Showing posts with label நரகம். Show all posts
Showing posts with label நரகம். Show all posts

Tuesday, May 24, 2011

அயோக்யன்-நல்லவன் ஆனந்தம்


      ஒருத்தரை நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்! ஓருவன் மிகவும் போகிரித்தனம் பண்ணிக்கொண்டு இருப்பவன், மகா அயோக்யன், கொலை பாதகங்களுக்கு அஞ்சாதவன் மகளிடம் கேட்டீர்கள் என்றால் என் தந்தை மிகவும் நல்லவர் என்று சொல்லுவாள். அதே போல் மிகவும் நல்லவன் என்று சமுதாயத்தால் தீர்மானிக்கப்படும் ஒருவனிடம் கூட சில கெட்ட குணங்கள் இருக்கலாம்.
      ஆதலால் முழுவதுமாக நல்லவர்களும் கிடையாது, கெட்டவர்களும் கிடையாது. மனிதர்களை அவர்கள் எப்படியோ அப்படியே எற்றுக்கொள்ளப் பழக வேண்டும். அப்போது தான் நாம் என்றும் ஆனந்தமாக வாழ முடியும்.
      ஒரு முறை பிம்பிசாரன் என்ற அரசன், மாஹாவீர் என்ற மகானை சந்திக்க அவனுடைய மந்திரிகள் மற்றும் பரிவாரங்களுடன் வந்தான். அப்போது வழியில் அவனுடைய நண்பன் பிரசன்னகுமார் என்பவரை சந்தித்தான்.
      அவர் அரசனாக இருந்து பின்பு அனைத்தையும் துறந்து யோகியாக, மகாவீருடைய சிஷ்யனாக, ஞானவானாக இருந்தார். அவரை சந்தித்து விட்டு பின்பு மகாவீரிடம் வந்தான்.
      மாகவீரிடம் வந்த பிம்பிசாரன், அவரிடம் சுவாமி, மனிதர்கள் இறந்தபின்பு சொர்கத்துக்கு போவார்களா? நரகத்திற்க்கு போவார்களா? என்பதை எதை வைத்து தீர்மானிப்பது? உதாரணத்திற்க்கு என் நண்பன் பிரசன்னகுமார் அரசனாக இருந்தபோது, அனைத்து பாவகாரியங்களையும் கூசாமல் செய்தவன், ஆனால் இப்பொதோ அனைத்தையும் துறந்து ஞானவானாக இருக்கிறார். அவர் இறந்தால் சொர்கத்துக்கு போவாரா? அல்லது நரகத்திற்க்கு போவாரா?
      மகாவீர் அவரிடம், நீ பிரசன்னகுமாரைப் பார்த்தாயே அப்போது இறந்திருந்தால் அவர் நரகத்திற்க்கு போயிருப்பார்! ஆனால் இப்போது இந்த கணம் இறந்தால் சொர்கத்திற்க்கு போவார்! என்றார் மகாவீர்.
      பிம்பிசாரன் ஒருகணம் மிகவும் குழம்பிப்போனான். நாம் கேட்ட கேள்வி என்ன? இவர் சொல்லும் பதில் என்ன? உடனே அதை புரிந்துகொண்ட மகாவீர், பிம்பிசாரா, நீ சந்திக்கப் போனபோது உன்னுடைய பரிவரங்களுடன் போனாய், அதைப்பார்த்த அவருடைய மனதில் இதையெல்லாம் (அரசவாழ்வை)விட்டுவிட்டோமே என்ற எண்ணம் தோன்றி அவரை துன்புருத்தியது, அதை நினைத்து மிகவும் வேதனைப் பட்டார். அப்போது அவர் இறந்திருந்தால் நரகத்திற்க்கு போயிருப்பார், ஆனால் இவ்வாறு ஞான வாழ்விற்க்கு வந்தபிறகு சிந்தித்து விட்டோமே என்று வருந்தி மனதாற என்னிடம் மனதாலேயே மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கின்றார். அதனால் அவர் இப்போது இறந்தால் சொர்கத்திற்க்கு போவார் என்று கூறினேன், என்றார் மகாவீர்.
      ஒரு மனிதன் சொர்கத்துக்கு போவானா? அல்லது நரகத்திற்க்கு போவானா? என்று நான் கூறவரவில்லை. மாறாக வாழும்போதே சொர்கம் நரகம் என்பதை நம் எண்ணங்கள் தான் தீர்மானிக்கின்றன. நல்ல எண்ணங்கள் நம்மை ஆனந்தமாகவும், கெட்ட எண்ணங்கள் துன்பத்துடனும் வாழவைத்துவிடுகின்றன. நாம் வாழும் போதே நல்ல எண்ணங்களால் ஆனந்தமாக‌ வாழவேண்டும்..........................
     

Saturday, February 12, 2011

சொர்கம்‍‍ - நரகம் ஆனந்தம்


       இந்த கதை அழகானது. ஜென் குரு ஹேக்குன் அபூர்வ மலர்களில் ஒருவர். ஒரு போர்வீரன் அவரிடம் வந்தான். ஒரு சமுராய், ஒரு சிறந்த வீரன் வந்து ஹேக்குனிடம் நரகம் என்று ஏதாவது உள்ளதா ? சொர்க்கம் என்று ஏதாவது உள்ளதா ? நரகம் மற்றும் சொர்க்கம் என்று ஒன்று இருக்குமானால் அவைகளின் கதவுகள் எங்கே உள்ளன ? நான் எங்கேயிருந்து உள்ளே செல்வது ? நான் எவ்வாறு நரகத்தை தவிர்த்துவிட்டு சொர்க்கத்தை தேர்ந்தெடுப்பது ?என கேட்டான், அவன் ஒரு எளிய வீரன். வீரர்கள் எப்போதும் எளிமையானவர்கள்.
       எளிமையாக இருக்கும் ஒரு வியாபாரியை கண்டுபிடிப்பது கடினம். ஒரு வியாபாரி எப்போதும் தந்திரமான புத்தியை உடையவன். இல்லாவிடில் அவன் ஒரு வியாபாரியாக இருக்கமுடியாது. ஒரு வீரன் எப்போதும் எளிமையானவன், இல்லாவிடில் அவன் ஒரு வீரனாக இருக்கமுடியாது. ஒரு வீரன் இரண்டு விஷயங்களை மட்டுமே அறிவான், வாழ்க்கை மற்றும் இறப்பு – அதிகமல்ல.
அவனுடைய வாழ்க்கை எப்போதும் பணயத்திலேயே உள்ளது, அவன் எப்போதும் சூதாடிக்கொண்டிருக்கிறான், அவன் ஒரு எளிமையான மனிதன். அதனால்தான் வியாபாரிகள் ஒரே ஒரு மகாவீரரையோ, ஒரே ஒரு புத்தரையோ கூட உருவாக்கமுடியவில்லை.  இது அதிசயமாய் உள்ளது. 24 தீர்த்தங்கரர்கள் அனைவரும் சத்திரியர்கள், வீரர்கள். புத்தர் ஒரு சத்திரியர், இராமன் மற்றும் கிருஷ்ணர் இருவரும் சத்திரியர்கள். அவர்கள் எளிமையான மக்கள், அவர்களுடைய மனதில் எந்த தந்திரமும், எந்த கணக்கீடும் இல்லை. அவர்களுக்கு இரண்டு விஷயங்கள் மட்டுமே தெரியும் – வாழ்க்கை மற்றும் இறப்பு.
       இந்த எளிமையான வீரன் ஹேக்குனிடம் சொர்க்கம் எங்கே இருக்கிறது மற்றும் நரகம் எங்கே இருக்கிறது என்று கேட்பதற்காக வந்துள்ளான், அவன் எந்த கோட்பாடுகளையும் தெரிந்துகொள்வதற்காக வரவில்லை. அவன் கதவுகளை தெரிந்துகொள்ள விரும்பினான். அதனால் அவன் நரகத்தை தவிர்த்துவிட்டு சொர்க்கத்தில் நுழையலாம் ஹேக்குன் ஒரு வீரன் மட்டுமே புரிந்துகொள்ளகூடிய வகையில் பதிலளித்தார்.  
       ஆனால் இந்த சமுராய் ஒரு வியாபாரியல்ல, அவன் ஒரு போர்வீரன். அவன் ஒரு எளிமையான கேள்வியோடு வந்துள்ளான். அவனுக்கு வேதங்களிலோ, விலையிலோ, சொல்லும் பதிலிலோ, ஆர்வமில்லை. அவன் உண்மையின் மீது ஆர்வம் கொண்டிருந்தான். மற்றும் ஹேக்குன் என்ன செய்தார் ? அவர் நீ யார் ? என கேட்டார் போர்வீரன் நான் ஒரு சமுராய் என பதிலளித்தான். ஒரு சமுராயாக இருப்பது ஜப்பானில் மிகவும் பெருமை வாய்ந்த ஒரு விஷயம். அதன் பொருள் ஒரு சிறந்த போர்வீரன், அவனுடைய வாழ்க்கையை இழப்பதற்கு ஒரு நொடிகூட தயங்கமாட்டான். அவனைப்பொறுத்தவரை, வாழ்வும் இறப்பும் வெறும் ஒரு விளையாட்டு.
       அவன் நான் ஒரு சமுராய், சமுராய்களின் தலைவன். அரசரும்கூட எனக்கு மரியாதை அளிக்கிறார், என கூறினான். ஹேக்குன் சிரித்துவிட்டு, நீ ஒரு சமுராய் ? நீ ஒரு பிச்சைக்காரனைப்போல இருக்கிறாய் என கூறினார்.
       உடனே சமுராயின் பெருமை காயப்பட்டுவிட்டது, அவனுடைய ஆணவம் அடி வாங்கிவிட்டது. அவன் எதற்காக வந்தான் என்பதை அவன் மறந்துவிட்டான். அவன் அவனுடைய வாளை எடுத்து ஹேக்குனை கொல்லப்போனான். சொர்க்கத்தின் கதவைப்பற்றியும் நரகத்தின் கதவைப்பற்றியும் கேட்க இந்த குருவிடம் அவன் வந்துள்ளான் என்பதையே அவன் மறந்துவிட்டான்.
       அப்போது ஹேக்குன் சிரித்துவிட்டு இதுதான் நரகத்தின் கதவு. இந்த வாளோடு, இந்த கோபம், இந்த ஆணவம், கதவு இங்குதான் திறக்கிறது என கூறினார்.
       இதைத்தான் ஒரு போர்வீரன் புரிந்துகொள்ளமுடியும். உடனடியாக அவன் புரிந்துகொண்டான், இதுதான் கதவு. அவன் அவனுடைய வாளை அதன் உறைக்குள் போட்டான்.
       அப்போது ஹேக்குன் இங்கு சொர்க்கத்தின் கதவு திறக்கிறது என கூறினார்.
       நரகமும் சொர்க்கமும் உனக்குள் உள்ளன. இரண்டு கதவுகளும் உனக்குள் உள்ளன. நீ உணர்வற்று செயல்படும்போது அங்கு நரகத்தின் கதவு உள்ளது, நீ கவனமாகவும், உணர்வுடனும் இருக்கும்பொழுது, அங்கு சொர்க்கத்தின் கதவு உள்ளது.
       இந்த சமுராய்க்கு என்ன நடந்தது? ஹேக்குனை கொல்லப்போகும் அந்த சமயத்தில் அவன் உணர்வோடு இருந்தானா ? அவன் என்ன செய்யப்போகிறான் என்பதுபற்றி அவன் உணர்வோடு இருந்தானா ? அவன் எதற்காக இங்கு வந்துள்ளான் என்பதுபற்றி உணர்வோடு இருந்தானா ? எல்லா உணர்வும் மறைந்துவிட்டது.
       ஆணவம் ஆட்கொள்ளும்போது, நீ கவனமாக இருக்கமுடியாது. ஆணவம் ஒரு போதை, அந்த போதை உன்னை முழுமையாக உணர்வற்றவனாக்கிவிடும். நீ செயல்படுவாய் ஆனால் அந்த செயல் உனது உணர்வற்ற நிலையிலிருந்து வெளிப்படும் உன்னுடைய உணர்வு நிலையிலிருந்து வெளிப்படாது. மற்றும் உணர்வற்ற நிலையிலிருந்து எந்த செயல் வந்தாலும் அப்போதெல்லாம், நரகத்தின் கதவு திறந்துள்ளது. நீ என்ன செய்தாலும், நீ என்ன செய்கிறாய் என்ற உணர்வு உனக்கு இல்லாவிட்டால் நரகத்தின் கதவு திறந்துவிடுகிறது.
       திடீரென, ஹேக்குன் இதுதான் கதவு அதை நீ ஏற்கனவே திறந்துவிட்டாய் என சொன்னவுடன் உடனடியாக சமுராய் கவனமடைந்தான் – சூழ்நிலையே கண்டிப்பாக கவனத்தை உண்டாக்கியிருக்கவேண்டும்.
       வெறுமனே கற்பனை செய்து பார். நீ போர்வீரனாக இருந்திருந்தால், சமுராயாக இருந்திருந்தால், வாளை கையில் ஏந்திகொண்டு, கொல்லப்போகிறாய். என்ன நடந்திருக்கும். ஒரு நொடி அதிகமாகியிருந்தால் ஹேக்குனின் தலை வெட்டப்பட்டிருக்கும், ஒரு நொடி அதிகமாகியிருந்தால் அது உடலிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கும். அப்போது ஹேக்குன் இதுதான் நரகத்தின் கதவு என கூறினார்.
       இது ஒரு தத்துவார்த்தமான பதில் அல்ல. எந்த ஞானியும் தத்துவார்த்தமான முறையில் பதில் அளிப்பதில்லை, சாதாரண ஞானமடையாத மனங்களுக்கு மட்டுமே தத்துவம் இருக்கிறது. ஞானி பதிலளிக்கிறார். அப்போது அந்த பதில் வார்த்தைகளால் ஆனதல்ல. அது முழுமையானது. இந்த மனிதன் அவரை கொன்றிருக்கலாம் என்பது பொருட்டல்ல. நீ என்னை கொன்றால் நீ கவனம் பெறுவாய் என்றால், அது தகுதிவாய்ந்ததே – ஹேக்குன் விளையாட்டை விளையாடினார். ஒரு வினாடி தப்பியிருந்தாலும் அந்த மனிதன் அவரை கொன்றிருக்கலாம். ஆனால் சரியான நொடியில் ஹேக்குன் இதுதான் கதவு என கூறினார்.
              ஹேக்குன் இதுதான் கதவு என கூறியபோது சமுராய் சிலைபோல நின்றிருக்கவேண்டும். அந்த சிலைபோன்ற நிலையில், எல்லா செயல்களும் உறையும்போது, நீ கவனமடைகிறாய். ஏதாவது செயல் தேவை . . . இல்லாவிடில் உனது உணர்வற்ற தன்மை உடைந்து நீ உணர்வு பெறுவாய். ஒரு மனிதன் ஆறு மணிநேரம் எதுவும் செய்யாமல் அமர்ந்திருந்தால் அவன் ஞானடைந்துவிடுவான் என ஜென் கூறுகிறது. வெறும் ஆறு மணிநேரம் . . .ஆனால் ஆறுமணிநேரம் உண்மையிலேயே மிக அதிகம். நான் ஆறு நிமிடங்கள் போதும் என கூறுகிறேன். நீ முற்றிலுமாக எந்த செயல்பாடும் இன்றி இருக்கமுடியுமானால் ஆறு நொடிகள் கூட போதும். நீ ஏதும் செய்யாமல் இருக்கும்போது, நீ உணர்வற்று இருக்கமுடியாது, நீ ஏதும்செய்யாமல் இருக்கும்போது உன்னுடைய முழு சக்தியும் உணர்வுதன்மை அடைகிறது. ஒரு பிரம்மாண்ட வெடித்தல் நிகழ்கிறது.
  ...............................................................................ஓஷோ..............................................................................................................