Showing posts with label நலன். Show all posts
Showing posts with label நலன். Show all posts

Sunday, October 21, 2012

புத்தரா அலெக்ஸாண்டரா? ஆனந்தம்


     
      ஒரு மனிதன் தன்னை உணரும் போது தான் உள்நிலையிலும் வெளிநிலையிலும் முழுமையடைகிறான். அதுவரை அது வேண்டும், இது வேண்டும் என்று பிச்சைக்காரனைப் போல ஏங்கிக் கொண்டிருக்கின்றான்.  நினைத்தது கிடைத்தாலும் பின் வேறொன்றுகாக ஏங்க ஆரம்பித்து விடுகின்றான். அவனுடைய ஏக்கம் மூச்சு நிற்கும் போது கூட பூர்த்தியாவது இல்லை. நாளை என்வாழ்க்கை முழுமையடையும் என்ற நினைவிலேயே இறந்துவிடுகின்றன்.
      16 வயதில் ஆரம்பித்து 32 வயதிற்குள் பாதி உலகை வென்ற பிறகும் கூட, அலெக்ஸாண்டர், இன்னமும் பாதி உலகை வெல்லவில்லையே என்ற ஏக்கத்தோடு தான் இறந்தான். தன் ஆசைக்காக அப்பாவி மக்களை 16 ஆண்டுகளாக கொன்று குவித்த பிறகும் அவனிடம் அறிவு வெளிப்படவில்லை.
      அவனை நீங்கள் "அலெக்ஸாண்டர் தி கிரேட்" என்று அழைக்கிறீர்கள். பாடப்புத்தகங்கள் மூலமாக உங்கள் குழந்தைகளுக்கும் அப்படி போதிக்கிறீர்கள். மக்களின் நலனுக்கு அவன் என்ன செய்தான் சொல்லுங்கள்! துரதிர்ஷ்டவசமாக உங்கள் சிந்தனை அந்த வழியில் தான் செல்லுகிறது.
      ஒவ்வொருவரும் மனதளவில் அலெக்ஸாண்டராக தான் இருகிறீர்கள். ஆனால் நிறைவேற்றிக் கொள்ளும் தைரியம் இல்லாமல் இருக்கிறீர்கள். இப்படி நீங்கள் அலெக்ஸாண்டராக இருக்கும் வரை ஒவ்வொருவரையும் ஏதாவது துன்பப்படுத்தி தான் ஏதாவது அடையவேண்டும் என்ற நோக்கம் இருக்கும் வரை, வலியும் துன்பமும் தான் இந்த உலகத்தின் வழியாக இருக்கும். இப்படித் தான் உங்கள் சிந்தனை இருக்குமென்றால், உங்கள் செயல்கள் இருக்குமென்றால், இந்த உலகம் அழகானதாக இருக்க முடியாது.
      உங்கள் வரலாற்றுப் புத்தகங்களில் கூட அலெக்ஸாண்டருக்கு பல பக்கங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் மனிதனலனுக்காக பாடுபட்ட ஞானமடைந்த புத்தருகோ சில வரிகள் மட்டுமே. அதுவும் கூட அவன் அரசனாக இருந்தான் என்பதற்காக மட்டும் தான்.
      உண்மையில் உங்கள் நோக்கம் மற்றும் விழிப்புணர்வு, மனிதநலனை நோக்கிதான் முழுமையாக இருக்க வேண்டும். எப்போது உங்களை முழுமையாக உணர்கிறீர்களோ அப்போது உங்கள் நோக்கம் மற்றவர்களின் நலன் குறித்தே இருக்கும். எனவே உங்களின் எண்ணமும் செயலும் முழு உணர்தலை நோக்கியே மாற வேண்டும் என்று விரும்புகிறேன். வாழ்க வளமுடன்!