Friday, May 20, 2011

பெண்கள் ஆண்களுக்கு சமமா? ஆனந்தம்


      ஆண்களைவிடவும் பெண்கள் பலவீனமானவர்கள் என்பதால், பெண்களை உளவியல் ரீதியாகவும் வலிமையிழந்தவர்களாக்கி, ஆன்மிகத்திலும் அவர்களைப் பலவீனப்படுத்தி, பொருளாதாரத்திலும் ஒன்றும் இல்லாமல், ஆக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தார்கள். இந்த நிலை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. எல்லாமே ஆண்களைவிடப் பெண்கள் உடல் ரீதியாக பலவீனமானவர்கள் என்கிற ஒரே காரணத்தால்தான் வேறெந்த விதத்திலும் ஆண்கள் பெண்களைவிட மேம்பட்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. 


      கொஞ்சம் கூடுதலான வலிமையிருக்கிறது; அவ்வளவுதான். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இது மிகவும் நீளமானதொரு காலம் என்றே கருதுகிறேன். இதுபற்றி கவனம் கொண்டு மக்கள் எதையாவது செய்ய வேண்டும். பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளும்வரை- ஒவ்வொரு ஆணும் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளும்வரை அவன் தன்னைத்தானே உணர வாய்ப்பேயில்லை. ஏனெனில், அவனின் பாதியே பெண்மைதான்.


      இந்திய ஆன்மிக உலகில், தன்னை உணருகின்ற விழிப்பு நிலையின் உச்சத்தைத் தொடுதலில், ஆண்களும், பெண்களும் பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள். உள் நிலையைப் பொறுத்தவரையில் ஆணிற்கு இணையான தன்மை பெண்ணிற்கும் உண்டு என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலேயிருக்கிற தோலைத்தான் ஆண் என்றும், பெண் என்றும் பிரிக்கிறோமே தவிர, உள்ளே இருக்கிற தன்மை ஒன்றுதான். ஆண் தோலா? பெண் தோலா? என்பதுதான் பேதம். உங்கள் ஆன்மிக சக்தியை நிர்ணயிக்கக் கூடியவை இந்தத் தோல்கள் அல்ல. வேண்டுமானால் உடல்கூற்று அளவில் சில பின்னடைவுகள் பெண்களுக்கு இருக்கலாம். ஆனால், உளவியல் ரீதியில் அவர்கள் இன்னும் கூடுதல் வலிமை பெற்றவர்கள். வேத காலங்களிலிருந்தே பெரிய முனிவர்களாகப் பெண்கள் திகழ்ந்திருக்கிறார்கள். வழிபாட்டு முறையின் தொடக்கமே பரம் பொருளை ஓர் அன்னையாக வணங்குவதில்தான் தொடங்கியது.       
      
      விலையில்லாத இறைத்தன்மையை அன்னையாகத்தான் பார்த்தார்கள். அன்று முதல் இன்றுவரை அது தொடர்கிறது. இன்று கூட பெண் தெய்வ வழிபாடு என்பது ஆண் தெய்வ வழிபாட்டை விட அதிகம் இருக்கிறது. அறியாமையில் இருக்கிற ஒரு மனிதன் கூட, அனைத்துக் கடவுள்களும் தன்னைக் கைவிட்டுவிட்டதாகக் கருதினால், விரைவான நன்மைகளைப் பெறுவதற்கு அம்மன் கோவிலுக்குத்தான் செல்கிறான்.


      வேத காலங்களில் அந்தணர்கள் அணிகிற பூணூலைப் பெண்களும் அணிந்திருந்தார்கள். பூணூல் அணிகிற தகுதி அவர்களுக்கு இருந்தது. ஏனென்றால் பூணூல் இல்லாமல் வேதங்களையோ, இதிகாசங்களையோ படிக்கக்கூடாது என்கிற விதிமுறை அன்றைக்கு இருந்தது. ஆன்மிகம் ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. பெண்களுக்கும்கூட என்பதாஅல் பூணூல் அணிவிக்கப்பட்டிருந்தது. மைத்ரேயி போன்ற பெண் முனிவர்கள் நிறைய பேர் அன்று இருந்தார்கள்.


      ஜனக மகாராஜாவின் அரண்மனையில் ஒருமுறை ஆன்மிக விவாதம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அதில் பங்கேற்க எல்லா முனிவர்களும், ஞானிகளும், சாதுக்களும் கூடியிருந்தார்கள். எது உண்மை, எது போய், என்று கண்டறிவதர்க்கான போட்டி என்றுகூட அதைச் சொல்லலாம். ஜனக மகாராஜா தன்னை உணர்ந்த ஒருவர். தன்னுள் இருக்கும் உண்மையை உணர்ந்த ஒரு அரசர். எனவே, இப்படியொரு விவாதத்தை ஏற்படுத்தி நாட்டில், ஆன்மிகப் பாதையில் இருக்கிற ஒவ்வொரு மனிதரும் பங்கேற்கும் விதமாக அமைத்திருந்தார். விவாதம் தொடரத் தொடர சூட்சும நிலையில் அது நடைபெறத் துவங்கியது. தொடக்கத்தில் அங்கே குழுமியிருந்த அத்தனை பேருமே ஆன்மிக விவாதத்தில் பங்கேற்றார்கள். ஆனால் நேரம் செல்லச் செல்ல பலர் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்களால் உணர முடியவில்லை. அந்த அளவுக்கு விவாதங்கள் சூட்டுமமாய்ப் போய்க்கொண்டிருந்தது. இரண்டே இரண்டு பேர்தான் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் யாக்ஞவல்கியர், இன்னொருவர் மைத்ரேயி.


      இந்த இருவருக்கும் இடையிலான விவதம் நாட்கணக்கில் தொடர்ந்து நடைபெற்றது. உணவு இல்லாமல், உறக்கம் இல்லாமல் விவாதம் நடந்து கொண்டேயிருந்தது. எல்லோரும் உட்கார்ந்து அதைப் பார்த்து கொண்டிருந்தார்களே தவிர, எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பதுகூடத் தெரியாத அளவுக்குச் சூட்சுமநிலையிலேயே விவாதங்கள் போய்க்கொண்டிருந்தன. இறுதியில் மைத்ரேயி கேட்ட ஒரு கேள்விக்கு யாக்ஞவல்கியரால் பதில் சொல்ல முடியவில்லை. ஆன்மிகப் பாதையில் செல்வதற்காக அரசையே துறந்துவிட்டு வந்த அந்த மானிதர், கூர்மையான மதிக்கு மிகவும் பகழ் பெற்றிருந்த ஆவர், மைத்ரேயியின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத நிலையிலிருந்தார். கோபமும், பதட்டமும் அடைந்தார். மைத்ரேயியிடம் சொன்னார்: “இன்னமும் ஒரு கேள்வி கேட்டால் நீ துண்டு துண்டாக வெடித்துவிடுவாய்” என்று. ஜனக மகாராஜா தலையிட்டு, “உங்களுக்கு எல்லாம் தெரிந்திருப்பது போல் ஒரு தோற்றம் இருந்தாலும் வாழ்க்கை அனுபவத்துக்குள் அவையெல்லாம் வராததால் கேள்விகளுக்குப் யாக்ஞவல்கியரிடம் பதில் சொல்ல முடியவில்லை” என்றார். குழுமியிருந்த அத்தனைபேர் மத்தியிலும் அவர் மைத்ரேயிக்கு உரிய மரியாதைகள் செய்தார் என்று பார்க்கிறோம்.


      யாக்ஞவல்கியர் தன் குறைகளை உணர்ந்து, மைத்ரேயியின் கால்களில் விழுந்து, தன்னையும் ஒரு சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். மைத்ரேயி அவரிடம் சொல்கிறாள்: “நீங்கள் என் சீடராக இருக்க வேண்டாம். கணவராக இருங்கள்”, என்று. ஏனென்றால் தன் ஆற்றலுக்கு ஓரளவு இணையாக வருகிற எந்த மனிதரையும் அவள் இதுவரை சந்தித்ததில்லை. அவள் உணர்ந்ததை அவர் உணராவிட்டாலும் கூட, ஓரளவுக்காகவாவது இணையாக வருபவர் யாக்ஞவல்கியர் என்பதால் அவரைக் கணவராகக் கொள்வது என்று மைத்ரேயி முடிவெடுக்கிறாள். பல ஆண்டுகள் குடும்பம் நடத்துகிறாள். வேத காலங்களில் ஆண்களுக்கு இருந்த அனைத்து ஆத்ம சாதனைகளும் பெண்களுக்கும் இருந்தன. ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, யாக்ஞவல்கியர் மைத்ரேயிடம் வந்து, “இந்த உலக வாழ்க்கை போதும் என்று கருதுகிறேன், என்னிடம் இருப்பதெல்லாம் உன்னிடம் கொடுத்துவிட்டு நான் கானகங்களுக்குப் போய் என்னை நானே உணர முற்படுகிறேன்” என்று சொல்லுகிறார்.


      உடனே மைத்ரேயி. “இதுபோன்ற சொற்ப விஷயங்களின் பின்னால் செல்வேன் என்று எப்படி நினைத்தீர்கள்? உண்மையான பொக்கிஷத்தைத் தேடி நீங்கள் போகிறபோது, இந்தச் சின்ன சின்னப் பொருட்களைப் பெரிதென்று எண்ணி நான் இருந்துவிடுவேனா?” என்று கேட்கிறாள். பிறகு இருவருமே கானகத்துக்குப் போய் ஞானமடைந்த நிலையிலே வாழ்கிறார்கள் என்று பார்க்கிறோம்.


       இதுபோல நிறைய கதைகள் உண்டு. இது நமக்கு உணர்த்துவது என்னவென்றால், வேதகாலங்களில் ஆன்மிக வாஅழ்க்கையைப் பொறுத்தவரை பெண்கள் சரிசமமாகக் கருதப்பட்டார்கள் என்பதுதான். இவை மிகவும் சீர்பட்ட சமுதாயங்களாகத் திகழ்ந்தன. சமூகம் சீராக இருந்தாஅல் ஒரு பெண்தான் ஆதிக்கம் செலுத்துவாள். ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்றுகூட அவசியமில்லை. எல்லாஅத் துறைகளிலும் சரிசமமாக அவள் திகழ்வாள். சமூகத்தில் சிக்கல்கள் ஏற்படுகிறபோதுதான், சமூக வாழ்க்கை சீர்குலைக்கப்பட்டு, இடப்ப்லெயர்ச்சி நிகழ்ந்து ஆணின் கை ஓங்குகிறது. அத்தகைய சூழ்நிலகளில் ஒரு பெண் பெரிதும் ஆணையே சார்ந்து வாழ்கிறாள். வாழ்க்கை கடுமையாகும்போது ஆண் ஆளுமை செலுத்துவதும், வாழ்க்கை மிகவும் சூட்டுமநிலையிலேயே இயங்குகிறபோது பெண் ஆளுமை செலுத்துவதும் இயல்பு. அந்த நேரங்களில் ஒரு பெண்ணைச் சார்ந்துதான் ஒரு சமூகம் இருக்கும். ஒருவேளை இதனால்தான் ஆண்கள் சமூகத்தில் எப்போதும் குழப்பங்களை மேலும் மேலும் உருவாக்கிக்கொண்டு அதன்மூலம் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்கிறார்களோ என்னவோ?


      கி.மு.3000-த்திலிருந்தே வரலாறு நமக்குச் சொல்வது என்னவென்றால் ஆணும், பெண்ணும் சரிநிகராஅக இருந்து வந்திருக்கிறார்கள் என்பதுதான். அதற்குப் பிறகு ஆசிய நாடுகளில் பல்வேறு பகுதிகளாஅன மங்கோலியாஅ, மத்திய சீனா, இந்தோசீனா போன்ற இடங்களிலிருந்து காட்டுமிராண்டித்தனமான படையெடுப்புகள் நிகழ்ந்த போதுதான் – கொள்ளையடித்து உண்டு வாழும் ஒரு வாழ்க்கை வந்த போதுதான் – பெண் மெல்ல மெல்ல தன் சுதந்திரத்தை இழக்கலானாள். எது கிடைத்தாலும் அள்ளிக்கொண்டு போகிறவர்கள் வந்தவுடன், ஆண்கள் பாதுகாப்புப் பணிகளில் நாட்டம் செலுத்தத் துவங்கினார்கள். எனவே செயல்முறைகள் ஒருதலைபட்சமாகி சாத்திரங்களும், சூத்திரங்களும் கொண்டுள்ள விதிமுறைகள் மாற்றி ஸ்மிருதிகளாக எழுதப்பட்டன. வேதங்கள்தான் ஸ்மிருதிகள். அவை வாழ்வின் அடிப்படை உண்மைகளைப் பேசுகின்றனவே தவிர, வாழ்க்கை குறித்த எந்த நிர்ணயமும் வகுப்பதில்லை.


      பிறகு ஸ்மிருதிகள் எழுதினார்கள். 50-லிருந்து 60 சதவிகிதம் வரை ஸ்மிருதிகள் ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பதாகவே அமைந்தது. ஒருவேளை அதற்கான கட்டாயம் அப்போது இருந்தது இன்று சொல்லலாம். வெளிச்சூழ்நிலை காரணமாகப் பெண்மீது சில தடைகள் வகுக்கப்படவேண்டியதாக இருந்திருக்கலாம். ஆனால், அவை நிராந்தரமான சட்டங்களாகா மாறியது துரதிர்ஷ்ட்டவசமானது. ஸ்மிருதிகளைப் பொறுத்தவரை பெண்ணுக்கு அதிராகச் செய்த முதல் மாற்றாம் எனபது பெண்கள், ஆண்களைப் போல பூணூல் அணிய முடியாது என்று நிர்ணயித்ததுதான். அது ஒரே நேரத்தில் எழுதப்பட்டிருக்க முடியாது. படிப்படியாகத்தான் நிகழ்ந்திருக்கக்கூடும். மெல்ல அது மேலும் வளர்ந்து, ஒரு பெண் முக்தியடைய ஒரே வழி அல்லது தன்னை உணர்வதற்கான இரே வழி தன் கணவனுக்குப் பணிவிடை செய்வதன் மூலமாகத்தான்; அதைத்தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்தார்கள்.


      வேதகாலங்க்ளில் ஒரு பெண் தன்னுடைய குடும்ப வாழ்வை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம். ஆணுக்கு இருந்த அதே சுதந்திரம் பெண்ணுக்கும் இருந்தது. சமூகத்தில் எந்த ஒரு எதிர்விளைவையும் ஏற்படுத்தாமல், இத்தகைய முடிவுகளைப் பெண்கள் எடுத்ததற்கான பல சான்றுகள் உள்ளன. அது சமூகத்தால் ஏற்கப்பட்டது. ஒரு பெண் தான் விரும்பிய கணவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். அந்த எல்லை தாண்டி அவள் வளர்ந்துவிட்டதாகக் கருதினால், அக்குடும்பம் என்கிற அமைப்பைவிட்டு ஒரு ஆண் வெளிவருவதைப் போலவே பெண்ணும் வெளிவந்து கொண்டிருந்தாள். ஆண் ஒருவனுக்குத் திருமணம் ஆகிறது. பத்து, இருபது ஆண்டுகள் குடும்பம் நடத்துகிறான். பிறகு ஆன்மிக நாட்டம் வருகிறது. குடும்பத்தை துறந்துவிட்டுப் போகிறான். அதே உரிமை ஒரு பெண்ணுக்கும் இருந்தது. ஆன்மிகப் பாதையில் செல்லவேண்டும் என்ற நாட்டம் அவளுக்கு வந்தபோதெல்லாம் குடும்பத்தைத் துறந்துவிட்டு அவள் சென்றிருக்கிறாள். இது வேதகாலத்தில் முழு மனதோடு ஏற்கப்பட்டிருக்கிறது.


      காலப்போக்கில் யாரோ துறவு மேற்கொள்வது ஆணுக்குத்தான் சாத்தியம் என்று வரையறுத்துவிட்டார்கள். இது பற்றி யாருமே கேள்வி எழுப்புவது இல்லை. ஒரு ஆண், ஒரு பெண்ணைத் துறந்துவிட்டு ஆன்மிகப் பாதையில் போகலாம். தன்னிடம் இருப்பது எதையும் துறப்பது எல்லாருக்கும் உள்ள உரிமைதானே. ஒரு ஆண் ஒரு பெண்ணைத் துறந்துவிட்டால் அந்தப் பெண்ணை யார் பார்த்துக்கொள்கிறார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு விடையே இல்லை. இதை அப்படியே விட்டு விட்டார்கள். இருவருக்கும் அதே சுதந்திரம் இருந்தால் அது வேறு. ஒருவருக்கு மட்டும் இந்தச் சுதந்திரம் இருந்து, இன்னொருவருக்கு இல்லாதபோது அது தீமையிழைப்பதாகத்தான் இருக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக அப்படியொரு சட்டம் போடப்பட்ட பிறகுதான் மகிழ்ச்சியாகச் சேர்ந்து வாழ்கிற ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகக் கருதுகிறேன்.


      ஆமாம்! ஏனென்றால், இரண்டு பேர் முழு மகிழ்ச்சியாக- ஆனந்தமாக சேர்ந்து வாழ்வது எப்போது சாத்தியமென்றால், அவர்கள் சுதந்திரமான நிலையில் சந்திக்கிறபோதுதான். ஒரு கட்டுப்பாட்டுடன் சந்திக்க நேருமானால், பிறந்த நாள் முதல் அடிமையாகவே இருந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ய நேர்ந்தால், அந்தப் பெண்ணை உங்களுக்கு அடிமையாக இருக்கத்தான் பழக்கியிருப்பார்களே தவிர, வேறு எதுவும் இல்லை. ஒருவேளை அதிக பட்சம் அந்த வாழ்க்கை அவளுக்கு வசதியாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை ஆனந்தமாக இருக்க முடியாது. அவள் வசதியாக இருப்பாள். உங்கள் தேவைகளைப் பார்த்துக்கொள்வாள்.. அவ்வளவுதான்.


      துரதிர்ஷடவசமாக இன்று கூட இதுதான் தொடர்கிறது. ஒரு உயிர், பெண்ணாகப் பிறந்த உடனேயே, ஒன்று தன் தந்தைக்கு அல்லது கணவனுக்குச் சேவைகள் செய்வதற்குத்தான் அந்த பிறப்பே எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதைத் தாண்டி எதுவுமேயில்லை என்பதுபோல் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் இதைச் சொல்பவர்கள் யாரென்றால் அத்வைதம் பேசுகிறவர்கள் தான் இதைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். “உலகில் எல்லாமே ஒன்றுதான். ஆனால், ஆண்களைவிடக் குறைந்தவள் பெண்.” இது, அவர்களுக்கு எப்படித் தோன்றியது என்று எனக்குப் புரியவில்லை. பிறப்பிற்குக் காரணமான பாலியல் ரீதியான வேற்றுமையைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத யாருமே அத்வைதிகளாக இருக்க முடியாது. ஆணுடைய வாழ்க்கை பெண்ணைச் சார்ந்தே இருக்கிறது. எனவே அவளை ஒப்புக்கொள்ள இயலாவிட்டால், வாழ்க்கையின் அனைத்து இருமைகளையும் ஒன்றாக ஏறுக்கொள்வதென்பது சாத்தியமே இல்லாத ஒன்று. 


      மனித குல வாழ்க்கையிம் ஆதாரங்களில் ஆணைவிட, பெண்ணுக்குத்தான் அதிகப்பங்கு இருக்கிறது. ஆணுக்குப் பங்கு ஒரு அளவு வரைதான். எனவே, பெண்ணை ஏற்றுக்கொள்ளாத போது, ஆண் மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்டிருக்கக் கூடும், அல்லது அறியாமையில் இருக்கக் கூடும். அனால் இவை எல்லாமே சில வசதிகள் கிடைக்கின்றன என்பதனால் இருக்கின்ற குறுகிய மனப்பான்மைகள் தான். என்ன நந்தாலும் வசதியாக இருந்தால் எதற்காக அதை விட்டுக் கொடுப்பது? அது சரியா? தவறா? என்ப்லதெல்லாம் கேள்வியல்ல. அதில் நன்மை கிடைக்கிறது என்றால் ஏன் விடவேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த மனநிலை மாறாவிட்டால் அங்கே ஆன்மிகம் இருக்காது. அங்கே ஆன்மிகம் இருக்க வழியே கிடையாது.


      இன்றுகூட நாம் பார்க்கிறோம், அம்மன் கோவில் முன்னால் போய் விழுந்து கும்பிடுகிற ஒரு ஆண் வீட்டுக்குப் போய் மனைவியை அடிக்கிறான். அவன் அறியாம கொண்டவன் மட்டுமல்ல; நேர்மையில்லாதவன். குறுகிய மனப்பான்மை இல்லாவிட்டால் இப்படியொரு பார்வை வாராது.


      அதேபோல் ஆண் செய்வதை எல்லாம் பெண்ணும் செய்வது என்று வந்தால் அதுவும் சரியாக இருக்காது. அது மிகவும் ஆபாசமாகத்தான் இருக்கும். மேற்கில் இதுதான் நடக்கிறது. இங்கேயும்கூட இது ஒரளவு இருக்கிறது. ஆக பெண்கள், முயற்சி செய்து வருகிறார்காள். அது நிகழ்ந்தால் இரு சாராருக்குமே சேதம்தான் அதிகம். ஒரு பெண், பெண்தன்மையை இழந்தால் அது மிகவும் அசிங்கமாக இருக்கும். ஆண் போல ஆகவேண்டும் என்று பெண் நினைப்பதே தவறு. அவள் ஏன் ஒரு ஆண்போல ஆகவேண்டும்? ஏனென்றால், அவளுக்குள்ளேயே ஏதோ ஓரிடத்தில் தான் தாழ்ந்தவள் என்றும்; ஆண் உயர்ந்தவன் என்றும் ஒரு எண்ணம் இருக்கிறது. எனவே ஆண்போல ஆக அவள் நினைக்கிறாள்.


      அவளது இந்த எண்ணம் மாறினால் மட்டுமே, ஒரு பெண் உன்னதமடைய முடியும். ஆனந்தமடைய முடியும்...... ஆனந்தமாக வாழலாம்.... ஆனந்தமே எல்லாம்..... 

1 comment:

THOPPITHOPPI said...

//ஆண்களைவிடப் பெண்கள் உடல் ரீதியாக பலவீனமானவர்கள் என்கிற ஒரே காரணத்தால்தான் வேறெந்த விதத்திலும் ஆண்கள் பெண்களைவிட மேம்பட்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது//

ஹஹாஹா...........நல்லா காமடி பண்ரிங்க

Post a Comment