Monday, June 17, 2013

கோபப்படுங்கள் ஆனந்தம்



      காற்றுக்குமிழி ஊதி விளையாடியிருக்கிறீர்களா? அந்தக் குமிழிக்கு உள்ளே இருப்பதும் கார்றுதான், வெளியே இருப்பதும் காற்றுதான். ஆனாலும் அந்த குமிழிக்கென்று ஒரு தனித்தன்மை உண்டு. 
      அதே போல் மனிதனுக்கு உள்ளே என்ன இருக்கிறதோ அதேதான் மனிதனுக்கு வெளியேயும் இருக்கிறது. ஆனாலும் இடையில் ஒரு தந்திரமான ஒரு தடுப்பு வேலி இருக்கிறது. அது எவ்வளவு தந்தைரமானது என்பதை உங்களால் உணரமுடியாது. எப்படிப் பார்த்தாலும் அப்படி ஒருவேலி இல்லாதது போல் தான் தோன்றும். ஆனாலும் வேலி இருக்கிறது. அதுவும் ஒவ்வொரு மனிதரிலும் ஒவ்வொரு வகையான வேலி இருக்கிறது. இந்த வேலியை உடைத்துக்கரைவது தான் ஆன்மீகம். 
      அதைச் செய்ய பல விளையாட்டுக்கள் இருக்கின்றன. ஆனால் எந்த விளையாட்டு விளையாடினாலும் அதை முழுமையாக விளையாட வேண்டும். அரை மனதுடன் விளையாடுவது தான் உங்கள் பிரச்சனை. ஒரு ஆட்டத்தையாவது நூறு சதவிகிதம் முழுமையாக ஆடினால், ஒரு வினாடியில் உங்கள் இருப்பின் கட்டுப்பாடுகளைக் கடந்து, அந்த இடத்தில் இருக்கமுடியும். மிக விரைவில் நினைத்த இடத்தை சென்றடைவீர்கள். " 
      உங்களுக்கு தியானம் தெரியவில்லையா? கவலைப்படாதீர்கள், உங்களுக்கு அமைதி தெரியவில்லையா? கவலைப்படாதீர்கள், உங்களால் அன்பு செலுத்த முடியவில்லையா? தெரியவில்லையா கவலைப்படாதீர்கள், ஆனால் கோபப்படமுடிகிறதா? சரி வெறுமனே கோபப்படுங்கள். தொடர்ந்து 24மணி நேரமும் மிகத்தீவிரமான் கோபத்துடன் இருங்கள். இப்படி இருந்தால் நீங்கள் ஞானம் பெற்று விடுவீர்கள். நீங்கள் செய்ய வேன்டியது இதுதான் நீங்கள் எதைச் செய்கிறீர்களோ, அதில் முழுமையாக 100 சதவிகித தீவிரத்துடன் இருங்கள்! போதும், அதுவே உங்களை ஞானத்திற்க்கு அழைத்துச்செல்லும்.
      வாழ்க வளமுடன்!

1 comment:

sushmitha said...

Arputham. Migavum payanulathaga irukirathu.
Nandri :)

Post a Comment