Saturday, July 12, 2014

எது உண்மையான பாவம்?



      இன்றைக்குக் கோலோச்சிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய ஐந்து மதங்களில் எதையெல்லாம் பாவச் செயல்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று பட்டியலிட்டுப் பாருங்கள். இந்தப் பூமியில் மூச்சு விட்டுக் கொண்டிருப்பது கூட பாவமோ என்று அச்சம் வந்துவிடும்.

      பாவம், புண்ணியம் என்பதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள். எந்தச் செயலைச் செய்தாலும், அதற்கு ஒரு பின்விளைவு உண்டு என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். இன்றைக்கு ஒரு விஷயத்தை ஆனந்தமாகச் செய்தீர்கள். நாளைக்கு அதற்காக உங்களைத் தூக்கில் தொங்க விட்டால் கூட அதே ஆனந்தமாக இருப்பீர்கள் என்றால், எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்.

      செயல்புரிகையில் இருக்கும் அதே சந்தோஷம் அதன் பின்விளைவைச் சந்திக்கும் போதும் தொடரும் என்றால், எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். இல்லையில்லை, பின்விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு இல்லை என்று சொல்பவரா நீங்கள்? உங்களால் தாங்கக் கூடிய பின்விளைவுகளுக்கு ஏற்ற செயல்களில் மட்டும் கவனமாக இறங்குங்கள். மற்றபடி, எதுவும் பாவமும் இல்லை. புண்ணியமும் இல்லை.

-----------------------------வாழ்க வளமுடன்!-------------------------------

1 comment:

Dinesh Ramakrishnan said...

For an every action, there is an equal and opposite reaction. :)
Paavam, matrum Paava mannipu nu sonnalae 10 adi thalli nikra indha kozhapaana situation la, super ah manasuku yaetra pola oru vishyatha solirkinga. Mikka nandri :)

Post a Comment