Showing posts with label யோகா. Show all posts
Showing posts with label யோகா. Show all posts

Tuesday, November 13, 2012

சுழற்சியிலிருந்து விடுதலை நோக்கி - யோகா ஒரு பார்வை! ஆனந்தம்


   
      உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களையும், ஒரு மனிதனால் செய்ய முடிகிறபோது, ஏன் யோகா செய்ய வேண்டும்?
      மனிதர்களால் செய்ய முடிந்த அத்தனையும் அடிப்படையில், அவர்கள் யார் என்பதன் வெளிப்பாடுதான். யாரோ ஒருவர் பாடுகிறார்கள், யாரோ ஆடுகிறார்கள், யாரோ புத்தகம் எழுதுகிறார்கள், யாரோ ஒரு ஓவியத்தை வரைகிறார்கள். நீங்கள் எதைச் செய்தாலும் அது நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடுதான்.
      நீங்கள் விழிப்புணர்வுள்ளவராக முடியும், இருந்தாலும், நீங்கள் சொல்லும் அனைத்தும், செய்யும் அனைத்தும், உங்களிடமிருந்து வெளி வரும் அனைத்தும் அடிப்படையில் நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடுதான். அப்படிப் பார்க்கும்போது, யோகா இதற்கு முற்றிலும் மாறானது, ஏனென்றால் அது நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடு அல்ல – அது நீங்கள் யார் என்பதை தீர்மானிப்பது. நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானித்து, ஒருவரது இருப்பின் அடிப்படையையே, மூலத்தையே மாற்றிவிடுவது.
     இன்று, யோகாவின் மூலம் உங்கள் மூளையின் செயல்பாடுகளை, உங்கள் இரசாயனத்தை, உங்கள் மரபணுக்களின் அடிப்படையைக் கூட மாற்றிவிட முடியும் என்று நிரூபிப்பதற்குப் போதுமான அளவு மருத்துவரீதியான, விஞ்ஞானரீதியான சான்றுகள் இருக்கின்றன. உண்மையில் இதற்கு எந்த நிரூபணங்களும் தேவையில்லை, ஏனென்றால், அதை நாம் எப்போதுமே அனுபவத்தில் பார்த்து வந்திருக்கிறோம், ஆனால் இன்று இதை நிரூபிக்க வேண்டுமானால் அதற்கும் விஞ்ஞானரீதியான சாட்சியங்கள் உள்ளன.
      எனவே, யோகா என்பது நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடு அல்ல, அது நீங்கள் எந்த தன்மையில் இருக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பது பற்றியது. தற்போது நீங்கள் யார் என்பதை உருவாக்கியிருக்கும் அடிப்படை மூலக்கூறுகளையே மாற்றுவது. யோகாவை ஒரு அமைப்பு ரீதியாகப் பார்த்தால், நாம் செய்யும் மற்ற எந்த செயலையும் விட, இதற்கு மிகுந்த ஈடுபாடு தேவைப்படுகிறது. மற்ற செயல்களெல்லாம் நாம் யார் என்பதன் வெளிப்பாடுகள் மட்டுமே. ஒரு குறிப்பிட்ட செயலிலேயே உங்கள் முழு திறனையும் வெளிப்படுத்தினால், அதுவும் கூட ஓரளவு உங்களை நிலைமாற்றும்.
      சமைப்பதில் முழு மனதுடன் ஈடுபட்டால், சில மாற்றங்கள் நிகழும். முழு மனதுடன் பாடினால், முழு மனதுடன் ஆடினால் சில மாற்றங்கள் நிகழும். ஆனால் அவற்றில் ஒரு குறிப்பிட்ட தாக்கம் மட்டுமே இருக்கும், ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட செயலில் மட்டுமே நீங்கள் முழுமையான ஈடுபாட்டைக் காட்டினீர்கள். ஆனால் அடிப்படையில் அந்த செயல், இயல்பிலேயே நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடுதான். அது உங்கள் தன்மை என்ன என்பதை தீர்மானிப்பதில்லை.
     
      நாம் நம்முடைய செயலை நிலைமாற்றுவதற்காக ஆசனா, தியானம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஆசனா மற்றும் தியானம் ஒரு வெளிப்பாடு அல்ல. இது ஒரு முறை. இது ஒரு வழி. நீங்கள் யார் என்பதை மாற்றுவதற்கான ஒரு தொழில்நுட்பம். இதன் மூலம் உண்மையில் நீங்கள் இப்போது யாராக இருக்கிறீர்களோ அந்த வடிவத்தை மாற்றலாம். அதை மாற்ற முடியும், ஏனென்றால் நீங்கள் என்பது உங்கள் மரபணு சார்ந்த விஷயங்கள், அதற்கு முன்னர் உங்களது கர்மவினைகள் என அனைத்தும் கலந்தே உள்ளது. அதனால்தான் நீங்கள் ஒரு குறிப்பிட்ட கருவறையைத் தேர்ந்தெடுத்து அதில் பிறந்தீர்கள். நீங்கள் பிறந்த அந்த கணத்திலிருந்து, பலவகையான அனுபவங்கள், சூழ்நிலைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், உறவுகள், தொடர்புகள் என்று எவையெல்லாம் உங்களுக்குள் சென்றிருக்கின்றனவோ, நீங்கள் எதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டீர்களோ, அவையெல்லாம் சேர்ந்து உங்களை ஒரு குறிப்பிட்ட வகையான மனிதராக ஆக்கியிருக்கிறது.
      “நான் ஒரு குறிப்பிட்ட வகையான மனிதன்” என்று நீங்கள் சொல்லும்போது, எனக்கு இந்த மாதிரியான கட்டாயங்கள் இருக்கின்றன என்பதைத்தான் அப்படிச் சொல்கிறீர்கள். “நான் இப்படிப்பட்ட ஒரு மனிதன்” என்று நீங்கள் சொன்னால், இந்த வகையான கட்டாயங்களுடன் என்னை நான் அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டேன், அதனால் நான் இப்படிப்பட்ட மனிதனாக இருக்கிறேன் என்று சொல்கிறீர்கள். நான் காலை மனிதர் அல்லது மாலை மனிதர் அதாவது மாலையில் என்னால் விழிப்புணர்வுடன் வேலை செய்ய முடியாது அல்லது காலையில் என்னால் விழிப்புணர்வுடன் வேலை செய்ய முடியாது என்று சொல்கிறீர்கள். இப்படி உங்கள் வெளிப்பாடுகள் வளர்ந்து கொண்டே போகிறது. சிலர் ப்ளாக்பெரி அலைபேசி வைத்திருக்கிறார்கள், சிலர் ஆப்பிள் அலைபேசி வைத்திருக்கிறார்கள்; இப்படி இந்த உலகம் ஏகப்பட்ட வழிகளில் பகுக்கப்பட்டுள்ளது. அவை வெறும் அலைபேசிகள் அல்ல, அவற்றை நீங்கள் பயன்படுத்திவிட்டு கீழே வைப்பதுடன் முடிந்துவிடுவதில்லை, அவற்றுடன் நீங்கள் அடையாளப்பட்டு விடுகிறீர்கள். சிலர் சப்பாத்தி சாப்பிடுவார்கள், சிலர் அரிசி சாப்பிடுவார்கள், சிலர் தோசை சாப்பிடுவார்கள், சிலர் இட்லி சாப்பிடுவார்கள்… இப்படி எல்லா வகையான மனிதர்களும் இருக்கிறார்கள்.
      நீங்கள் எந்த வகை என்பது ஒருவிதமான கட்டாயம்தான். இதுபோன்ற கட்டாயங்களில் சிக்கிக் கொள்ள விரும்பாததால் நீங்கள் உங்களை யோகாவின் செயல்முறைகளில் ஈடுபடுத்திக் கொள்கிறீர்கள். அந்தக் கணத்துக்கு என்ன தேவையோ அப்படிப்பட்டவராக இருக்க விரும்புகிறீர்கள். அது காலையாக இருந்தால் ஒரு காலை மனிதராக இருக்கிறீர்கள், மாலையில் ஒரு மாலை மனிதராக இருக்கிறீர்கள். அதாவது நீங்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கிறீர்கள். இந்த நெகிழ்வுத்தன்மையை முதலில் உங்கள் உடலிலிருந்து தொடங்குகிறீர்கள். பிறகு அது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் வந்துவிட வேண்டும் – உங்கள் உடல் அமைப்பு, உங்கள் மன அமைப்பு, உங்கள் உணர்ச்சிகளின் அமைப்பு, உங்கள் கர்ம அமைப்புகள் என்று அனைத்திலும் வந்துவிட வேண்டும். அனைத்தும் நெகிழ்வுத்தன்மையுடன் ஆகிவிட வேண்டும், எப்படித் தேவையோ அப்படி ஆக வேண்டும். இந்த வழி அல்லது அந்த வழியில் சிக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
      யோகா என்பது, நாம் ஆளுமைத்தன்மை என்று அழைக்கும், நமக்குள் வலிமையாகப் பதிந்திருக்கும் குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளை உடைக்கும் ஒரு செயல்முறை, ஒரு தொழில்நுட்பம், ஒரு விஞ்ஞானம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட மனிதராக இருப்பதிலிருந்து ஒரு இருப்பாக மாறுவதற்கு உதவுவது. நீங்கள் ஒரு மனிதராக இருக்கிறேன் என்னும்போது உங்களைச் சுற்றி ஒரு கூட்டை உருவாக்கிவிட்டீர்கள் என்று பொருள். நீங்கள் உருவாக்கிவிட்ட அந்த கூட்டிற்குள்தான் உங்களால் செயல்பட முடியும். இந்த கூட்டை உடைத்தால், அதற்கு மேல் நீங்கள் ஒரு மனிதராக இல்லாமல், வெறும் ஒரு இருப்பாக இருப்பீர்கள் – ஒரு உயிராக, கடவுளைப் போன்று ஒரு இருப்பாக மட்டும் இருப்பீர்கள். யோகா என்றால் மெதுவாக அந்தக் கூட்டை மெலிதாக்கி, மெலிதாக்கி, அதில் நிறைய நுண்துளைகளை இட்டு, ஒருநாள் அந்தக் கூடு இல்லாமல் நீங்கள் இருக்கமுடியும் என்ற நிலையை ஏற்படுத்துவது என்று பொருள்.
      இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்தன்மையின் அத்தனை அம்சங்களும் ஒரு சுழற்சி முறையில் செயல்படுகின்றன. கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன, சூரிய மண்டலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. பால்வெளி மண்டலத்தில், பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் சுழன்று வருகின்றன. உங்கள் உடலுடன் நீங்கள் அதிகமாக அடையாளப்படும்போது, நீங்களும் ஒரு சுழற்சியில் சிக்கிக் கொள்கிறீர்கள். உங்கள் அனுபவங்கள் சுழற்சி அடைகின்றன, வாழ்க்கையின் செயல்பாடு சுழற்சி முறையில் அமைகிறது. நீங்கள் கவனமாக ஆராய்ந்து பார்த்தால், உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் கூட சுழற்சி முறையில்தான் வருகின்றன.
     யோகா என்றால், ஒரு நிலையில், வாழ்வின் சுழற்சியினை உடைப்பது; இப்போது சுழற்சியில் இருக்கும்போது நீங்கள் எங்கோ செல்வதைப் போன்று ஒரு எண்ணம் உங்களுக்கு ஏற்படுகிறது, ஆனால் உண்மையில் நீங்கள் எங்கும் செல்வதில்லை. மீண்டும், மீண்டும் அதே சுழற்சிக்குள்தான், அதே விஷயத்தைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். யோகா என்றால் இந்த வளையத்தைத் திறந்து, ஒரு நேர்கோடாக நீட்டி, அந்த நேர்கோட்டை நீங்கள் பின்தொடர்ந்து சென்றால், ஏதோ ஓரிடத்திற்கு நீங்கள் சென்று சேர்வதற்கு உதவுவது என்று பொருள். நீங்கள் சுற்றி, சுற்றி வந்து கொண்டிருக்க மாட்டீர்கள்.
      உங்களில் பலர் இதை ஏற்கனவே ஆராய்ந்து பார்த்திருக்கக் கூடும். இதுவரை ஆராயவில்லையென்றால் இனி இதை ஆராயாதீர்கள், ஏனென்றால் அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை நான் இப்போதே தருகிறேன். இரண்டு, மூன்று, ஐந்து வருடங்களாக நீங்கள் சாதனா செய்து வந்திருக்கலாம். அதை நீங்கள் ஒரு மூன்று மாதங்கள் நிறுத்திப் பாருங்கள். திடீரென்று இவையெல்லாம் என்னுள் ஒரு பகுதியாக இருந்தனவா என்று நீங்கள் கற்பனை கூட செய்து பார்த்திராத கட்டாயங்களையெல்லாம் பார்ப்பீர்கள். முன்பே போய்விட்ட அவையெல்லாம், திடீரென்று உங்களில் ஒரு பகுதியாகிவிடும். ஆசிரமத்தில் நடக்கும் ஒரு சாதாரண விஷயம், காலை பத்து மணிக்கும், மாலை ஏழு மணிக்கும் பரிமாறப்படும் உணவு. குறைந்தபட்சம் 90 சதவிகித மக்கள் இதை கடைப்பிடிக்கிறார்கள், இன்னொரு பத்து சதவிகிதம் பேர் – அவர்களுடைய கைகள் எதையோ தின்று கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு நொறுக்குத்தீனியை அவர்கள் சாப்பிட வேண்டியிருக்கிறது.
      தங்கள் சாதனாவை ஒழுங்காக செய்பவர்கள் காலையில் உண்கிறார்கள், மீண்டும் மாலை வரை அவர்கள் உணவைப் பற்றி நினைப்பதில்லை. அதைப் பற்றி அவர்களுக்குள் நினைவு தோன்றுவதில்லை, ஏனென்றால் அது இனியும் அவர்களுக்கு ஒரு கட்டாயமாக இருப்பதில்லை.
      நீங்கள் உண்ணுங்கள், விழிப்புணர்வுடன் உண்ணுங்கள், இல்லையேல் வேண்டாம். உங்கள் சாதனாவை மூன்று மாதங்களுக்கு நிறுத்திப் பாருங்கள்; உங்கள் கை எதை எதையோ எடுத்து உங்கள் வாயில் போட்டுக் கொள்ளும். இந்த கட்டாயங்களெல்லாம் நீங்கள் சாதனாவை உடைத்த உடன் மீண்டும் உங்களுக்குள் திடீரென வந்துவிடும். ஏனென்றால் இயற்கை உங்களை அத்தனை சுலபமாக விட்டுவிடாது. அதற்காக நீங்கள் தொடர்ந்து செயலாற்ற வேண்டும். இல்லையேல், வட்டத்தில் சுழன்று கொண்டிருப்பதிலேயே நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான்.
      ஒரு சுழற்சியை ஒரு சர்கஸ் என்றும் சொல்லலாம். நீங்கள் விழிப்புணர்வடைந்து விட்டால், அனைத்தும் உங்களுக்கு ஒரு சர்கஸ் என்று தோன்றும். நீங்கள் விழிப்புணர்வுடன் இல்லையென்றால், உங்களுக்கு முன்னே மூன்று அடி வரை மட்டும்தான் உங்களால் பார்க்க முடியும். பிறகு அது மட்டுமே உங்களுக்கு உண்மையாக இருக்கும். உங்கள் வாழ்வின் முழு சுழற்சியையும் உங்களால் பார்க்க முடிந்தால், திடீரென்று அது ஒரு சர்கஸ் போல ஆகிவிடுகிறது. அது ஒரு சர்கஸ் என்று நீங்கள் உணரும்போது, மீண்டும், மீண்டும் அந்த சர்கஸுக்குள் போக நீங்கள் விரும்ப மாட்டீர்கள். உங்கள் தொலைநோக்குப் பார்வை மிகவும் குறுகியதாக இருந்தால்தான், உங்களுக்கு முன்னால் மூன்று அடி வரை மட்டும் பார்ப்பீர்கள், அவை அனைத்தும் உங்களுக்கு உண்மையானதாகத் தெரியும். நீங்கள் உங்களைத் திறந்த நிலையில் வைத்துக் கொண்டு முழு வட்டத்தையும் பார்த்தால், நீங்கள் சென்று கொண்டிருக்கும் வழியைப் பார்த்தால், அப்போது அது ஒரு சர்கஸ் போலத் தோன்றும். கண்டிப்பாக அதை நீங்கள் முடிவின்றி தொடர விரும்ப மாட்டீர்கள். அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள்.
      வாழ்க வளமுடன்!........

Monday, October 15, 2012

யோகா எப்படி உதவுகிறது? ஆனந்தம்


     
      அவ்வப்போது பலரும் நான் ஏன் பிறந்தேன்? எனது வாழ்க்கைக்கு நோக்கம் என்ன இருக்கிறது? என்று கேட்கின்றனர். உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கமும் இல்ல்லாமல் இருந்தால் என்ன? முதலில் உங்களுக்குள் இந்த கேள்வி எழுவதற்கு காரணமே நீங்கள் இன்னமும் வாழ்கையின் முழுமையை, பேரான‌ந்தத்தை ருசிக்கவில்லை. எனவே தான் வாழ்கையின் அனுபவங்களுக்கு அர்தத்தை தேடுகிறீர்கள். மனிதனாக இருக்கும் மகத்துவம் இன்னும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. உங்கள் ஒவ்வொரு அனுபவமும் ஆனந்தத்தில் திளைத்தால் இப்படி கேட்கமாட்டீர்கள்.
      இந்தத் தன்மையைக் கடக்காமல் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் போது எல்லாவிதமான தவறான முடிவுகளுக்கும் தான் வருவீர்கள். தற்போதைய உங்களின் வாழ்க்கை அனுபவங்களை துன்பம் என்று முத்திரை குத்துவீர்கள். பிறகு கடவுள் உங்களுக்கு வைக்கும் பரீட்ச்சை என்று நினைப்பீர்கள். கடைசியாக இதில் நான் தேர்ச்சி பெறாக வேண்டும் என்று முடிவெடுப்பீர்கள். ஆக எல்லா தவறான முடிவுகளுக்கும் வருவீர்கள்.
      உங்களின் வாழ்க்கைப் பாதை எப்போதோ ஒரு ஷணம் வெற்றி, எப்போதோ இன்பம், எப்போதோ ஒரு ஷணம் மகிழ்ச்சி என்று இப்படிப் போகிறது. இதைஎல்லாம் கழித்துப் பார்த்தால், காலையில் எழுகிறீர்கள், சமைக்கிறீர்கள், வயிற்றுக்கு அள்ளிப்போடுகிறீர்கள், அலுவலகம் செல்கிறீர்கள். வீட்டிற்கு சோர்வுடன் திரும்புகிறீர்கள், மீண்டும் காலையில்...... இப்படித் தான் உங்கள் வாழ்க்கை போகிறது.
      இருப்பே பேரான‌ந்தமாக இருந்தால், நோகத்தை பற்றி யாருக்கு என்னெ கவலை? துன்பமான மனிதர்கள் ஒன்று சேர்ந்து தான் தத்துவங்கள், மதங்கள், சமூகங்கள் என்று உருவாக்கி வாழ்கைக்கு எல்லாவிதமான நோக்கங்களை கண்டுபிடித்தார்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு ஷணமும் உங்களுக்குள் பேரானந்தத்துடன் வெடிக்கும் போது, ஏன் எதற்காக என்ற கேள்வி எப்படி வரமுடியும்? இந்த நிலையில் தான் உங்களுக்கு யோகா உதவப்போகிறது. யோகாவைப் பயன்படுத்தி உங்கள் எல்லைகளை தகர்த்து எறிந்து முன்னேறும் போது, வெறுமனே வாழ்வதே பேரானந்தம் தான். வாழ்க வளமுடன்!

Sunday, October 7, 2012

யோகா செய்தால் எடை குறையுமா? ஆனந்தம்


     

      எடை குறைப்பிற்க்கான வழிமுறைகள் இன்று படு வேகமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கின்றன. யோகம் முதல் தெய்வீகம் வரை அனைத்துமே எடை குறைப்பிற்கானவை தான் என்று சந்தையில் விலை பேசிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் யோகாவினால் ஏற்படும் இரட்டிப்பு பலன்கள் என்னவென்றால்......
      நீங்கள் யோகா செய்யும் போது அதிகப்படியான எடை  தானாகவே கண்டிப்பாக குறைந்துவிடும். யோகா ஒரு உடற்பயிற்ச்சியாக மட்டும் செயல்படுவதில்லை, அது உங்கள் அமைப்பிற்க்கு ஒரு புத்துணர்வு ஊட்டி, நீங்கள் அதிகமாக சாப்பிடும் இருக்கும் ஒரு விழிப்பினை உங்களுக்குள் கொண்டுவருகிறது. உங்கள் உடலுக்குள் ஓரளவு விழிப்புணர்வு வந்துவிட்டால், அதற்கு எது தேவையோ அதை மட்டும் தான் உண்ணும். அதற்கு மேல் அது எதையும் உண்ணாது. மற்ற உடற்ப்பயிர்ச்சிகளையோ அல்லது உணவுத்திட்டங்களையோ நீங்கள் கடைப்பிடித்தால், எப்போதும் உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்ச்சிப்பீர்கள். ஆனால் யோகப்பயிற்சிகள் செய்து வரும்போது உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
      நீங்கள் பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் போதும், நீங்கள் அதிகமாக உண்ணாத அளவு உங்கள் அமைப்புகளை யோகா கவனித்துக்கொள்ளும். இது தான் யோகாவில் மிகப்பெரிய வித்தியாசமும் நன்மையும்.
      கிரியா யோகப் பயிற்சிகளை செய்ய ஆரம்பிக்கும்போது, சிலர் எடை இழக்கத்துவங்குவார்கள். சிலர் எடை கூடத்துவங்கும். உங்கள் ஜீரணசக்தி, மோசமாக, அதாவது உணவை உடலை மாற்றும் திறமை மோசமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கிரியாக்கள் செய்யத் துவங்கும் போது, ஜீரண நெருப்புக்கள் தூண்டப்பட்டு, ஜீரணசக்தி மேம்பட்டு, உணவு உடலாக மாறும் திறன் அதுகரித்து, உங்கள் எடை கூடத்துவங்கும்.
      உங்கள் ஜீரணசக்தி ஏற்கனவே நன்றாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் நீங்கள் கிரியாக்கள் செய்யத் துவங்கினால், ஜீரணசக்தி மேலும் தூண்டப்படும் இருந்தாலும், உணவு உடலாக மாறாமல் சக்திநிலையில் சூட்சுமப் பரிணாமமாக மாற்றிவிடும். இப்போது நீங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உங்கள் எடை குறைந்து கொண்டே போவதை காண்பீர்கள்.
      கிரியாக்களை செய்யும் போது அதிகப்படியான உணவு சாப்பிட்டாலும் எடை கூடாமல் இருப்பதை காண்பீர்கள் அல்லது உங்கள் எடை குறையவும் கூடும். அல்லது உங்கள் சாப்பாடு குறைந்தாலும் எடை இழக்க மாட்டீர்கள். உணவு உருமாறும் விதம் மாறி விடுவதால் இப்படி ஆகிறது.
      எடையை குறைப்பதற்காக யோகா இல்லை, உங்களை ஒல்லி ஆக்குவதற்க்கோ, தலைவலிக்கோ, முதுகுவலிக்கோ அல்ல யோகா. நீங்கள் அன்பாக ஆனந்தமாக மாறவே யோகா. ஆனால் இவ்விளைவுகள் எல்லாம் யோகாவின் கூடுதல் பலன்கள்.
      உடலைத் தாண்டி உள்ளுக்குள் இருக்கும் பரிணாமத்தை உணர வைப்பதே யோகாவின் நோக்கம். அந்த பரிணாமம் உயிர்ப்புடன் இருக்கும் போது தான் இந்த பிரபஞ்சம் எண்ணிலடங்கா வழிகளில் மெதுவாக உங்களுக்காக திறக்கத் துவங்கும். நீங்கள் உடலைத் தாண்டிய‌ உள்ளுக்குள் இருக்கும் பரிணாமத்தை உணரத்துவங்கிவிட்டால், பிறகு இவை எல்லாம் இருக்கின்றனவா என்று நீங்கள் கற்பணை செய்து பார்த்திராத விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடைமுறையில் சாத்தியப்படும்.
..........................வாழ்க வளமுடன்!............................

Wednesday, June 13, 2012

மறு பிறவி உண்டா? ஆனந்தம்


      மறு பிறவி உண்டா? என்ற கேள்வி உங்களுக்கு வருவது என்பது.....
      நான் என்பது இந்த உடலா? உயிரா? அல்லது இந்த இரண்டும் சேர்ந்த ஒன்றா? அல்லது அதையும் தாண்டிய ஏதாவது ஒன்றா? அந்த நான் என்பது யார்? அல்லது உயிர் இந்த உடம்பில் எங்கே இருக்கிறது? எப்படி இயங்குகிறது? என்கிற மிகப்பெரிய கேள்விகளை தான் அப்படி கேட்கிறீர்கள்....
      உண்மையாக இந்தக் கேள்வி உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து உண்மையில் விடைகாண முற்பட்டால், விடை கிடைக்கும். ஆனால் வேகு சாதரணமாக இந்தக் கேள்வி மறு பிறவி உண்டா? என்றால் பதில் கிடையாது, பதில் கொடுத்தாலும் சிலர் நம்பலாம். சிலர் நம்பாமல் போகலாம். மறு பிறவி உண்டு என்றாலும் அல்லது இல்லை என்றாலும் அது உங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
      இந்தக் கணத்தில் உங்களுக்கு "வாழ்க்கை" என்றால் உங்கள் உடல் மனதைத் தாண்டி எதுவும் தெரியாது, ஆகையால் எதையும் நீங்களாக கற்பணை செய்து கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்க்கையை உடல் மற்ரும் மனதிற்க்கு உட்பட்டு, எத்தனை உயர்ந்த வழியில் வாழ முடியுமோ அந்த வழியில் ந‌டத்துங்கள்.
      உள்ள இந்த வாழ்கையையே நீங்கள் பல அழகான வழிகளில் வாழ அனுமதிப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில் உடலைக் கடந்து இருப்பவற்றையும், மரணத்திற்க்கு பிறகு நிகழவிருப்பதையும் எப்படி நீங்கள் சரியாக புரிந்து கொள்வீர்கள்? மறுபிறவியை அறிந்து கொள்ள தீவிர ஈடுபாடு வந்துவிட்டால் தற்போது வாழும் வாழ்க்கையை மறந்து விடுவீர்கள்.
      இங்கில்லாத ஒன்றைப் பற்றித் தேடுவதைத்தான் மனம் எப்போதும் விரும்பும். இங்கே வாழவேண்டிய வாழ்க்கையே நிறைய மிச்சமிருக்கிறது. ஆனால் அதன் மேல் உங்கள் ஈடுபாடு எபோதும் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. உங்கள் இப்பொது வாழுகிற வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்கிற எண்ணமே உங்களுக்கு இல்லை. ஆனால் நாளைக்கு என்ன நடக்கும்? 10 வருடங்களுக்கு பிறகு என்ன நடக்கும்? என்ன கல்யாணமே இன்னும் ஆகவில்லையென்றால் கூட என் குழந்தை எப்படியிருக்கும்? என் பேரக்குழந்தைகள் எப்படியிருக்கும்? என்ற பல்வேறு கற்பனைக் கணக்குகளைத் தான் போட்டுக்கொண்டிருப்பீர்கள். மனம் எப்போது நிஜத்தில் இருந்து தப்பித்து, கற்ப்பனைக்குத் தான் உங்களை இழுத்துச் செல்லும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
      உங்களால் அதிகம் சிந்திகாமல் வெறுமனே இருக்க முடிந்தால் ஒன்று ஞானி ஆகிவிடுவீர்கள் அல்லது 'நான் ஒரு முட்டாள்' என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இதைத் தவிர வேறு வாய்புகளே கிடையாது. அதனால் தான் உங்கள் மனம் ஏதவது ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. அது அமைதியாக இருக்கும் போதே, தான் ஒரு முட்டாள் என்பதைப் புரிந்து கொள்ளும். அப்படி புரிந்து கொண்டால் நீங்கள் யோகாவில் மிகப்பெரிய அடி எடுத்து வைக்கிறீர்கள் என்று அர்த்தம்? ஆன்மீகப் பயணம் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்? ஒரு மனிதன் தான் ஒரு முட்டாள் என்று புரிந்து கொள்ளும் அந்த கணத்தில் அவனுடைய அறிவுணர்ச்சி மலர்கிறது.
      இந்த நொடியில் உங்கள் மனதில் நடப்பவை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையென்றால், வாழ்க்கையை கடந்து சிந்திப்பதோ, மரணத்தைக் கடந்து ஆரய்வதோ, உங்களது நேரத்தையும், வாழ்க்கையையும், சக்தியையும் வீணடிக்கும் வேலை தான். ஏனென்றால் இப்போது உங்கள் அனுபவநிலையைத் தாண்டி இருக்கும் ப‌ரிணமங்களை துளைத்துச் செல்வதற்கான தீவிரத்தன்மை உங்களிடம் இருக்காது.
      இதுவரை உங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் அனைத்தும் உங்கள் ஐம்புலன்களுக்கு உட்பட்டவை. இந்த நிலையில் உடல் தன்மையைத் தாண்டி உள்ளவற்றை உங்களால் உணர முடியாது. எனவே 'மரணத்திற்க்கு பிறகு வாழ்க்கையிருக்கிறதா?' என்று நீங்கள் அறிய விரும்பினால், அதாவது 'இந்த உடல் தன்மையைத் தாண்டி ஏதாவது இருக்கிறதா?' என்று உண்மையிலேயே நீங்கள் அறிய விரும்பினால், இந்த ஐந்து புலன்களைக் கடந்து எப்படிச் செல்வது என்று பாருங்கள். உங்களுக்கான விடை அங்கு தான் ஆரம்பிக்கிறது? .........................................வாழ்க வளமுடன்!..................................................

Monday, January 23, 2012

யோகா‍-தியானம் ஏன்? ஆனந்தம்


     


      நமது உணவை நாமே சமைக்கிறோம். நம் ஆடைகளை நாமே தூய்மை செய்கிறோம். இவையெல்லாம் உலகியலிலன் அங்கங்கள்தான். இவற்றையெல்லாம் செய்யாமல் இங்கே வாழ இயலாது.
      ஒவ்வொரு மனிதரும், உலகியலில் தான் எந்த வித்ததில் ஈடுபட வேண்டுமென்பதை, சுய விருப்பத்தின் பேரில் தானாகவே தீர்மானிக்கிறார். சிலர் அரசியலில் இருக்கிறார்கள். சிலர் அலுவலகங்களில் பணிபுரிகிறார்கள். சிலர் தொழிலகங்களை நடத்துகிறார்கள். சிலர் தரை பெருக்குகிறார்கள். இவர்கள் எல்லோருமே உலகியலில் இருப்பவர்கள்தான். எனவே உலகியலில் இருந்து விடுபடுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல.
      உலகியலில் என்ன செய்ய விரும்புகிறோம். எந்த அளவுக்கு அதனை செய்வது என்பதெல்லாம் ஒவ்வொரு தனி மனிதரும் தன் விருப்பு வெறுப்புக்கேற்ப தேர்வு செய்து கொள்ள வேண்டியதுதான். அது ஒவ்வொரு தனி மனிதருக்கும் உள்ள உரிமையும் கூட.
      இதில் சிலர் தானாக எதையும் செய்வதில்லை. பிறர் செய்வதையெல்லாம் பார்த்து அது போல் செய்ய முற்படுகிறார்கள். தான் என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவோ, விழிப்புணர்வோ அவர்களிடம் இல்லை.
      இத்தகைய ஒரு சிலர்தான், ஆன்மீக வழியில் செல்பவர்களைப் பார்த்து ‘இவர்கள் பொறுப்புகளை உதறிவிட்டுப் போகிறார்கள். உலகிற்காக வாழாமல் தனக்காக வாழ்கிறார்கள்’ என்று புகார் சொல்கிறார்கள்.
      வீட்டிலும் அலுவலகத்திலும் மட்டுமே இயங்குபவரகள் தனக்காக வாழ்பவர்கள். அவர்களுக்குத்தான் உலக நலனில் அக்கறையில்லை. தனது சொந்த நலனுக்காக என்று வந்துவிட்டு அந்த வலையிலிருந்து விடுபட இயலாமல தவிப்பவரகள் ஆன்மீகப் பாதையில் செல்பவர்களைப் பார்த்து “வாழத் தெரியாதவர்கள், உலகத்தை விட்டு ஒதுங்கிவிட்டவர்கள்” என்று சொல்லத் தொடங்குகிறார்கள்.
      ஒரு குடிகாரன் இருந்தான். முழுபோதையில் தள்ளாடியபடியே ஒருபேருந்துக்குள் ஏறியவன், எல்லார் கால்களையும் மிதித்து பெட்டிகளைக் கலைத்து, தட்டுத்தடுமாறி, ஒரு கிழவியின் மீது விழுந்தான். கோபம் கொண்ட அந்தக் கிழவி, ‘ நீ நரகத்திற்குப் போவாய்’ என்று சபித்தாள். உடனே அந்தக் குடிகாரன், ‘அப்படியானால் நான் தவறான பேருந்தில் ஏறிவிட்டேன்’ என்று சொல்லிவிட்டுக் கீழே இறங்க ஆரம்பித்தான்.
      எந்தப் பேருந்து சரியானது, எது தவறானது என்பதெல்லாம் குடிகார்ர்களுக்குத தெரியாது. தங்கள் வாழ்வை விதம் விதமான சிக்கல்களுக்கு ஆட்படுத்திக் கொண்டு, சூழ்நிலைக் கைதிகளாய் வாழ்ப்பவர்கள், தங்கள் வாழ்வை திறம்பட நிர்வகித்து விரும்பும் திசையில் திட்டமிட்டு பயணம் செய்பவர்களைப் பார்த்து ‘இவர்கள் தவறானவர்கள்’ என்று பேசுகிறார்கள்.
      இன்றைய உலகில் 0.1% பேர்தான் ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் இருப்பவர்கள். 50% பேர் இயந்திரங்கள் போல் இடையறாமல் செயல்பட்டு, தங்கள் செயல்களாலேயே உலகுக்குக் கேடு விளைவிக்கிறார்கள்.
      மனித சுயநலத்தின் காரணமாய், பூமி, வேண்டாத பாரங்களை சுமந்து கொண்டிருக்கிறது. 50% பேரையாவது ஆன்மீக நெறியில் ஈடுபடுத்தினால் இந்த உலகம் காற்றப்படும்.
      அளவுக்கதிமான செயல்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்கள் தங்களுக்கோ, சமூகத்திற்கோ, உலகிறகோ சுற்றுச சூழலுக்கோ கேடு விளைவிப்பதில்லை.
      சிறிது கூட விழிப்புணர்வின்றி, தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், மற்றவர்கள் செய்வதையெல்லாம் தாங்களும் செய்ய முற்பட்டவர்கள் பூமி உருண்டைக்கு போதுமான அளவு சேதம் விளைவிக்கிறார்கள். இத்தகைய செயல்களிலிருந்து விடுபடுவதொன்றும் தவறானதல்ல. அதுவே மனித குலத்திற்கு செய்கிற பெரும் உதவி.
      இந்த உலகம் எப்போதுமே அற்புதமானதாக இருந்து வந்திருக்கிறது. தன்னலம் மிக்க சிலரின் அடாவடி செயல்கள், உலகுக்கு நன்மை செய்வதாய் நினைத்துக் கொண்டு அவர்கள் செய்யும் தீமைகள், இவைதான் உலகிற்கு எதிரான ஒன்றை ஏற்படுத்தி வருகிறது.
      மனிதகுலம் நாகரீகமடைந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் மனிதகுலம் வாழ்வதற்காக எத்தனையோ விலங்குகளை வேட்டையாடி, சில சமயம் மனிதர்களையே வேட்டையாடிய பிறகும் மனித குலம் நன்மையடையவில்லை.
      மனிதன், வெளிச்சூழலை சரி செய்ய விஞ்ஞானம், தொழில் நுட்பம் ஆகியவற்றின் உதவிகொண்டு என்னென்னவோ செய்துவிட்டான். ஆனால் அவன் உள் தன்மையில் நாகரீகமடையவில்லை.
      உள்நிலையில் கவனம் செலுத்தி உரிய மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மனிதன் உயர்நிலை அடைய இயலும். அத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக வழியே யோகம் தியானம் ஆகியவை.

Thursday, March 3, 2011

யோகா‍-தியானம் ஆனந்தம்

      எப்பொழுதும் இவ்வுலகம் மிகச்சிறந்த இடமாகத்தான் இருந்திருக்கிறது. இந்த உலகத்தைப் பற்றியோ, மற்ற கிரகங்களைப் பற்றியோ நமக்குத் தெரிந்த வகையில் மற்றா எல்லா கிரகங்களைக் காட்டிலும் இவ்வுலகமே மிகச்சிறந்த இடமாக இருக்கிறது.
      பேராசை கொண்டு இந்த முட்டாள்கள் தான் சிறிதும் விழிப்புணர்வில்லாமல், மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் என எண்ணிக் கொண்டு, மற்ற அனைத்து உயிர்களையும் கொன்று குவித்துக் கொண்டேயிருந்தார்கள். ஆனாலும், அந்த மனித குல நன்மை என்பது இன்றளவும் ஒரு கனவாகவே இருக்கிறது.
      ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மற்ற உயிர்களைப் படுகொலை செய்த பிறகும், பல மனிதப் படுகொலைகளுக்குப் பிறகும் மனிதகுல நன்மை என்பது இன்னும் தொலைதூரத்திலேயே உள்ளது. மனிதன் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுபிட்சமாக இருந்த அளவுக்கு இப்பொழுது இல்லை. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மூலம் நம் வெளிப்புறச் சூழ்நிலையை மிக அதிகமாக மாற்றியிருக்கிறோம். இருந்தும் மனிதகுல நன்மை அல்லது சுபிட்சத்தின் அருகில் நாம் இல்லை.
      ஆகவே, மனிதகுல நன்மைக்கு என்ன செய்யவேண்டும் எனக் கண்டுகொள்ள நமக்குள் பார்த்து கட்டாயமாக்க இதுவே சரியான நேரம். உங்கள் உள்தன்மை மாறினால்தான் உண்மையான நலம் ஏற்படும் என்பதை உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து நீங்கள் உணர முடியும்.
      தற்பொழுது உங்கள் வாழ்க்கையின் தரத்தை, நீங்கள் அணியும் உடையோ, உங்களின் கல்வித் தகுதியோ அல்லது உங்கள் குடும்பப் பின்னணியோ, வங்கிக் கையிருப்போ நிர்ணயிப்பதில்லை. இந்தக் கணத்தில் நீங்கள் உங்களுக்குள் எந்த அளவுக்கு அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறீர்களோ அது மட்டும்தான் உங்காள் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது.
      ஆகவே, யோகாவும், தியானமும் உங்கள் உள்தன்மையைக் கையாளுகிற அறிவியலின் ஒரு பரிமாணம் ஆகும். இங்கு நீங்கள் வாழ்க்கையை அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழ்வதற்குரிய சரியான உட்புறச்சூழலை உருவாக்குவதே அதன் முக்கிய நோக்கம்.
      வேறுவிதமாகச் சொன்னால் நீங்கள் மிகவும் நன்றாக வாழமுடியும். நீங்கள் அன்பாகவும், ஆனந்தமாகவும் மாறிவிட்டால் சுபிட்சமடைந்து விட்டதாக கருதுவீர்களா? ஆகவே, யோகா மற்றும் தியானம் என்று சொல்வது சரியல்ல. யோகா என எதைச் சொல்கிறீர்களோ அதில் தியானமும் அடங்கியுள்ளது.
      முன்பு எப்போதும் இருந்ததைவிட இந்தக் காலகட்டத்தில் யோகா அதிகமான முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு முந்தைய காலத்தில் முக்கியமாக இல்லையென நான் கூறவில்லை. ஏன் இதைக் கூறுகிறேனென்றால், இன்று உலகில் பல செயல்கள் செய்வதற்குச் சக்திவாய்ந்த கருவிகளைக் கொண்டுள்ளோம். நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் நீங்கள் விரும்பினால் மலையை நாளையே தரைமட்டமாக்க முடியும்.
      இந்த மாதிரியான ஒரு சக்தி நம் கையில் இருக்கும்பொழுது, உள்நிலை புத்திசாலித்தனமும் வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வும் மற்ற உயிரினங்களை நமக்குள் ஒரு பாகமாக உணருகின்ற தன்மையும் நமக்கு இருப்பது மிக மிக அவசியமாகிறது. இல்லையெனில் உங்களுக்கே நீங்கள் மிகப்பெரிய சேதத்தை விளைவித்துக் கொள்வீர்கள். அந்த மாதிரியான ஒரு நேரத்தில்தான் இப்பொழுதும் இருக்கிறீர்கள்.
      சுவாசிப்பதே பிரச்சினையாகும் அளவிற்கு நீங்கள் தேசத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இங்கு எந்த உலகத்தில் உயிர்வாழ்வதே பிரச்சினையாக ஆகிக்கொண்டு வருகிறது. வெளிப்புற அறிவியலைச் செயல்படுத்தியதால் மட்டுமே இந்த மாதிரி நடந்திருக்கிறது. சரியான உள்சூழலை உருவாக்கக் கூடிய உள்நிலை அறிவியலை நீங்காள் கவனிக்கவேயில்லை.
      ஆகவே, நீங்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதால் யோக அறிவியல்தான் உன்பு எப்போதையும்விட இக்காலகட்டத்திற்கு மிகவும் தேவையாக இருக்கிறது. நீங்கள் சக்தியுடன் இருப்பதால், நீங்கள் புத்திசாலித்தனமாக இருப்பது மிகவும் முக்கியமாகிறது.
      இது எனக்கு இக்கிரகத்தில் வாழ்ந்த மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்களைப் பற்றி நினைவூட்டுகிறது. சர்வாதிகாரிகள் எல்லாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகத் திகழ்ந்தார்கள்.
      ஒருநாள், முசோலினி அனைத்து இத்தாலிய புகைவண்டிகளையும் குறித்த நேரத்தில் ஓடும்படிச் செய்தார். ஒருசில புகைவண்டி ஓட்டுநர்களைச் சுட்டதன் மூலம் இதை அவர் நடத்திக் காட்டினார். இத்தாலியில் அனைத்து புகைவண்டிகளும் குறித்த நேரத்தில் ஓடத் தொடங்கின. அவர்கள் வரலாற்றில் அதுபோல இதற்கு முன்பு நடந்ததேயில்லை.
      ஆனால் திடீரென்று நடக்கத் தொடங்கியது. இதனால் முசோலினி புளகாங்கிதம் அடைந்து அவர் உருவம் பொறித்த தபால்தலை வெளியிட்டபொழுது ஒரு புதுபிரச்சினை உருவானது. தபால் தலைகளெல்லாம் அஞ்சல் உறையின் மீது இல்லாமல் கீழே விழுவதும், தபால் பைகளில் சேர்வதுமாக நடந்தது. இது முசோலினியின் கவனத்திற்கு வந்த பொழுது தபால்துறைத் தலைவரை அழைத்து " நீங்கள் ஏன் உயர்ந்த ரக பசையை உபயோகிப்பதில்லை" எனக் கேட்டார். அதற்குத் தபால் துறைத் தலைவர் மிகுந்த பயத்துடனும், தயக்கத்துடனும் "உயர்ந்த ரக பசையைத்தான் உபயோகிக்கிறோம், ஆனால் மக்கள் தபால்தலையின் முன்பக்கத்தில் தான் எச்சிலைத் தடவுகிறார்கள்." என்று கூறினார்.
      ஆகவே, நீங்கள் சரியான திசையில் செல்ல இதுவே தருணம். நவீன விஞ்ஞானம் உங்களுக்களித்திருக்கும் வசதிகளைப் பயன்படுத்தியே உண்மையான மனிதகுல நன்மையை அடைவதற் கேதுவான பரிமாணத்தை யோக அறிவியல் உங்களுக்குள் திறக்கச் செய்யும்.

Monday, February 28, 2011

ஆனந்தத்தின் வெளிப்பாடு ஆனந்தம்

      நீங்கள் ஒரு குழந்தையாய் இருந்தபோது அமைதியும் ஆனந்தமும் உங்கள் இயல்பாகவே இருந்தது. எப்போதும் ஆனந்தமாகவே இருப்பீர்கள். எப்போதாவது, யாரவது உங்கள் ஆனந்தத்தைக் கெடுப்பார்கள். ஆனால் இப்போதைய நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எப்போதும் வருத்தமாகவே இருக்கிறீர்கள். எப்போதாவது யாரவது உங்களை ஆனந்தப் படுத்த வேண்டி இருக்கிறது.
      உங்கள் அமைதி முற்றாகத் தொலைந்து போய்விட்டால் என்ன செய்கிறீர்கள்? வீட்டிற்குப் போய் எல்லாரையும் சத்தம் போடுகிறீர்கள். உங்கள் கணவரையோ, மனைவியையோ, குழந்தையையோ கோபித்துக் கொள்கிறீர்கள். உங்கள் அமைதியின்மைக்கு முதல் பலி அவர்கள் தான்.
      அடுத்த நாளும் உங்கள் அமைதியின்மை தொடருமேயானால் உங்கள் அண்டை வீட்டுக்காரரிடம் சண்டை போடுகிறீர்கள். இதே மனநிலை தொடர்ந்தால் சக பணியாளர்களிடம் சத்தம் போடுகிறீர்கள். அமைதியின்மை அப்படியே தொடர்ந்தால் உங்கள் முதலாளியிடமே சத்தம் போடுகிறீர்கள்.
      நீங்கள் முதலாளியிடம் சத்தம் போட்டதுமே உங்களுக்கு சிகிச்சை அவசியம் என்பதைச் சுற்றி இருப்பவர்கள் புரிந்து கொள்கிறார்கள். சிகிச்சைக்கு உங்களை அழத்துச் செல்கிறார்கள். மனநல மருத்துவர் உங்களிடம் பேச்சுக் கொடுத்து உங்களை அமைதிப் படுத்தப் பார்க்கிறார். அதுவும் முடியாத போது, உங்களுக்கு ஒரு மாத்திரை கொடுக்கிறார். ஒரு சிறு மாத்திரைதான். அதை விழுங்கிய மாத்திரத்தில், அதுவரை பதட்டத்தில் இருந்த உங்கள் உடலும் மனமும் அமைதியாகிவிடுகிறது. அது தற்காலிகமானது தான் என்றாலும், உங்களுக்கு உடனே அமைதி ஏற்படுகிறது. அந்த மாத்திரையில் இருப்பதென்ன? ஒரு சில ரசாயனங்கள் தான். அவை உங்களுக்குள் சென்று உங்களை அமைதிப்படுத்துகின்றன. இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால், அமைதி என்பதே ஒருவிதமான ரசாயனம் தான். ஆனந்தம் என்பதும் ஒரு ரசாயனம்தான். பதட்டம் என்பதும் ஒரு ரசாயனம் தான். ஒவ்வொரு மனித அனுபவமுமே அவ்வப்போது உங்களுக்குள் ஏற்படுகிற ரசாயன மாற்றங்களின் வெளிப்பாடுகள்தான்.
      ஆனந்தம் இயல்பாகவே ஏற்படுவதற்கான ரசாயனத்தை உங்களுக்குள் உருவாக்க முடியும். குழந்தையாக இருந்த போது அந்த ரசாயனம் உங்களுக்குள் இருந்தது. வாழ்க்கையின் அடிப்படை புரியாமல் அனைத்தையும் குழப்பிக் கொண்டதால், உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிறீர்கள். சிலரைக் கொந்தளிக்கச் செய்ய யாராவது தூண்டிவிட வேண்டும். சிலரைக் கொந்தளிக்கச் செய்ய சில எளிய காரணங்களே போதும். அந்த அளவிற்குக் கொந்தளிப்பில் நிபுணராகி விட்டீர்கள். காரணமே இல்லாமல் கோபப்பட அவர்களால் முடியும்.
      ஒரு மனிதன் அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழ்வதைத் தன்னுடைய இயல்பாகவே கொண்டால், அவனது வாழ்க்கை ஆனந்தத்தைத் தேடுவதாக இருக்காது. ஆனந்தத்தின் வெளிப்பாடாகவே இருக்கும்.
      இன்று மனிதன் தன் சுயநலத்திற்காக உலகைச் சிதைக்கத் தொடங்கியிருக்கிறான். ஒவ்வொரு தாவரமும், புழுவும், பூச்சியும், பறவையும், விலங்கும், பூக்களும், மனிதனின் மகிழ்ச்சிக்காக சித்திரவதைக்கு ஆளாகின்றன. தன் மகிழ்ச்சிக்கு விலையாக இந்தப் பிரபஞ்சத்தையே தந்தும் கூட மனிதன் மகிழ்ச்சியை உணரவில்லை. அமைதியை உணரவில்லை. நல்ல வேளையாக உலக மக்கள் தொகையில் 50 சதவிகிதம் சோம்பேறிகள். இல்லையென்றால், அவர்களும் சுயநலத்தோடு செயல்கள் புரிந்து இந்த உலகத்தை மேலும் சிதைத்திருப்பார்கள். இன்றைய உலகத்தைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது மந்தனின் செயல்கள் அல்ல; மனிதனின் சோம்பேறித்தனம் தான். மனிதனுடைய அறிவும், அன்பும், பரிவும் அல்லவா இந்த உலகத்தைக் காப்பாற்ற வேண்டும்?
      எனவே, இதற்கான பரிமாணத்தை நாம் உணரத் தொடங்கினால், வெளியே உங்களைச் சுற்றி நடைபெறுகிற சம்பவங்களைச் சார்ந்திராமல் அமைதியானவராகவும் ஆனந்தமானவராகவும் நீங்களே வாழ்வதற்குரிய வழி யோகா என்பது புரியும். வெளியுலகம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வாய்ப்பில்லை. எவ்வளவுதான் அறிவியலும் தொழில் நுட்பமும் முன்னேறினாலும் கூட வெளிச்சூழல் முழுக்க முழுக்க உங்களுக்கு விருப்பமான விதங்களில் அமையப் போவதில்லை. நீங்கள் வளர்க்கும் நாய்கூட உங்கள் கட்டளைப்படி முழுமையாக நடப்பதில்லை. குறைந்த்து உங்கள் உள் தன்மையாவது நீங்கள் விரும்புகிற விதமாய் அமைய வேண்டுமில்லையா? எனவே உங்களையாவது நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
      அன்பாகவும், அமைதியாகவும் இருப்பதுதான் உங்கள் இயல்பு. ஏனெனில், உங்கள் உள்நிலை ரசாயனம் இயற்கையாகவே அப்படித்தான் இருக்கிறது. ஒரு மனிதனின் செயல்திறன் முழுமையாக வெளிப்படுவதென்பதே உள்நிலையில் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கும்போது தான். எனவே தொழிலில் சிறக்க வேண்டுமென்றாலும், பணியில் சிறக்க வேண்டுமென்றாலும், கல்வியிலோ, அனுபவத்திலோ மேம்பட வேண்டுமென்றாலும், அல்லது குடும்பத்துடன் வாழ வேண்டுமென்றாலும் உள் தன்மையை ஒரு மனிதன் சீர் செய்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் தனக்கு மட்டுமன்றி, தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அவன் தீமை விளைவித்துக் கொள்கிறான்.
      அமைதியில்லாத நிலை உங்களுக்கு இருபத்து நான்கு மணி நேரமும் இருப்பதில்லை தான். ஆனால் ஒரு நாளில் ஏற்படுகிற ஐந்து நிமிடப் பதட்டம் கூட உங்கள் வாழ்வைப் பாழ்படுத்தி விடக் கூடும்.. எனவே, வெளியில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் முடிவு செய்ய முடியாவிட்டாலும், உங்களுக்குள் என்ன நடக்க வேண்டும் என்பதையாவது நீங்களே முடிவு செய்தாக வேண்டும்.
      அப்படி முடிவு செய்கிற, நிலைக்கு நீங்கள் வந்துவிட்டால் வெளிச் சூழலில் நிகழ்கிற எதுவும் உங்களைப் பாதிக்காது. ஒன்று கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நீங்கள் விரும்பியது நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் நீங்கள் அமைதியாக ஆனந்தமாக வாழ்வீர்கள்.
      முழுக்க முழுக்க வெளிச் சூழலைச் சார்ந்தே உங்கள் வாழ்க்கை இருப்பதால்தான் துன்பம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அதனால்தான் வாழ்க்கையின் ஒரு பகுதி துன்பம் என்று மக்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள். துன்பம் என்பது வாழ்வின் ஒரு பாகமென்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவீர்கள் என்றால் அவர்களுக்கு அதைவிடப் பெரிய அநீதியை நீங்களே இழைக்க முடியாது. அமைதியாக – ஆனந்தமாக வாழக்கூடிய வாய்ப்பு இருப்பதையே அவர்கள் மனங்களிலிருந்து அகற்றியவர்கள் ஆவீர்கள். உங்கள் நோக்கம் நல்லதாக இருந்தால் கூட அவர்களுக்கு உங்களையும் அறியாமல் தீமை செய்கிறீர்கள்.

Wednesday, November 17, 2010

வாழ்க்கை என்பதே ஆனந்தம் தான்:

      பாதி வேலையில் இருக்கும் போது எதற்காக இதைச் செய்துகொண்டிருக்கிறோம் என்று சில சமயம் களைத்துப் போகிறேன். எதை சாதிக்க நான் பிறந்தேன்? என் வாழ்கையின் உண்மையான நோக்கம் என்ன?
      சங்கரன்பிள்ளை தன் மனைவியிடம் சொன்னார்....
            "இந்த பேட்டரி என் வாழ்க்கையை விட உன்னதமானது!"
            "எப்படி சொல்கிறீர்கள்?"
            “இதில் பாசிடிவ் பக்கம் என்று ஒன்று இருக்கிறதே!"
      நம்பிக்கை இழந்து, இதேபோல் துவண்டிருக்கும் சோகமான மனங்களில் தான், வாழ்கைக்கு என்ன நோக்கம் என்ற கேள்வி சுழலும். நீங்கள் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும் போது, இந்த கேள்வி வந்து இருக்கிறதா?
      வாழ்கையின் நோக்கம் என்ன? புகழும் பெருமையும் சேர்ப்பதற்கு தான் என்பார் ஒருவர். மற்றவர்களுக்கு உதவியாக இருந்து விட்டு போவது தான் என்பார் அடுத்தவர். அன்பையும் காதலையும் பிறருக்கு அள்ளிக்கொடுப்பது தான் என்று அடித்துச் சொல்லுவர் இன்னொருவர். இல்லையில்லை, கடவுளை அறிந்துகொள்வது தான் என்று போதனை செய்வார் மதகுரு.
      இப்படி நூறு பேர், நூறு தத்துவங்கள் சொன்னாலும், வாழ்க்கை அவற்றை அடித்து நொறுக்கி விடும். வாழ்க்கை மறந்தாலும் மரணம் அவற்றை தகர்த்து தூள்தூளாக்கி விடும்.
      சங்கரன்பிள்ளை ராணுவப் பயிற்ச்சியில் ஈடுபட்டு இருந்தார்.
"அதிகாரி வந்தார் இன்று துப்பாக்கி சுடும் பயிற்ச்சி கொடுக்க வேண்டியவர் வரவில்லை, நேரத்தை வீணடிக்காமல், கிரவுண்டைச்சுற்றி பத்துமுறை ஓடுங்கள்." என்றார்
      "எதிரிகளை சுட்டுத்தள்ளத் தெரியாவிட்டால் பரவாயில்லை... ஓடித் தப்பிக்கத் தெரிந்திருக்கவேண்டும் என்பதை எவ்வளவு நாசூக்காக சொல்லித்தருகிறார், நம் அதிகாரி" என்றார் சங்கரன்பிள்ளை.
      இப்படித்தான் நீங்களும், வாழ்க்கையின் முதன்மையான நோக்கத்தை விட்டு, வேறு எதிலோ கவனத்தை திசை திருப்பி இருக்கிறீர்கள்.
      அப்படியானால், வாழ்க்கையின் முதன்மையான நோக்கம் தான் என்ன? வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே முதன்மையான நோக்கம் தான். அதை ஆனந்தமாக, உயிர்ப்போடு வைத்திருப்பதைவிட‌ வேறு என்ன முதன்மையான நோக்கம் வேண்டும் வாழ்க்கைக்கு? இதைப் புரிந்து கொள்ளாமல் இது கிட்டவில்லை, அது கிடைக்கவில்லை என்று குறைபட்டுக் கொள்வது எத்தனை முட்டாள் தனம்? குறைபாடு கொண்ட மனம் தான் வாழ்க்கைகு  வேறு நோக்கங்கள் தேடுகிறது. 
      இந்த வாழ்கையை ப்ற்றி நீங்கள் புரிந்து கொண்டதைவிட சற்றே கூடுதலாக புரிந்து கொள்ளும் முயற்சியில் தானே பணம், இன்பம், காதல், கடவுள், சொர்க்கம் என எதன்னெதன் பின்னாலோ ஓடுகிறீகள்.
      ஒரு சிறு சாவித்துவரத்தி வ்ழியே, வானத்தின் முழுமையை பார்க்க முயல்வது போன்றது உங்கள் முயற்சி. அந்த அறியாமையை உங்கள் பலம் என்று நினைத்திருப்பது கொடுமை.
அமெரிக்காவில், புழக்கத்தில் இருக்கும் ஒரு ஜோக்,
      ஜார்ஜ் புஷ் ஒரு முறை, பள்ளிக்கூடத்திற்க்கு சென்று குழந்தைகளை சந்திதார்.
            "பெரும் துயரம் என்பதற்க்கு ஒரு எடுத்துக்காட்டு தரமுடியுமா?" என்று கேட்டார்.
            "விளையாடிக்கொண்டிருக்கும் தோழன் மீது ஒரு கார் வந்து மோதி, அவனைச் சாகடித்தால், அது தான் துயரம்!"
            "அது தான் துயரமல்ல, விபத்து!" என்றார் புஷ்.
      அடுத்த மாணவி எழுந்தாள்...., "பள்ளிக் குழந்தைகள் பயணம் செய்யும் பஸ், மலையிலிருந்து உருண்டு விழுந்து சிதறிப் போனால், அது துயரம்!"
           "அது பேரிழப்பு, துயரமல்ல!"
      கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஜோ எழுந்தான்....
நீங்கள் பயணம் செய்யும் விமானம், ஒரு ராக்கெட் தாக்கி சிதறி எரிந்து நீங்கள் இறந்து போனால், அது துயரம்!"
      புஷ் அமோதித்து புன்னகைத்து, " எப்படி சரியாக சொன்னாய்?"
      உங்கள் விமனத்தை ராக்கெட் மோதினால், அது விபத்தாக இருக்கவும் முடியாது, ஏந்த விதத்திலும் பேரிழப்பாக இருக்க முடியாது, அதனால் தான், சொன்னேன்" என்றான் ஜோ.
      வாழ்க்கைக்கு நோக்கம் கற்பிப்பவர்கள், இப்படித்தான் அறியாமையில் இருந்து கொண்டே, தங்களை புத்திசாலிகள் என்று தீவிரமாக‌ நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
      வாழ்க்கையின் முழு ஆழத்தையும், அகழத்தையும் அதன் வேர்கள் வரை ஊடுருவி மனம் புரிந்து கொண்டதே இல்லை. அதனால்தான் வாழ்க்கைக்கு ஏதாவது மேலோட்டமான நோக்கத்தை தேடிக்கொண்டே இருக்கிறது.
      தத்துவங்கள், கோட்பாடுகள், விவாதங்கள், விளக்கங்கள், புராணங்கள், மறைநூல்கள் எல்லாமே, கேள்வி கேட்கும் மனத்தை சிறிது காலத்துக்கு பயன் படுமே தவிர, அடிப்படை கேள்வி காணாமல் போய் விடாது. மீண்டும் அது தலை நிமிர்ந்தும்.
      ஒரு சிறு மணல் துகளை, முழுமையாக பார்க்க முடிகிறதா என்று பாருங்கள். அதன் ஒரு பக்கத்தை பார்த்துவிட்டு புரட்டினால் தானே மறுபக்கத்தை பார்க்கமுடிகிறது? இப்படி பகுதி பகுதியாக ஐம்புலன்களால் சேகரித்த துண்டுதுண்டான தகவல்களை, கொண்டு முழுமையாக பார்த்துக் விட்டதாக எடை போடமுடியாது.
வாழ்க்கையின் முழுபரிணாமத்தையும் புரிந்து கொள்ள, ஐம்புலன்களின் எல்லையையும் தான்டி போக வேண்டும். ‌
வாழ்க்கையின்  உண்மையான நோக்கம் அதை முழுமையாக வாழ்வது தான். அதை ஒழுங்காகச் செய்யாமல், அதற்கு பெரும் தடையாக இருப்பது நீங்கள் மட்டும் தான்.
      பிரேக்கை அழித்திக்கொண்டே காரை செலுத்தப்பார்த்தால் என்ன ஆகும்? கார் தினறும், நகந்தாலும் கடினமாகத் தோன்றும். தேய்மானம் அதிகமாகும். அப்படிப்பட்ட பிரேக்காக நீங்களே இருக்கிறீர்கள்.
      உஙளைக் கரைத்து விட்டால் வாழ்க்கை அதன் முழுமையை நோக்கி, ஆனந்த்தை நோக்கி அதுவே பயணிக்கும், இயல்பாக மலரும். அதற்குத் தான் யோகா....
வாழ்க வளமுடன்!