மறு பிறவி உண்டா? என்ற கேள்வி உங்களுக்கு வருவது என்பது.....
நான் என்பது இந்த உடலா? உயிரா? அல்லது இந்த இரண்டும் சேர்ந்த ஒன்றா? அல்லது அதையும் தாண்டிய ஏதாவது ஒன்றா? அந்த நான் என்பது யார்? அல்லது உயிர் இந்த உடம்பில் எங்கே இருக்கிறது? எப்படி இயங்குகிறது? என்கிற மிகப்பெரிய கேள்விகளை தான் அப்படி கேட்கிறீர்கள்....
உண்மையாக இந்தக் கேள்வி உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து உண்மையில் விடைகாண முற்பட்டால், விடை கிடைக்கும். ஆனால் வேகு சாதரணமாக இந்தக் கேள்வி மறு பிறவி உண்டா? என்றால் பதில் கிடையாது, பதில் கொடுத்தாலும் சிலர் நம்பலாம். சிலர் நம்பாமல் போகலாம். மறு பிறவி உண்டு என்றாலும் அல்லது இல்லை என்றாலும் அது உங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
இந்தக் கணத்தில் உங்களுக்கு "வாழ்க்கை" என்றால் உங்கள் உடல் மனதைத் தாண்டி எதுவும் தெரியாது, ஆகையால் எதையும் நீங்களாக கற்பணை செய்து கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்க்கையை உடல் மற்ரும் மனதிற்க்கு உட்பட்டு, எத்தனை உயர்ந்த வழியில் வாழ முடியுமோ அந்த வழியில் நடத்துங்கள்.
உள்ள இந்த வாழ்கையையே நீங்கள் பல அழகான வழிகளில் வாழ அனுமதிப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில் உடலைக் கடந்து இருப்பவற்றையும், மரணத்திற்க்கு பிறகு நிகழவிருப்பதையும் எப்படி நீங்கள் சரியாக புரிந்து கொள்வீர்கள்? மறுபிறவியை அறிந்து கொள்ள தீவிர ஈடுபாடு வந்துவிட்டால் தற்போது வாழும் வாழ்க்கையை மறந்து விடுவீர்கள்.
இங்கில்லாத ஒன்றைப் பற்றித் தேடுவதைத்தான் மனம் எப்போதும் விரும்பும். இங்கே வாழவேண்டிய வாழ்க்கையே நிறைய மிச்சமிருக்கிறது. ஆனால் அதன் மேல் உங்கள் ஈடுபாடு எபோதும் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. உங்கள் இப்பொது வாழுகிற வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்கிற எண்ணமே உங்களுக்கு இல்லை. ஆனால் நாளைக்கு என்ன நடக்கும்? 10 வருடங்களுக்கு பிறகு என்ன நடக்கும்? என்ன கல்யாணமே இன்னும் ஆகவில்லையென்றால் கூட என் குழந்தை எப்படியிருக்கும்? என் பேரக்குழந்தைகள் எப்படியிருக்கும்? என்ற பல்வேறு கற்பனைக் கணக்குகளைத் தான் போட்டுக்கொண்டிருப்பீர்கள். மனம் எப்போது நிஜத்தில் இருந்து தப்பித்து, கற்ப்பனைக்குத் தான் உங்களை இழுத்துச் செல்லும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களால் அதிகம் சிந்திகாமல் வெறுமனே இருக்க முடிந்தால் ஒன்று ஞானி ஆகிவிடுவீர்கள் அல்லது 'நான் ஒரு முட்டாள்' என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இதைத் தவிர வேறு வாய்புகளே கிடையாது. அதனால் தான் உங்கள் மனம் ஏதவது ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. அது அமைதியாக இருக்கும் போதே, தான் ஒரு முட்டாள் என்பதைப் புரிந்து கொள்ளும். அப்படி புரிந்து கொண்டால் நீங்கள் யோகாவில் மிகப்பெரிய அடி எடுத்து வைக்கிறீர்கள் என்று அர்த்தம்? ஆன்மீகப் பயணம் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்? ஒரு மனிதன் தான் ஒரு முட்டாள் என்று புரிந்து கொள்ளும் அந்த கணத்தில் அவனுடைய அறிவுணர்ச்சி மலர்கிறது.
இந்த நொடியில் உங்கள் மனதில் நடப்பவை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையென்றால், வாழ்க்கையை கடந்து சிந்திப்பதோ, மரணத்தைக் கடந்து ஆரய்வதோ, உங்களது நேரத்தையும், வாழ்க்கையையும், சக்தியையும் வீணடிக்கும் வேலை தான். ஏனென்றால் இப்போது உங்கள் அனுபவநிலையைத் தாண்டி இருக்கும் பரிணமங்களை துளைத்துச் செல்வதற்கான தீவிரத்தன்மை உங்களிடம் இருக்காது.
இதுவரை உங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் அனைத்தும் உங்கள் ஐம்புலன்களுக்கு உட்பட்டவை. இந்த நிலையில் உடல் தன்மையைத் தாண்டி உள்ளவற்றை உங்களால் உணர முடியாது. எனவே 'மரணத்திற்க்கு பிறகு வாழ்க்கையிருக்கிறதா?' என்று நீங்கள் அறிய விரும்பினால், அதாவது 'இந்த உடல் தன்மையைத் தாண்டி ஏதாவது இருக்கிறதா?' என்று உண்மையிலேயே நீங்கள் அறிய விரும்பினால், இந்த ஐந்து புலன்களைக் கடந்து எப்படிச் செல்வது என்று பாருங்கள். உங்களுக்கான விடை அங்கு தான் ஆரம்பிக்கிறது? .........................................வாழ்க வளமுடன்!..................................................