Showing posts with label பரிணாமம். Show all posts
Showing posts with label பரிணாமம். Show all posts

Thursday, May 23, 2013

உங்களுக்குள் ஒரு மர்மப் புதையல்! ஆனந்தம்


     
      குண்டலினி பரமரகசியங்களுக்கு எல்லாம் பரமரகசியமாய் காலம் காலமாய் பொத்திப் பொத்தி பேசி வரப்படும் ஒரு ஆன்மீக சமாச்சாரம். உனக்கு தெரியுமா, உன் குண்டலினியை எழுப்பினால் நீ பறக்கலாம், நீ தண்ணீரில் மிதக்கலாம் என்னும் பல கதைகள் கேட்டிருப்பீர்கள். இங்கே குண்டலினியின் அறிவியல்…

      குண்டலினி, உங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ஒரு சக்தி. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளாத நிலையிலேயே நமக்குள் இது புதைந்து கிடக்கிறது. நீங்கள் “மனிதன்” என்று குறிப்பிடும் தன்மை இன்னும் உருவாக்கத்தில் இருப்பதால், இந்த சக்தி இன்னும் வெளிப்படாமல் காத்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் இன்னும் முழுமையான மனிதனாக இல்லை. உங்களை நீங்கள் மேம்பட்ட மனிதராக வளர்க்க ஒரு தொடர்ச்சியான நோக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.

      இந்த சக்தியை பற்றி உங்களுக்கு கவனமிருந்தால், இதை பயன்படுத்தி அற்புதங்களை படைக்க முடியும்.

      நீங்கள் குரங்காக இருந்தபோது, உங்களுக்கு மனிதனாக மாற விருப்பமில்லை. இயற்கைதான் உங்களை அந்த நிலைக்கு தள்ளியது. ஆனால் மனிதனாக மாறியபின், அதைத்தொடர்ந்து ஒரு விழிப்புணர்வான பரிணாம வளர்ச்சி அங்கே நடைபெறவில்லை. நீங்கள் விழிப்புணர்வாக இல்லாத பட்சத்தில், அந்த சுழற்சி திரும்பத்திரும்ப நடந்துகொண்டே இருக்கும்.
எந்த ஒரு மாற்றமும் சரி, பரிணாம வளர்ச்சியும் சரி, போதிய சக்தி இல்லாமல் நடப்பதில்லை. இந்த சக்தியை பற்றி உங்களுக்கு கவனமிருந்தால், இதை பயன்படுத்தி அற்புதங்களை படைக்க முடியும். ஒரு புதையலின் மேல் உட்கார்ந்து இருப்பதுபோன்றது இது. ஆனால் நீங்கள் தவறான திசையில் பார்த்துக் கொண்டிருந்தால், அங்கே புதையல் இருப்பதே உங்களுக்குத் தெரியாது.

      ஒரு பிச்சைக்காரர் கடுமையான வறுமையில் வாழ்ந்து வந்தார். மரத்தடியில் உட்கார்ந்து பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவர் இறந்தபிறகு அவர் உடலை அங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டு போய் புதைக்க யாரும் பிரயத்தனப்படாமல் அந்த மரத்தடியிலேயே புதைக்க முடிவு செய்தனர். அங்கே தோண்டும்போது ஒரு சில அடிகளிலேயே பெரும் புதையல் ஒன்று கிடைத்தது.

      ஒரு பானை நிறைய தங்கத்தை கீழே வைத்துக்கொண்டு அந்த முட்டாள் தன் வாழ்க்கை முழுவதும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். கீழே தோண்டியிருந்தால் அவர் பெரும் பணக்காரர் ஆகியிருக்க முடியும். ஆனால் அங்கேயே உட்கார்ந்துகொண்டு எப்போதும் பிச்சை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தவரை என்ன சொல்ல?

      இப்படித்தான் குண்டலினியும். அது அங்கே அடியில் மௌனமாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இது எப்படி தெரியுமா? ஜாக்பாட்டின் மேல் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் போன்றது. ஆனால் தவறான திசையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். புதையல் இருக்கும் பக்கம் திரும்பவில்லை.

      அதனால் குண்டலினி சக்தி இருப்பதையே நீங்கள் உணரவில்லை. குண்டலினி என்பது உங்களுக்குள் இருக்கும் பயன்படுத்தப்படாத, தொடப்படாத சக்தி. உங்களை முற்றிலும் கற்பனை செய்யமுடியாத பரிமாணத்திற்கு மாற்றிட இந்த சக்தியைப் பயன்படுத்த முடியும்.

      முறையான யோகப் பயிற்சிகள், குண்டலினி சக்தியை மேலெழுப்ப துணை நிற்கும்!
........................வாழ்க வளமுடன்!..............................

Sunday, October 7, 2012

யோகா செய்தால் எடை குறையுமா? ஆனந்தம்


     

      எடை குறைப்பிற்க்கான வழிமுறைகள் இன்று படு வேகமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கின்றன. யோகம் முதல் தெய்வீகம் வரை அனைத்துமே எடை குறைப்பிற்கானவை தான் என்று சந்தையில் விலை பேசிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் யோகாவினால் ஏற்படும் இரட்டிப்பு பலன்கள் என்னவென்றால்......
      நீங்கள் யோகா செய்யும் போது அதிகப்படியான எடை  தானாகவே கண்டிப்பாக குறைந்துவிடும். யோகா ஒரு உடற்பயிற்ச்சியாக மட்டும் செயல்படுவதில்லை, அது உங்கள் அமைப்பிற்க்கு ஒரு புத்துணர்வு ஊட்டி, நீங்கள் அதிகமாக சாப்பிடும் இருக்கும் ஒரு விழிப்பினை உங்களுக்குள் கொண்டுவருகிறது. உங்கள் உடலுக்குள் ஓரளவு விழிப்புணர்வு வந்துவிட்டால், அதற்கு எது தேவையோ அதை மட்டும் தான் உண்ணும். அதற்கு மேல் அது எதையும் உண்ணாது. மற்ற உடற்ப்பயிர்ச்சிகளையோ அல்லது உணவுத்திட்டங்களையோ நீங்கள் கடைப்பிடித்தால், எப்போதும் உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்ச்சிப்பீர்கள். ஆனால் யோகப்பயிற்சிகள் செய்து வரும்போது உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
      நீங்கள் பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் போதும், நீங்கள் அதிகமாக உண்ணாத அளவு உங்கள் அமைப்புகளை யோகா கவனித்துக்கொள்ளும். இது தான் யோகாவில் மிகப்பெரிய வித்தியாசமும் நன்மையும்.
      கிரியா யோகப் பயிற்சிகளை செய்ய ஆரம்பிக்கும்போது, சிலர் எடை இழக்கத்துவங்குவார்கள். சிலர் எடை கூடத்துவங்கும். உங்கள் ஜீரணசக்தி, மோசமாக, அதாவது உணவை உடலை மாற்றும் திறமை மோசமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கிரியாக்கள் செய்யத் துவங்கும் போது, ஜீரண நெருப்புக்கள் தூண்டப்பட்டு, ஜீரணசக்தி மேம்பட்டு, உணவு உடலாக மாறும் திறன் அதுகரித்து, உங்கள் எடை கூடத்துவங்கும்.
      உங்கள் ஜீரணசக்தி ஏற்கனவே நன்றாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் நீங்கள் கிரியாக்கள் செய்யத் துவங்கினால், ஜீரணசக்தி மேலும் தூண்டப்படும் இருந்தாலும், உணவு உடலாக மாறாமல் சக்திநிலையில் சூட்சுமப் பரிணாமமாக மாற்றிவிடும். இப்போது நீங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உங்கள் எடை குறைந்து கொண்டே போவதை காண்பீர்கள்.
      கிரியாக்களை செய்யும் போது அதிகப்படியான உணவு சாப்பிட்டாலும் எடை கூடாமல் இருப்பதை காண்பீர்கள் அல்லது உங்கள் எடை குறையவும் கூடும். அல்லது உங்கள் சாப்பாடு குறைந்தாலும் எடை இழக்க மாட்டீர்கள். உணவு உருமாறும் விதம் மாறி விடுவதால் இப்படி ஆகிறது.
      எடையை குறைப்பதற்காக யோகா இல்லை, உங்களை ஒல்லி ஆக்குவதற்க்கோ, தலைவலிக்கோ, முதுகுவலிக்கோ அல்ல யோகா. நீங்கள் அன்பாக ஆனந்தமாக மாறவே யோகா. ஆனால் இவ்விளைவுகள் எல்லாம் யோகாவின் கூடுதல் பலன்கள்.
      உடலைத் தாண்டி உள்ளுக்குள் இருக்கும் பரிணாமத்தை உணர வைப்பதே யோகாவின் நோக்கம். அந்த பரிணாமம் உயிர்ப்புடன் இருக்கும் போது தான் இந்த பிரபஞ்சம் எண்ணிலடங்கா வழிகளில் மெதுவாக உங்களுக்காக திறக்கத் துவங்கும். நீங்கள் உடலைத் தாண்டிய‌ உள்ளுக்குள் இருக்கும் பரிணாமத்தை உணரத்துவங்கிவிட்டால், பிறகு இவை எல்லாம் இருக்கின்றனவா என்று நீங்கள் கற்பணை செய்து பார்த்திராத விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடைமுறையில் சாத்தியப்படும்.
..........................வாழ்க வளமுடன்!............................