Tuesday, November 6, 2012

ஆன்மீகம் ஓர் உயரிய தற்கொலை? ஆனந்தம்


     
      பொதுவாக, பழங்குடியினர் சமுதாயங்களில் தற்கொலைகள் மிகக்குறைவாகவே நிகழ்கின்றன. உங்களுடைய பிழைப்புக்கே நீங்கள் கஷ்டப்படும் போது, வாழ்க்கையை எப்படி முடித்துக் கொள்வது என்று சிந்தனை செய்யமாட்டீகள். வளர்ச்சியடைந்த சமூகங்களில் தான் தற்கொலைகள் அதிகம் நிகழ்கின்றன. அல்லது சமூகத்தின் ஒருபகுதி வளமாக இருந்து ஒருபகுதி வறுமையில் இருக்கும் போது தற்கொலைகள் நிகழ்கின்றன. முழுசமூகமே ஏழ்மையில் இருக்கும் போதோ அல்லது வளம் குறைவாக இருக்கும் போதோ அங்கு தற்கொலைகள் நிகழ வாய்பில்லை ஏனென்றால் அவர்களுடைய முழுநோக்கமும் உயிர் வாழ்வதைப் பற்றி தான் இருக்கும்.
      நீங்கள் ஏழ்மையில் இருக்கும் போது நம்பிக்கை என்பது அங்கே பெரிய விசயமாக இருக்கின்றது. தெருவில் வசிக்கும் ஏழை மனிதர் ஒருபரிசுச் சீட்டை வாங்கினால், அதனால் அவருக்கு ஒரு நம்பிக்கை வந்து விடுகின்றது. அந்த பரிசு விழுந்தால் அதை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றார். பரிசு முடிவுகள் வெளிவந்து கிடைக்க வில்லைஎன்றால் இருக்கவே இருக்கின்றது அடுத்த பரிசுச்சீட்டு என்று அடுத்ததின் மேல் நம்பிக்கை வைக்க ஆரம்பித்துவிடுகின்றார். இதனால் அவர்கள் தொடர்ந்து பரிசுச்சீட்டு வாங்கிக் கொண்டே இருக்கின்றனர். பரிசு முடிவுகள் வரும் முன்பே கூட இன்னொன்றை அவர்கள் வாங்கிவிடுவர்.
      ஆனால் ஒரு பணக்காரருக்கு அவர் வாழ்வில் அந்த பரிசுத்தொகை ஏற்கனவே கிடைத்துவிட்டது. அது அவருக்குள் எந்த ஒரு பெரிய மற்றத்தையும் ஏற்ப்படுத்தவில்லை என்று அவருக்குத் தெரியும். எனவே அவருக்கு ஆழமான அவந‌ம்பிக்கை உணர்வு தான் இருக்கும். உங்களுக்கு அவனம்பிக்கை தோன்றிவிட்டால் ஒன்று தற்கொலை எண்ணம் தோன்றிவிடும் அல்லது ஆன்மீகவாதிகள் ஆகிவிடுவீர்கள். இரண்டே வாய்புகள் தான்.
      ஆன்மீகம் என்பது உங்களுக்குள் இருக்கும் "நான்" என்கிற எண்ணத்தை, உங்கள் அகங்காரத்தை அழிப்பது. இதுவும் ஒருவகை தற்கொலை தான். ஆனால் இதில் பொருள் தன்மையை தாண்டிய பரிமாணங்களைப் பற்றிய விழிப்புணர்வு வந்துவிட்டது. ஆகவே நீங்கள் வேறு தளத்தில் தற்கொலை செய்ய முயர்ச்சிக்கிறீர்கள். உடலை நன்றாக வைத்துக் கொண்டு முற்ரிலும் வேறொறு தளத்தில் தற்கொலை செய்ய முயல்கிறீர்கள். உங்களுக்கு அவநம்பிக்கை ஏற்ப்படும் சமயம், உங்கள் அறிவுக்கு உடலைத் தவிர வேறொன்றும் தெரியாதபோது உடலை அழித்துக் கொள்ள முற்படுகிறீர்கள். உங்கள் அறிவு மேல்நிலை அறிவானால் ஆன்மீகத்தின் மூலமாக தற்கொலைக்கு முயல்கிறீர்கள். அப்படியானால் ஆன்மீகம் என்பது ஓர் உயர்ந்த நிலை தற்கொலை.
      பழங்குயினர் சமூகம் போலவே மிருக இனங்களில் தற்கொலைகள் மிகக்குறைவு. உதாரணமாக பாம்புகள் தற்கொலை செய்து கொள்கின்றன. தற்கொலை என்றால் விரக்தியின் காரணமாக தற்கொலை அல்ல, பாம்புகளுக்கு தங்களுடைய சக்தி நிலை பற்றிய விழிப்புணர்வு உண்டு. இந்த விழிப்புணர்வு "வியான பிராணா" என்னும் பரிணாமத்திலிருந்து வருகிறது. எனவே பாம்புகளுக்கு தம் உடலைப் பற்றியும், உடலின் செயல்படுகளைப் பற்றியும் விழிப்புநிலை மிகாதிகமாக இருக்கிறது.
      யோகாவில் பாம்புகளைப் பலவிதமான குறியீடுகளாக பயன்படுத்தக் காரணம், அதற்குத் தன் உடலைப் பற்றி நன்றாகத் தெரியும் என்பதால் தான். அதனுடைய சக்தி வடிந்து மிகக்குறைந்த நிலைக்கு வரும்போது, அவை ஓரிடத்தை தேர்ந்தெடுத்து அங்கு உணவருந்தாமல் அமர்ந்துவிடும். உணவு தேடுவதாலோ அல்லது வேறு வழிமுறைகளிலோ அதன் உடல் போஷாக்கு பெறப்போவதில்லை என்று அதற்க்குத் தெரியும். எனவே உணவு உண்ணாமல் அங்கேயே உட்கார்ந்து 7 முதல் 12 நாட்களுக்குள் அதுதன் உயிரை விட்டுவிடுகிறது. தன் வாழ்க்கையை அது நீட்டிப்பதற்கு அது முயர்சிக்கவில்லை. வாழ்க்கை முழுதும் அது உயிர் வாழ்ப் போராடினாலும். தன் சக்தி ஒருகுறிப்பிட்ட நிலையை அடைந்து விட்டன என்று தெரிந்துவிட்டால், பிறகு அது உண்ணமறுத்து உயிரை விடுகின்றது. இப்படித்தான் மனிதர்களும் உயரிய நிலைக்கு வரவேண்டும். வாழ்க வளமுடன்!

4 comments:

Massy spl France. said...

உங்களது கருத்து கொஞ்சம் சிந்திக்க வைத்தாலும் மிகுந்த ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தான் அளிக்கிறது . முடிவில்  சொல்லப்போனால்  உடல் மன வலிமை அற்றவர்கள் வாழ்க்கைப் பாதையில் இருந்து அகன்று இளைய சமுதாயத்திற்கு வழி விட்டு விலகிக் கொள்வதுதான் சிறந்தது என கொள்ளலாம். இறுதியில் மரணம் ஒன்றுதான் இவர்களுக்கு பூரண விட்டுதலை. இந்த பக்குவத்தை அடையும்  நிலைதான்  ஆன்மீகம் என அழைக்கப்படுகிறது.

Swami said...

arumayaana padhivu. sariyaana sindhanai.

Sivamjothi said...

கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

தவம் செய்ய வேண்டும்!!!

தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல!

தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல! தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!

நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

லிங்க்ஐ படியுங்க.

http://tamil.vallalyaar.com/?page_id=80


blogs

sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in

Unknown said...

உங்களது ஆன்மீக தகவல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. நான் சமீபத்தில் தமிழக கோவில்கள் பற்றி தேடி கொண்டிருக்கும் போது http://www.valaitamil.com/temples.php என்ற இணையதளத்தை பார்த்தேன். அதில் தமிழக கோவில்களின் அறிய தொகுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது.

Post a Comment