Thursday, September 20, 2012

வரம் வேண்டுமா? சாபம் வேண்டுமா? ஆனந்தம்



   
 மனிதர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்களின் வாழ்க்கையின் போக்கை, தங்கள் விருப்பு வெறுப்பைக் கொண்டே தீர்மானிக்கிறார்கள். "எனக்கு பிடித்திருப்பதால் இதைச் செய்கிறேன்" என்பதே இவர்களின் வாதமாக இருக்கிறது. உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பது முக்கியமில்லை. உங்களைச் சுற்றி இருப்பவைகளுக்கு உங்களைப் பிடித்திருக்கிறதா? என்பது தான் கேள்வி. ஏனென்றால் உங்களுக்கு பிடித்தது பிடிக்காதது என இரண்டுமே இரு விதமான பிணைப்புகள் தான். இரண்டுமே உங்கள் புரிதலை திசை திருப்பக் கூடியதுதான்.
      ஒருவரைப் பிடித்திருந்தால் அவரைப் பற்றிய உங்களது எண்ணம் மிகையானதாகவே இருக்கும்.ஒருவரைப் பிடிக்காதிருந்தாலும் அவரைப் பற்றிய உங்களது எண்ணம் மிகையானதான் இருக்கும். ஒன்றை மிகைப்படுத்துகிறீர்கள் என்றால் அந்த விஷயத்தை உள்ளதை உள்ளபடி பார்கத்தவறி விட்டீர்கள் என்று அர்த்தம். உள்ளதை உள்ளபடி பார்கத்தவறி விட்டீர்கள் என்றாலே வாழ்க்கையை சரியான முறையில் உங்களால் கையாள முடியாது. எனவே உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பது முக்கியமே இல்லை.
      உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு மட்டுமின்றி, மலர்கள், செடி கொடிகள் மரங்கள் அனைத்திற்க்குமே உங்களைப் பிடித்திருக்கிறதா என்பது தான் கேள்வி.
      உண்மையில் தாவரங்கள் உங்களை விட நுண்ணுணர்வு கொண்டவை. நீங்கள் நடக்கும் பூமிக்கு கூட உங்களைப் பிடிக்கும் விதமாக வாழ பழகிக் கொண்டிர்கள் என்றால், வாழ்வில் வரும் அனைத்துமே ஒரு வரமாக இருப்பதாக உணரத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவை உங்களை வெறுக்கத் தொடங்கினால் இப்போது நலமாகத் தெரியும் எல்லாமே சாபமாக மாறுவதை உணரத்தொடங்குவீர்கள். சொல்லப் போனால் மனிதவாழ்வின் மீதான சாபம் என்று ஏதுமில்லை. மனிதர்களுக்கு எது வேண்டியிருக்கிறதோ, எதை அடையப் போராடுகிறானோ, எதற்காக அவர்கள் ஏங்குகிறார்களோ அவையே அவர்களின் சாபமாக மாறித் துன்புறுகின்றன.
      மனிதர்களின், சொத்து, வேலை, உறவுகள், அவர்களின் உடல், மனம் என்று எல்லாமே சாபமாக மாறித் துன்புறுத்துகிறது. வருத்தமும் துன்பமும் வானத்திலிருந்து பொழிவதில்லை, மாறாக அவர்கள் எதை விரும்புகிறார்களோ
அவைகளே துன்பத்திற்க்கு மூலமாக மாறி விடுகிறது.
      உலகத்திலுள்ள ஒவ்வொன்றுக்கும் உங்களைப் பிடித்திருக்கும் விதமாக நீங்கள் வாழப் பழக வேண்டும். இப்போது கொசுக்களுக்கு மட்டும் தான் உங்களை மிகவும் பிடித்திருக்கிறது. பறவைகள், பூச்சிகள், பூக்களுக்கெல்லாம் உங்களை பிடித்திருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் பருகும் நீர், உங்கள் சுவாசக்காற்று, உங்கள் உணவு எல்லாமே எல்லாமே நஞ்சாக மாறி விடக்கூடும். அவ‌ற்றுக்கு உங்களை பிடித்திருந்தால் அவையே அமுதமாக மாறும்.
      பிரபஞ்சம் என்கிற படைப்பும் அதைப் படைத்தவரும் உங்களை நேசித்தே ஆகவேண்டும் என்ற விதமாய் வாழ்வதே வாழ்க்கை. உஙகள் விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றிக் கொள்வதல்ல வாழ்க்கை. பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அனுவுக்கும் உங்கள் மேல் பிரியம் தோன்றும் விதமாக வாழும் முறைக்கு தான் வாழ்க்கை என்று பெயர்.
      இல்லையென்றால் நீங்கள் எதற்காக பாடுபட்டாலும். எதுவும் உங்களுக்கு பயண் தரும் விதமாக இராது. நீங்கள் என்னென்னவோ செய்யலாம், ஏதேதொ ஆகலாம், பல வருமானம் வரலாம் ஆனால் வாழ்வில் எதையும் அழுத்தமாக உணராமலே ஒரு சுழற்ச்சியில் இருப்பீர்கள்
      கற்களுக்கும், தாவரங்களுக்கும் பிடித்திருக்கும் விதமாக கனிவு மிக்க வாழ்க்கையை நீங்கள் நடத்தினால் உங்கள் நுண்ணுண‌ர்வுக்கே வழ்க்கை ஒரு வரம் என்பது புரிய வரும். தொட்டாற் சிணுங்கிகள் தன் விருப்பமின்மையை தெரிவிக்கின்றன, அதற்க்கு மட்டுமல்ல, எல்லாத் தாவரங்களுமே உங்களைப் பிடிக்குமா இல்லையா என்பதைத் தெளிவாகச் சொல்லுகின்றன. அவற்றின் பாஷ‌யை நீங்கள் புரிந்து கொள்ளுமளவு நீங்கள் நுட்பமானவராக இருங்கள். கொட்டை எழுத்தில் எழுதினாலோ சத்தம் போட்டுச் சொன்னாலோ தான் உங்களுக்கு புரியும் என்கிற நிலையை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.
      இதற்கு ஏற்கும் தன்மையில் நீங்கள் இருப்பது தான் முக்கியம், "தான்" என்ற நிலை உங்களுக்குள் பெரிதாக இருந்தால், உங்களின் ஏற்கும் தன்மை குறையும். தான் எண்ணும் எண்ணம் உங்களுக்குள் இல்லாமல் போனால் இந்த பிரபஞ்சமே உங்களுடன் இனைந்து நடனமாடும். நீங்கள் அந்நிலையில் படைத்தவனின் கருவியாகவே வாழலாம். இல்லையென்றால் எண்ணங்கள், அபத்தங்கள், உணர்ச்சிகள், பேத‌ங்கள் ஆகியவற்றின் குவியலாகத் தான் வாழ்வீர்கள்.
      ஒவ்வொரு மனிதரும் தேர்வு செய்ய இரு வேறு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று படைத்தவனின் அங்கமாகவே வாழலாம். இதை ஈஷாங்கா என்கிறோம். அல்லது அபத்தங்களின் தொகுப்பாகவே வாழலாம்.
      இந்த இரண்டிலிருந்து ஒன்றைத் தெரிவு செய்யும் உரிமை வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நொடியிலும் காத்திருக்கிறது. இந்த உணர்வு உங்களுக்கு இருந்தால் உங்களைச் சுற்றியுள்ள பாறைகள், பூக்கள் என்று ப‌டைபின் ஒவ்வொரு அணுவும் உங்களுடன் பேசும். இல்லையென்றால் இந்த பிரபஞ்சத்தில் தணிமையாகத்தான் உணர்வீர்கள். பாதுகாப்பு அற்றவராக, உளவியல் தடுமாற்றம் மிக்கவராக வாழ்வீர்கள்.
      சரியான தேர்வை செய்தால் சரியான விஷயங்கள் நிகழ்கின்றன. தவறான‌ தேர்வை செய்தால் நடப்பவையெல்லாம் தவறாகவே போய் விடுகின்றன. வெற்றியும் தோல்வியும் இதன் அடிப்படையில் தான் நிகழ்கின்றன. வலியும் துயரமும், வருத்தமும் வந்தால் யார் மீது பழியைப் போடலாம் என்று அங்குமிங்கும் பார்க்காதீர்கள். உங்களுக்கு நோய் வந்தால் அடுத்தவர்களுக்கா மருந்து கொடுக்கிறீர்கள்? உங்களுக்கு துன்பம் வந்தால் மட்டும் அடுத்தவர்களை ஏன் காரணம் சொல்லுகிறீர்கள்? இந்த எளிய விசயம் புரியவே சிலருக்கு பல பிறவிகள் தேவைப்படுகின்றன.
      ஒருமுறை சங்கரன் பிள்ளை தட்டுத்தடுமாறி குடிபோதையில் இரவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இரவு எட்டு மணிக்கு வீட்டுக்குப் போக வேண்டியவர் அதிகாலை 2.30 மணிக்கு தட்டுத் தடுமாறி கல்லிலும் முள்ளிலும் விழுந்து எழுந்து போனார். வீடு வந்து சேர்ந்து கண்ணாடியில் பார்த்தால் முகமெங்கும் ரத்த காயங்கள்.
      உடனே ரகசியமாக மனைவிக்கு தெரியக்கூடது என்று, மருந்து பெட்டியைத் திறந்து காயமான இடங்களுக்கெல்லாம் பிளாஸ்திரி போட்டுக் கொண்டு படுத்துவிட்டார். காலையில் அவர் மனைவி வந்து சங்கரன் பிள்ளை முகத்தில் தண்ணீரைக் கொட்டி எழுப்பி, த‌ரதரவென்று இழுத்து போய் காட்டிய போது தான் விஷ‌யம் புரிந்தது. காயத்திற்க்கு கட்டுபோடுவதாய் நினைத்துக் கொண்டு கண்ணாடி முழுக்க பிளாஸ்திரியை ஒட்டி வைத்திருக்கிறார்.
      விழிப்புணர்வே இல்லாத மனிதர்கள் தான் தங்கள் காயங்களுக்கு வெளியே காரணம் கண்டு பிடிப்பார்கள். உங்கள் வரங்களும் சாபங்களும் உள்ளிருந்தே நிகழ்கின்றன.
      இதை உணர்ந்து நடந்தால் உங்கள் வாழ்க்கை அழகாகவும் அற்புதமாகவும் மாறும். இது புரிய ஒரு பிறவியை எடுத்துக்கொண்டால் வாழ்க்கை தன்னுடைய வழிகளில் உஙளுக்கு பாடம் கற்பிக்கும்.
வரம் வேண்டுமா? சாபம் வேண்டுமா? தேர்ந்தெடுங்கள்!
..............................வாழ்க வளமுடன்!........................

Wednesday, September 19, 2012

தியானம் நேரத்தை வீணடிக்கும் வேலை! ஆனந்தம்


   
 "நான் தியானம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?" என்கிற இந்த ஒரு கணக்கை மட்டும் விட்டுவிட வேண்டும். அதிலிருந்து நீங்கள் பலன் பெறவோ அல்லது வேறு எதோ பெறவோ வேண்டாம். ஒவ்வொரு நாளும் 20, 30 நிமிடங்களை வீணாக்குங்கள், நேரத்தை எப்படி வீணாக்குவது என்று கற்றுக்கொள்ளுங்கள்.
      தியானத்தை ஆரொக்கியமாக இருப்பதற்கோ, ஞானியவதற்கோ, சொர்க்கத்தை அடைவதற்கோ செய்யத்தேவை இல்லை. இது நேரத்தை வீணடிக்கும் வேலை அவ்வளவுதான். "இன்றைய தின நிகழ்வுகளில் நாம் என்ன கொண்டு செல்லப்போகிறோம்?" என்று கேட்பதெல்லாம் நவீன காலத்து சொல் துஷ்பிரயோகங்கள் ஆகும். நீங்கள் எதையாவது எதிபார்த்தீர்கள், என்றால் அர்ப்ப விசயங்கள் மட்டுமே கிடைக்கலாம். உண்மையானது எதுவோ அது உங்களுடன் வராது. உங்களுக்கு உண்மை மட்டும் வேண்டுமென்றால் இந்த கொண்டு செல்லும் பழக்கத்தை விட்டு விடுங்கள். நீங்களாக மட்டும் இருங்கள் வேறெதுவும் செய்ய வேண்டாம்.
      உங்கள் வாழ்க்கையில் "எனக்கு என்ன கிடைக்கும்?" என்ற கேள்வியை மட்டும் விட்டு விட்டால், உங்களுக்கு எல்லைகளே இருக்காது. நீங்கள் கருணையின் வடிவமாகவே மாறி விடுவீர்கள். இதற்கு மாற்று வழியே இல்லை. இந்த ஒரு சிறு கணக்கை மட்டும் விட்டு விட்டால், அது தான் உங்கள் முழுமனதிற்கும், அதன் செயல் பாடுகளுக்கும் இருக்கும் ஒரே சாவி. அது தான் மனதில் நடக்கும் அத்தனை செயல்களுக்கும் திறவுகோல்.
ஆனால் மக்களுக்கு சும்மா இருப்பது எப்படி என்ற விழிப்புணர்வு இல்லாததால். மாற்று வழி ஒன்று கூறப்பட்டுள்ளது. அது எப்போதுமே அன்பாக இருப்பது. ஏனெனில் இந்த வழி ஒன்றில் தான் இந்த கொடுக்கல் வாங்கல் கணக்குகள் இல்லாமல் இருக்க முடியும். உங்களுக்குள் ஆழமான அன்பையோ கருணையையோ வளர்த்துக்கொள்ளுதல் பற்றிய பேச்சுக்கள் எல்லாம், உங்களுக்குள் உள்ள எதிர்பார்ப்புகளை நீக்கிவிடுவதற்கே. யாருடனாவது தீவிர உணர்ச்சிகளை உருவாக்குவதன் மூலம், " எனக்கு என்ன கிடைக்கும்?" என்ற கேள்வியை அகற்றி விடலாம்.
      வாழ்க்கையில் இந்த ஒரு கணக்கை நீங்கள் விட்டு விட்டால் 90 சதவிகித செயல்கள் முடிந்தார்போல் தான். மீதமுல்ல 10 சதவிகித வேலைகள் தானாகவே நிகழ்ந்து விடும். உங்களுக்கு பரமபத விளையாட்டு தெரியுமா? ஆரம்ப கட்டங்களில் அதில் பல ஏணிகளும், பல பாம்புகளும் இருக்கும். அவற்றில் ஏறி இரங்கிக்கொண்டே இருப்போம். ஆனால் விளையாட்ட்டின் கடைசிக்கட்டத்தை நெருங்கிவிட்டால் அதன் பிரகு பாம்புகளே இருக்காது. தாயம் தாயமாகப் போட்டு பரமபதத்தை அடைய வேண்டியதுதான், அங்கு உங்கலை விழுங்குவதற்கு எந்த பாம்புகளும் இருக்காது. இதுவும் அது போலத்தான் நீங்கள் "என‌க்கு என்ன கிடைக்கும்?" என்ற கணக்கை விட்டு விட்டால், பிறகு பாம்புகளே இருக்காது, அவ்விடத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என்பது தான் கேள்வி...........வாழ்க வளமுடன்!.......

Monday, September 17, 2012

கால நிர்வாகம்(Time Management) ஒரு பார்வை! ஆனந்தம்


      அதை கால நிர்வாகம்(Time Management) என்று பார்கக் கூடாது. முன்னுரிமை நிர்வாகமாக(Priority Management) தான் பார்க்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக காலத்தை பூமியே நிவகித்துக் கொள்கிறது. 24 மணி நேரம், 30 நாட்கள், 365 நாட்கள் இந்த கணக்குகளை எல்லாம் பூமியே பார்த்துக் கொள்கிறது. அதை நாம் கணக்கெடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
      கால நிர்வாகம் என்று சொல்லும் போது, எவ்வெளவு நேரம் துங்குவது, எவ்வளவு நேரம் பணிபுரிவது, எவ்வளவு நேரம் குடும்பத்துடன் செலவிடுவது போன்ற பலவிதமான செயல்பாடுகளுக்கு நேரம் ஒதுக்குவதைப் பற்றி சொல்கிறீர்கள். இவற்றைச் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட முறை என்று எதுவும் இல்லை. ஏனென்றால் முன்னுரிமைகள் ஒவ்வுருவருக்கும் மாறுபடும். உங்களுடைய முன்னுரிமைகள் தெளிவாக இருந்தால், நேரம் தானாகவே சரியாக பொருந்திவிடும்.
      காலத்தை நிர்வகிப்பதற்கு பதிலாக, வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட செயல்பாடு உங்களுக்கு எத்தனை தூரம் முக்கியமானது என்பதில் நீங்கள் தெளிவாக இருந்தால், காலம் அதுவாகவே உங்களுடன் அனுசரித்து செல்லும்.
      ஆனால் மக்களுக்கு எது எதை விட முக்கியம் என்பதில் எப்போதும் சந்தேகங்கள் தான் அதிகம். ஏனென்றால் அவர்கள் தாங்கள் செய்ய விரும்புவதை செய்வதில்லை, பதிலாக சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட செயல்களையே செய்கிறார்கள். எது தேவையோ அதை அவர்கள் செய்வதில்லை. உங்கள் வாழ்க்கையிலும், உங்களைச் சுற்றியும் நிகழ வேண்டிய முக்கியமானவை எது என்று கணித்து விட்டால், பிறகு எதைச் செய்ய வேண்டும், எதற்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்பதில் குழப்பமே இருக்காது.
...........................................வாழ்க வளமுடன்!.................................................

Wednesday, September 5, 2012

"கடவுளைத் தொலைத்துவிட்டார்கள்?" ஆனந்தம்


      ஓர் ஊரில் குறும்புக்கு பெயர் போன இரண்டு சிறுவர்கள் இருந்தனர். வம்பை விலைக்கு வாங்குவது அவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. பெற்றோர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்டபாடில்லை. எனவே பெற்றோர் அவர்களை ஒரு மதகுருவிடம் அழைத்துச் சென்றனர். முதலில் இளையவனை மட்டும் அழைத்துச் சென்று மதகுருவிடம் விட்டுவிட்டு வந்தனர்.
      குறும்பு கார‌ச் சிறுவனை மேலும் கீழும் பார்த்த மதகுரு, நாடக பாணியில் அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தார். "எப்படியாவது கடவுள் அவனுள் தான் இருக்கிறார் என்று உணர்த்திவிட்டால், அவன் குறும்புத்தனம் எல்லாம் அடங்கிவிடும்!" என்று நினைத்தார்.
      பாதி நடையில் நின்று விட்டு கணீர் குரலில், "எங்கே கடவுள்?" என்று கேட்டார். அந்த சிறுவன் மொத்தமாக குழம்பிப்போய் கடவுள் அந்த இடத்தில் தான் எங்கோ இருக்கிறார் போலும் என்று நினைத்து அங்கும் இங்கும் கண்களால் தேடினான்.
      "அவர் உண்ணுள் தான் இருக்கிறார் என்று சிறுவனுக்கு உணர்த்த, மேஜையின் குறுக்கே சாய்ந்து கொண்டு, "கடவுள் எங்கே?" என்று மறுபடியும் கேட்டார் மதகுரு. சிறுவன் இன்னும் குழம்பிப்போய் மேஜைக்கு கீழே குணிந்து கடவுளைத் தேடினான். ஆனால் மதகுரு அவனுடைய இதயத்தை சுட்டிக்காட்டி, "கடவுள் எங்கே?" என்று திரும்பக் கேட்டார். கடவுள் அங்கு தான் இருக்கிறார் என்பதை அந்த பையனுக்கு புரிய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.
      அவ்வளவு தான் அந்த சிறுவன் கதவு தாள்ப்பாளைத் திறந்து கொண்டு தன் அண்ணன் இருக்கும் இடத்திற்க்கு ஓட்டமாய் ஓடிவிட்டான். அங்கே அண்ணனிடம், "அண்ணா! நாம் பெரும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டுவிட்டோம்!, அவர்களுடைய கடவுளைத் தொலைத்து விட்டார்கள், அதை நாம் தான் திருடினோம் என்று நினைக்கிறார்கள்!" என்றான்.

பாக்கெட் மணி விபரீதம்! ஆனந்தம்


      என் மகனுக்கு நான் நிறைய பாக்கெட் மணி கொடுத்தேன். அவன் அதை வைத்துக் கொண்டு நிறைய தீய பழக்கங்களுக்கு ஆகிவிட்டான். என்ன செய்ய?
      நீங்கள் முதலில் உங்கள் மகனுடன் ஒரு நண்பராகப் பழகுங்கள்! அவனுடன் ப்யணம் செய்யுங்கள். அவன் உங்களுடன் பயணம் செய்ய வேண்டும். அவனுடன் அதிக நேரம் செலவிடுங்கள். அவனுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரவேண்டும். அப்போது தான் உங்களால் அவனுக்கு கொடுக்கும் பாக்கெட் மணியில் கை வைக்க முடியும்!
      மாறாக இப்போது நீங்கள் பணம் கொடுப்பதை நிறுத்தினால், அவன் உங்களை உதைத்தாலும் உதைப்பான். இன்னும் சொல்லப்போனால் மேலும் சில அற்பமான விஷயங்களைத் தேடிச்செல்வான்.
      பிள்ளைகளை வளர்ப்பது என்றால், வெறும் பணத்தை வீசிஅடிப்பது மட்டுமல்ல. அதற்கு ஈடுபாடு தேவை. ஒரு குழந்தையை ஈடுபாடு இல்லாமல் வளர்ப்பது ஒருபோதும் வேலை செய்யாது?
      இப்போது பணம் கொடுப்பதை நிறுத்தினால் அவன் திருந்துவான் என்று நினைக்கிறீர்களா? எவ்வளவு பணம் தான் கட் செய்வீர்கள்? நீங்கள் பணம் கொடுப்பதை நிறுத்தினால் அவன் வேறு எதையோ பணத்துகாக செய்வான். செய்வானா இல்லையா? அதனால் அவனிடம் நட்புறவுடன் பழகுங்கள்! அவனுக்கு உங்கள் மீது நம்பிக்கை வரவேண்டும். அப்போது, நீங்களே தெளிவான பாதைக்கு மெல்ல மெல்ல அழைத்துச் செல்லுங்கள். வாழ்க வளமுடன்!
....................................சத்குரு ஜக்கிவாசுதேவ்.........................................

Tuesday, September 4, 2012

ஆண் - பெண் நட்பு! ஆனந்தம்


      பொருளாதாரம், ஆண் - பெண் உடலுறவு இன்பம் என்ற இருவகைக்குள் மனிதனின் வாழ்க்கைத் தேவைகள் அனைத்தும் அடங்கிவிடும். சமுதாய அமைப்பில் நிலவி வரும் பலவித சூழ்நிலைகளால் ஏற்படும் வாழ்க்கைத் தொல்லைகளைச் சமாளித்து வெற்றி பெறுவதில் தம்பதிகளுக்கிடையே நட்பு என்பது மிகவும் சக்தி வாய்ந்ததும், அவசியமானதும், பொறுப்பு வாய்ந்ததும் ஆகும்.
      தம்பதிகளின் மனம் ஒத்த நட்பின் மூலம் கைடைக்கும் பலதரப்பட்ட வாழ்க்கையின் இன்பங்களை வேறு எவ்வழியில் பெற முடியும்? வாழ்க்கைச் செல்வங்களுள் மிகவும் சிறப்பானது அன்றோ தம்பதிகளுக்கிடையே நட்பு?
      அறியாமை, அலட்சியம், முரட்டுத்தனம், வரட்டு கெளரவம் ஆகியவற்றால் ஒரு சிறந்த விசயமான நட்பை ஒரு ஆணோ, பெண்ணோ, குலைத்துக் கொள்கிறார்கள் என்றால்? இந்த நட்ப்பில் களங்கத்தை ஏற்ப்படுத்திக் கொள்கிறார்கள் என்றால்? அவர்கள் அறிவின் நிலையை, திற‌மையை என்னெவென்று சொல்வது?
      பிறந்து விட்டதனால் வாழ்ந்தேயாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ள நாம் ஒவ்வொருவரும், ஆணும், பெண்ணும் ஆழ்ந்து சிந்தித்து தம்பதிகள் நட்பினிலே உள்ள  களங்கத்தை போக்கிக் கொண்டு, நல்ல நட்பு கொண்டு உறுதியான ஒரு நட்பான நிலை பாட்டில் வாழ முயற்சி செய்ய வேண்டும்.
      1. ஒருவர் உள்ளத்தை ஒருவர் புரிந்து கொண்டு செயலாற்றுவது.
      2. தவறான போக்கு எனில் ஒருவருக்கொருவர் அன்போடும் அளவோடும் கண்டித்து திருத்துவது.
      3. கோபம் என்ற விஷம் ஏறாமல் ஒவ்வொருவரும் த‌ங்களை பாதுகாத்துக் கொள்வது.
      4. சிக்கனமாகவும், பிறர்பழிகஞ்சியும் செலவு செய்து வருவதும்.
      5. நேர்மையான வழியில் மட்டுமே முயற்ச்சித்து பொருளீட்டுவது.
      6. உயிரை விடவும் மேலாக கற்பொழுக்கத்தை பாதுகாத்துக் கொள்வது.
      7. பெற்றோர்களையும், குழைந்தைகளையும், பராமரிப்பதிலும், விருந்துபசரிப்பதிலும் சமமான பொறுப்பை ஏற்றுக் கொள்வது
      8. சமுதாயம், சந்தர்ப்பம், அஜாக்கிரதை அகிய மூவகையில் ஏற்ப்படும் கஷ்ட நஷ்டங்களை காரணங்களை உணர்ந்து சகித்துக் கொள்வதும்.
      என்ற எட்டு வழிகளை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப நுட்பத்தோடு பின்பற்ற பழகிக்கொண்டால் இவைகள் தம்பதிகளின் நட்பை பாதுகாக்கும் பலம் வாய்ந்த கோட்டையாகிவிடும்.

      ......................................................வாழ்க வளமுடன்!........................................................

Thursday, July 5, 2012

உலகைக் காப்பாற்றும் சோம்பேறிகள்? Real Story-ஆனந்தம்


      
      உங்கள் மகிழ்ச்சி என்பது உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து கடனாகப் பெறப்படும் ஒரு பொருள் போல கருதுகிறீர்கள்! நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் வெளியில் என்ன நடக்கிறது என்பதற்கும் சம்பந்தம் இல்லை என்ப‌தை புரிந்து கொள்ளுங்கள்.
      இப்போதைக்கு உங்களுடைய சக்திகள் அனைத்தும் வெளிபுற சூழ்நிலைகளுக்கு அடிமைப்பட்டு கிடப்பதால், அந்த வெளியுலகம் தான் உங்கள் உள் நிலை மகிழ்ச்சியைத் தீர்மானிக்கிறது. இது போன்ற சூழ்நிலைகளில் போராட்டங்களைத் தவிர்க்க முடியாது. இந்த உலகில் போராட்டம் என்பதே ஒருவர் சந்தோசத்திற்கும் மற்றவர் சந்தோசத்திற்கும் இடையே தான் நடக்கிறது. என் சந்தோசம் சிவன், உங்கள் சந்தோசம் அல்லா, இப்படி இருந்தால் இருவரும் சண்டை போட்டே ஆக வேண்டும்.
      நம்முடைய இயல்பிலேயே நாம் சந்தோசமாக இருப்பதற்கு முடியாவிட்டால், மகிழ்ச்சியாக இருப்பதற்கு நாம் வெளியில் எதையாவது செய்து தான் ஆகவேண்டும். இந்த உலகத்தில் சந்தோசமாக இருப்பதற்கு நாம் எதையாவது செய்து தான் ஆகவேண்டும் என்றால் பின் மற்றவர்களும் சந்தோசமாக இருப்பதற்கு வேறு எதையாவது ஒன்றைச் செய்வார்கள்.
      நாளையோ அல்லது நாளை மறுநாளோ நம்முடைய பாதைகள் ஒன்றோடு ஒன்று குறுக்கிட்டு, நாம் சண்டையில் இறங்குவோம். நாம் அனைவரும் சகோதரர்கள் என்று பாவனை செய்தாலும், நம் சந்தோசத்திற்கு ஏதாவது தடை வந்து விட்டால் அடுத்தவரை அடித்து வீழ்த்துவதற்கு தயங்கவே மாட்டோம்.
      இந்த கம்பத்தில் ஏறுவது தான் உங்களுடைய‌ இப்போதைய சந்தோசம் என்று வைத்துக் கொள்ளுவோம். இப்போது யாரோ ஒருவர் அந்த கம்பத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, இது புனிதமான கம்பம் இதன் மீது நீங்கள் ஏறக் கூடாது என்று தடுக்கிறார் என்னும் போதே உங்கள் மகிழ்ச்சி அனைத்தையும் தொலைத்து விடுவீர்கள்.
      ஒரு வேளை தடுப்பவர் பலமானவராக இருந்தால், அங்கிருந்து நீங்கள் போய்விடுவீர்கள், அவர் உங்களை விட பல‌கீனமானவராக இருந்தால் அவரை இழுத்து கீழே தள்ளி விட்டு கம்பத்தின் மீது நீங்கள் ஏறி விடுவீர்கள். ஏனெனால் அந்த கம்பத்தின் மீது ஏறுவதில் தான் உங்கள் சந்தோசம் இருக்கிறது என்பதால் அதில் எப்படியாவது ஏறிவிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஏற்கனவே சந்தோசமாக இருந்தால் அந்த கம்பத்தில் ஏற வேண்டாம் என்று தடுத்தால், நீங்கள் வேறு விசயத்தை நாடி போய்விடுவீர்கள் அல்லது வேறு கம்பத்தில் ஏறிக் கொள்வீர்கள்.
      உங்கள் இயல்பில் நீங்கள் மகிழ்ச்சியானவராக இருந்தால், மகிழ்ச்சியே உங்கள் வெளிப்பாடாக‌ இருந்தால், பிறகு இந்த உலகத்தில் எந்த விதமான சச்சரவுகளும் இருக்காது. ஆனால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மமகிழ்ச்சியைத் தேடி ஓடுவதில் செலவழித்தால், இந்த உலகத்தில் எப்பொழுதும் போராட்டங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும். மக்களுக்கு நீங்கள் எவ்வளவு தான் கலிவி அறிவு புகட்டினாலும், நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்தாலும், அவர்கள் சண்டையிட்டுக் கொள்வார்கள்.
      நாம் இயல்பிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் நம்முடைய சக்திகளை ஒழுங்கு படுத்திக் கொண்டால், பிறகு நம்வாழ்வில் எது நடந்தாலும், நம் மகிழ்ச்சி மட்டும் குறையவே குறையாது. அப்போது நாம் வாழும் சூழ்நிலைக்கு என்னெ தேவையோ அதை மட்டும் செய்வோம். எதையாவது செய்ய வேன்டும் என்ற கட்டாயம் நம‌க்கு இருக்காது. எதையுமே செய்யாமல் கூட நாம் வெறுமனே அமர்ந்திருக்க முடியும்.
      ஆனால் தற்போது நிறைய பேர் மகிழ்ச்சியைத் தேடிச் செல்லும் பயணத்தில் இந்த பூமியையே கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக இந்த உலகத்தில் 50% பேருக்கு மேல் சோம்பேறிகளாக உள்ளனர். உலகில் இருக்கும் 700 கோடி பேரும் கடும் உழைப்பாளிகளாக இருந்தால், இந்த உலகம் இன்னும் 10 வருடங்களுக்கு கூட நீடிக்காது; அழிந்துவிடும். இந்த உலகம் இன்னும் நீடிப்பதற்கு காரணம் உழைப்பாளிகள் அல்ல; சோம்பேறிகள் தான் காரணம். அவர்கள் தான் உண்மையிலேயே இந்த உலகத்தைக் காப்பாற்றி வருகிறார்கள்.
      உழைப்பாளிகள் எனப்படும் பிரிவினர் நல்ல நோகங்களுடனும், அதே நேரம் முழு முட்டாள் தனத்துடனும் இந்த பூமியை சிதைத்து வருகிறார்கள். மக்களுக்கு நன்மை செய்வதைப் பற்றி அவர்களுக்கு நல்ல நோக்கங்கள் இருக்கலாம்.ஆனால் அவர்களுடைய நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறி விட்டால் இந்த உலகம் மிஞ்சியிருக்காது.
      எனவே மகிழ்ச்சியைத் தேடி ஓடாதீர்கள். உங்கள் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தற்ப்போதையை வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் மகிழ்ச்சியை தேடியதைவிட, மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கணங்கள் தான் அழகானவை என்பதை உணர்வீர்கள்!
..............................வாழ்க வளமுடன்!.........................