Friday, May 23, 2014

வாழ்க்கை முறைக்கான கடிகாரம்! ஆனந்தம்



     
      நாம் தன்னிறைவுடன் வாழ்வதற்கு நம் உடலும் ஒத்துழைக்க வேண்டும். உடல் நிலை சீராக இருந்தால் நம் மனமும் சீராக இருக்கும். நாம் எண்ணியதை முடிக்க முடியும்! ஆம் ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்க முடியும். எனவே உடலைக்காத்து மனதைப்போற்றுவோம். உடல் ஆரோக்கியம் தான் நமக்கு நம்பிக்கையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும் சக்திகளிளேயே முதன்மையானதாகும்.

      நம் உடல் ஒவ்வொரு பாகத்திற்கென த‌னித்தனியே நேரத்தை ஒதுக்கிக்கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது ஒவ்வொரு உறுப்புக்கும் இரண்டு மணி நேரத்தை ஒதுக்கிக்கொண்டு வேலை செய்கிறது. அந்த இரண்டு மணி நேரம் முடிந்தவுடன், தன் நேரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.அதன் அட்டவணை இதோ....

      விடியற்காலை 3.00 ‍- 5.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - நுரையீரலின் நேரம் - இந்த நேரத்தில் சுவாசப்பயிற்ச்சி செய்து காற்றின் மூலம் வரும் ப்ராணசக்தியை உடலில் சேகரித்தால் ஆயுள் நீளும். தியானம் செய்ய ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

      விடியற்காலை 5.00 ‍- 7.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - பெருங்குடலின் நேரம் - கலைக்கடன்களை இந்த நேரத்தில் முடித்து விட வேண்டும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகஅதிகமாக உள்ள நேரமும் இதுவே. உடற்ப்பயிற்ச்சி செய்ய ஏற்ற நேரமும் இதுவே.

      காலை 7.00 ‍- 9.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - வயிற்றின் நேரம் - இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு செரிமானமாகி உணவு உடலில் ஓட்டும்.

      காலை 9.00 ‍- 11.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - ம‌ண்ணீர‌லின் நேரம் - காலையில் சாப்பிட்ட‌ உணவை மண்னீரல் செரித்து ஊட்டச்சத்தாகவும் இரத்தமாகவும் மாற்றுகிர நேரம். இந்த நேரத்தில் தண்ணிர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

      முற்பகல் 11.00 ‍- 1.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - இதயத்தின் நேரம்  - இந்த நேரத்தில் அதிகமாக பேசுதல், கோபப்படுதல், அதிகமாக படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது.

      பிற்பகல் 1.00 ‍- 3.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - சிறுகுடலின் நேரம் - இந்த நேரத்தில் மிதமான மதிய உணவை உண்டு சற்று ஓய்வெடுப்பது நல்லது

      பிற்பகல் 3.00 ‍- 5.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - சிறுநீர்ப்பையின் நேரம் - நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்

      மாலை 5.00 - 7.00 மணி - சிறுநீரகங்களின் நேரம் - பகல் நேர பரபரப்பில் இருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம் செய்ய வழிபாடுகள் செய்ய இதுவே உகந்த நேரம்

      இரவு 7.00 - 9.00 மணி - பெரிகார்டியத்தின் நேரம் - பெரிகார்டியம் என்பது இதயத்தை சுற்றியிருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் ஷாக் அப்சார்பர். இதுவே இரவு உணவுக்கு உகந்த நேரம்.

      இரவு 9.00 - 11.00 மணி - டிரிப்பிள் கீட்டர் நேரம் - டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல. உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச்செல்வது நல்லது.

      இரவு 11.00 - 1.00 மணி - பித்தப்பை இயங்கும் நேரம் - இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை குறைபாடு ஏற்படும்.

      இரவு 1.00 - 3.00 மணி - கல்லீரல் இயங்கும் நேரம் - இந்த நேரத்தில் நீங்கள் உட்கார்ந்திருக்கவோ, விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுதும் ஓடும் இரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்தப்பணி பாதிக்கப்பட்டால் மறுநாள் முழுது நீங்கள் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்

      இந்த அட்டவணை மூலம் தெரிந்து கொண்டதை உபயோகப்படுத்தி, சாப்பாடு, தூக்கம், வ்ழிப்பு, வேலை இவற்றை சரியான நேரத்தில் செய்து ஆரோக்கியமான் உடலைப் பெற்று ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்! வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment