Monday, September 17, 2012

கால நிர்வாகம்(Time Management) ஒரு பார்வை! ஆனந்தம்


      அதை கால நிர்வாகம்(Time Management) என்று பார்கக் கூடாது. முன்னுரிமை நிர்வாகமாக(Priority Management) தான் பார்க்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக காலத்தை பூமியே நிவகித்துக் கொள்கிறது. 24 மணி நேரம், 30 நாட்கள், 365 நாட்கள் இந்த கணக்குகளை எல்லாம் பூமியே பார்த்துக் கொள்கிறது. அதை நாம் கணக்கெடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
      கால நிர்வாகம் என்று சொல்லும் போது, எவ்வெளவு நேரம் துங்குவது, எவ்வளவு நேரம் பணிபுரிவது, எவ்வளவு நேரம் குடும்பத்துடன் செலவிடுவது போன்ற பலவிதமான செயல்பாடுகளுக்கு நேரம் ஒதுக்குவதைப் பற்றி சொல்கிறீர்கள். இவற்றைச் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட முறை என்று எதுவும் இல்லை. ஏனென்றால் முன்னுரிமைகள் ஒவ்வுருவருக்கும் மாறுபடும். உங்களுடைய முன்னுரிமைகள் தெளிவாக இருந்தால், நேரம் தானாகவே சரியாக பொருந்திவிடும்.
      காலத்தை நிர்வகிப்பதற்கு பதிலாக, வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட செயல்பாடு உங்களுக்கு எத்தனை தூரம் முக்கியமானது என்பதில் நீங்கள் தெளிவாக இருந்தால், காலம் அதுவாகவே உங்களுடன் அனுசரித்து செல்லும்.
      ஆனால் மக்களுக்கு எது எதை விட முக்கியம் என்பதில் எப்போதும் சந்தேகங்கள் தான் அதிகம். ஏனென்றால் அவர்கள் தாங்கள் செய்ய விரும்புவதை செய்வதில்லை, பதிலாக சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட செயல்களையே செய்கிறார்கள். எது தேவையோ அதை அவர்கள் செய்வதில்லை. உங்கள் வாழ்க்கையிலும், உங்களைச் சுற்றியும் நிகழ வேண்டிய முக்கியமானவை எது என்று கணித்து விட்டால், பிறகு எதைச் செய்ய வேண்டும், எதற்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்பதில் குழப்பமே இருக்காது.
...........................................வாழ்க வளமுடன்!.................................................

3 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையாக விளக்கியுள்ளீர்கள்
சட்டென முடிந்ததைப் போல இருந்தது
பயனுள்ள அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

முனைவர் இரா.குணசீலன் said...

அழகாகச் சொன்னீர்கள்..

அதிர்ஷ்டவசமாக காலத்தை பூமியே நிவகித்துக் கொள்கிறது.

உண்மை.

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கங்கள் அருமை... இன்னும் நிறைய சொல்லி இருக்கலாம்... நன்றி...

Post a Comment