Wednesday, June 13, 2012

மறு பிறவி உண்டா? ஆனந்தம்


      மறு பிறவி உண்டா? என்ற கேள்வி உங்களுக்கு வருவது என்பது.....
      நான் என்பது இந்த உடலா? உயிரா? அல்லது இந்த இரண்டும் சேர்ந்த ஒன்றா? அல்லது அதையும் தாண்டிய ஏதாவது ஒன்றா? அந்த நான் என்பது யார்? அல்லது உயிர் இந்த உடம்பில் எங்கே இருக்கிறது? எப்படி இயங்குகிறது? என்கிற மிகப்பெரிய கேள்விகளை தான் அப்படி கேட்கிறீர்கள்....
      உண்மையாக இந்தக் கேள்வி உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து உண்மையில் விடைகாண முற்பட்டால், விடை கிடைக்கும். ஆனால் வேகு சாதரணமாக இந்தக் கேள்வி மறு பிறவி உண்டா? என்றால் பதில் கிடையாது, பதில் கொடுத்தாலும் சிலர் நம்பலாம். சிலர் நம்பாமல் போகலாம். மறு பிறவி உண்டு என்றாலும் அல்லது இல்லை என்றாலும் அது உங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
      இந்தக் கணத்தில் உங்களுக்கு "வாழ்க்கை" என்றால் உங்கள் உடல் மனதைத் தாண்டி எதுவும் தெரியாது, ஆகையால் எதையும் நீங்களாக கற்பணை செய்து கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்க்கையை உடல் மற்ரும் மனதிற்க்கு உட்பட்டு, எத்தனை உயர்ந்த வழியில் வாழ முடியுமோ அந்த வழியில் ந‌டத்துங்கள்.
      உள்ள இந்த வாழ்கையையே நீங்கள் பல அழகான வழிகளில் வாழ அனுமதிப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில் உடலைக் கடந்து இருப்பவற்றையும், மரணத்திற்க்கு பிறகு நிகழவிருப்பதையும் எப்படி நீங்கள் சரியாக புரிந்து கொள்வீர்கள்? மறுபிறவியை அறிந்து கொள்ள தீவிர ஈடுபாடு வந்துவிட்டால் தற்போது வாழும் வாழ்க்கையை மறந்து விடுவீர்கள்.
      இங்கில்லாத ஒன்றைப் பற்றித் தேடுவதைத்தான் மனம் எப்போதும் விரும்பும். இங்கே வாழவேண்டிய வாழ்க்கையே நிறைய மிச்சமிருக்கிறது. ஆனால் அதன் மேல் உங்கள் ஈடுபாடு எபோதும் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. உங்கள் இப்பொது வாழுகிற வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்கிற எண்ணமே உங்களுக்கு இல்லை. ஆனால் நாளைக்கு என்ன நடக்கும்? 10 வருடங்களுக்கு பிறகு என்ன நடக்கும்? என்ன கல்யாணமே இன்னும் ஆகவில்லையென்றால் கூட என் குழந்தை எப்படியிருக்கும்? என் பேரக்குழந்தைகள் எப்படியிருக்கும்? என்ற பல்வேறு கற்பனைக் கணக்குகளைத் தான் போட்டுக்கொண்டிருப்பீர்கள். மனம் எப்போது நிஜத்தில் இருந்து தப்பித்து, கற்ப்பனைக்குத் தான் உங்களை இழுத்துச் செல்லும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
      உங்களால் அதிகம் சிந்திகாமல் வெறுமனே இருக்க முடிந்தால் ஒன்று ஞானி ஆகிவிடுவீர்கள் அல்லது 'நான் ஒரு முட்டாள்' என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இதைத் தவிர வேறு வாய்புகளே கிடையாது. அதனால் தான் உங்கள் மனம் ஏதவது ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. அது அமைதியாக இருக்கும் போதே, தான் ஒரு முட்டாள் என்பதைப் புரிந்து கொள்ளும். அப்படி புரிந்து கொண்டால் நீங்கள் யோகாவில் மிகப்பெரிய அடி எடுத்து வைக்கிறீர்கள் என்று அர்த்தம்? ஆன்மீகப் பயணம் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்? ஒரு மனிதன் தான் ஒரு முட்டாள் என்று புரிந்து கொள்ளும் அந்த கணத்தில் அவனுடைய அறிவுணர்ச்சி மலர்கிறது.
      இந்த நொடியில் உங்கள் மனதில் நடப்பவை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையென்றால், வாழ்க்கையை கடந்து சிந்திப்பதோ, மரணத்தைக் கடந்து ஆரய்வதோ, உங்களது நேரத்தையும், வாழ்க்கையையும், சக்தியையும் வீணடிக்கும் வேலை தான். ஏனென்றால் இப்போது உங்கள் அனுபவநிலையைத் தாண்டி இருக்கும் ப‌ரிணமங்களை துளைத்துச் செல்வதற்கான தீவிரத்தன்மை உங்களிடம் இருக்காது.
      இதுவரை உங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் அனைத்தும் உங்கள் ஐம்புலன்களுக்கு உட்பட்டவை. இந்த நிலையில் உடல் தன்மையைத் தாண்டி உள்ளவற்றை உங்களால் உணர முடியாது. எனவே 'மரணத்திற்க்கு பிறகு வாழ்க்கையிருக்கிறதா?' என்று நீங்கள் அறிய விரும்பினால், அதாவது 'இந்த உடல் தன்மையைத் தாண்டி ஏதாவது இருக்கிறதா?' என்று உண்மையிலேயே நீங்கள் அறிய விரும்பினால், இந்த ஐந்து புலன்களைக் கடந்து எப்படிச் செல்வது என்று பாருங்கள். உங்களுக்கான விடை அங்கு தான் ஆரம்பிக்கிறது? .........................................வாழ்க வளமுடன்!..................................................

Sunday, June 10, 2012

இன்றைய இளைஞர்கள்? ஆனந்தம் குட்டிக் கதை!


      ஒரு சாலையில் இரு துறவிகள் ஒரு அட்டையை பிடித்துக்க்கொண்டு நின்று கொண்டிருந்தனர். அந்த அட்டையில், "கவனம், முடிவு வந்துவிட்டது, திரும்பிச் செல்லவும்" என்று எழுதியிருந்தது.
      அப்போது வேகமாக ஒரு கார் வந்து இவர்கள் அருகில், கிறீச்சிட்டு நின்றது. வண்டி முழுவதும் இளைஞர்கள். வண்டி ஓட்டி வந்த இளைஞன் வெளியே எட்டிப் பார்த்து. உங்களை மாதிரி சாமியார்களுக்கு நல்ல வார்த்தையே சொல்லத் தெரியாதே! எப்பப் பார்த்தாலும் கவனமாக இரு, அப்படிச்செய், இப்படிச்செய், நிதானமாக நட என ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பீங்களே, உங்களோட ஒரே தலைவலி! என்று சொல்லிக்கொண்டே வேகமாக வண்டியை ஸ்டார்ட் செய்து மேலே சென்றான். சில நிமிடங்களில் அந்த வண்டி எதிலோ மோதி எங்கோ விழுந்த சப்தம் கேட்டது.
      அப்போது முதல் துறவி மற்ற துறவியிடம் மெதுவாகச் சொன்னார், "ம், பாலம் பழுதடைந்து விட்டது என்று மட்டும் நாம் சொல்லியிருக்கலாம்".

Saturday, June 9, 2012

மாற்றங்கள் மாறும்! ஆனந்தம்

      வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் மக்களை எப்போதும் தடுமாற வைக்கின்றன. நவீனவாழ்க்கை எனச் சொல்லப்படும் தற்ப்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மக்கள் துன்பப்படுகின்றனர். பள்ளிப் பருவம் ஒரே பதற்றம், விடலைப்பருவமோ பெரும் பாதிப்பு, நடு வயதோ தாங்கமுடியவில்லை, முதுமைப் பருவம் ஒரே வெறுப்பு, இறப்போ கடும் பயம். வாழ்க்கையின் ஒவ்வொறு கட்டமுமே மக்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. ஏனெனில் வாழ்க்கையின் மாற்றத்திற்க்கேற்ப்ப தங்களை மாற்றிக் கொள்ள கஷ்டப்படுகின்றனர். வாழ்க்கையின் இயைபே மாற்றம் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
      அசைவின்மையை(stillness) நீங்கள் அனுபவித்திருந்தால், பின்  மாற்றம்  என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். அந்த அசைவின்மையோடு உங்களுக்கு தொடர்பே இல்லாமல் இருப்பதால் தான், ஒவ்வொரு மாற்றமும் உங்களுக்கு துன்பத்தை தருவதாக இருக்கிறது.
      வாழ்க்கையின்  மாற்றங்களை கண்டு பயப்படுவதால் தான், அதை முன்னதாகவே கண்டு கொள்ள மக்கள் தற்ப்போது வானத்து நட்சத்திரங்களை பார்க்கின்றனர், குனிந்து கைரேகைகளை பார்கின்றனர். உங்களிலேயே உள்ள அசைவின்மையை ஒருமுறை நீங்கள் சுவைத்து விட்டால், பிறகு மாற்றங்கள் உங்களைத் துன்புறுத்தாது. மாற்றம் என்பது மாறும் தன்மை கொண்டது. அசைவின்மை என்பது நிலைத்த தன்மை கொண்டது, விழிப்புணர்வைச் சார்ந்தது.
      எனவே அந்த அசைவின்மையை, விழிப்புணர்வை நீங்கள் சுவைக்க முடிந்தால் பிறகு மாற்றம் நிகழும் போதும் அதை உங்களால் கொண்டாட முடியும். எனவே அந்த விழிபுணர்வை சுவைக்க இன்றே இப்பொழுதே நீங்கள் தயராகுங்கள். ஆனந்தமான வாழ்வுக்காக!
...........................................................வாழ்க வளமுடன்!...................................................................

Friday, June 1, 2012

ஒரு குட்டிக்கதை! நீங்கள் சிங்கமா? நரியா? ஆனந்தம்


ஒருமுறை ஒரு சன்னியாசி ஒருவர் காட்டுக்குள் சென்றார். அங்கு ஒரு வேடனின் பொறியில் ஏற்க்கனவே சிக்கி , தன் முன்னங்கால்கள் இரண்டையும் இழந்திருந்த ஒரு நரியைப் பார்த்தார். நடக்கவே முடியாத அந்த நரி எப்போதும் ஒரு மரத்தின் அடியிலேயே படுத்திருந்தாலும், ஓரளவு கொழுத்திருந்தது. இதை அந்த ச‌ன்னியாசி பார்த்தபோது அவரால் இதை நம்ப முடியவில்லை. அதே நேரத்திலேயே ஒரு சிங்கம் தான் வேட்டையாடிய மிருகத்தின்  மாமிசத்தை அந்த நரியின் முன்னால் கொண்டுவந்து போட அதை அந்த நரியும் சாப்பிட்டது.
சன்னியாசியால் தன் கண்களை நம்ப முடியவில்லை. உடனே அந்த ச‌ன்னியாசி 'ஓ, இது கடவுள் எனக்கு அனுப்பியிருக்கும் சேதி, ஊனமுற்று, முடங்கிப் போன நரிக்கு அது உட்கார்ந்து இருக்கும் இடத்திற்க்கும் இடத்திற்கே உணவு தேடி வ‌ருகிறதென்றால், தெய்வீகத்தின் பாதையில் நடக்கும் சன்னியாசியான எனக்கு, உணவு ஏன் தானாக கிடைக்காது? இனி நானும் ஒரே இடத்தில் உட்கார்ந்து தியானம் செய்யப் போகிறேன்' என நினைத்து ஒரே இடத்தில் உட்கார்ந்து விட்டார்.
மூன்று நாட்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. நான்காவது நாளில் இருந்து பசியின் மிகுதியால், தியானம் செய்ய முடியாமல், வயிற்றைப் பிடித்துக்கொண்டே காதிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு யோகியிடம், அந்த சன்னியாசி நடந்ததைக்கூறி இது தெய்வீகத்தின் செய்தி தானே? எனக்கு மட்டும் ஏன் உணவு தானாக வரவில்லை?' என்று கேட்டார். அதற்க்கு அந்த யோகி,'இது நீச்சயம் தெய்வீகத்தின் செய்தி தான். ஆனால் நீங்கள் ஏன் ஊணமுற்ற அந்த நரியைப் போல் நடந்து கொண்டீர்கள்? தாராள மனப்பாண்மை கொண்ட அந்த சிங்கத்தைப் போல் நடந்து கொள்ளலாமே? என்று கேட்டார்.
பல நேரங்களில் தொடர்ந்து நாம் எதிர்மறையான விசங்களில் மட்டுமே நாம் கவனம் செலுத்துகிறோம். அல்லது நமக்கு சாதகமாக எது விளங்கும் என்று மட்டுமே யோசிக்கிறோம், இது மனித இனத்திற்கே நாம் இழைக்கும் மிகப் பெரிய அநீதி.
...............................................................வாழ்க வளமுடன்!...............................................................

Wednesday, May 30, 2012

ஒழுக்கம் என்றால் என்ன? ஆனந்தம்


      ஒழுக்கத்தை உருவாக்கவேண்டும் என்கிற தவிப்பு தலைமை நிலையில் இருக்கும் பலருக்குஏற்படுகிறது. ஒழுக்கம் என்றால் என்ன என்கிற புரிதலை முதலில் ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.
      வேலை பார்க்கும் சூழ்நிலையில் ஒரு ஒழுங்குநிலையைக் கொண்டுவருவது தான் ஒழுக்கம் என்று பலரும் கருதுகிறார்கள்.
      இதற்க்கு பெரிதாக முயற்ச்சிகள் எதுவும் தேவையில்லை. ஒழுக்கம் குறித்து ஒன்றும் பேசாமல் உரிய சூழ்நிலையை உருவாக்கினாலே நிலமை கட்டுக்குள் இருக்கும்.
      இதில் சிலருக்கு வழிகாட்டுதல்கள் தேவைப்படக்கூடும். ஆனாலும் கூட ஒரு நிறுவணத்திலோ பணியிடத்திலோ இந்த்ச் சூழலை உருவக்குவது எளிதான விஷயம் தான்.
      ஆனால் துரதிருஷ்ட வசமாக என்ன நடக்கிறது தெரியுமா? நீங்கள் விரும்பும் ஒன்றை யாரையாவது செய்ய வைப்பதற்க்காக நிர்பந்திப்பது என்று தான் பலரும் கருதிக்கொண்டிருக்கிறார்கள்.
எனவே ஒழுக்கம் என்றாலே யாரையாவது கட்டுப்படுத்துவது, கண்டிப்பது, தண்டிப்பது, தட்டிவைப்பது, என்றெல்லாம் தவறான புரிதல்கள் உலவுகின்றன. இதுவல்ல ஒழுக்கம்.
      ஒருவர் புதியதாக ஒன்றை கற்றுக் கொள்வதற்காக திறந்த மனதுடன் இருப்பாரேயானால் அதன் பெயர் தான் ஒழுக்கம். கற்றுக் கொள்வதன் அம்சமே ஒழுக்கம் என்பது. எவெரெவர் எந்த நிலையில் இருந்தாலும் தொடர்ந்து கற்றுக் கொள்ளும் இயல்பு எப்போதும் அவசியம். இதற்க்கு என்ன தேவை என்றால் செய்கின்ற வேலைகளில் முழு ஈடுபாடும் அர்ப்பணிப்பும் தான்.
      ஈடுபாடு இல்லாமலேயே வேலை செய்தால் செய்வதையே திரும்பத்திரும்ப செய்து கொண்டு இருப்பார்களே தவிர புதிதாக எதையும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.
      புதிய சிந்தனைகள் யோசனைகள் எல்லாம் உருவாவது கற்றுக்கொள்வதற்கான திறந்த மனம் இருக்கின்ற போதுதான்.
      ஒரே வேலையை ஒரே மாதிரி பலர் செய்து கொண்டிருப்பார்கள். அதில் ஏதாவது எளிய‌ ஒரு யோசனையை யாரவது சொன்னால் "அடேடே இத்தனை நாட்கள் இதை கவணிக்காமல் விட்டு விட்டோமே" என்று தோன்றும்.
      உதாரணமாக தரையை தூய்மை செய்கிர வேலையை ஆண்டாண்டு காலமாய் செய்து வருகிறோம். அதி சின்னதாய் ஒரு புதுமையை ஒருவர் புகுத்திய பிறகு அதன் அடிப்படையே மாறிவிட்டது.
      அதே நேரம் கற்றுக்கொள்ளும் மனநிலையை உடையவர்களிடம் தான் புதிதாக ஏதவாது யோசனைகள் தோன்றும். அந்த மாதிரியானவர்களை தொடர்ந்து நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
      அதே நேரம் பலரையும் நீங்கள் அந்த மாதிரி ஊக்குவிக்கும் போது பலவிதமான யோசனைகள் வரும். அது நூறு எண்ணிக்கை கூட வரலாம். அதில் உருப்படியான இர‌ண்டு அற்புதமான பலன் தருவதைக் காணலாம்.
      உங்கள் நிறுவணத்தில் இத்தகைய கற்றுக்கொள்ளல் நிகழ்கிறதா என்பதை கண்காணிக்க வேடியது அவசியம். அப்படி செய்யும் போது அது வளர்ச்சிக்குத் தானே என்றும் சந்தேகப்பட்டு அல்ல என்பதை நீங்கள் தெளிவு படுத்த வேண்டியது அவசியம்.
      இத்தகைய திறந்த நிலை ஏற்பட்டால், ஒழுக்கம் என்பது எல்லோரும் விரும்பிக்கொண்டு வரும் விசயமாகும்.
      மாறாக ஒருவர் மற்றவர் மீது ஒழுக்கத்தை திணிக்க முற்ப்பட்டால். அது சர்வாதிகாரத்தில் போய் முடியும்.
      எனவே ஒரு குழுவிலோ ஒரு நிறுவணத்திலோ ஒழுக்கத்தை கொண்டு வர ஒரே வழி ஈடுபட்டைக் கொண்டு வரவேண்டியதுதான். ஈடுபாடு இல்லாத இடத்தில் ஒழுக்கத்தை கொண்டு வர முயற்ச்சித்தால் அதை உடைப்பதற்க்கு ஆயிரமாயிரம் வழிகளைக் க‌ண்டறிவார்கள். பணிச்சூழலில் ஈடுபாட்டைக் கொண்டு வாருங்கள், நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா ஒழுக்கங்களும் தாமாக வரும்.
...........................................................வாழ்க வளமுடன்...........................................................

Tuesday, May 29, 2012

பரிட்சையில் தோல்வியா? ஆனந்தம்!


      பரிட்சையில் தோல்வியா? அதனால் விரக்தியா? விரக்தி என்பது மிகவும் மோசமான ஆரம்பம். முதலில் விரக்தி வரும், அப்புறம் மனச்சோர்வு வரும், அப்புறம் மனத்தளர்வு வரும்.
      உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். ஒருமுறை சாத்தான், தன் வியாபாரத்தை நிறுத்திவிட நினைத்தார். எனவே தான் இதுவரை உபயோகித்து வந்த அத்தனை கருவிகளையும் விற்று விட விற்பனைக்கு வைத்தார். கோபம், காமம், பேராசை, பொறாமை, அகங்காரம் ஆகிய அனைத்தையும் அவர் விற்பனைக்கு வைத்தார்.  மக்கள் அவை அனைத்தையும் வாங்கிவிட்டனர். அப்படியும், அவருடைய பையில் ஏதோ கொஞ்சம் மிச்சமிருப்பதை ஒருவர் பார்த்துவிட்டார். எனவே பையில் இன்னும் என்ன இருக்கிறது என்று கேட்டனர்?' அதற்க்கு சாத்தான் 'இவையெல்லாம் மிகத்திறமையான கருவிகள். ஒருவேளை நான் மீண்டும் வியாபாரத்தில் இறங்கினால், இவை எனக்குத் தேவைப்படும். எனவே இவற்றை விற்ப்பனைக்கு வைக்கப் போவதில்லை. அனைத்திற்க்கும் மேலே இவை மிகவும் விலை உயர்ந்தவை.  ஏனென்றால் இவை உயிரை அழிப்பதற்க்கான மிகச்சிறந்த கருவிகள் என்றார்.' அவை என்ன என்று கேட்டனர் மக்கள். அதற்க்கு சாத்தான் அவைகள் " மனத்தளர்வு மற்றும் மன அழுத்தம்" என்றார்.
      உங்களுக்குள் உற்ச்சாகம் இல்லாமல் போனால், மன அழுத்தம் வந்து விட்டால், நீங்கள் உயிரோட்டத்தையே இழந்து விடுவீர்கள். விரக்தி தான் மனாழுத்ததிற்க்கும், மனச்சோர்வுக்கும் முதல் படி.
      சரி எப்படி விரக்தியை எப்படி விரட்டி அடிப்பது? அதை நீங்கள் விலைக்கு வாங்காமல் இருந்தாலே போதும்! விரக்தி தானக உங்களுக்குள் வராது. ஏனென்றால் உயிர் என்பதும் உற்ச்சாகம் என்பதும் வேறு வேறு அல்ல. ஒரு எறும்பு எப்படி செயல் படுகிறது என்று பாருங்கள்! அதை நீங்கள் நிறுத்த முயற்ச்சி செய்தால் அது எப்பொதாவது விரக்தி அடைகிறதா? அல்லது நம்பிக்கை இழக்கிறதா? அது சாகும் வரை தன்னுடைய முயற்ச்சியை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
      ஒரு கூரையில் வளரும் சிறு செடியை பாருங்கள்! கூரையில் கொஞ்ம் மண் மட்டும் கிடைத்தால் போது சில சமயம் 25அடி வரை கூட தன்ன்னுடைய கிளையை நீட்டிக்கிறது. அந்தச் செடி எபோதாவது விரக்தி அடைகிறதா? ஏனெனில் விரக்தி என்பது உயிருக்கு கிடையாது. மனதிற்க்கு மட்டும் தான்.
      வரயரைகளுக்கு உட்பட்ட மனம் எப்பொழுதும் பொய்யான எதிர்பார்ப்புகளுடன் வேலை செய்கிறது. உங்கள் எதிர்பார்ப்புகள் வாழ்க்கை நிஜங்களுடன் ஒத்துப்போகாதபோது, உங்கள் எதிர்பார்ப்புகள் வெறும் ஆடம்பர ரீதியாக அமையும் போது, பின்னர் அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும் போது, உலகத்தின் முடிவுக்கே வந்து விட்டதை போன்று உங்கள் மனம் உணர்கிறது.
      மாணவர்கள் பலர் தேர்வுகளில் தோல்வி அடையும் போது தற்கொலை செய்து கொள்கிறார்கள் இல்லையா? ஏனென்றால் தன் வாழ்க்கையே அந்த தேர்வுகளில் தான் அடங்கியிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள், நீங்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்க்காக வழிபடும் ராமர், கிருஷ்ணர், புத்தர், ஏசு ஆகியோர் எந்தத் தேர்விலும் வெற்றி பெறவில்லை. தெரியுமா உங்களுக்கு? ஒரு பரிட்சையில் தேர்வு பெறக்கூட அவர்கள் ஆர்வம் காட்டியதில்லை தெரியுமா?
      ஆகவே பரிட்சையில் தேர்வு என்பது ஒரு பெரிய விசயமே இல்லை இல்லையா? சமூக சூழ்னிலைகளுக்காக ஒரு தேர்வில் தேர்வு பெற விரும்புகிறீர்கள் என்பது சரிதான். ஆனால் அதற்க்காக தெர்ச்சி பெறாமல் போனால் விரக்திஅடைவது என்பது முழுக்க மனம் சம்பத்தபட்ட விசயம். உயிர் சம்பத்தப்பட்டதல்ல. நீங்கள் விரக்தியில் இருக்கும் போது உங்கள் மனம் "இது என்ன வாழ்க்கை? செத்துவிடு' என்று உங்க‌ள் மனம் தான் சொல்லும், உயிர் சொல்லாது."  உங்கள் வாயையும், மூக்கையும் இரண்டு நிமிடங்களுக்கு பிடித்து வைத்து இருந்து அடைத்துப் பாருங்கள்? உங்களுக்குள் இருக்கும் உயிர் அய்யோ என்னை வாழவிடு என்று சொல்லும்.
      நீங்கள் விரக்தியில் ஏதாவது செய்கிறீர்கள் என்றால் அது அறியாமை, முட்டாள்த்தனம். ஒரு முட்டாள் தான் தன்னௌடைய உயிருக்கு எதிராக செயல்படுவான். ஆனால் உங்களுக்கு வரும் விரக்தி, மனச்சோர்வு, மனாழுத்தம் எல்லாம் நீங்கள் உங்கள் உயிருக்கு எதிரான வேலைதான். ந்னிங்கள் முட்டாளாக இருந்தால் மட்டுமே இப்படி செய்வீர்கள். புத்திசாலியாக இருந்தால் எப்படி விரக்தி வரும்? உங்கள் புத்திசாலித்தனத்தை செயல்படாமல் தடுத்து விட்டீர்கள். உற்ச்சாகமாக இருங்கள்! பிடித்ததை மட்டுமே செய்யுங்கள், ஒவ்வொரு செயலிலும் ஆனந்தத்தை மட்டுமே நாடுங்கள்! உங்கள் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும்.
...........................வாழ்க வளமுடன்!............................

Thursday, May 24, 2012

குழந்தையின் எதிர்காலம் நன்றாக அமைய? ஆனந்தம்


      குழந்தையின் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்காதீர்கள். முதலில் உங்களுடைய எண்ணங்களை உங்கள் குழந்தைகளின் மேல் திணிக்காதீர்கள். அவர்களுக்கு உங்கள் அன்பை மட்டும் கொடுங்கள். உங்கள் எண்ணங்கள் இறந்தகாலம் சார்ந்தவை.  உங்களுடைய முட்டாள் தனமான எண்ணங்களை குழந்தைகளின் மேல் திணிக்காதீர்கள். குழந்தையே தன்னுடைய வாழ்க்கையை அதன் சொந்த வழியில், சொந்தப் புரிதலில், சொந்த அறிவுணர்ச்சியோடு உணர்ந்து,  உள்வாங்கிக் கொள்ளட்டும்.
      குழந்தை பிறந்த நாள் முதல் நம்முடைய மதம், ஒழுக்க விதிகள், கோட்பாடுகள், தத்துவங்கள், சிந்தனைகள் என்று எல்லா முட்டாள்தனங்களையும் அதன் மீது சுமத்தி வருகிறோம். இல்லையா? குழந்தை மலர ஆரம்பிப்பத்ற்கு முன்பாகவே அதை அழித்து விட முனைகிறீர்கள். இந்த உலகில் மிக அதிகமாக சுரண்டப்படுபவர்கள், தொழிலாளிகளோ, பெண்களோ அல்லது விலங்குகளோ அல்ல. குழந்தைகள் தான் மிகவும் சுரண்டப்படுபவர்கள்.
      நீங்கள் தான் தனக்கு மிகவும் நம்பகமானவர் என்று நினைத்து குழந்தை உங்களிடமிருந்தே ஒவ்வொன்றையும் எதிர்பார்க்கிறது. ஆனால் நீங்களோ அதன் வாழ்க்கையை மிக மோசமாக சீர்குலைக்கிறீர்கள். உங்களைப் போலவே உங்கள் குழந்தையும் துன்பப்படுமாறு எப்படியும் பார்த்துக் கொள்கிறீர்கள்.
      அன்பை மட்டும் கொடுங்கள்....போதும்..... வாழ்க வளமுடன்