Wednesday, September 28, 2011

எதிர் செயல்‍ பதில் செயல் ஆனந்தம்


      எதிர் செயல் எண்ணங்களிலிருந்து வருவது. பதில் செயல் புரிதலிலிருந்து வருவது. எதிர் செயல் கடந்த காலத்திலிருந்து வருவது. பதில் செயல் நிகழ்காலத்தில் இருப்பது. ஆனால் நாம் எப்போதும் எதிர் செயல்தான் செய்கிறோம். – நம்மிடம் எப்போதும் உள்ளே எதிர்செயல் ஏற்கனவே தயாராக உள்ளது.
      யாரோ எதையோ செய்கிறார்கள். நாம் ஏதோ பட்டன் அழுத்தப்பட்டது போல எதிர்செயல் செய்கிறோம். யாரோ உன்னை அவமதிக்கிறார்கள். – நீ கோபமடைகிறாய். அது முன்போ நிகழ்ந்தது. அது எப்போதும் அப்படித்தான் நடக்கிறது. அது ஒரு பட்டன் போல ஆகி விட்டது. யாரோ அதை அழுத்துகிறார்கள். நீ கோபமடைகிறாய். ஒரு வினாடி கூட காத்திருக்கவில்லை. ஒரு வினாடி நேரம் கூட சூழ்நிலையை பார்க்கவில்லை. ஏனெனில் சூழ்நிலை வேறுபட்டிருக்கலாம். உன்னை அவமதித்த ஆள் சரியாக கூறியிருக்கலாம். அவர் உன்னிடம் உன்னைப் பற்றிய உண்மையை கூறியிருக்கலாம். அதனால் நீ அவமானமாக உணர்ந்திருக்கலாம். அல்லது அவர் தவறாக இருக்கலாம். அல்லது அவர் ஒரு குசும்பு பிடித்த ஆளாக இருக்கலாம். ஆனால் நீ அவரைத்தான் பார்க்க வேண்டும்.
      அவர் சரியாக சொல்லியிருந்தால் நீ அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், ஏனெனில் அவர் உனக்கு ஒன்றை சுட்டிக் காட்டியிருக்கிறார். அவர் உன்னிடம் கருணை காட்டி இருக்கிறார். உண்மையை சொன்னதன் மூலம் உன் நெஞ்சுக்கு நெருக்கமாயிருக்கிறார். அது சுடலாம், ஆனால் அது அவர் தவறல்ல, அல்லது அவன் மடையனாக, அறியாதவனாக, உன்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் ஏதாவது சொல்லிருக்கலாம். அப்போது அங்கே கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் சொல்வது தவறு எனில் முற்றிலும் தவறான ஒன்றைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அதில் ஏதோ சிறிதளவு உண்மையில்லாவிட்டால் நீ அதனால் கடுப்படைய மாட்டாய். நீ அதைப் பார்த்து சிரிப்பாய். அதன் முட்டாள்தனத்தைப் பார்த்து அதன் பொருந்தாதன்மையினால் சிரிப்பு வரும். அல்லது அந்த ஆள் ஒரு முசுடு, அவர் எப்போதும் அப்படித்தான், எல்லோரையும் அவமதித்துக் கொண்டிருப்பார். அதனால் அவர் குறிப்பாக உன்னைப் பார்த்துகூறவில்லை. அவர் எப்போதும் போல சொல்லிக் கொண்டிருக்கிறார், அவ்வளவுதான். உண்மையில் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. அவர் அது போலத்தான்.
      உன்னைக் கவனி. மற்றவர்களை கவனி, மற்றவர்கள் எப்படி ஒரு இயந்திரத்தனமாக, சுயநினைவின்றி, தூக்கத்தில் நடப்பவர்கள் போல செயல்படுகிறார்கள் என்று பார்.
எதிர் செயல் மனதிலிருந்து எழுவது,
பதில் செயல் மனமற்ற நிலையிலிருந்து வருவது.

1 comment:

யூர்கன் க்ருகியர் said...

படித்ததும் மனது சிறிது ரிலாக்ஸ் ஆக உள்ளது !! :)

Post a Comment