Sunday, November 7, 2010

ஆனந்தமாக எதிர்கொள்ளுங்கள்:

     உங்களுக்கு சந்தோசமானது என்று நம்பி ஏற்றுக் கொண்டது எதுவாக இருந்தாலும், அத்தோடு சில சவால்கள் இலவச இணைப்பாக வந்து சேரும்.
     அது கடின உழைப்பாக இருக்கலாம், மும்முரமான போட்டியாக இருக்கலாம், எதிர்பாராத தடைகளாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் ஆசையோடு, சந்தோசத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.
     உங்கள் வளர்ச்சியில் உண்மையில் விருப்பம் இருந்தால், பிரச்சனைகளை ஆனந்தத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.
     தோற்றுக் களைத்தவர்கள், பொதுவாக சொல்லும் காரணம் என்னவென்று தெரியுமா?
     'எனக்கு மட்டுமே நேரம் சரியில்லை, நான் மாவு விக்கப்போனால் காற்று அடிக்கிறது, உப்பு விக்கப்போனால் மழை பெய்கிறது
     நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும், இந்த உலகம் உங்கள் மீது பிரச்சனைகளை வீசித்தான் பார்க்கத்தான் போகிறது. அப்புறம் ஏன் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயங்குகிறீர்கள்.
     கடினமான சந்தர்ப்பங்கள் உங்களுக்கு கிடைத்த சாபங்கள் அல்ல, உங்களுக்கு அருளப்படும் வரங்கள்.
     ஒரு சினிமாவுக்கு போகிறீர்கள், அடுத்தடுத்த காட்சிகள், நீங்கள் எதிர்பார்த்த மாதியே வந்து கொண்டிருந்தால், அந்த சினிமாவை ரசிப்பீர்களா அல்லது போர் என்று எழுந்து வெளியே வருவீர்களா?
எதிர்பாரத திருப்பங்கள் தானே ஒரு வாழ்க்கையை சுவையானதாக அமைத்து தரமுடியும். கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாக சண்டைக்கு போனான்.
     " உனக்கு பயிர்களை பற்றி என்ன தெரியும், நீ நினைத்த போது மழையை அனுப்புகிறாய், தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்திரவாக இருக்கிறது. பேசாமல் அந்த வேலைகளை ஒரு விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்து விடேன்"
     கடவுள் உடனே, "அப்படியா? சரி, இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பட்டிலேயே இருக்கட்டும்" என்று வரம் அருளிவிட்டு போய்விட்டார்.
     விவசாயிக்கு சந்தோசம் பிடிபடவில்லை, அடுத்த பருவம் வந்தது.
     மழையே, பெய் என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது நிறுத்தியது. ஈரமான நில‌த்தை உழுதான், தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதைகளை தூவினான். மழை, வெய்யில், காற்று எல்லாம் அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைபசேல் என்று வளர்ந்தது, வயலைப் பாக்கவே படுரம்மியமாக இருந்தது.
     அறுவடை காலம் வந்தது, விவசாயி ஒரு கதிரை அறுத்தான். திறந்து பார்த்தான். அதிர்ந்தான். உள்ளே தானியத்தை காணவில்லை. அடுத்தடுது எல்லாவற்றிலுமே தாணியமே இல்லை.
     "ஏ கடவுளே!" என்று கோபத்தோடு கூப்பிட்டான். மழை, வெய்யில், காற்று என்று எல்லாவற்றையுமே சரிவிகிதத்தில் தானே பயன்படுத்தினேன், ஆனால் பயிர் நாசமாகிவிட்டதே? ஏன் என்றான்.

     கடவுள் புன்னகைத்தார்! "என் கட்டுப்பாட்டில் இருந்தபோது, காற்று வேகமாக வீசும், அப்போது கதிர்களெல்லாம், அம்மாவின் மடியை இருக்கிக்கொள்ளும் குழந்தையை போல, பூமிக்குள் தனது வேர்களை எல்லாம் மிக ஆழமாக அனுப்பி பிடித்துக்கொள்ளும். மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை அனுப்பி நாலபக்கமும் அனுப்பும், போராட்டங்கள் இருந்தால் தான் தாவரங்கள் தங்களை பாதுகாத்துக்கொண்டு, மிக வலுவாக வளரும். எல்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில், உன்பயிர்களுக்கு சோம்பேரித்தனம் வந்துவிட்டது. தளதள வென்று வளர்ந்ததே தவிர, அரோக்கியமான தானியங்களை வழங்க தவறிவிட்டது!.
     வேண்டமடா! உன் மழையும், காற்றும்! நீயே வைத்துக்கொள் என்று அவற்றை, கடவுளிடமே திருப்பித் த‌ந்து விட்டான்.
ஆம், வாழ்க்கையில் எல்லாமே செளகிரியமாக அமைந்து விட்டால், அதைப் போன்றதொரு வெறுமை வேறெதுவும் இல்லை.
     பிரச்சனைகள் உங்களைப் போட்டு அழுத்தும் போதுதான், உங்கள் திறமை அதிகரிக்கும். சவால்கள் தான் ஒரு மனிதனை முழுமையாக்கும்.
     இருட்டு என்ற ஒரு பிரச்சனை இருந்ததால் தானே, மின்விள‌க்கை கண்டுபிடித்தீர்கள். பயணம் என்பது ஒரு பிரச்சனையாக‌ இருந்ததால் தானே, வாகனங்களுக்கு உருக்கொடுத்தீர்கள், தொலைவில் இருப்பவர்களை தொடர்புகொள்வது பிரச்சனையாக‌ இருந்ததால் தானே, தொலைபேசியை கண்டுபிடித்தீர்கள்.
      பிரச்சனைகள் இல்லாவிட்டால், உங்களின் மூளையின் திறனை எவ்வாறு அறீவீர்கள். சங்கரன்பிள்ளை வீடு கட்ட விரும்பினார், கட்டட நிபுனர் விதவிதமான பிளான்களைக் காட்டினார்.
"இல்லை, இது இல்லை, நான் நினைத்திருப்பது வேறு மாதிரி என்று, ஒவ்வொரு பிளான்னையும் நிராகரித்தார் சங்கரன்பிள்ளை. நிபுனர் களைத்துப் போனார். "உங்க‌ள் மனதில் என்ன தான் இருக்கிறது?" என்று கேட்டார்.
     ஒரு புராதண பித்தளைக்குமிழை சங்கரன்பிள்ளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் காட்டினார். " இதைக் கதவில் பொருத்தக்கூடியது மாதிரி ஒரு வீட்டுப்பிளானை இதுவரை நீங்கள் எனக்கு காட்டவில்லையே" என்றார்.
     பிரச்சனைகளை எதிர்கொள்ள தைரியம் இல்லை...ஆனால் வாழ்க்கை மட்டும் வசதியாக அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் தான், சங்கரன்பிள்ளையைப் போல் கதவுக்குமிழை வைத்துக்கொண்டு அரண்மனைக்கு அசைப்படுகிறார்கள்.
     எதற்காக எல்லாமே திட்டமிட்டபடி முடியவேண்டும், ஏதாவது ஒன்று பிய்த்துக்கொண்டு போகட்டுமே... அதை எதிர்கொள்வோம், சமாளிப்போம், அது தானே உண்மையான வெற்றி.
     முடிவு சாதகமாக இருக்குமா? இருக்காதா? என்று வீண் யோசனைகள் செய்யாமல். முழுமையான ஈடுபாட்டுடன், ஆனந்ததோடு சவால்களை எதிர்கொள்ளுங்கள்…………

No comments:

Post a Comment