Thursday, March 3, 2011

யோகா‍-தியானம் ஆனந்தம்

      எப்பொழுதும் இவ்வுலகம் மிகச்சிறந்த இடமாகத்தான் இருந்திருக்கிறது. இந்த உலகத்தைப் பற்றியோ, மற்ற கிரகங்களைப் பற்றியோ நமக்குத் தெரிந்த வகையில் மற்றா எல்லா கிரகங்களைக் காட்டிலும் இவ்வுலகமே மிகச்சிறந்த இடமாக இருக்கிறது.
      பேராசை கொண்டு இந்த முட்டாள்கள் தான் சிறிதும் விழிப்புணர்வில்லாமல், மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் என எண்ணிக் கொண்டு, மற்ற அனைத்து உயிர்களையும் கொன்று குவித்துக் கொண்டேயிருந்தார்கள். ஆனாலும், அந்த மனித குல நன்மை என்பது இன்றளவும் ஒரு கனவாகவே இருக்கிறது.
      ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மற்ற உயிர்களைப் படுகொலை செய்த பிறகும், பல மனிதப் படுகொலைகளுக்குப் பிறகும் மனிதகுல நன்மை என்பது இன்னும் தொலைதூரத்திலேயே உள்ளது. மனிதன் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுபிட்சமாக இருந்த அளவுக்கு இப்பொழுது இல்லை. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மூலம் நம் வெளிப்புறச் சூழ்நிலையை மிக அதிகமாக மாற்றியிருக்கிறோம். இருந்தும் மனிதகுல நன்மை அல்லது சுபிட்சத்தின் அருகில் நாம் இல்லை.
      ஆகவே, மனிதகுல நன்மைக்கு என்ன செய்யவேண்டும் எனக் கண்டுகொள்ள நமக்குள் பார்த்து கட்டாயமாக்க இதுவே சரியான நேரம். உங்கள் உள்தன்மை மாறினால்தான் உண்மையான நலம் ஏற்படும் என்பதை உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து நீங்கள் உணர முடியும்.
      தற்பொழுது உங்கள் வாழ்க்கையின் தரத்தை, நீங்கள் அணியும் உடையோ, உங்களின் கல்வித் தகுதியோ அல்லது உங்கள் குடும்பப் பின்னணியோ, வங்கிக் கையிருப்போ நிர்ணயிப்பதில்லை. இந்தக் கணத்தில் நீங்கள் உங்களுக்குள் எந்த அளவுக்கு அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறீர்களோ அது மட்டும்தான் உங்காள் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது.
      ஆகவே, யோகாவும், தியானமும் உங்கள் உள்தன்மையைக் கையாளுகிற அறிவியலின் ஒரு பரிமாணம் ஆகும். இங்கு நீங்கள் வாழ்க்கையை அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழ்வதற்குரிய சரியான உட்புறச்சூழலை உருவாக்குவதே அதன் முக்கிய நோக்கம்.
      வேறுவிதமாகச் சொன்னால் நீங்கள் மிகவும் நன்றாக வாழமுடியும். நீங்கள் அன்பாகவும், ஆனந்தமாகவும் மாறிவிட்டால் சுபிட்சமடைந்து விட்டதாக கருதுவீர்களா? ஆகவே, யோகா மற்றும் தியானம் என்று சொல்வது சரியல்ல. யோகா என எதைச் சொல்கிறீர்களோ அதில் தியானமும் அடங்கியுள்ளது.
      முன்பு எப்போதும் இருந்ததைவிட இந்தக் காலகட்டத்தில் யோகா அதிகமான முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு முந்தைய காலத்தில் முக்கியமாக இல்லையென நான் கூறவில்லை. ஏன் இதைக் கூறுகிறேனென்றால், இன்று உலகில் பல செயல்கள் செய்வதற்குச் சக்திவாய்ந்த கருவிகளைக் கொண்டுள்ளோம். நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் நீங்கள் விரும்பினால் மலையை நாளையே தரைமட்டமாக்க முடியும்.
      இந்த மாதிரியான ஒரு சக்தி நம் கையில் இருக்கும்பொழுது, உள்நிலை புத்திசாலித்தனமும் வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வும் மற்ற உயிரினங்களை நமக்குள் ஒரு பாகமாக உணருகின்ற தன்மையும் நமக்கு இருப்பது மிக மிக அவசியமாகிறது. இல்லையெனில் உங்களுக்கே நீங்கள் மிகப்பெரிய சேதத்தை விளைவித்துக் கொள்வீர்கள். அந்த மாதிரியான ஒரு நேரத்தில்தான் இப்பொழுதும் இருக்கிறீர்கள்.
      சுவாசிப்பதே பிரச்சினையாகும் அளவிற்கு நீங்கள் தேசத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இங்கு எந்த உலகத்தில் உயிர்வாழ்வதே பிரச்சினையாக ஆகிக்கொண்டு வருகிறது. வெளிப்புற அறிவியலைச் செயல்படுத்தியதால் மட்டுமே இந்த மாதிரி நடந்திருக்கிறது. சரியான உள்சூழலை உருவாக்கக் கூடிய உள்நிலை அறிவியலை நீங்காள் கவனிக்கவேயில்லை.
      ஆகவே, நீங்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதால் யோக அறிவியல்தான் உன்பு எப்போதையும்விட இக்காலகட்டத்திற்கு மிகவும் தேவையாக இருக்கிறது. நீங்கள் சக்தியுடன் இருப்பதால், நீங்கள் புத்திசாலித்தனமாக இருப்பது மிகவும் முக்கியமாகிறது.
      இது எனக்கு இக்கிரகத்தில் வாழ்ந்த மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்களைப் பற்றி நினைவூட்டுகிறது. சர்வாதிகாரிகள் எல்லாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகத் திகழ்ந்தார்கள்.
      ஒருநாள், முசோலினி அனைத்து இத்தாலிய புகைவண்டிகளையும் குறித்த நேரத்தில் ஓடும்படிச் செய்தார். ஒருசில புகைவண்டி ஓட்டுநர்களைச் சுட்டதன் மூலம் இதை அவர் நடத்திக் காட்டினார். இத்தாலியில் அனைத்து புகைவண்டிகளும் குறித்த நேரத்தில் ஓடத் தொடங்கின. அவர்கள் வரலாற்றில் அதுபோல இதற்கு முன்பு நடந்ததேயில்லை.
      ஆனால் திடீரென்று நடக்கத் தொடங்கியது. இதனால் முசோலினி புளகாங்கிதம் அடைந்து அவர் உருவம் பொறித்த தபால்தலை வெளியிட்டபொழுது ஒரு புதுபிரச்சினை உருவானது. தபால் தலைகளெல்லாம் அஞ்சல் உறையின் மீது இல்லாமல் கீழே விழுவதும், தபால் பைகளில் சேர்வதுமாக நடந்தது. இது முசோலினியின் கவனத்திற்கு வந்த பொழுது தபால்துறைத் தலைவரை அழைத்து " நீங்கள் ஏன் உயர்ந்த ரக பசையை உபயோகிப்பதில்லை" எனக் கேட்டார். அதற்குத் தபால் துறைத் தலைவர் மிகுந்த பயத்துடனும், தயக்கத்துடனும் "உயர்ந்த ரக பசையைத்தான் உபயோகிக்கிறோம், ஆனால் மக்கள் தபால்தலையின் முன்பக்கத்தில் தான் எச்சிலைத் தடவுகிறார்கள்." என்று கூறினார்.
      ஆகவே, நீங்கள் சரியான திசையில் செல்ல இதுவே தருணம். நவீன விஞ்ஞானம் உங்களுக்களித்திருக்கும் வசதிகளைப் பயன்படுத்தியே உண்மையான மனிதகுல நன்மையை அடைவதற் கேதுவான பரிமாணத்தை யோக அறிவியல் உங்களுக்குள் திறக்கச் செய்யும்.

2 comments:

மதுரை சரவணன் said...

arumaiyaana pathivu.. vaalththukkal

குறையொன்றுமில்லை. said...

மிகவும் அருமையான பயனுள்ள பதிவு. நன்றி.

Post a Comment