Showing posts with label கணவன். Show all posts
Showing posts with label கணவன். Show all posts

Tuesday, October 16, 2012

மனைவியுடன் மகத்தான உறவு? ஆனந்தம்


     
      மிகவும் கஷ்டமான கேள்விதான். மனைவியுடன் சுமுகமான உறவு வேண்டும் என விரும்பினால், முதலில் அவரை உங்களுடைய மனைவி என்ற கண்ணோட்டத்தில் பார்பதை நிறுத்துங்கள். அவரை இன்னொரு மனித‌உயிராகப் பாருங்கள். இப்படிப் பார்த்தால் பிறகு அங்கே எந்தப் பிரச்சனையும் இருக்காது.
      "இவள் என் மனைவி" என்று நீங்கள் பார்க்கத்துவங்கும் கணத்திலேயே அவள் உங்களின் சொத்து என்றாகிவிடுகிறது. உங்களுக்கு சொந்தமான‌ சொத்து என்றாகியவுடனேயே  உங்களின் அனுகுமுறை வேறாகிவிடுகிறது. ஒருவரை உங்களின் உரிமைப் பொருள் என்ற அளவிலே குறைத்துவிடும் பொழுது அவருடன் இனைந்து வாழும் அழகு மறைந்து விடுகிறது.
      வேறு யாரோ ஒருவருக்கு அவள் அற்புதமானவராகத் தெரியலாம். ஆனால் உங்களின் கண்களுக்கு வேறுவிதமாகத் தெரிவாள். அவளை உங்களின் உரிமைப் பொருளாக பார்க்கும் காரணத்தால் அவளுடைய‌ அற்புதத்தன்மை தெரிவதில்லை. உண்மையில் யாரையும் நீங்கள் உரிமை கொண்டாட முடியாது. உங்களுடைய மனைவியோ, கணவரோ, குழந்தையோ யாருமே உங்களின் உரிமை கிடையாது. இந்த நிமிடத்தில் அவர் உங்களுடன் இனைந்திருப்பதை கொண்டாடி மகிழுங்கள்.
      "இந்த உயிர் என்னோடு இனைந்திருப்பதை தேர்வு செய்திருப்பது எவ்வளவு அற்புதமான விஷயம்" என்று நீங்கள் மனதார உணர்ந்தால் மட்டுமே கொண்டாடும் தன்மை உங்களுக்கு வரும். மாறாக, "இவள் என் மனைவி, எப்படியும் எனக்கு  உடமையானவள், என்னிடம் மட்டுமே இருக்க வேண்டியவள்" என்று நீங்கள் நினைக்கும் கணத்திலேயெ பாராட்டும் கொண்டாடுதலும் கானாமல் போய் விடும்.
      இரண்டு உயிர்களுக்கிடையே பாராட்டும், கொண்டாடுதலும் கானாமல் போன பிறகு அவர்களிடையே இருக்கக்கூடிய உறவு நிலையில் என்ன அழகு இருக்க முடியும்? கண‌வரோ, மனைவியோ எந்தத் தன்மையுடன் இருக்கின்றாரோ அதே தன்மையுடன் மதிக்கவும், கொண்டாடவும் முடியவில்லை என்றால், பிறகு அருமையான உறவு முறை அங்கே எப்படி இருக்க முடியும்?
      ஆனால் அவரை இன்னோரு உயிராக நீங்கள் மதிக்க ஆரம்பித்தால் அங்கே மிகவும் ஆழமான அழகான உறவுமுறை மலரும். உங்களுடைய வாழ்க்கைக்குள் வந்த பெண்ணை "இதோ, இங்கே இருப்பது இன்னோரு சக உயிர்" என்ற அளவில் வெறுமனே பாருங்கள். அப்போது இவ்வொரு கணமும் அங்கு கொண்டாட்டம் மட்டுமே இருக்க முடியும்.
      அவளுக்கு வேறு வழியே கிடையாது என்ற வழியை நீங்கள் சமூக ரீதியாக நீங்கள் உருவாக்க முயற்ச்சிக்கலாம். ஆனால் அவளுக்கும் சில வழிகள் இருக்கிறது. எதுவுமே செய்ய முடியாத நிலையில் சிலர் தன்னை மாய்த்துக் கொண்டாவது கணவனுக்கான உரிமையை மறுத்திருக்கிறார்கள், இல்லையா? எனவே தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
      அப்படி யாரோ ஒருவர் சமூக ரீதியாக உங்களுடன் பினைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றால் அது அவர்களின் விருப்பத்தின் பேரில் தான் தொடர்ந்து உங்களுடன் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே அவர் விருப்பத்திறக்கு நன்றி கூறி அவரையும் அவரது அருகாமையும் மகத்தானதாக கொண்டாடுங்கள். இப்படி உறவை மதிக்கவும், கொண்டாடவும் தெரிந்திருந்தால் அங்கே மேன்மையான‌தொரு உறவு மட்டுமே இருக்கமுடியும்! வாழ்க வளமுடன்!

Sunday, January 8, 2012

கணவன் மனைவி-ஆனந்தம்


      குடும்பம் என்பது வாழ்க்கைக் கலைகள் அனைத்தையும் கற்க ஏற்ற ஓர் சர்வ கலாசாலையாகும். குடும்பத்தில் ஒழுங்கும் அமைதியும் நிலவ முதலில் முயலுங்கள். இந்த வெற்றி நீங்கள் போகும் இடங்களிளெல்லாம் இனிமை தரும் அலைகளாகப் பயன் தரும்.
      கணவன் மனைவி உறவில் அன்பும் ஒற்றுமையும் திகழ உங்கள் முயற்சியெல்லாம் முழுமையாகப் பயனாகட்டும். இதன் விளைவு உங்கள் குழந்தைகள் வாழ்வில் பல நலன்களை விளைவிக்கும். குழந்தைகள் எதிரில் கணவன் மனைவிக்கிடையே ஒருவரை மற்றவர் மதிப்பளித்துப் பேசுங்கள். குழந்தைகள் உங்கள் இருவருக்கும் மதிப்புத்தருவார்கள். அவர்கள் வாழ்விலும் ஒழுக்கம் உயரும்.
குழந்தைகள் மத்தியில் தம்பதிகள் சண்டையிடுவதோ, ஒருவரை ஒருவர் மதிப்பில்லாமல் பேசுவதோ இழித்துக் கூறுவதோ, தீய பதிவுகளை அக்குழந்தைகள் மனதில் ஏற்படுத்தி விடும்.
      தன்னடக்கம், பண்பாடு இல்லாத தம்பதிகள், ஒழுக்கம் மேன்மையும் உடைய மக்களைப் பெற முடியாது. மக்கள் செல்வம் குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் நலம் பயக்க வல்லது. அச்செல்வத்தைப் போற்றிக் காப்பது இல்லறத்தாரின் முக்கியமான கடமையாகும்.
      நன்மைகளையெல்லாம் அடைய வேண்டுமென்பது நல்ல விருப்பம்தான். ஆனால் தீமைகளை ஒழிக்கவில்லையானால் எப்படி நன்மைகள் கிடைக்கும், நிலைக்கும்? என்ன நலன் வேண்டுமோ அந்த நலம் பெற ஏற்ற செயல்களைப் பின்பற்றுங்கள், விளைவு நிச்சயம்.

Wednesday, September 28, 2011

வேலையிலேயே மூழ்குதல் ஆனந்தம்


      வேலையிலேயே மூழ்கி கிடப்பவனுக்கும் தங்களது வேலையில் முழுமையாக இருப்பவனுக்கும் என்ன வித்தியாசம்
      இந்த வேற்றுமை மிகப் பெரிது. வேலையில் முழ்கி இருப்பவன் தனது வேலையில் முழுமையாக இல்லை. வேலை வெறி பிடித்தவன் வேலைக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறான். அவனால் மௌனமாக அமைதியாக உட்கார முடியாது. எதையாவது செய்தாக வேண்டும். அது தேவையா இல்லையா அது கேள்வியே கிடையாது.
      எப்படி மக்கள் போதைக்கு அடிமையாகி இருக்கிறார்களோ அது போல வேலை வெறி பிடித்தவன் வேலைக்கு அடிமையாகி கிடக்கிறான். வேலைதான் அவர்களது போதை. அது அவர்களை ஆக்ரமித்திருக்கிறது. அது அவர்களது கவலையிலிருந்து அவர்களை நகர்த்தி வைத்திருக்கிறது. அது அவர்களது பதட்டத்திலிருந்து அவர்களை நகர்த்தி வைத்திருக்கிறது. அது மற்ற போதைகளைப் போலவே உனது கவலை, பயம், பதட்டம், வேதனை ஆகியவற்றை முழ்கடித்து விடுகிறது.
      அதனால் வேலைவெறி பிடித்தவர்கள் தியானத்திற்கு எதிரானவர்கள். ஒவ்வொரு பழக்கமும் நீ தியானிப்பவனாக மாறுவதை தடுக்கக் கூடியது. எல்லா பழக்கங்களும் விட வேண்டியவையே.
      உனது வேலையில் நீ முழுமையாக இருப்பது என்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம். வேலையில் முழுமையாக இருப்பது ஒரு பழக்கமல்ல. அது ஒருவிதமான தியானம். நீ உனது வேலையில் முழுமையாக இருக்கும் போது உனது வேலை நேர்த்தியாக அமையக்கூடிய சாத்தியமுள்ளது. அந்த நேர்த்தியான வேலையின் மூலம் ஒரு சந்தோஷம் உன்னுள் எழும்.
      உன்னால் வேலையில் முழுமையாகவும் நேர்த்தியாகவும் இருக்க முடிந்தால், வெறுமனே உட்கார்ந்திருக்கவும் முழுமையான மௌனத்தில் அமரவும் உன்னால் முடியும். எப்படி முழுமையாக இருப்பது என்று உனக்குத் தெரியும். உனது கண்களை மூடிக் கொண்டு முழுமையாக உள்ளே இருப்பாய். முழுமையாக வாழ்வது எப்படி என்பதன் ரகசியம் உனக்குத் தெரியும்.
      அதனால் வேலையில் முழுமையாக இருப்பது தியானத்தில் உதவி செய்யும். வேலை வெறி பிடித்தவனால் தியானம் செய்ய முடியாது. அவனால் ஒரு சில நிமிடங்கள் கூட அமைதியாக உட்கார்ந்திருக்க முடியாது. அவன் அமைதியற்று இருப்பான். அவன் தனது நிலையை மாற்றிக் கொண்டேயிருப்பான். அவன் எதையாவது செய்வான். இந்த பாக்கெட்டில் அல்லது அந்த பாக்கெட்டில் பார்ப்பான். அதில் எதுவும் இல்லையென அவனுக்குத் தெரியும். அவன் தனது கண்ணாடியை எடுத்து சுத்தம் செய்து போட்டுக் கொள்வான். அது சுத்தமாகத்தான் இருக்கிறதென்று அவனுக்குத் தெரியும்.
      தனது வேலையில் முழுமையாக இருக்கும் மனிதன் வேலை வெறி பிடித்தவனல்ல. அவன் முழுமையாக இருப்பான், எதிலும் முழுமையாக இருப்பான். அவன் காலாற நடந்தாலும் சரி, தூங்கினாலும் சரி, அதில் அவன் முழுமையாக இருப்பான். அவன் நடக்கும் போது வெறுமனே நடப்பது மட்டுமே வெறெதுவும் இல்லை. வேறு நினைப்பு எதுவும் இல்லை. கற்பனை செய்வதில்லை. தூங்கும் போது கனவு காண்பதில்லை. தூங்கும் போது தூக்கம் மட்டுமே. சாப்பிடும்போது சாப்பிடமட்டுமே செய்வான்.
நீ அப்படி செய்வதில்லை. நீ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய், உனது மனம் ஆயிரத்தோரு இடங்களுக்கு போய் வருகிறது.
      நான் பார்க்கிறேன். ஒரு படுக்கையில் இரண்டு பேர் மட்டும் இருப்பதில்லை. ஒரு கூட்டமே இருக்கிறது. கணவன் மனைவியுடன் கூடிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவன் சோபியா லாரன்ஸை நினைத்துக் கொண்டிருக்கிறான். மனைவி தனது கணவனுடன் கூடுவதில்லை. அவள் முகம்மது அலியை நினைத்துக் கொள்கிறாள். ஒவ்வொரு படுக்கையிலும் நீ ஒரு கூட்டத்தை காணலாம். ஒருவரும் எந்த செயலிலும் முழுமையாக இருப்பதில்லை. – கூடுவதிலும் கூட.
      செய்யும் செயலை முழுமையாக செய். இல்லாவிடில் செய்யாதே. முழுமையாக இரு. – அப்போது உனது வாழ்வு முழுவதுமே தியானமாகி விடும்.