Wednesday, September 5, 2012

"கடவுளைத் தொலைத்துவிட்டார்கள்?" ஆனந்தம்


      ஓர் ஊரில் குறும்புக்கு பெயர் போன இரண்டு சிறுவர்கள் இருந்தனர். வம்பை விலைக்கு வாங்குவது அவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. பெற்றோர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்டபாடில்லை. எனவே பெற்றோர் அவர்களை ஒரு மதகுருவிடம் அழைத்துச் சென்றனர். முதலில் இளையவனை மட்டும் அழைத்துச் சென்று மதகுருவிடம் விட்டுவிட்டு வந்தனர்.
      குறும்பு கார‌ச் சிறுவனை மேலும் கீழும் பார்த்த மதகுரு, நாடக பாணியில் அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தார். "எப்படியாவது கடவுள் அவனுள் தான் இருக்கிறார் என்று உணர்த்திவிட்டால், அவன் குறும்புத்தனம் எல்லாம் அடங்கிவிடும்!" என்று நினைத்தார்.
      பாதி நடையில் நின்று விட்டு கணீர் குரலில், "எங்கே கடவுள்?" என்று கேட்டார். அந்த சிறுவன் மொத்தமாக குழம்பிப்போய் கடவுள் அந்த இடத்தில் தான் எங்கோ இருக்கிறார் போலும் என்று நினைத்து அங்கும் இங்கும் கண்களால் தேடினான்.
      "அவர் உண்ணுள் தான் இருக்கிறார் என்று சிறுவனுக்கு உணர்த்த, மேஜையின் குறுக்கே சாய்ந்து கொண்டு, "கடவுள் எங்கே?" என்று மறுபடியும் கேட்டார் மதகுரு. சிறுவன் இன்னும் குழம்பிப்போய் மேஜைக்கு கீழே குணிந்து கடவுளைத் தேடினான். ஆனால் மதகுரு அவனுடைய இதயத்தை சுட்டிக்காட்டி, "கடவுள் எங்கே?" என்று திரும்பக் கேட்டார். கடவுள் அங்கு தான் இருக்கிறார் என்பதை அந்த பையனுக்கு புரிய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.
      அவ்வளவு தான் அந்த சிறுவன் கதவு தாள்ப்பாளைத் திறந்து கொண்டு தன் அண்ணன் இருக்கும் இடத்திற்க்கு ஓட்டமாய் ஓடிவிட்டான். அங்கே அண்ணனிடம், "அண்ணா! நாம் பெரும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டுவிட்டோம்!, அவர்களுடைய கடவுளைத் தொலைத்து விட்டார்கள், அதை நாம் தான் திருடினோம் என்று நினைக்கிறார்கள்!" என்றான்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா..ஹா. அருமை சார்... பல பேர் அப்படித்தான் தேடுவதென்பதோ உண்மை... நன்றி... வாழ்த்துக்கள்...

Post a Comment