Showing posts with label சுவாசம். Show all posts
Showing posts with label சுவாசம். Show all posts

Friday, May 23, 2014

வாழ்க்கை முறைக்கான கடிகாரம்! ஆனந்தம்



     
      நாம் தன்னிறைவுடன் வாழ்வதற்கு நம் உடலும் ஒத்துழைக்க வேண்டும். உடல் நிலை சீராக இருந்தால் நம் மனமும் சீராக இருக்கும். நாம் எண்ணியதை முடிக்க முடியும்! ஆம் ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்க முடியும். எனவே உடலைக்காத்து மனதைப்போற்றுவோம். உடல் ஆரோக்கியம் தான் நமக்கு நம்பிக்கையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும் சக்திகளிளேயே முதன்மையானதாகும்.

      நம் உடல் ஒவ்வொரு பாகத்திற்கென த‌னித்தனியே நேரத்தை ஒதுக்கிக்கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது ஒவ்வொரு உறுப்புக்கும் இரண்டு மணி நேரத்தை ஒதுக்கிக்கொண்டு வேலை செய்கிறது. அந்த இரண்டு மணி நேரம் முடிந்தவுடன், தன் நேரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.அதன் அட்டவணை இதோ....

      விடியற்காலை 3.00 ‍- 5.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - நுரையீரலின் நேரம் - இந்த நேரத்தில் சுவாசப்பயிற்ச்சி செய்து காற்றின் மூலம் வரும் ப்ராணசக்தியை உடலில் சேகரித்தால் ஆயுள் நீளும். தியானம் செய்ய ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

      விடியற்காலை 5.00 ‍- 7.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - பெருங்குடலின் நேரம் - கலைக்கடன்களை இந்த நேரத்தில் முடித்து விட வேண்டும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகஅதிகமாக உள்ள நேரமும் இதுவே. உடற்ப்பயிற்ச்சி செய்ய ஏற்ற நேரமும் இதுவே.

      காலை 7.00 ‍- 9.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - வயிற்றின் நேரம் - இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு செரிமானமாகி உணவு உடலில் ஓட்டும்.

      காலை 9.00 ‍- 11.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - ம‌ண்ணீர‌லின் நேரம் - காலையில் சாப்பிட்ட‌ உணவை மண்னீரல் செரித்து ஊட்டச்சத்தாகவும் இரத்தமாகவும் மாற்றுகிர நேரம். இந்த நேரத்தில் தண்ணிர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

      முற்பகல் 11.00 ‍- 1.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - இதயத்தின் நேரம்  - இந்த நேரத்தில் அதிகமாக பேசுதல், கோபப்படுதல், அதிகமாக படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது.

      பிற்பகல் 1.00 ‍- 3.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - சிறுகுடலின் நேரம் - இந்த நேரத்தில் மிதமான மதிய உணவை உண்டு சற்று ஓய்வெடுப்பது நல்லது

      பிற்பகல் 3.00 ‍- 5.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - சிறுநீர்ப்பையின் நேரம் - நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்

      மாலை 5.00 - 7.00 மணி - சிறுநீரகங்களின் நேரம் - பகல் நேர பரபரப்பில் இருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம் செய்ய வழிபாடுகள் செய்ய இதுவே உகந்த நேரம்

      இரவு 7.00 - 9.00 மணி - பெரிகார்டியத்தின் நேரம் - பெரிகார்டியம் என்பது இதயத்தை சுற்றியிருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் ஷாக் அப்சார்பர். இதுவே இரவு உணவுக்கு உகந்த நேரம்.

      இரவு 9.00 - 11.00 மணி - டிரிப்பிள் கீட்டர் நேரம் - டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல. உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச்செல்வது நல்லது.

      இரவு 11.00 - 1.00 மணி - பித்தப்பை இயங்கும் நேரம் - இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை குறைபாடு ஏற்படும்.

      இரவு 1.00 - 3.00 மணி - கல்லீரல் இயங்கும் நேரம் - இந்த நேரத்தில் நீங்கள் உட்கார்ந்திருக்கவோ, விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுதும் ஓடும் இரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்தப்பணி பாதிக்கப்பட்டால் மறுநாள் முழுது நீங்கள் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்

      இந்த அட்டவணை மூலம் தெரிந்து கொண்டதை உபயோகப்படுத்தி, சாப்பாடு, தூக்கம், வ்ழிப்பு, வேலை இவற்றை சரியான நேரத்தில் செய்து ஆரோக்கியமான் உடலைப் பெற்று ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்! வாழ்க வளமுடன்!

Tuesday, August 30, 2011

அதிசயத்தை நிகழ்த்துவோம் ஆனந்தம்


      சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முந்தைதொரு தினம், இன்றைக்கு மத்தியபிரதேசம் என்று அழைக்கப்படும் ஒரு பகுதி. அங்கு பில்வா என்று ஒரு தீவிரமான ஒரு பக்தன் இருந்தான். அவன் அழைத்தால் பாம்புகள் அவனைச் சுற்றிக்கூடும் அந்த அளவுக்கு பாம்புகளுக்கு நெருக்கமாக இருந்த இனத்தைச் சேர்ந்தவன்.
      அன்றைய சமூகத்தின் சில முட்டாள்த் தனமான சில கட்டுபாடுகளுக்கு கட்டுப்படாததால் அவன் பலமுறை தண்டிக்கப் பட்டான். அவனுடைய ஒரு செயலை அச்ச்மூகம் அன்று மன்னிக்கத் தயாராக இல்லை. உச்சபட்ச தண்டனையாக அவனுக்கு மரணதண்டனை என்று அன்று தீர்மானிக்கப்பட்டது. அவன் எந்த பாம்புகளுக்கு நெருக்கமாக இருந்தானோ, அந்த பாம்புகளாலேயே அவனுக்கு மரண தண்டனை என்று அப்போது தீர்மாணிக்கப்பட்டது.
      அசைய முடியாதபடி அவனை ஒரு மரத்துடன் பினைத்தார்கள். கருநாகம் ஒன்றை உசுப்பி அவனைக் கடிக்க வைத்தார்கள். அவனை சாகவிட்டு விலகிப்போனார்கள். உடலில் விஷம் பாய்ந்ததால், அவன் ரத்தம் அடர்த்தியாகிக் கொண்டேபோனது. ரத்தத்தை உடலின் பல்வேறு பாகங்களுக்கு பம்ப் செய்ய முடியாமல் இதயம் திணறியது. மூச்சு முட்டியது.
      அத‌ற்க்கு முன்பாக அவன் சுவாசத்தைக் கவணித்ததில்லை. தன்னிச்சையாக நட‌ந்தேரும் எந்த விசயத்தையும் மனிதன் கவனிப்பதில்லை. அதில் தடுமாற்றம் ஏற்ப்பட்டால் தான் அதன் முக்கியத்துவம் அவனுக்கு புரிகிறது.
      மரணத்தின் வாயிலில் இருந்த பில்வா, வேறு ஏதும் செய்ய இயலாததால் தனது திண‌றும் முச்சை கவணிக்கத் தொடங்கினான். உள்ளே போவதும் வருவதுமாக இருந்த காற்று, அந்த உடலுடன் உயிரை பிணைத்து வைதிருந்ததை அப்போதுதான் அவன் கவனித்தான்.
      அது ஒருவகை தியானம் என்று தெரியாமலேயே அவன் அதில் ஈடுபட்டான். அடங்கும் மூச்சை அவன் இடைவிடாமல் மிகவும் விழிப்புணர்வுடன் கவனித்தான். அவனுள் பெரும் மாற்றம் நிகழ்ந்தது, முக்தியின் பாதையில், ஆனந்தத்தின் திசையில் செலுத்தப்பட்டுவிட்டான். விஷம் என்று நினைத்து அவனுக்கு செலுத்தப்பட்டது பேரமிர்தமாக மாறிற்று.

Saturday, May 7, 2011

விழிப்புணர்வு ஆனந்தம்

       உங்கள் வாழ்க்கையில் பல எல்லைகளை வகுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பகல்பொழுதைவிட இரவுதான் உங்களுக்கு அதிகமாக பிடித்திருக்கிறது. தூக்கத்தில்இருந்து விழித்து பகல்பொழுதை எதிர்கொள்வதென்றால் உங்களை அறியாமலேயே பல வழிகளில் தயங்குகிறீர்கள்.
      ஏதாவது ஒரு நாள் காலையிலேயே எழுந்து நண்பர்களுடன் பிக்னிக் போக முடிவெடுத்தீர்கள் என்றால், அன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன்பே ஆர்வத்துடன் எழுந்துகொள்கிறீர்கள். முந்தைய நாளே விழிப்புணர்வுடன் முடிவெடுத்து விடுகிறீர்கள். நாளை எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறீர்கள்.
      மற்ற நாட்களில் போர்வையால் முகம் மூடி படுத்திருக்கிறீர்கள். சூரிய உதயத்தை நீங்கள் விரும்பவில்லை. ஏனெனில் அது தனியாக வருவதில்லை. அதனுடன் விலைவாசி பிரச்னை, வீட்டுப்பிரச்னை, அலுவலக பிரச்னை, ஏன்... முழு உலகமே ஒட்டுமொத்தமாக வருகிறது. எனவே உங்களை அறியாமலேயே சூரிய ஒளியை தவிர்க்க விரும்புகிறீர்கள்.
      ஆனால், ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆன்மிக சாதகர்களைப் பொறுத்தவரை குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு உடற்பயிற்சி செய்வதுபோன்ற வசதியற்ற வேலைகளை கண்டிப்பாக செய்ய வேண்டியிருக்கிறது. நீங்கள் பசியாக இருக்கும்போது ஓடிச் சென்று அள்ளி வாயில் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதுதான் உங்கள் இயல்பாக இருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் விழிப்புணர்வுடன் நீங்கள் ஒரு முடிவெடுக்கிறீர்கள். ""நான் மிகவும் பசியாக இருக்கிறேன். என்றாலும் நான் இப்போது சாப்பிடப் போவதில்லை. இந்த உணவு எனக்குக் கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டே சாப்பிடுவேன்,'' என்று பசியிருந்தும் சாப்பிடாமல் இருக்க வேண்டுமானால் அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
      வாழ்வின் மிகவும் கடினமான நேரங்களில் விழிப்புணர்வு பற்றி நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். விழிப்புணர்வுடன் இருங்கள் என்று சொல்லும்போது ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். யாரோ ஒருவர் உங்களை திட்டுகிறார், திருப்பி நீங்கள் அவரை திட்டுவதற்கு விழிப்புணர்வு தேவையில்லை. ஆனால் அந்த நேரத்தில் அமைதியாக இருப்பதற்கு மிகவும் விழிப்புணர்வு தேவைப் படுகிறது இல்லையா? எனவே பிடிக்காத செயல் செய்வது உங்களுக்கு மிகுந்த விழிப்புணர்வை தரும்.
   உடல்நிலையில், சுவாச நிலையில், சக்தி நிலையில் மற்றும் உணர்ச்சி நிலையில் இப்படித்தான் விழிப்புணர்வு கற்றுக்கொள்ளவேண்டும். இப்படிக் கற்றுக்கொள்ளும் நிலையில் பொருட்களை தனித்துப் பார்க்கும்படி விழிப்புணர்வு உண்டாகிறது. ஒன்றின்மீது, மேலும் மேலும் நீங்கள் விழிப்புணர்வைக் கொண்டுவரும்போது - உடல்நிலையில் கொண்டு வரும்போது நீங்கள் வேறு, உடல்வேறு என்பதைப் பார்க்கமுடியும். மனநிலையில் கொண்டு வரும்போது நீங்கள் வேறு, மனம் வேறு என்பதைப் பார்க்க முடியும்.
      உணர்ச்சி நிலையில் கொண்டு வரும்போது நீங்கள் வேறு, உங்கள் உணர்ச்சிகள் வேறு என்பதை பார்க்க முடியும். எனவே "நீங்கள்' எனப்படுவதற்கு ஒரு வடிவம் இல்லை என தெரிகிறது. நீங்கள் உண்மையில் வடிவமற்றவர் என்பது உங்கள் வாழ்க்கையைப் பொறுத்தவரை இன்னமும் உண்மை இல்லாததாக இருக்கலாம். வடிவமற்றது என்றால் எல்லையற்றது என்றும் சொல்லலாம். வடிவம் என்பது எல்லை. எனவே வடிவமற்றது என்பது
எல்லையற்றது. விழிப்புணர்வை பயிற்சி செய்யச்செய்ய காலப்போக்கில் வடிவம் தனது வலிமையை இழக்கத் துவங்கும். அது உறுதி.