Showing posts with label வைராக்கியம். Show all posts
Showing posts with label வைராக்கியம். Show all posts

Tuesday, November 23, 2010

நம்பிக்கை வெளிச்சம்1:

     அந்த சிறுவனுக்கு பன்னிரெண்டு வயதாகும் போது, மோசமான போலியோ தாக்கியது...
     "உங்கள் மகன் இந்த இரவைத் தாண்டுவது கஷ்டம்" என்று தன் பெற்றோரிடம் மருத்துவர் சொல்வதைக் அவன் கேட்டான். அவன் அம்மா அழுகையின் உச்சத்துக்கு போனாள். அந்த இரவைக் கடந்து விட்டால் அம்மாவின் துயரம் சற்றே தீரும் என்று அவன் நம்பினான், இரவு முழுக்க தூங்காமல் விழித்திருந்தான்.
     விடிந்ததும் அம்மாவை எழுப்பி, "அம்மா, பாருங்கள் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்! என்று அம்மாவைக் கட்டிக்கொண்டான்.
     அம்மாவின் சந்தோசக் கண்னீர், அவன் மனதில் ஓர் வைராக்கியத்தை எற்படுத்தியது. அடுத்து வரும் ஒவ்வொர் இரவையும் இதே போல் கடக்க வேண்டும் என்று உறுதி பூண்டான். அவ்வாறே கடந்தான்……..
     கடைசியாக அவனை மரணம் வென்ற போது அவன் வயது எழுபத்திஐந்து.
     அந்த சிறுவன் - மில்டன் எரிக்சன்.
     மனிதனுக்கு அவனே தான் தடை என்பது பற்றிய அவர் எழுதிய ப‌ல புத்தகங்கள் இன்றைக்கும் பிரபலம். மனநல சிகிச்சைகளில் பல புதிய முறைகளை அறிமுகப்படுத்தி, உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.
     பன்னிரெண்டு வயதோடு முடிந்து போயிருந்தால், உலகம் மில்டன் எரிக்சனை இழந்திருக்கும்.
     புரிந்து கொள்ளுங்கள்.... உலகில் எந்த உயிரும் அர்தமில்லாமல் இவ்வுலகுக்கு வருவதில்லை.....

வாழ்க வளமுடன்!