Saturday, May 7, 2011

மெளனம் ஆனந்தம்


      மவுலங்கப் பட்டர் என்ற பண்டிதர் புத்தரிடம் சீடராகச் சேர்ந்தார். ""புத்தரே! நீரே எமக்கு ஞானத்தைத் தரவேண்டும்,'' என்று வேண்டிக்கொண்டார்.
      "மவுலங்கா! இங்கே என்னுடன் ஒரு வருஷ காலம் தங்கியிரு. மவுனமாக இருப்பது ஒன்று தான் என்னுடைய போதனை. எந்த சந்தேகத்தைக் கேட்க விரும்பினாலும் ஒரு வருஷத்திற்குப் பிறகு தான் கேட்கவேண்டும்," என்று சொல்லி தன்னருகே இருக்க வைத்தார்.
      புத்தரின் நிபந்தனையைக் கேட்ட பண்டிதரும் அமைதி காத்துவந்தார். ஒரு வருஷம் ஓடிவிட்டது. புத்தரே அவரை அழைத்து, ""நீ விரும்பியதை என்னிடம் கேட்கலாம்'' என்றார்.
      மவுலங்கப் பட்டர் அவரை வணங்கி, ""என் மனதில் ஏற்பட்ட குழப் பத்தை எல்லாம் மவுனமே போக்கிவிட்டது. இப்போது நான் விழிப்புணர்வுடன் தெளிவாக இருக்கிறேன். தங்களிடம் கேட்பதற்கு எதுவுமில்லை,'' என்று கூறினார்.

No comments:

Post a Comment