Wednesday, October 24, 2012

நல்லவர்கள் ஏன் துன்பப்படவேண்டும்? ஆனந்தம்



   
      நல்லவர்கள் துன்பப்படவேண்டும் என்பது இயற்க்கை விதி அல்ல.
      நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதற்கான பலன் என்பது இயற்க்கை வகுத்த நியதி. தவறான காரணங்களுக்காகச் சரியான விஷயங்களைச் செய்தால், சரியான விளைவுகள் தான் ஏற்படும். அதே போல் சரியான காரணங்களை சொல்லிக் கொண்டு தவறான செயல்களைச் செய்தால், அவற்றுக்கான தவறான விளைவுகளை சந்தித்து தான் ஆக வேண்டும். அப்படித் தான் இந்த பிரபஞ்சம் அமைக்கப்பட்டிருக்கிறது.
      மிக நல்ல எண்ணங்கள் கொண்டு இருப்பவர்களாக இருக்கலாம் ஆனால், அவர்களும் முட்டாள் தனமான காரியங்களில் ஈடுபட்டால், துன்பப்பட்டு தான் ஆக வேண்டும் என்ன செய்வது?
      அதே நேரம் நீங்கள் எவ்வளவு மனிநேரம் செலவழித்து செயல் படுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. எவ்வளவு நேரம் உங்கள் திறமையை பயன்படுத்தி சரியான காரியங்களைச் செய்தீர்கள் என்பது தான் உங்கள் வெற்றியை தீர்மானிக்கிறது.
      உங்களை நீங்கள் குறையாக நினைத்துக் கொண்டு செயல்களைச் செய்தால் நீங்கள் செய்ய முடிந்ததைக்கூட நிறைவாக செய்து முடிக்க முடியாது. அப்புறம் எப்படி வெற்றி கிடைக்கும். வாழ்க வளமுடன்!

1 comment:

ஆர்.வி. ராஜி said...

ஹ்ம்ம்ம். அதுவும் சரிதான்.

Post a Comment