Thursday, December 30, 2010

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? - 1 ஆனந்தம்:

      "கடவுள் இருக்கிறாரா? இல்லையா?"
       ஆதி மனிதன் பயத்தால் ஆட்டுவிக்கப்பட்டான்...
திடீரென்று வானில் வெளிச்சக்கீற்றுகள், தடதடவென்று ஓசை, பொத்துக் கொண்டு கொட்டும் தண்ணீர், அள்விடமுடியாத வான் பரப்பு, கணக்கிட முடியாத நட்சத்திரங்கள், எல்லைகள் புரியாத அலைகடல்.... எதற்கும் காரணம் புரியாமல் மனிதன் மிரண்டான்.
       இந்த பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம் முன் தன்னை ஒரு தூசு போல உணர்ந்தான்.
       தனக்கு புரிபடத சக்திக்கு முன் பணிந்து தன்னை பாதுகாக்க வேண்டினான்.
       மழையை கும்பிட்டான், சூரியனை வணங்கினான்.
       அன்றிலிருந்தே அச்சத்தின் காரணமாக ஏற்றுக்கொள்ளப் பட்டவரானார் கடவுள்!
       பிறந்ததில்லிருந்தே உங்கள் தாயும் தந்தையும் சமூகமும் கட்வுள் உண்டு என்று சொல்லி வந்திருப்பதனால் தான், நீங்களும் கடவுள் உண்டு என்று நம்புகிறீர்கள்!?
       உங்கள் குடும்பத்தினர் எந்தக் கடவுள் கட்சியை சேர்ந்தவரோ, அந்தக் கட்வுளை மட்டும் தான் உங்க‌ளால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.
       உங்களூக்கு பழக்கமான ஜ‌ரிகையிட்ட உடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து தானே உங்களுக்கு கடவுள் அருள்புரிவார்?
       காலண்டரில் அச்சிட்ட தோற்றங்களீல் வராமல் வித்தியாசமாக ஜீன்ஸும், ஜிப்பாவும் அணிந்து வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
       யானைகள் உலகத்துக்குப் போய் கடவுள் எப்படி இருப்பார் என்று கேளுங்கள், "எங்களைவிட பெரிய உருவத்துடன், நான்கு தும்பிக்கைகளுடன் இருப்பது தான் கடவுள்" என்று சொல்லும்.
       எறும்புகளிடம் கேட்டால்' "ஆறங்குளம் உள்ள பிரம்மாண்ட எறும்பு தான் தங்கள் கடவுள்" என்று சொல்லும்.
       இந்த பிரபஞ்சத்தில் மனிதனை விட பரினாம வளர்ச்சி கண்டிட்ட வேறு எதாவது உயிரிணம் இருக்கக்கூடும், அதனிடம் சென்று உங்கள் கடவுள்களைக் காட்டினால், 'சீச்சீ!' கேவலம் மனிதனின் தோற்றத்தையா கடவுள் கொண்டிருப்பார், அவர் எங்களைப் போலல்லவா இருப்பார்' என்று கைகொட்டி சிரிக்கலாம்.
       தங்களுடைய பிரச்சனனைகளை தீர்க்கத் தெரியாத சிலர், மற்றவர்களின் பிரச்சனைகளை தீர்த்துவைக்கப் புறப்பட்டு விடுகின்றனர்.
        கடவுளைப் பற்றி உங்களுக்கு நேரடி அனுபவங்கள் கிடையாது.
       அதனால் அடுத்தவர் சொன்னதை ஏற்று அப்படியே நம்பிக்கை வைத்தீர்கள்.
       கோயிலுக்கு எதற்காக போகிறீர்கள்?
கடவுளை உண்ர்வதற்காகவா?
       'அதைக் கொடுப்பா, இதைக் கொடுப்பா, கப்பாற்றுப்பா என்று வேண்டிக் கொள்ளத்தானே?
       உங்கள் கடவுள் நம்பிக்கைகள் பெரும்பாலும் பேராசை மற்றும் பயத்தின் அடிப்படையில் தானே வளர்க்கப்பட்டிருக்கின்றன?
       உங்கள் வீட்டில் டஜன் கணக்கில் கடவுளரின் படங்களை மாட்டி வைதிருக்கின்றீர்களே அதனால் உங்கள் வாழ்கையைப் பற்றிய பயம் உங்களுக்கு நீங்கிவிட்டதா?
       கடவுளைகளையும் சேர்த்து அல்லவா வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு போகவேண்டியிருக்கிறது?
       கடவுள் என்பதே உங்கள் அச்சத்தின் அடையாளமாக அல்லவா இருக்கிறது, அதனால் தான் பயபக்தி என்ற வார்த்தையை ரசிக்கிறீர்கள்.
       கடவுள் அன்பானவர் என்றால், பயம் என்ற வார்த்தை எதற்கு? பக்தி மட்டும் போதாதா?
       கடவுளை உணராதவர்கள் தான் இன்றைக்கு பக்தியை பற்றி அதிகம் பேசுகிறார்கள்....
       அப்படியானல் கடவுள் என்பவர் கற்பனைப்பாத்திரம் தானா?
       அவரைப் பற்றிக் கவலைப் படவேண்டாமா? அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?
       ஒரு சிறு விதை பூமிக்குள் விழுந்ததும் மிகப்பெரிய விருட்சமாக வளர்கிறதே, எப்படி?
       இந்த விதையிலிருந்து, இப்படிப் பட்ட மரம் தான் வளரும், இந்த அளவு வளரும், இந்த மாதிரியான பூ மல‌ரும் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறதே இந்த விதிகளை அமைத்தது யார்?
       உங்களை மீறிய சக்தியை கடவுள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது?
       ஆக தொடங்கிய இடத்துக்கே வந்து விட்டோம் கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
       இதை அறியும் ஆவல் உங்களுக்கு வந்து விட்டால்? இதைப் பற்றி நீங்கள் யாரிடம் கேட்டு அறிய முடியும்...............

வாழ்க வளமுடன்! 

1 comment:

Anonymous said...

பதிவு அருமை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Post a Comment