Saturday, December 11, 2010

செய்வதை ஆனந்தமாக செய்யுங்கள்:

       ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் உங்களூக்கு சம்பாதிக்க வேண்டும் என்கிற நிர்பந்தம் வந்துவிடுகிறது.
       எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தாலும், மற்றொன்று அதைவிட சிறப்பானதாகத் தோன்றுகிறது. அதற்கு மாறமுடியுமா? என்று மனம் அலைபாய்கிறது.
       ஆசை ஒன்றிலிருந்து மற்றதுக்கு மாறிக்கொண்டு இருப்பதால், அதன் இலக்கு மசமசப்பாகி விடுகிறது.
       இசையில் தான் என் ஆர்வம், ஆனால் வயிற்றுப் பாட்டிற்கு ஏதாவது ஒரு வேலைக்கு போயாக வேண்டியிருக்கிறதே என்றால்....
       எந்தமாதிரி வேலைக்குப் போக வேண்டும்? இசைக் கருவி விற்பனை செய்யும் கடையில் தரையைக் கூட்டுபவனாகக் கூட வேலைக்குப் போகவேண்டும்.
       இசைக்கருவிகளைத் துடைத்து சுத்தம் செய்தாலும் நூறு சதவிகித ஈடுபாட்டுடன் செய்யவேண்டும்.
      இப்படி முழுமையாக தன்னை அர்ப்பனித்துக் கொண்டு இந்த வேலைகளில் ஈடுஒஅட்டால், எப்படி மலர வேண்டுமோ அப்படி தானாக மலருவோம்.
      எந்தத் துறையை தேர்ந்தெடுப்பது என்று தீமானிக்கிற புத்திசாலித்தனம் உங்களிடம் இல்லையா?
       கவலை வேண்டாம்! இப்போது எந்த செயலில் ஈடுபட்டிருந்தாலும் அதில் முழுமையாக உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். முழுமையாக என்றால் இதயத்தையும், உயிரையும் அதற்காக ஒப்படைக்கத் தயாராக இருக்கும் முழுமை.
       செய்வதை நூறு சதவிகித ஈடுபட்டுடன் செய்தால், உங்கள் உள்சக்தி உங்களை சரியான பாதைக்கு தானாக அழைத்துச் செல்லும்.
       சந்தோசமாக வேலை செய்வதால் உணர்ந்தால் மட்டுமே உங்களால் முழுமையாக செயலாற்ற முடியும். கட்டாயத்துக்காக வேலை செய்வதாக நினைத்து விருப்பம் இல்லாமல் செய்தீர்கள் என்றால், ரத்தக்கொதிப்பும், அல்சரும், மற்ற மனநோய்களும் கூப்பிடாமலே வந்து உள்ளே உட்கார்ந்து கொள்ளும்.
       சங்கரன்பிள்ளை ஒருமுறை ரயிலில் பயணம் செய்தார். வசதியான இருக்கை கிடைத்து உட்கார்ந்தார். அதன் பின்னும் தன் தலை மீதிருந்த பயண மூட்டையை இறக்கிக் கீழே வைக்கவில்லை.
       டிக்கெட் பரிசோதகர் வந்தார், உணவு விற்பவர் வந்தார், மூட்டையை வைத்துக் கொண்டு சங்கரன்பிள்ளையால் எந்த இயல்பான வேலையும் செய்யமுடியவில்லை.
       சக பயணிகளில் ஒருவர் கேட்டார், "ஐயா, பெரிய மூட்டையாக இருப்பதால் கீழே இறக்கி வைக்க உதவி தேவைப்படுகிறதா?"
       "அதெல்லாம் இல்லை!"
       ", மூட்டையில் விலையுயர்ந்த பொருள் ஏதாவது உள்ளதா? அப்படியானால் மூட்டையை கீழே வைத்து அதன் மீது நீங்கள் எறி உட்கார்ந்து கொள்ளலாமே"
       "இல்லையில்லை, எல்லாம் பழைய துணிகள் தாம்!"
       "அப்புறம், எதற்காக அதைத் தலையில் சுமக்கிறீர்கள்!"
       "என் பாரத்தை அனாவசியமாக இந்த ரயில் மீது சுமத்தக் கூடாது என்று பார்க்கிறேன்" என்றார் சங்கரன்பிள்ளை.
       சங்கரன்பிள்ளையைப் போல் சுமையை இறக்கி வைக்கத் தெரியாதவர்களால் எதை ஒழுங்காக செய்யமுடியும்? குடும்பத்தையே தன் தோள் மீது சுமப்பதாக நினைத்துக் கொண்டு துக்கத்துடன் வேலை செய்பவர்களுக்கு எந்த ஆசை நிறைவேறும்?
தயவு செய்து உங்கள் மனபாரங்களை இற‌க்கி வையுங்கள், செய்வதை சந்தோசமாக செய்யுங்கள்.
       ஒருவேளை நீங்கள் செல்ல வேண்டிய ரயில் நான்கு மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று சொல்லிவிட்டால்......
உலகமே முடிவுக்கு வந்துவிட்டதை போல் அத்தனை பேர்களும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வீர்கள், காத்திருக்கும் அந்த நான்கு மணி நேரமும் முள் மேல் உட்கார்ந்திருப்பது போல் இருப்பீர்கள், ரயில்வேயை விடாமல் சபித்துக் கொண்டிருப்பீர்கள்.
       ஆனால் பயணத்துக்காக காத்திருக்கும் குழந்தைகளை கவனியுங்கள், கையில் கிடைத்ததை வைத்துக் கொண்டு ஜாலியாக, எந்த துக்கமும் இல்லாமல் விளையாடிக் கொண்டு இருப்பார்கள்.
       தேவையில்லாமல் உங்களைப் போல் தங்களை வருத்திக் கொள்வது இல்லை. கிடைத்த தருணங்களை சந்தோசமாக அனுபவிக்கிறார்கள். அதிக சிரமம் இல்லாமல் தங்கள் வாழ்கையை பூரணம் ஆக்கிக் கொள்கிறார்கள்.
       ஆனால் நீங்கள் வாழ்கையை சந்தோசமாக ஆக்கிக் கொள்ள தங்களையே வருத்திக் கொள்கிரீர்கள். ஆனாலும் சந்தோசம் கிடைக்காமல் தோற்று விடுகிறீர்களே?
       மனதை துக்கமும், படபடப்பும் அழுத்தாமல் பொறுப்புடன் என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள்.
       இந்த ரயில் இல்லையென்றால் பஸ் பிடிக்கலாம், டாக்ஸி பிடிக்கலாம், இல்லை வேறு வாகனங்கள் கிடைகுமா என்று பார்க்கலாம். இல்லை காத்திருக்க கிடைத்த நேரத்தை வேறு வழியில் ஆனந்தமாக செலவு செய்யலாம்.
       துக்கப்படுவதால் எதுவும் மாறி நிகழப்போவது இல்லை. ஆனந்தமான மனிதர்களால் தான் எந்த வேலையையும் அச்ச‌மில்லாமல், சிரமமில்லாமல் விளையாட்டாக செய்ய முடியும்... ஆகவே எதிலும் ஆனந்தமாக ஈடுபடுங்கள்....

வாழ்க வளமுடன்!

1 comment:

Post a Comment