Monday, October 15, 2012

யோகா எப்படி உதவுகிறது? ஆனந்தம்


     
      அவ்வப்போது பலரும் நான் ஏன் பிறந்தேன்? எனது வாழ்க்கைக்கு நோக்கம் என்ன இருக்கிறது? என்று கேட்கின்றனர். உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கமும் இல்ல்லாமல் இருந்தால் என்ன? முதலில் உங்களுக்குள் இந்த கேள்வி எழுவதற்கு காரணமே நீங்கள் இன்னமும் வாழ்கையின் முழுமையை, பேரான‌ந்தத்தை ருசிக்கவில்லை. எனவே தான் வாழ்கையின் அனுபவங்களுக்கு அர்தத்தை தேடுகிறீர்கள். மனிதனாக இருக்கும் மகத்துவம் இன்னும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. உங்கள் ஒவ்வொரு அனுபவமும் ஆனந்தத்தில் திளைத்தால் இப்படி கேட்கமாட்டீர்கள்.
      இந்தத் தன்மையைக் கடக்காமல் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் போது எல்லாவிதமான தவறான முடிவுகளுக்கும் தான் வருவீர்கள். தற்போதைய உங்களின் வாழ்க்கை அனுபவங்களை துன்பம் என்று முத்திரை குத்துவீர்கள். பிறகு கடவுள் உங்களுக்கு வைக்கும் பரீட்ச்சை என்று நினைப்பீர்கள். கடைசியாக இதில் நான் தேர்ச்சி பெறாக வேண்டும் என்று முடிவெடுப்பீர்கள். ஆக எல்லா தவறான முடிவுகளுக்கும் வருவீர்கள்.
      உங்களின் வாழ்க்கைப் பாதை எப்போதோ ஒரு ஷணம் வெற்றி, எப்போதோ இன்பம், எப்போதோ ஒரு ஷணம் மகிழ்ச்சி என்று இப்படிப் போகிறது. இதைஎல்லாம் கழித்துப் பார்த்தால், காலையில் எழுகிறீர்கள், சமைக்கிறீர்கள், வயிற்றுக்கு அள்ளிப்போடுகிறீர்கள், அலுவலகம் செல்கிறீர்கள். வீட்டிற்கு சோர்வுடன் திரும்புகிறீர்கள், மீண்டும் காலையில்...... இப்படித் தான் உங்கள் வாழ்க்கை போகிறது.
      இருப்பே பேரான‌ந்தமாக இருந்தால், நோகத்தை பற்றி யாருக்கு என்னெ கவலை? துன்பமான மனிதர்கள் ஒன்று சேர்ந்து தான் தத்துவங்கள், மதங்கள், சமூகங்கள் என்று உருவாக்கி வாழ்கைக்கு எல்லாவிதமான நோக்கங்களை கண்டுபிடித்தார்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு ஷணமும் உங்களுக்குள் பேரானந்தத்துடன் வெடிக்கும் போது, ஏன் எதற்காக என்ற கேள்வி எப்படி வரமுடியும்? இந்த நிலையில் தான் உங்களுக்கு யோகா உதவப்போகிறது. யோகாவைப் பயன்படுத்தி உங்கள் எல்லைகளை தகர்த்து எறிந்து முன்னேறும் போது, வெறுமனே வாழ்வதே பேரானந்தம் தான். வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment