Tuesday, January 3, 2012

தெய்வத்தைப் பற்றிய கருத்து-ஆனந்தம்





தெய்வமென்ற கருத்தற்றோன் பாமரன் ஆம்.
     தெய்வமிலை என்போன் அச்சொல் விளங்கான்.
தெய்வமென்று கும்பிடுவோன் பக்தன்; அந்தத்
     தெய்வத்தை அறிய முயல்வோனே யோகி;
தெய்வ நிலையுணர்ந்தவனே தேவனாம்; அத்
     தெய்வமே அனைத்துயிரும் எனும் கருத்தில்.
தெய்வத்தின் துன்பங்கள் போக்கு தற்கே
     தெய்வத் தொண்டாற்றுபவன் மனிதன். காணீர்!
                                                                                 - வேதாத்திரி மகரிஷி.




No comments:

Post a Comment