Tuesday, May 24, 2011

அயோக்யன்-நல்லவன் ஆனந்தம்


      ஒருத்தரை நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்! ஓருவன் மிகவும் போகிரித்தனம் பண்ணிக்கொண்டு இருப்பவன், மகா அயோக்யன், கொலை பாதகங்களுக்கு அஞ்சாதவன் மகளிடம் கேட்டீர்கள் என்றால் என் தந்தை மிகவும் நல்லவர் என்று சொல்லுவாள். அதே போல் மிகவும் நல்லவன் என்று சமுதாயத்தால் தீர்மானிக்கப்படும் ஒருவனிடம் கூட சில கெட்ட குணங்கள் இருக்கலாம்.
      ஆதலால் முழுவதுமாக நல்லவர்களும் கிடையாது, கெட்டவர்களும் கிடையாது. மனிதர்களை அவர்கள் எப்படியோ அப்படியே எற்றுக்கொள்ளப் பழக வேண்டும். அப்போது தான் நாம் என்றும் ஆனந்தமாக வாழ முடியும்.
      ஒரு முறை பிம்பிசாரன் என்ற அரசன், மாஹாவீர் என்ற மகானை சந்திக்க அவனுடைய மந்திரிகள் மற்றும் பரிவாரங்களுடன் வந்தான். அப்போது வழியில் அவனுடைய நண்பன் பிரசன்னகுமார் என்பவரை சந்தித்தான்.
      அவர் அரசனாக இருந்து பின்பு அனைத்தையும் துறந்து யோகியாக, மகாவீருடைய சிஷ்யனாக, ஞானவானாக இருந்தார். அவரை சந்தித்து விட்டு பின்பு மகாவீரிடம் வந்தான்.
      மாகவீரிடம் வந்த பிம்பிசாரன், அவரிடம் சுவாமி, மனிதர்கள் இறந்தபின்பு சொர்கத்துக்கு போவார்களா? நரகத்திற்க்கு போவார்களா? என்பதை எதை வைத்து தீர்மானிப்பது? உதாரணத்திற்க்கு என் நண்பன் பிரசன்னகுமார் அரசனாக இருந்தபோது, அனைத்து பாவகாரியங்களையும் கூசாமல் செய்தவன், ஆனால் இப்பொதோ அனைத்தையும் துறந்து ஞானவானாக இருக்கிறார். அவர் இறந்தால் சொர்கத்துக்கு போவாரா? அல்லது நரகத்திற்க்கு போவாரா?
      மகாவீர் அவரிடம், நீ பிரசன்னகுமாரைப் பார்த்தாயே அப்போது இறந்திருந்தால் அவர் நரகத்திற்க்கு போயிருப்பார்! ஆனால் இப்போது இந்த கணம் இறந்தால் சொர்கத்திற்க்கு போவார்! என்றார் மகாவீர்.
      பிம்பிசாரன் ஒருகணம் மிகவும் குழம்பிப்போனான். நாம் கேட்ட கேள்வி என்ன? இவர் சொல்லும் பதில் என்ன? உடனே அதை புரிந்துகொண்ட மகாவீர், பிம்பிசாரா, நீ சந்திக்கப் போனபோது உன்னுடைய பரிவரங்களுடன் போனாய், அதைப்பார்த்த அவருடைய மனதில் இதையெல்லாம் (அரசவாழ்வை)விட்டுவிட்டோமே என்ற எண்ணம் தோன்றி அவரை துன்புருத்தியது, அதை நினைத்து மிகவும் வேதனைப் பட்டார். அப்போது அவர் இறந்திருந்தால் நரகத்திற்க்கு போயிருப்பார், ஆனால் இவ்வாறு ஞான வாழ்விற்க்கு வந்தபிறகு சிந்தித்து விட்டோமே என்று வருந்தி மனதாற என்னிடம் மனதாலேயே மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கின்றார். அதனால் அவர் இப்போது இறந்தால் சொர்கத்திற்க்கு போவார் என்று கூறினேன், என்றார் மகாவீர்.
      ஒரு மனிதன் சொர்கத்துக்கு போவானா? அல்லது நரகத்திற்க்கு போவானா? என்று நான் கூறவரவில்லை. மாறாக வாழும்போதே சொர்கம் நரகம் என்பதை நம் எண்ணங்கள் தான் தீர்மானிக்கின்றன. நல்ல எண்ணங்கள் நம்மை ஆனந்தமாகவும், கெட்ட எண்ணங்கள் துன்பத்துடனும் வாழவைத்துவிடுகின்றன. நாம் வாழும் போதே நல்ல எண்ணங்களால் ஆனந்தமாக‌ வாழவேண்டும்..........................
     

No comments:

Post a Comment