Sunday, June 17, 2012

குட்டிக்கதை! கடவுளுக்கு ஓய்வு? ஆனந்தம்


      தாங்களே கடவுளாக மாற விரும்பிய சில விஞ்ஞானிகள் ஒன்றாக சேர்ந்து கடவுளை சந்தித்து. 'முதியவரே, இதுவரை நீங்கள் நன்றாக படைப்புத்தொழிலை செய்து வந்தீர்கள், நாங்களும் உயிரை உருவாக்க முடியும், எதை விரும்புகிறோமோ, எதை விரும்புகிறோமோ அதை எங்களால் உருவாக்க முடியும், எனவே நீங்கள் ஓய்வு பெறுவதற்க்கு இது தான் சரியான நேரம்' என்றார்கள்.
      அதற்கு கடவுள், 'அப்படியா, உங்களால் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியுமா? எங்கே ஒரு உயிரை உருவாக்கிக் காட்டுங்கள் பார்க்கலாம்' என்றார். விஞ்ஞானிகள் கொஞ்சம் மண்ணை எடுத்து, எதேதோ செய்து அந்த மண்ணை ஒரு சிறு குழந்தையாக மாற்றி விட்டார்கள். உடனே கடவுள் சொன்னார் 'இதெல்லாம் சரி தான், முதலில் உங்களுடைய சொந்த மண்ணை உருவாக்குங்கள்!

Saturday, June 16, 2012

"ஈகோ" என்றால் என்ன? ஆனந்தம்


      மனிதனுடைய இன்றைய மிக முக்கியப் பிரச்சினை அவனுடைய ’ஈகோ’ தான். எது உண்மையான ’நான்’ அல்லவோ அதை உண்மை என்று நம்பி அந்த தவறான, பொய்யான மையத்தில் அவன் இயங்குவது தான். அந்தப் பொய்யான, கற்பனை மையத்தைத் தான் இக்காலத்தில் ’ஈகோ’ என்கிறோம். அந்தப் பொய்யான மையத்திலிருந்து கொண்டு மனிதன் எதைச் செய்தாலும் அது குறைபாடானதாகவும், பிரச்சினைகளை அதிகப்படுத்துவதாகவுமே இருக்குமே தவிர எதுவுமே அவனை அமைதியடைய விடாது.
      வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் ‘ஈகோ’வினால் உருவாக்கப்படுபவை. உண்மையான சாதனைகளை விடப் பொய்யான தோற்றங்களை உருவாக்கவும், தக்க வைத்துக் கொள்ளவும் தான் ‘ஈகோ’விற்கு அதிக சிரத்தை இருக்கும். யாரையும் விடக் குறைந்து விடக் கூடாது, அடுத்தவர் பார்வையில் தாழ்ந்து விடக் கூடாது என்பது போன்ற எண்ணங்களே பிரதானமாக இருக்கும். யாராவது அதிகம் உயர்ந்து விட்டாலோ அதைப் பார்த்து பொறாமைப்படத் தோன்றும். எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பு நோக்கத் தோன்றும். செயல்படக் கிடைக்கும் இந்தக் கணத்தில் கடந்ததை எண்ணி துக்கமும், வரப்போவதை எண்ணி கவலையும் அடைந்து இந்தக் கணத்தை வீணாக்கி விடும். இத்தனையும் ஒருவருடைய செயல்திறனை மங்க வைக்கும் அம்சங்கள் மட்டுமல்ல, துக்கத்திற்கும் மூலகாரணிகள்.
      ஒரு செயல் செய்யும் போது அதில் நூறு சதவீதம் மனம் லயிக்க வேண்டும். அந்த செயலாகவே மாறி விட வேண்டும். அப்போது தான் அந்த செயல் குறைபாடில்லாத மேன்மையான தரம் வாய்ந்ததாக இருக்கும். விளைவைப் பற்றிய எண்ணம் கூட அந்த செயலிற்கு இடைஞ்சல் தான். விளைவு எப்படி இருக்கும், அதை அடுத்தவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற வகையில் எண்ணங்கள் ஓடுமானால் செயலில் நூறு சதவீதம் இல்லை என்று பொருள். செயலிற்கு வேண்டிய நூறு சதவீதத்தில் இருந்து எடுக்கப்பட்டு சில சதவீதங்கள் செயலிற்கு உதவாத எண்ணங்களில் வீணாகின்றன என்று அர்த்தம்.
      “செயல்பட வேண்டிய நேரத்தில் முழு விழிப்புணர்வோடு இரு. கருத்துக்களாலும், வழக்கங்களாலும் சிறைப்பட்டு விடாமல் சுதந்திரமாக இரு. எதையும் எதிர்பாராதே. விளைவைப் பற்றிய கவலை கொள்ளாதே. விருப்பு வெறுப்பு இல்லாமல் இரு. இயல்பாக, எளிமையாக, தெளிவாக, முழுமையாக இரு. அப்போது தான்  உள்ளது உள்ளபடி தெளிவாகப் புரியும். பின் செய்ய வேண்டியதை கச்சிதமாகச் செய்வது மிக சுலபமாகும்”. (இந்தக் கருத்தைச் சொன்னது ஒரு துறவியோ, தத்துவ ஞானியோ அல்ல. வாழ்ந்த குறுகிய காலத்தில் தற்காப்புக் கலைகளில் தன்னிகரில்லா நிபுணராக விளங்கிய ஒரு செயல்வீரனின்(ப்ரூஸ் லீயின் கருத்து) கருத்து இது
      அந்த முழுமையான நிலையில் செய்யப்படும் எதுவும் சோடை போகாது. எல்லா தனித்தன்மை வாய்ந்த, காலம் கடந்தும் சிறப்பு குறையாமல் இருக்கும் கலைப்படைப்புகளும் அப்படி உருவாக்கப்பட்டவையே. அங்கு ஈகோ இல்லை. உதாரணத்திற்க்கு அஜந்தா ஓவியங்களையும், எல்லோரா சிற்பங்களையும்,  ஒப்புயர்வில்லா உபநிடதங்களையும் உருவாக்கியவர்கள் தங்கள் பெயர்களைக் கூட அவற்றில் விட்டுச் செல்லவில்லை. வரலாற்றுப் பக்கங்களில் தங்கள் பெயர் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசை கூட அவர்களிடமில்லை.
      அப்படிப்பட்ட உன்னதமான உயர்வான உள்ளத்தோடு செய்யப்படும் செயல்கள் எதுவும் செய்பவர்களை பிணைப்பதில்லை. செய்பவன் அதன் விளைவுகளில் இருந்து விடுபட்டவனாகவே இருக்கிறான். அப்போது தான் ஆனந்த வாழ்வு வாழலாம். அது நிலையான ஆனந்த வாழ்வாக இருக்கும்.

Friday, June 15, 2012

ஒரு குட்டிக் கதை! தவறான திசையில் தேடாதீர்கள்? ஆனந்தம்


      ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரர், தினசரி ஒரு மரத்தடியில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார். மக்களும் அவர் மேல் பரிதாபப்பட்டு சில்லறைகளை வீசுவார்கள்.
      ஒவ்வொரு நாளும் வானத்தை அண்ணாந்து பாத்து, "கடவுளே, என்னை ஏன் ஒரு பிச்சைக்காரனாக வைத்திருக்கிறாய்? என்னை ஒரு கோடீஸ்வரனாக படைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே? என்று புலம்பிக் கொண்டே பிரார்த்திப்பார். காலம் சென்றது. அவருக்கும் வயதானது. ஒரு நாள் திடீரென இறந்து விட்டார்.
      அவருடைய உடலைச் சுமந்து சென்று ஈமக்கிரியைகளை யாரும் செய்ய விரும்பவில்லை. அதனால் அந்த மரத்தடியிலேயே புதைத்துவிட அங்கேயே ஒரு சவக்குழியை தோண்ட ஆரம்பித்தனர். சில அடிகள் தோண்டியவுடன் மிகப்பெரிய ஒரு வைரப் புதையலை கண்டெடுத்தனர். இந்த பிச்சைக்காரர் வாழ் நாள் முழுவதும் அந்தப் புதையலின் மேலே உட்கார்ந்திருந்தாலும், அவர் தவறான திசையை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார், கொஞ்சம் கீழே தோண்டிப் பார்த்திருந்தால், என்னவெல்லாம் வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டாரோ அதையல்லாம் அவர் அடைந்திருப்பார்.
      ஆன்மீகமும் இப்படித்தான். பலரும் தவறான திசையையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சனை. உண்மையில் உங்களுக்குள்ளேயே உங்களுக்குத் தேவையானது எல்லாமே இருகின்றது.
..........................வாழ்க வளமுடன்!.............................

Thursday, June 14, 2012

எது சரி? எது தப்பு? ஆனந்தம்


      எது சரி? எது தப்பு? என்கிற போதனை வழ‌ங்குவது......
      முக்கியமாக வீட்டில் குழந்தைகளுக்கு பெற்றோரின் போதனை இது சரி, இது தப்பு, என்று கூறும் விசயங்கள் அனைத்தும் ஒரு மிகப்பெரிய பட்டியலாக இருக்கிறதே? ஏன்? அதனால் குழப்பம் தான் மிஞ்கிறது! எதுவெல்லாம் சரி? எதுவெல்லாம் தப்பு?
      மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க குற்றவுணர்ச்சி மிகச் சிறந்த வழி. பயமும், குற்றவுணர்ச்சியும் மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும் சிறந்த இரண்டு வழிகள். சில மதங்கள் பயம் மூலம் மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயலுகின்றன. சில மதங்கள் குற்றவுணர்ச்சி மூலம் அவர்க‌ளை கட்டுப்படுத்த நினைக்கின்றன. இந்த உலகில் பாவம் புண்ணியம் எல்லாம் எதற்கு உருவாக்கப்பட்டன? மக்களை குற்றவுணர்ச்சியில் தள்ளி அவர்களை அமைதிப்படுத்தத்தான். குற்றவுணர்ச்சியில் இருப்பவர்கள் எப்படி அமைதியாக, ஆனந்தமாக இருப்பார்கள்? அவர்கள் எப்போதும் துயரப்படும் மனிதர்கள் தான் இல்லையா? உங்களைப் பொருத்தமட்டில் ஒழுக்கத்தோடு இருப்பது தான் சிறந்த மனிதனாக‌ இருக்கும் வழியல்லவா?
      பெரும்பாலான பெற்றோர்களுக்கு தனது பிள்ளைகள் புத்திசாலியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஒழுக்கத்தோடு இருக்கவேண்டும். இது துரதிருஷ்டம் இல்லையா? பெற்றோர் சொல்லும் அத்தனை முட்டாள் தனங்களையும் அவன் கேட்டுக்கொண்டிருந்தால், அவர்களைப் போலவே அவனும் துயரம் மிகுந்த மனிதாகத்தான் அவான் இல்லையா? இன்னொரு துயர மிக்க மனிதன் உருவாக வேண்டுமா? அல்லது முட்டாள் தனங்களிலிருந்து விடுதலை பெற்ற மனிதன் உருவாக வேண்டுமா? துயரமா? ஆனந்தமா? நீங்களே முடிவு செய்யுங்கள்.
..........................வாழ்க வளமுடன்!.............................

Wednesday, June 13, 2012

மறு பிறவி உண்டா? ஆனந்தம்


      மறு பிறவி உண்டா? என்ற கேள்வி உங்களுக்கு வருவது என்பது.....
      நான் என்பது இந்த உடலா? உயிரா? அல்லது இந்த இரண்டும் சேர்ந்த ஒன்றா? அல்லது அதையும் தாண்டிய ஏதாவது ஒன்றா? அந்த நான் என்பது யார்? அல்லது உயிர் இந்த உடம்பில் எங்கே இருக்கிறது? எப்படி இயங்குகிறது? என்கிற மிகப்பெரிய கேள்விகளை தான் அப்படி கேட்கிறீர்கள்....
      உண்மையாக இந்தக் கேள்வி உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து உண்மையில் விடைகாண முற்பட்டால், விடை கிடைக்கும். ஆனால் வேகு சாதரணமாக இந்தக் கேள்வி மறு பிறவி உண்டா? என்றால் பதில் கிடையாது, பதில் கொடுத்தாலும் சிலர் நம்பலாம். சிலர் நம்பாமல் போகலாம். மறு பிறவி உண்டு என்றாலும் அல்லது இல்லை என்றாலும் அது உங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
      இந்தக் கணத்தில் உங்களுக்கு "வாழ்க்கை" என்றால் உங்கள் உடல் மனதைத் தாண்டி எதுவும் தெரியாது, ஆகையால் எதையும் நீங்களாக கற்பணை செய்து கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்க்கையை உடல் மற்ரும் மனதிற்க்கு உட்பட்டு, எத்தனை உயர்ந்த வழியில் வாழ முடியுமோ அந்த வழியில் ந‌டத்துங்கள்.
      உள்ள இந்த வாழ்கையையே நீங்கள் பல அழகான வழிகளில் வாழ அனுமதிப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில் உடலைக் கடந்து இருப்பவற்றையும், மரணத்திற்க்கு பிறகு நிகழவிருப்பதையும் எப்படி நீங்கள் சரியாக புரிந்து கொள்வீர்கள்? மறுபிறவியை அறிந்து கொள்ள தீவிர ஈடுபாடு வந்துவிட்டால் தற்போது வாழும் வாழ்க்கையை மறந்து விடுவீர்கள்.
      இங்கில்லாத ஒன்றைப் பற்றித் தேடுவதைத்தான் மனம் எப்போதும் விரும்பும். இங்கே வாழவேண்டிய வாழ்க்கையே நிறைய மிச்சமிருக்கிறது. ஆனால் அதன் மேல் உங்கள் ஈடுபாடு எபோதும் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. உங்கள் இப்பொது வாழுகிற வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்கிற எண்ணமே உங்களுக்கு இல்லை. ஆனால் நாளைக்கு என்ன நடக்கும்? 10 வருடங்களுக்கு பிறகு என்ன நடக்கும்? என்ன கல்யாணமே இன்னும் ஆகவில்லையென்றால் கூட என் குழந்தை எப்படியிருக்கும்? என் பேரக்குழந்தைகள் எப்படியிருக்கும்? என்ற பல்வேறு கற்பனைக் கணக்குகளைத் தான் போட்டுக்கொண்டிருப்பீர்கள். மனம் எப்போது நிஜத்தில் இருந்து தப்பித்து, கற்ப்பனைக்குத் தான் உங்களை இழுத்துச் செல்லும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
      உங்களால் அதிகம் சிந்திகாமல் வெறுமனே இருக்க முடிந்தால் ஒன்று ஞானி ஆகிவிடுவீர்கள் அல்லது 'நான் ஒரு முட்டாள்' என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இதைத் தவிர வேறு வாய்புகளே கிடையாது. அதனால் தான் உங்கள் மனம் ஏதவது ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. அது அமைதியாக இருக்கும் போதே, தான் ஒரு முட்டாள் என்பதைப் புரிந்து கொள்ளும். அப்படி புரிந்து கொண்டால் நீங்கள் யோகாவில் மிகப்பெரிய அடி எடுத்து வைக்கிறீர்கள் என்று அர்த்தம்? ஆன்மீகப் பயணம் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்? ஒரு மனிதன் தான் ஒரு முட்டாள் என்று புரிந்து கொள்ளும் அந்த கணத்தில் அவனுடைய அறிவுணர்ச்சி மலர்கிறது.
      இந்த நொடியில் உங்கள் மனதில் நடப்பவை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையென்றால், வாழ்க்கையை கடந்து சிந்திப்பதோ, மரணத்தைக் கடந்து ஆரய்வதோ, உங்களது நேரத்தையும், வாழ்க்கையையும், சக்தியையும் வீணடிக்கும் வேலை தான். ஏனென்றால் இப்போது உங்கள் அனுபவநிலையைத் தாண்டி இருக்கும் ப‌ரிணமங்களை துளைத்துச் செல்வதற்கான தீவிரத்தன்மை உங்களிடம் இருக்காது.
      இதுவரை உங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் அனைத்தும் உங்கள் ஐம்புலன்களுக்கு உட்பட்டவை. இந்த நிலையில் உடல் தன்மையைத் தாண்டி உள்ளவற்றை உங்களால் உணர முடியாது. எனவே 'மரணத்திற்க்கு பிறகு வாழ்க்கையிருக்கிறதா?' என்று நீங்கள் அறிய விரும்பினால், அதாவது 'இந்த உடல் தன்மையைத் தாண்டி ஏதாவது இருக்கிறதா?' என்று உண்மையிலேயே நீங்கள் அறிய விரும்பினால், இந்த ஐந்து புலன்களைக் கடந்து எப்படிச் செல்வது என்று பாருங்கள். உங்களுக்கான விடை அங்கு தான் ஆரம்பிக்கிறது? .........................................வாழ்க வளமுடன்!..................................................

Sunday, June 10, 2012

இன்றைய இளைஞர்கள்? ஆனந்தம் குட்டிக் கதை!


      ஒரு சாலையில் இரு துறவிகள் ஒரு அட்டையை பிடித்துக்க்கொண்டு நின்று கொண்டிருந்தனர். அந்த அட்டையில், "கவனம், முடிவு வந்துவிட்டது, திரும்பிச் செல்லவும்" என்று எழுதியிருந்தது.
      அப்போது வேகமாக ஒரு கார் வந்து இவர்கள் அருகில், கிறீச்சிட்டு நின்றது. வண்டி முழுவதும் இளைஞர்கள். வண்டி ஓட்டி வந்த இளைஞன் வெளியே எட்டிப் பார்த்து. உங்களை மாதிரி சாமியார்களுக்கு நல்ல வார்த்தையே சொல்லத் தெரியாதே! எப்பப் பார்த்தாலும் கவனமாக இரு, அப்படிச்செய், இப்படிச்செய், நிதானமாக நட என ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பீங்களே, உங்களோட ஒரே தலைவலி! என்று சொல்லிக்கொண்டே வேகமாக வண்டியை ஸ்டார்ட் செய்து மேலே சென்றான். சில நிமிடங்களில் அந்த வண்டி எதிலோ மோதி எங்கோ விழுந்த சப்தம் கேட்டது.
      அப்போது முதல் துறவி மற்ற துறவியிடம் மெதுவாகச் சொன்னார், "ம், பாலம் பழுதடைந்து விட்டது என்று மட்டும் நாம் சொல்லியிருக்கலாம்".

Saturday, June 9, 2012

மாற்றங்கள் மாறும்! ஆனந்தம்

      வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் மக்களை எப்போதும் தடுமாற வைக்கின்றன. நவீனவாழ்க்கை எனச் சொல்லப்படும் தற்ப்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மக்கள் துன்பப்படுகின்றனர். பள்ளிப் பருவம் ஒரே பதற்றம், விடலைப்பருவமோ பெரும் பாதிப்பு, நடு வயதோ தாங்கமுடியவில்லை, முதுமைப் பருவம் ஒரே வெறுப்பு, இறப்போ கடும் பயம். வாழ்க்கையின் ஒவ்வொறு கட்டமுமே மக்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. ஏனெனில் வாழ்க்கையின் மாற்றத்திற்க்கேற்ப்ப தங்களை மாற்றிக் கொள்ள கஷ்டப்படுகின்றனர். வாழ்க்கையின் இயைபே மாற்றம் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
      அசைவின்மையை(stillness) நீங்கள் அனுபவித்திருந்தால், பின்  மாற்றம்  என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். அந்த அசைவின்மையோடு உங்களுக்கு தொடர்பே இல்லாமல் இருப்பதால் தான், ஒவ்வொரு மாற்றமும் உங்களுக்கு துன்பத்தை தருவதாக இருக்கிறது.
      வாழ்க்கையின்  மாற்றங்களை கண்டு பயப்படுவதால் தான், அதை முன்னதாகவே கண்டு கொள்ள மக்கள் தற்ப்போது வானத்து நட்சத்திரங்களை பார்க்கின்றனர், குனிந்து கைரேகைகளை பார்கின்றனர். உங்களிலேயே உள்ள அசைவின்மையை ஒருமுறை நீங்கள் சுவைத்து விட்டால், பிறகு மாற்றங்கள் உங்களைத் துன்புறுத்தாது. மாற்றம் என்பது மாறும் தன்மை கொண்டது. அசைவின்மை என்பது நிலைத்த தன்மை கொண்டது, விழிப்புணர்வைச் சார்ந்தது.
      எனவே அந்த அசைவின்மையை, விழிப்புணர்வை நீங்கள் சுவைக்க முடிந்தால் பிறகு மாற்றம் நிகழும் போதும் அதை உங்களால் கொண்டாட முடியும். எனவே அந்த விழிபுணர்வை சுவைக்க இன்றே இப்பொழுதே நீங்கள் தயராகுங்கள். ஆனந்தமான வாழ்வுக்காக!
...........................................................வாழ்க வளமுடன்!...................................................................

Friday, June 1, 2012

ஒரு குட்டிக்கதை! நீங்கள் சிங்கமா? நரியா? ஆனந்தம்


ஒருமுறை ஒரு சன்னியாசி ஒருவர் காட்டுக்குள் சென்றார். அங்கு ஒரு வேடனின் பொறியில் ஏற்க்கனவே சிக்கி , தன் முன்னங்கால்கள் இரண்டையும் இழந்திருந்த ஒரு நரியைப் பார்த்தார். நடக்கவே முடியாத அந்த நரி எப்போதும் ஒரு மரத்தின் அடியிலேயே படுத்திருந்தாலும், ஓரளவு கொழுத்திருந்தது. இதை அந்த ச‌ன்னியாசி பார்த்தபோது அவரால் இதை நம்ப முடியவில்லை. அதே நேரத்திலேயே ஒரு சிங்கம் தான் வேட்டையாடிய மிருகத்தின்  மாமிசத்தை அந்த நரியின் முன்னால் கொண்டுவந்து போட அதை அந்த நரியும் சாப்பிட்டது.
சன்னியாசியால் தன் கண்களை நம்ப முடியவில்லை. உடனே அந்த ச‌ன்னியாசி 'ஓ, இது கடவுள் எனக்கு அனுப்பியிருக்கும் சேதி, ஊனமுற்று, முடங்கிப் போன நரிக்கு அது உட்கார்ந்து இருக்கும் இடத்திற்க்கும் இடத்திற்கே உணவு தேடி வ‌ருகிறதென்றால், தெய்வீகத்தின் பாதையில் நடக்கும் சன்னியாசியான எனக்கு, உணவு ஏன் தானாக கிடைக்காது? இனி நானும் ஒரே இடத்தில் உட்கார்ந்து தியானம் செய்யப் போகிறேன்' என நினைத்து ஒரே இடத்தில் உட்கார்ந்து விட்டார்.
மூன்று நாட்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. நான்காவது நாளில் இருந்து பசியின் மிகுதியால், தியானம் செய்ய முடியாமல், வயிற்றைப் பிடித்துக்கொண்டே காதிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு யோகியிடம், அந்த சன்னியாசி நடந்ததைக்கூறி இது தெய்வீகத்தின் செய்தி தானே? எனக்கு மட்டும் ஏன் உணவு தானாக வரவில்லை?' என்று கேட்டார். அதற்க்கு அந்த யோகி,'இது நீச்சயம் தெய்வீகத்தின் செய்தி தான். ஆனால் நீங்கள் ஏன் ஊணமுற்ற அந்த நரியைப் போல் நடந்து கொண்டீர்கள்? தாராள மனப்பாண்மை கொண்ட அந்த சிங்கத்தைப் போல் நடந்து கொள்ளலாமே? என்று கேட்டார்.
பல நேரங்களில் தொடர்ந்து நாம் எதிர்மறையான விசங்களில் மட்டுமே நாம் கவனம் செலுத்துகிறோம். அல்லது நமக்கு சாதகமாக எது விளங்கும் என்று மட்டுமே யோசிக்கிறோம், இது மனித இனத்திற்கே நாம் இழைக்கும் மிகப் பெரிய அநீதி.
...............................................................வாழ்க வளமுடன்!...............................................................