Sunday, December 19, 2010

விதியை நீங்களே தீர்மானியுங்கள்- ஆனந்தம்:

       உங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசியல்வாதிகள் மட்டுமல்ல.... ஜோசியர்களும், சாமியார்களும் கூட ஆசைப்படுகிறார்கள்.
       த‌ங்கள் அன்பினால் உங்களைக் கவராமல், உங்க‌ளுக்கு ஒரு பயத்தையும், குற்றஉணர்ச்சியையும் உண்டு பண்ண, பாவம்‍‍‍‍‍‍‍‍‍ - புண்ணியம், நல்லது - கெட்டது என்றெல்லாம் சொல்லி குழப்புகிறார்கள்.
       உங்கள் வெற்றியையும், தோல்வியையும் நிர்ணயிப்பது உங்கள் தலையெழுத்து தான்! என்று அடித்துச் சொல்லி, உங்களை நம்பவைதிருக்கிறார்கள்.
       விரும்பியது கிடைக்கவில்லை என்றால். முழுக்காரணம் நீங்கள் தான். வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் கவனமில்லாமல் தீர்மானித்திருக்கிறீர்கள். ஆசைப்பட்டதற்க்கு உரியவராக நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ளவில்லை. அது உங்கள் த்வறு தானே தவிர விதியின் விளையாட்டல்ல.
       தன் கம்பியூட்டர் முன் அமர்ந்து உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் திட்டமிட்டுக் கொண்டிருப்பதைத் தவிர கடவுளுக்கு வேறு வேலையே இல்லையா? இல்லை இந்தக்கதைகளை எல்லாம் நம்ப இன்னும் நீங்கள் குழ‌ந்தைகளா?
பிறப்பின் காரணமாக, வளர்ப்பின் மூலமாக, சில அடிப்படைக் குணங்களை நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ பெற்று விட்டீர்கள். அந்த குணாதிசியங்கள் தான் உங்கள் பாதையை தீர்மானிக்கின்றன. அது கூட ஒரளவுக்குத் தான். மற்றபடி தலையெழுத்து என்று ஒன்று இருந்தால், மிககவனத்தோடு செயல்பட்டால் அதை உங்கள் விருப்பப்படி திருத்தி எழுதிக்கொள்ள முடியும்.
       தனக்கு எல்லாமே தெரியும் என்று சொல்லிக்கொண்ட ஓர் அறிவு ஜீவியிடம் சங்கரன்பிள்ளை வந்திருந்தார்.
       "எனக்கு அழகான மகள் இருக்கிறாள். எல்லாவற்றிலும் சிற‌ந்து விளங்குகிறாள். ஆனால் அவளுக்கு ஒரு பிரச்சனை. தினமும் காலையில் எழுந்ததும் மந்தமாக இருக்கிறாள். சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடித்து விடுகிறாள். இதற்கு காரணம் என்ன?" என்று கேட்டார் சங்கரன்பிள்ளை.
       அறிவுஜீவி சற்று நேரம் கண்மூடி யோசித்துவிட்டு கேட்டார்..." உன் மகள் பால் குடிப்பதுண்டா?"
       "உண்டு, சிறந்த பசுவிடமிருந்து சுத்தமாக கறந்த பாலை மட்டும் தான் அவளுக்கு கொடுக்கிறோம்" என்றார்.
       "அங்கே தான் பிரச்சனை" என்றார் அறிவுஜீவி.
       "வயிற்றுக்குள் போனதும் பால் தயிராகிவிடும், இரவு படுக்கையில் உன்மகள் புரளும் போது அந்ததயிர் கடையப்பட்டு வெண்ணெய் திரளும், உடம்பு சூட்டில் அந்த வெண்ணெய் உருகி நெய்யாகி விடும். அந்த நெய் ரசாயன மாற்றத்தால் சக்கரையாகி விடும். அந்த சக்கரை ரத்தத்தில் கலக்கும் போது ஒரு போதை பிறக்கும். காலையில் அந்த போதை தெளிவதற்குள் எழுந்திருப்பதால் தான், உன் மகளுக்கு அந்த பிரச்சனை!"
       புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலைகளுக்கெல்லாம் விதியின் மீது பழியைப் போட்டு தப்பித்துக் கொள்வதும், இந்த அறிவுஜீவி சொன்ன காரணத்தைப் போல் அர்த்தமில்லாதது தான்.
எல்லாமே விதிப்படி தான் நடக்கும் என்று சில பெரியவர்கள் சொல்வதை நம்பி உங்கள் பார்வையை குறுக்கிக்கொள்வீர்களா? உங்கள் உறிதியை மழுங்கடித்துக் கொள்வீர்களா?
       யாருக்கும் வெளிச்சூழ் நிலைகள் அவர்கள் விரும்பியபடி நூறு சதவிகிதம் அமைந்து விடுவது இல்லை. மாற்ற முடியாத சூழ்நிலைகளை எதிர்த்து நின்றால் உங்கள் அமைதி காணாமல் போகும். மூளை ஸ்தம்பித்து நிற்கும்....
       மாறாக அதை உள்ளபடி ஏற்றுக்கொண்டுவிட்டால், அடுத்து என்ன செய்வது என்று புத்திசாலித்தனமாக யோசிக்க முடியும். இதற்காகத்தான் விதி என்று சொல்லி வைத்தார்கள்.
       ஆனால் விதி என்றால் எதையும் சகித்து செயலற்று இருப்பது என்று தவறாக‌ புரிந்து கொண்டுவிட்டீர்கள். எந்த சூழ்நிலைகளையும் சகித்து கொண்டு இருக்க வேண்டியது இல்லை. சகித்துக் கொள்வது விருப்பத்தோடு செய்வதல்ல. கட்டாயத்தால் செய்வது.
       எனவே அதைவிடுத்து, எதையும் அமைதியாக ஏற்றுக்கொண்டு, அந்த விதியை உங்களுக்கேற்ப்ப மாற்றிக்கொள்வதெப்படி என்று யோசித்துச் செயலாற்றுங்கள்.
       நீங்கள் வளர வேண்டுமானால் விதி பற்றிய பயத்திலிருந்து முதலில் வெளியே வரவேண்டும்.
       'கடவுளே வந்து சொன்னாலும் என்விதியை நான் தான் தீர்மானிப்பேன்' என்ற உறுதி உங்களூக்கு வரவில்லையென்றால், உங்கள் வாழ்க்கை அதன் போக்கில் தான் நடக்கும்.
விரும்பியதை அடையவேண்டும் என்ற வேட்கை உங்களுக்கு இருந்தால், அந்த விதியை கடவுளிடமிருந்து பறித்து நீங்களே அதைக் கையாள ஆரம்பித்தால், நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் ஆனந்ததை ருசிப்பீர்கள். உங்கள் வாழ்வே ஆனந்தமயமாகிவிடும்....

வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment