       அப்படி ஒருமுறை கடவுளுடன் விருந்துக்கு அமர்ந்திருந்த நேரம்.... வருடா வருடம் மாற்றமில்லாமல் வறட்டு ரொட்டிகள் தான் பரிமாரப்படுவது தான் வழக்கம்.
       'கடவுளே ஒரு சந்தேகம் என் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது' என்று கேட்டு விட்டு ரொட்டியை கஷ்டப்பட்டு மென்றான் ஜோஷ்வா.
       'கேள்,மகனே!'
       'உங்கள் சாம்ரஜ்ஜியத்தில் உங்களுக்கு நெருக்கமானவர்கள் நாங்கள் மட்டும் தானா? வேறு யாராவது உண்டா?' என்று அடுத்த ரொட்டித் துண்டை விழுங்கித் தண்ணீரைத் தொண்டையில் சரித்துக் கொண்டான்.
       'சந்தேகமே வேண்டாம். வேறு யாருக்கும் அந்த சிறப்புரிமை இல்லை. அதனால் தான் உன்னை மட்டும் விருந்துக்கு அழைத்தேன்...'
       ஜோஷ்வா கையில் எடுத்த ரொட்டித்துண்டை கீழே போட்டுவிட்டு எழுந்து, 'எத்தனை நாட்களுக்கு எங்களுக்கே இந்த அவஸ்த்தை? வேறு யாரையாவது உங்களுக்கு நெருக்கமானவர்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடாதா?' என்றான் கோபமாக.
       இப்படிக் கடவுளுக்கு நெருக்கமானவர்களாக சொல்லிக் கொள்பவர்களுக்குத் தானே அதிக வேதனை?
       இவர்கள் கடவுள் என்பதன் உன்னதத்தை புரிந்து கொள்ளவில்லை. கடவுளைப் பற்றிய உண்மையான அனுபவத்தை பெற்றதில்லை.
       ஆனாலும் கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் இடைத்தரகர்களாக இருந்து ஆதாயம் தேட, இவர்கள் போடும் நாடகங்கள் சகிக்க முடியாதவை.
       கடவுளை நீங்கள் முழுமையாக நம்பி வாழ்ந்திருக்கிறீர்களா?
       சிலர் இருக்கிறார்கள்... நெருக்கமானவர்களுக்கு உடல்னிலை மோசமாக இருந்தால் கடவுளிடம் வேண்டிக்கொள்வார்கள்.
       அப்படியும் அவர்கள் பிழைக்கவில்லை என்றால் 'கடவுள் என்பதெல்லாம் பொய்' என்று வீட்டில் இருக்கும் படங்களை எல்லாம் கழற்றி விட்டெறிவார்கள்.
       தனக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்று கேட்டு நடக்கவில்லை என்றால், கடவுளே இல்லை என்று சொல்வார்கள்.
       வளர்க்கப்பட்ட விதத்திலும், விதைக்கப்பட்ட் விதத்திலும் தானே உங்களுக்கு கடவுளை நம்பத் தெரிந்திருக்கிறது?
       கடவுள் இருக்கிறார் என்பது ஒரு நம்பிக்கை. இல்லை என்பது இன்னொரு நம்பிக்கை. இருக்கிறாரா? இல்லையா? என்பது உஙளுக்குத் தெரியாது என்பதே பட்டவர்த்தனமான உண்மை.
       எனக்குத் தெரியாது என்று எப்பொது தைரியமாக ஒப்புக்கொள்கிறோமோ, அப்போது தானே எதைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்க்கான வாய்ப்பு முழுமையாகக் கிடைக்கும்!
       வெறும் நம்பிக்கைகளை வைத்துப் பின்னப்படும் கற்பனைகளை எதற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்?
       கடவுளைப் பற்றி அறிந்துகொள்ளும் பற்றி அறிந்துகொள்ளும் தாகம் உண்மையிலேயே உங்களுக்கு இருந்தால், மற்ற‌வர்கள் சொல்லிக் கொடுத்ததை குருட்டுத்தனமாக நம்புவதை முதலில் விட்டுவிடுங்கள்.
       கடவுள் இருக்கிறாரா? என்று நீங்களே தேடுங்கள்,
       உங்கள் தேடலை உங்களிடமே ஆரம்பியுங்கள்.
       எல்லையற்ற கடவுள் என்றொருவன் எல்லா இடங்களிலும் இருப்பது உண்மையாக இருந்தால், அந்தத் தன்மை உங்களிலும் இருக்கவேண்டுமே?
       உருவமாகத் தேடாமல் கடவுள் தன்மை என்பதை முதலில் உங்களில் தேடிப் பாருங்கள்.
       உங்களுக்குள் கடவுளைக் கவனித்து அனுபவமாகப் பெற்றுவிட்டால். அப்புறம் அவன் எங்கும் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம், கடவுள் இருப்பதாக ஒப்புக்கொள்ளலாம்.
       ஒரு விசயத்தை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
       உங்களுக்குப் புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நடத்தத் தெரிந்திருந்தால், கடவுள் இல்லாமலும் சுகமாக வாழலாம்.
       வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்ளாமல், மூடத்தனமாக வாழ்பவராக இருந்தால் பூஜை அறையில் எத்தனை கடவுள் படங்களைத் தொங்க விட்டிருந்தாலும் புண்ணியமில்லை......

வாழ்க வளமுடன்!

Monday, December 13, 2010

தன்ன‌ம்பிக்கையே ஆனந்தம்:

       ஒரு போலிச்சாமியார் இருந்தார். அவரிடம், ஒரு உண்மையான தேடலுள்ள சீடன் ஒருவன் வந்தான். "சுவாமி எனக்கு மந்திர உபதேசம் செய்யுங்கள்" என்று கேட்டான். "என் பெயர்தான் மந்திரம் அதனை உளமார உச்சரித்தாலே நன்மைகள் நடைபெறும்" என்றார் சாமியார்.
       கொஞ்சநாள் கழித்து நதிக்கரை பக்கமாகப் போனார் சாமியார். அங்கே ஒரே கூட்டம், ஒருவர் வந்து "சுவாமி உங்கள் சீடன் தண்ணீர் மீது நடக்கிறான்", என்றார். ஓடிப்போய் பார்த்தார் சாமியார்.
       சமீபத்தில் வந்த அதே சீடன் தான்! இவருக்கு ஆச்சரியம் தாங்க வில்லை. அவன் கரைக்கு வந்ததும் தனியாக அழைத்துப் போய், "அதன் ரகசியம் என்ன? எனக்குக் கற்றுத்தரக் கூடாதா?" என்றார் சாமியார்.
       சீடன் சொன்னான், "உங்கள் பெயரை உச்சரித்துக் கொண்டே நடந்தேன் சுவாமி! வேறேதும் ரகசியமில்லை" என்றான். அதற்குள் கூடியிருந்தவர்கள், "சீடனுக்கே இவ்வளவு சக்தி என்றால், உங்களுக்கு எவ்வளவு சக்தியிருக்கும்! நீங்களும் நதியில் நடந்து செல்லுங்கள் சுவாமி" என்று வற்புறுத்தி இழுத்துச் சென்றார்கள். தண்ணீரில் நடக்க முயன்று "தொப்" என்று விழுந்தார் சாமியார்.
       சீடனை அழைத்துச் சொன்னார், "ஐயா! நான் ஒரு போலி! இத்தனை காலம் உண்ணை இந்த ஊரை ஏமாற்றியிருந்தேன். நீ தண்ணீரில் நடக்கக் காரணம் நானல்ல! உன் நம்பிக்கை" என்றார்.
    
       ஒவ்வொரு மனிதனும் தன்னை முழுமையாக நம்பினால் புத்தனாய் மலர முடியும். மற்றவர்களை நம்புவது என்பது பழக்கத்தின் காரணமாகத்தான். உனக்கு உதவி நீதான்.
       ஒவ்வொரு சின்ன விஷயத்திலிருந்து, பெரிய சாதனைகள் வரையிலான அனைத்திற்குமே ஆனந்தமாய், அமைதியாய், தன்நம்பிக்கையுடன் இருந்தால் உங்கள் உள்சக்தியே உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.
       வெற்றி பெற விரும்புகிறவர்கள், முதலில் தன்னை முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது காலங்காலமாய் வலியுறுத்தப்படும் கருத்து.
       "தன்னுடன் பொருந்திவாழ முடியாதவனால் பிறருடன் பொருந்தி வாழ முடியாது. தன்னை நேசிக்காதவனால் பிறரை நேசிக்க முடியாது. அத்தகைய மனிதர்கள் பிறரை ஏமாற்றுவதும் பிறரிடம் ஏமாறுவதும் தொடர்ந்து நடைபெறும். இன்று ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறவை எல்லாம் முகமூடிகளே தவிர முகங்களல்ல. தன்னை முகமூடிகளுக்குப் பின்னால் ஒளித்துக் கொள்கிற மனிதர்கள் தங்களையே தொலைத்து விடுவார்கள்"
       "வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்" என்ப‌தன் உட்பொருள், மனிதன் சோகங்களுக்குள்ளும், குற்ற உணர்வுகளுக்குள்ளும் அழுந்திவிடாமல், தன்னை உணர்ந்து, தன் இயல்பான தன்மையான ஆனந்தத்தோடு வாழ‌ வேண்டும் என்பதற்காகத்தான். ஆனந்தமாக வாழுங்கள்..........

Sunday, December 12, 2010

சலிப்பல்ல‌-ஆனந்தமே வாழ்க்கை:

       தினம் அதே பேருந்து. அதே நெரிசல். அதே அலுவலகம். அதே மனிதர்கள். அதே வேலை. மாற்றம் இல்லாத இந்தவாழ்க்கை எனக்குச் சலிப்பை எற்படுத்துகிறது. ஆனால், வீட்டில் உள்ளவர்கள் என்னை நம்பி இருக்கையில், பொறுப்பே இல்லாமல் அதில் இருந்து வெளியேறவும் இயல வில்லை. என் வாழ்வைச் சுவையாக்கிக்கொள்ள ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா?"
       "அதே அலுவலகம், அதே வேலை என்று சலித்துக்கொள்ளும் நீங்கள், அதே வீட்டில் உள்ள மனிதர்கள் என்று சொல்லாமல்விட்டீர்களே! ஒருவேளை புது வேலை ஒன்றை உங்களுக்கு வழங்கினால், அதே எண்ணம் புதிய வேலையின் மீதும் விரைவிலேயே வந்துவிடக்கூடும்.
       எதுவும் மாற்றம் இன்றி இருப்பதாக நீங்கள் உணர்வது உங்கள் மனதின் விளையாட்டு. அலுவலகத்தை மாற்றினால், குடியிருப்பை மாற்றத் தோன்றும். குடியிருப்பை மாற்றினால், குடும்பத்தை மாற்றத் தோன்றும். குடும்பத்தை மாற்றினால், உங்கள் முகத்தை மாற்றத் தோன்றும். இது முடிவில்லாத பிரச்னையாகிவிடும்........
       உண்மையில், மாற்றம் இல்லாமல் எதுவும் இங்கே இயங்கவில்லை. நேற்று பார்த்த சூரியனில் இருந்து இன்று பார்க்கும் சூரியன் மாறுபட்டுத்தான் இருக்கிறது. இந்தத் தருணம் புதியது. சென்ற கணத்தில் இல்லாதவிதமாக எங்கோ ஓர் இலை உதிர்ந்திருக்கும். எங்கோ ஒரு விதை முளைத்திருக்கும். இந்தத் தருணத்தில், சென்ற வருடமோ, நேற்றோ, ஏன் கடந்து போயிற்றே ஒரு நொடி அதைக்கூட உங்கள் அனுபவத்தில் உணர இயலாது.
       உற்சாகமோ, சலிப்போ எதுவானாலும் அது உங்கள் மனதின் உருவாக்கம்தான். குடும்பத்தையே தன் தோளில் சுமப்பதாக நினைத்து நினைத்து, துக்கத்துடன் வேலை செய்பவர்களுக்குச் சலிப்பு வராமல் எப்படி இருக்கும்? நீங்கள் மனதால் வாழ்ந்துகொண்டு இருப்பதால், நேற்று செய்ததையே திரும்பத் திரும்பச் செய்வது போன்ற ஓர் உணர்வு உங்களைத் தாக்குகிறது.
       நேற்று என்பது நினைவு. நேற்று மேகங்கள் எப்படி எங்கெங்கே இருந்தன என்பதை வானம் பதிவுசெய்து வைத்துக்கொள்வது இல்லை. எவ்வளவு அலைகளைக் கரை மீது மோதினோம் என்று கடல் எழுதிவைத்துக் கொள்வது இல்லை. பிரபஞ்சத்தில் எங்கு பார்த்தாலும், நிகழ்வுகள் அதிகபட்சம் தடயங்களைப் பதிவுசெய்துவிட்டுப் போகின்றனவே தவிர, நினைவுகளாக சுமையாகி அழுத்துவதே இல்லை.
       இயற்கையில் எதுவும் பழையது இல்லை. ஒவ்வொன்றும் புதியதுதான். விஞ்ஞானமும் அதையேதான் சொல்கிறது. ஒரு பாறை கூட, அதற்குரிய அதிர்வுகளை வெளிப்படுத்தித் தன்னைக் கணத்துக்குக் கணம் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.
       வெயில் காலம். சங்கரன்பிள்ளை தெருத் தெருவாகத் தொப்பிகள் விற்றுக்கொண்டு இருந்தார். மதிய நேரம். களைத்துப்போய் ஒரு மரத் தடியில் அவர் கண்ணயர்ந்துவிட்டார். விழித்துப் பார்த்தால், விற்பனைக்கு அவர் வைத்திருந்த தொப்பிகள் எல்லாவற்றையும் குரங்குகள் எடுத்துப்போய் தங்கள் தலைகளில் அணிந்துஇருந்தன.
       அவருடைய தாத்தா ஒருவர் இதே போன்ற சூழ்நிலையில், என்ன செய்தார் என்று சங்கரன்பிள்ளையின் பாட்டி சொல்லியிருந்தாள். மனிதன் செய்வதைக் குரங்கு திருப்பிச் செய்யும் என்பதால், அவருடைய தாத்தா தன் தொப்பியைக் கழற்றித் தரையில் எறிந்தார் என்றும், அதைப் பார்த்துக் குரங்குகளும் அதே போல் தொப்பி களைக் கழற்றிக் கீழே எறிந்தன என்றும் சங்கரன் பிள்ளை அறிந்திருந்தார்.
       அதே வித்தையை இப்போது செயல்படுத்தினார். குரங்குகளைப் பார்த்துக் கையை ஆட்டினார். அவையும் அதேபோல் ஆட்டின. தன் கன்னத்தில் தட்டிக்கொண்டார். குரங்குகளும் தங்கள் கன்னங்களில் தட்டிக்கொண்டன. தன் தொப்பியைக் கையில் ஒரு முறை சுழற்றி அணிந்தார். குரங்குகளும் அதேபோல் செய்தன. இப்படிச் சிறிது நேரம் விளையாட்டுக் காட்டிவிட்டு, அவர் தன் தொப்பியைக் கழற்றித் தரையில் எறிந்தார்.
       மரத்தில் இருந்து ஒரு குரங்கு தாவி இறங்கி வந்து, சங்கரன் பிள்ளையின் தொப்பியையும் பாய்ந்து எடுத்துக்கொண்டது. திகைத்து நின்ற அவரை நெருங்கி, அவர் கன்னத்தில் பளாரென்று அடித்தது.
       "முட்டாள், உனக்கு மட்டும்தான் தாத்தா இருப்பாரா?" என்று கேட்டது.
       குரங்குகளின் பார்வைகூடப் புதிதாக மாறிவிட்டதே, உங்களுக்கு மாறவே இல்லையா? வாழ்க்கை ஒருபோதும் சலிப்பேற்படுத்துவது அல்ல. நீங்கள் வாழும் பூமிகூட நிற்காமல் சுழன்றுகொண்டுதான் இருக்கிறது. எந்தத் தருணம் நீங்கள் அண்ணாந்து பார்த்தாலும் ஆகாயத்தின் ஒரு புதிய பகுதியைத்தான் பார்க்கிறீர்கள்.
       உங்கள் மனம்தான் அதை ரசிக்கத் தெரியாமல் அல்லாடுகிறது.
கட்டுப்பாட்டில்வைத்துக்கொள்ளத் தெரியாமல், கட்டவிழ்த்துவிட்டுவிட்டால்,
மனதுக்கு வேறுவிதமாகச் செயலாற்றத் தெரியாது. சலிப்புக்குக் காரணம் உங்கள் அலுவலகம்அல்ல; நீங்கள் உங்கள் மனதுக்கு அடிமையாகிவிட்டது தான். மனதைப் பயன்படுத்துவது எப்படி என்று உங்களுக்குத் தெரியாததால், அது உங்களைப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில், அது உங்களை விழுங்கிச் சாப்பிட்டு ஒன்றும் இல்லாதவராக்கிவிடும்.
       சலிப்பில் இருந்து விடுபட வழி இருக்கிறது. எதைச் செய்தாலும், அதில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். முழுமையாக என்றால், உங்களையே அதற்காக அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் முழுமை.
       செய்வதைச் சந்தோஷமாகச் செய்வதாக உணர்ந்தால்மட்டுமே உங்களால் முழுமையாகச் செயலாற்ற முடியும். கட்டாயத்துக்காக வேலை செய்வதாக நினைத்து அலுத்துக்கொண்டு செய்தீர்கள் என்றால், ரத்தக் கொதிப்பும், இதய வலியும், மற்ற மன நோய்களும் அழைக்காமலேயே வந்து குடியேறிவிடும்.
       உங்கள் உடலும் மனமும் உங்களை ஆள்வதில் இருந்து விடுபட்டு, நீங்கள் அவற்றைப் பயன்படுத்தி விரும்பிய இடத் துக்குப் போக வேண்டாமா? இப்படிச் சுழலில் சிக்கிக்கொண்டு ஒரே இடத்தை வட்டமிட்டுக்கொண்டு இருப்பதில் இருந்து விடுவித்து, ஓர் அம்பு போல் நேர்க்கோட்டில் பயணம் செய்வதற்கு வழி செய்வதுதான், ஆன்மிகத்தின் நோக்கமே.
       ஆன்மீகத்தில் பயணிப்பவர்களுக்கு அதே பழைய விசய‌ங்களில் ஈடுபட்டு இருந்தாலும், அவர்களுடைய பார்வை மாறி விடுகிறது. ஒவ்வொன்றும் இப்போது அவர்களுக்குப் புதியனவாகத் தெரியும்.
       வெளியில் எதை மாற்றினாலும், எத்தனை மாற்றினாலும், அது உண்மையான மாற்றமாக இராது. ஆன்மீகத்தில் பயணம் செய்தால், வாழ்க்கையை விழிப்பு உணர்வுடன் வாழ்ந்து பார்த்தால், ஒவ்வொரு தருணமும் உயிர்ப்போடு இருந்தால், எதிலும் ஆனந்தமே குறிக்கோளாக இருந்தால், வாழ்வில் ஒரு தருணம்கூட பழையதாக இருக்காது. ஆனந்தமாக வாழ்கையை வாழ்பவர்க்கு, மாற்றம் உள்ளுக்குள்ளே நிகழும். அங்கிருக்கும் சலிப்பு பறந்து போய்விடும்!" ஆனந்தமே வாழ்க்கை என்பது புரிந்துவிடும்..........

Tuesday, December 7, 2010

வாழ்க்கையின் நிதர்சனம் ஆனந்தம்:

     நிறைய தூரம் பயணம் செய்தால் மனமுதிர்ச்சி வரும் என்று சொல்கிறான் என் நண்பன், ஆண்மிகப் புத்தகங்கள் படித்தால் பக்குவம் வரும் என்கிறார் இன்னொருவர், வாழ்க்கையில் கஷ்டமான சூழ்நிலைகள் வந்தால் தான் ஒருவனைப் பக்குவப்படுத்தும் என்பது என் கருத்து.  நீங்கள்?

     உண்மையில் உலகில், துன்பங்கள் என்று எதுவும் கிடையாது. வாழ்க்கை என்பது அடுத்தடுத்து வரும் வெவ்வேறு சூழ்நிலைகள் தான். அந்த சூழ்நிலைகளை கஷ்டமாக்கிக் கொள்வதோ, சந்தோசமாக்கிக் கொள்வதோ, அதை நீங்கள் எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான். வாழ்க்கை கஷ்டமாக தோன்றுகிறதா? நீங்கள் பக்குவம் அடையவில்லை என்று அர்த்தம்.
     பயணங்கள் பிடிக்குமா? பயணம் செய்யுங்கள். படிக்கப் பிடிக்குமா? புத்தகம் படியுங்கள். ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்...
     பார்ப்பது, கேட்பது, படிப்பது என இவற்றால் உங்களுக்கு வந்து சேர்வது எதுவுமே முழுமையானது அல்ல. இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் என்று துணுக்கு துணுக்காக கிடைத்த கிழிசல் துண்டுகள் உங்களுக்கு முழுமையான தெளிவைத் தரமுடியாது.
   பயணங்களில் கற்றதும், புத்தகங்களால் அறிந்ததும் உங்கள் பிழைப்பை வலியில்லாமல் நடத்திப் போக உதவலாம். சூழ்நிலைகளை சமாளிக்க பயன்படலாம். ஆனால் அவற்றால் வாழ்க்கையின் மேன்மையான நிலைகளுக்கு உங்களை உயர்த்திச் செல்ல முடியாது.
     பக்குவமடைவதற்க்கு வேறு சுலபமான வழி இங்கே இருக்கிறது. கண்களை மூடிக்கொண்டு, எதுவுமே செய்யாமல், எதுவுமே பேசாமல், உஙளால் நீண்ட நேரம் உட்கார முடிந்தால், உட்கார்ந்தால் வெகுசீக்கிரமே பக்குவமடையாலாம்.
     ஒருநாள் ஈசாப் சிறு குழந்தைகளுடன் சரி சமமாக விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவருடைய நண்பர் கேட்டார்... " சாதிக்க வேண்டிய நேரத்தில் குழந்தைகளுடன் விளையாடி பொழுதைக் கழிக்கிறாயே"
     ஈசாப் விளையாடிக் கொண்டிருந்தை வில்லை அதன் நாணிலிருந்து விடுவித்தார் "இது தான் என் நோக்கம்" என்றார். நண்பர் குழப்பத்துடன் பார்த்தார்.
    "எப்போதும் நாணேற்றி , இழுத்துக் கட்டியே வைத்திருந்தால், சிறிது காலம் கழித்து  வில்லின் திறம் குறையும். அவ்வப்போது அதை தளர்த்தி வைத்திருந்து விட்டு, பின் முறுக்கேற்றி இழுத்துக் கட்டினால், அதன் வலிமை குறையாது, ஆயுள் கூடும். மனிதனும் அப்படித்தான்!"
     ஈசாப் சொன்னது போல மாதம் ஒரு நாளாவது நீங்கள் முற்றிலும், முழுமையாக எல்லாவற்றிலிருந்தும் விடுபட வேண்டும். அலுவலகம் கிடையாது, வீட்டுக்கவலை கிடையாது, தொலைக்காட்சி, புத்தகம், ரேடியோ எதுவும் இல்லாமல், ஒரு நாள் முழுமையாக ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்து பாருங்கள்.
      உங்கள் மனதில் சதா ஊற்றெடுத்துக் கொண்டிருப்பவை எத்தனை அர்தமற்றக் கருத்துக்கள் என்று புரியும். அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்துங்கள். உங்கள் மூளைக்குள் நடக்கும் ஆரவாரமான போராட்டத்தை பொருட்படுத்தாதீர்கள். உங்கள் சரித்திரத்தை மறந்து ஒருகணம் ஒரே கணம் ஒன்றுமில்லாது இருந்து பாருங்கள். வாழ்க்கைத் தெளிவாகத் தெரியும். அதுவரை நீங்கள் எப்படி வாழ்ந்திருந்தாலும், புத்திசாலித்தனமாக வாழ முடியும் என்று தெரிந்து கொள்வீர்கள்.
     ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீங்களாக ஏதும் அர்த்தம் கற்பிக்காதீர்கள். நல்லவன், கெட்டவன் என்று யாரைப் பற்றியும் தீர்ப்பெழுதி வாழ்க்கையை கொச்சைப்படுத்தாதீர்கள். ஆயிரம் கருத்துக்கள் சொல்லத் தெரிந்து விட்டதாலேயே ஞானம் பெற்று விட்டதாக தப்புக் கணக்கு போடாதீர்கள், வாழ்க்கையை வாழ்க்கையாக அனுபவித்து வாழ்ந்து பாருங்கள். சீக்கிரம் பக்குவமடைவீர்கள்
     சங்கரன்பிள்ளையின் பக்கத்து வீட்டுக்காரருக்கு குதிரைப் பந்தயத்தில் பத்து லட்சம் கிடைத்தது. அந்தப் பணத்தை யாருக்கும் தெரியாமல் தன் வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைத்தார்.
     மறுநாள் பணத்தைக் காணவில்லை, காலடித்தடங்களை வைத்து பணத்தைப் பின் வீட்டிலிருந்தவன் எடுத்திருக்கிறான் என்பதை அவர் புரிந்து கொண்டார்.
     அங்கே இருந்தவனோ ஆப்பிரிக்கன். அவன் பேசிய மொழி அவருக்கு புரியவில்லை. கோபத்தில் துப்பாக்கியை எடுத்துவிட்டார். இதைக் கவனித்துவிட்டு சங்கரன்பிள்ளை ஓடி வந்தார்.
     "அவசரப்படாதீர்கள் நான் விசாரிக்கிறேன்" என்றார்.
துப்பாக்கியால் மிரட்டப்பட்டதுமே ஆப்பிரிக்கன் பயந்து, பணத்தை தன் வீட்டுத் தோட்டத்தில் பூமிக்கடியில் புதைத்து வைத்தருப்பதாகக் சங்கரன்பிள்ளையிடம் கூறினான். 'பூமிக்கடியில்' என்பதை சைகையிலும் காண்பித்தான்.
பக்கத்துவீட்டுக்காரர் புரியாமல், சங்கரன்பிள்ளையை நோக்கி, "என்ன... தன்னை உயிரோடு புதைத்தாலும், பணத்தைத் திருப்பித்தர முடியாது என்கிறானா?" என்று கேட்டார், சங்கரன்பிள்ளையும் 'ஆமாம்' என்றார் நிதானமாக.
     அந்த பக்கத்துவீட்டுக்காராரைப் போல தான் நீங்களும் வாழ்க்கைக்கு ஏதெதோ அர்த்தம் கற்பித்துக் கொள்கிறீர்கள்
நீங்கள் நினைப்பது தான் சரி, உங்கள் எண்ணம் தான் முக்கியம் என்ற இரண்டும் தான் உங்களை விலங்கிட்டு வைத்திருக்கின்றன. அவற்றைக் களையுங்கள். எதுவுமே முக்கியமில்லை என்னும்போது, எது உங்களை கட்டிப் போட முடியும்!
     உங்கள் பழுதான கண்ணாடி வழியே பார்க்காமல், தெளிவாகப் பார்க்கத் த‌யாராக இருந்தால்தான், வாழ்க்கைப் பயணம் எந்தக் காயமும் இல்லாமல் நிகழும். உங்கள் மனதின் படபடப்புகளை நிறுத்தினால் தான், எதனுடனும் சிக்கிக் கொள்ளாமல், வாழ்க்கையின் உண்மையான பக்குவம் கிடைக்கும். அப்பொது தான் நீங்கள் என்றென்றும் ஆனந்தாமாக வாழலாம்.

வாழ்க வளமுடன்!

Friday, November 26, 2010

ஆனந்தமாக இருந்தால்:

தனக்காக வாழ்பவன் கெட்டவன், பிறருக்காக வாழ்பவனே நல்லவன் என்பது பெரியோர் கூற்று. கடவுள் இதைத்தான் எதிர்பார்க்கிறாரா?

ந‌ல்லது, கெட்டது என்பதெல்லாம் உங்கள் கண்ணோட்டம் தான். ஒன்றைக் குற்றம் என்றோ அல்லது ஒன்றைக் நல்லது என்று நினைக்கும் போதே, மனம் சிதைந்து விடுகிறது. கடவுளைக் கொண்டு வந்து இதில் சேர்க்காதீர்கள்.
கடவுள் நல்லவரா, கெட்டவரா என்றால், இரண்டும் இல்லை, அவர் ஆனந்தமானவர், அவ்வளவு தான்.
டாக்டரிடம் போகிறீர்கள், அவர் உங்கள் உடம்பை பரிசோதித்து முடிவுகள் சொல்வார் என்று காத்திருக்கும் போது, அவர் கண்களை மூடி கடவுளிடம் பிரார்த்திக்க தொடங்கினால், எப்படி உணருவீர்கள்? நீங்கள் செய்ய வேண்டியதை செய்யாமல், கடவுளைப் பற்றி கவலைப்படுவது அப்படித்தான் இருக்கிறது.
நல்லவனாயிருப்பதாகச் சொல்லிக் கொள்வதே கூட ஒருவித நோய் தான்!
வீட்டுக்கு தாமதமாகத் திரும்பிய சங்கரன்பிள்ளையிடம்' "ஏன் இவ்வளவு லேட்?" என்று கேட்டாள் மனைவி.
" அலுவல‌கத்தில் தாமதமாகிவிட்டது!"
"விசாரித்தேன், நீங்கள் அலுவல‌கத்திலிருந்து ஐந்து மணிக்கே புறப்பட்டுவிட்டதாக சொன்னார்கள்!"
மறுநாளும் அதே தாமதம். அதே கேள்வி. அதே பதில். அதே எச்சரிக்கை. மூன்றாவது நாள் அவர் மனைவி பொறுமையிழந்து, " நாளைக்கு பொய் சொன்னால், நாக்கில் சூடு வைப்பேன்" என்றாள்.
அதற்க‌டுத்த நாள் சங்கரன்பிள்ளை வீடு திரும்பியதும், " அடுப்பு எரிகிறதா?" என்று கேட்டார்.
"இல்லையே ஏன்?"
"அப்ப‌டியானால் இன்றைக்கும் அலுவ‌ல‌க‌த்தில் லேட்டாகி விட்ட‌து!" என்றார், ச‌ங்க‌ர‌ன்பிள்ளை.
இப்ப‌டித்தான் த‌ன‌க்கு ஆப‌த்து இல்லாத‌வ‌ரை தான் நல்ல‌வ‌ன், ந‌ல்ல‌வ‌னாக‌ ந‌ட‌ந்துகொள்வான்.
ந‌ல்ல‌வ‌ர்க‌ளுக்கு கெட்ட‌து எதுவும் தெரியாது என்று நினைக்கிறீர்க‌ளா? அவ‌ர்க‌ள் கெட்ட‌து என்று நினைப்ப‌வ‌ற்றை த‌விர்க்க‌ முய‌லுகிறார்க‌ள். அவ்வ‌ள‌வுதான்! ஒன்றைத் த‌விர்க்க‌ முய‌லும் போது அதைப் ப‌ற்றிய‌ க‌வ‌ன‌ம் தான் அதிக‌மாகும். ஒன்றின் மீது க‌வ‌ன‌ம் அதிக‌மாகும் போது அதிலிருந்து விடுப‌ட‌வில்லை என்று தானே அர்த்த‌ம். முற்றிலும் அவைக‌ளில் இருந்து விடுப‌ட‌ வேண்டும்....

"நான் தேடிப்போய் யாருக்கும் உதவமாட்டேன், அதே சமயம் மனதாலும் யாருக்கும் கெடுதல் செய்யமட்டேன், நான் நல்லவனா? கெட்டவனா?"
மூன்று வித நிலைகளில் இயங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
தன்னைப் பற்றிய பொறுப்பை கூட எற்றுக்கொள்ளாமல், யார் கையிலாவது தன்னை ஒப்படைக்க காத்திருப்பவர்கள் ஒரு வகை. அவர்கள் புழுவைவிடக் கேவலமானவர்கள்.
மற்றவர்களைப் பற்றிக் கவலையின்றி தன்னை மட்டும் பார்த்துக்கொள்பவர்கள் அடுத்தவர். இவன் மிருகத்தைப் போன்றவன். மிருகங்கள் பொதுவாக யாருக்கும் தீங்கு நினைப்பதில்லை, சிங்கம் பசித்திருக்கும் போது அதன் எதிரே போனால், அது உங்களை உணவாக மட்டுமே பார்க்கிறது. மற்றபடி அது உங்களை எதிரியாகப் பார்ப்பது இல்லை.
தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒருதேவை என்றால், தாமகவே அவர்களை அண்டி உதவி செய்பவர்கள் மூன்றாவது வகை. இவர்கள் தான் மனிதன் என்ற பதத்துக்கு அருகதையானவர்கள். மற்றபடி யாரோ சொன்னதற்காக மற்றவருக்கு உதவுபவர்கள் எதிலும் சேர்த்தியில்லை.
சங்கரன்பிள்ளைக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஒரு புதிய அறை ஒதுக்கப்பட்டது. தனக்கு கீழே பணிபுரிபவர்களுக்கு எதிரில் தன்னை பெரியாளாகக் காட்டிக்கொள்ள விரும்பினார் அவர்.
அறைக்கதவு தட்டப்பட்ட போது , ட்க்கென்று தொலைபேசி ரிசீவரைக் காதில் எடுத்து வைத்துக்கொண்டார். கம்பெனி முதலாளியுடன் உரிமையோடு பேசுவது போல் பாவனை செய்தார். பிறகுதான் உள்ளே வந்தவனைக் கவனித்தாகக் காட்டிகொண்டு " சொல்தம்பி, உனக்கு என்ன வேண்டும்?" என்றார்.
அவன் நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு சொன்னான், "ஐயா, தங்கள் அறையில் உள்ள தொலைபேசிக்கு கனெக்ஷன் கொடுக்க வந்திருக்கிறேன்!"
மற்றவர்களிடம் செயற்கையாக தன் பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதற்காக முனைபவர்கள் இப்படித்தான் மூக்குடைபடுவார்கள். அவர்கள் போலிகள்!
உங்களிடம் மனிதகுணம் முழுவீச்சில் இயங்கினால், எந்தக் கோட்பாடுகளுக்காவும் காத்திருக்க மாட்டீர்கள்.உங்கள் சக்திக் உட்பட்டு அடுத்தவர்களுக்கு தேவையானதை கவனித்து வழங்குவீர்கள். எங்கெங்கு உதவி தேவையோ அங்கெல்லாம் தாமாகவே உங்கள் கரங்கள் உதவியுடன் நீளும்!

எப்படி எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் உதவி செய்து கொண்டு இருக்க முடியும்?
உங்களால் முடியாததை நீங்கள் செய்யாவிட்டால், அது தவறில்லை. செய்யக்கூடியதை நீங்கள் செய்யாவிட்டால் நீங்கள் மனிதராகவே இருக்க தகுதியற்றவராகி விடுவீர்கள்.
மனிதன் எட்டக்கூடிய உயரங்களை, எட்டாமல் இருப்பது எவ்வளவு பரிதாபகரமான நிலை?
க‌டவுளை விடுங்க‌ள், அடுத்த‌வ‌ர்க‌ளை விடுங்க‌ள், உங்க‌ளைப்ப‌ற்றிய‌ க‌வ‌ன‌ம் கொள்ளுங்க‌ள். நீங்க‌ள் ஆன‌ந்தமாக‌ இருந்தால், உங்க‌ளைச் சுற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஆன‌ந்த‌மாக‌ இருப்பார்க‌ள். வாழ்க்கையும் ஆன‌ந்த‌மாக‌ இருக்கும்.....
ம‌னித‌ன் மேம்ப‌ட்டால் தான், ம‌னித‌த‌ன்மை மேம்ப‌டும், ம‌னித‌த‌ன்மை மேம்ப‌ட்டால் யாருக்கும் எந்த‌ போத‌னையும் செய்ய‌த்தேவை இல்லை.
அத‌னால் தான் யோகமார்க்கம்(ஆனந்தவழி) என்பதில் கடவுளைப் பற்றிய‌ கவனம் என்பதே இல்லை. ம‌னித‌னை, ம‌னித‌த்த‌ன்மையை மேம்ப‌டுத்துவ‌திலேயே இருக்கிற‌து. முழுமையான ஆன‌ந்தத்தை அடைய‌வே வ‌ழிக‌ட்டுகிற‌து......

வாழ்க வளமுடன்!