Sunday, November 6, 2011

எதிலும் நுணுக்கம் வேண்டும் ஆனந்தம்


காலை எட்டரை மனி வரை எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது, அப்புறம் தான் ஆரம்பிக்கிறது எல்லாம்! குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, மனைவியை அவ்ள் அலுவலகத்திற்க்கு இறக்கிவிட்டு, அலுவலகத்திற்க்கு வந்தால் அங்கேயும் ஆயிரம் பிரச்சனைகள். நாம் திட்டமிட்டபடி செயல் படப்பார்த்தாலும், மற்றவர்கள் அதை குழப்பி டென்ஷன் ஆக்கிவிடுகிறார்களே, எப்படி டென்ஷன் இல்லாமல் செயல் படுவது?
      காட்டு வழியில் தன் சீடனுடன் நடந்து கொண்டிருந்தார் ஒரு ஜென் குரு. சீடனிடம் அங்கிருந்த ஒரு செடியை காட்டினார்.
      "இந்த செடியைப் பற்றி சொல்!"
      "இதன் பெயர் பல்லடோனா! இதன் இலைகள் மிகவும் விஷமிக்கவை, உயிரைப் பறிக்ககூடியவை!"
      "இலைகளை வேடிக்கைப் பார்த்தால் ஆபத்தில்லை, சுவைத்தால் தான் உயிர் போகும். பிரச்சனைகளும் அப்படித்தான். தேவையான கவனம் கொடுத்தால் போது(அதிகம் தேவையில்லை), ஆபத்தின்றி தீர்ந்து போகும். தேவையற்ற முக்கியத்துவம் கொடுத்து, இழுத்து மண்டையை போட்டு குடைந்து கொண்டால், உயிரை எடுத்துவிடும்" என்றார் குரு.
      உங்கள் பிரச்சனை குடும்பமல்ல, நிறுவனமல்ல; பிரச்சனையே நீங்கள் தான். வெளியே இருப்பதை சமாளிப்பதாக நினைத்துக் கொண்டு உங்களை நீங்கலே திருகிக்கொள்கிறீர்கள்.
      கண்களை மூடிக்கொண்டு உங்கள் உள்ளங்கைகளை மேல்முகமாக திருப்பி வையுங்கள். உங்கள் மூச்சை கவனியுங்கள்(அரை நிமிடமாவது). அதேபோல் உங்கள் கைகளை கீழ்முகமாக திருப்பி வைத்துக் கொண்டு உங்கள் மூச்சை கவனியுங்கள்( எந்த மூக்கில் மூச்சு நன்றாக வருகிறது என்று). இப்போது மூச்சு வேறு விதமாக இயங்கும்( இடது மூக்கு, வலது மூக்கு என்று மாறும்).
      உடலுறுப்புகளை எந்த விதத்தில் வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொருத்து, உங்கள் உயிர் சக்தியின் ஓட்டம் மாறுகிறது. இது பற்றிய கவனமில்லாமல் உங்கள் கைகளை கோபத்தின் டென்ஷனின் போது இப்படியும் அப்படியும் வீசும் போது உங்கள் உயிர் சக்தி எவ்வளவு குழப்பத்திற்க்குள்ளாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
      இப்படி கவனமின்றி எவ்வளவு தூரம் உங்கள் உயிர் சக்தியை வீணடிக்கிறீர்கள்? நீங்கள் சரியான படி இயங்க வில்லை என்றால் உஙளுக்கு எதுவும் சரியாக நடக்காது!
      குடும்ப டென்ஷன், நிறுவன டென்ஷன், போக்குவரத்து டென்ஷன், என ஒவ்வொன்றும் டென்ஷனாகிப்போனால் நீங்கள் இந்த பூமியில் வாழத்தகுதி இல்லாதவராகி விடுவீர்கள்.
      உங்கள் உடலையும் மனதையும் கூட கையாளத் தெரியவில்லையே, குடும்பத்தையும், நிறுவனத்தையும் எப்படி கையாள்வீர்கள்?
      உங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிற இறுமாப்பை விட்டு விட்டு, எதையும் ஆழ்ந்த கவனத்துடன் அனுகிப்பாருங்கள்.
      சங்கரன்பிள்ளை இறக்குமதி செய்யப்பட்ட ஒரு காபி இயந்திரத்துடன் போராடிக்கொண்டு இருப்பதை, அவர் வீட்டில் வேளாஈ ஸேய்யூம் பெண்மணி கவனித்தாள்.
      "இந்த இயந்திரத்தை எப்படி பொருத்துவது என்பதைப் பற்றி ஃபிரெஞ்சு மொழியில் குறிப்பு அச்சிடப்பட்டு இருக்கிறது.அதன் படி செய்து பார்த்து விட்டேன், இயந்திரத்தில் ஏதோ கோளாறு என்று நினைக்கிறேன்" எனறார் சங்கரன்பிள்ளை.
      பணிப்பெண் பக்கத்தில் வந்து ஒரே முயற்ச்சியில் அந்த இயந்திரத்தை மிகச் சுலபமாக பொருத்தி விட்டாள்.
      "எப்படி?" என்றார் சங்கரன்பிள்ளை.
      "எனக்கு எழுதப்படிக்கத் தெரியாது, அதனால் குழப்பிக்கொள்ளவில்லை" என்றாள் பணிப்பெண்.
      புரிகிறதா?
      உங்களை நீங்கள் பெரிதாக நினைத்துக் கொள்ளாமல், நீங்கள் நிஅனைப்பது தான் சரி என்ற அகங்காரத்துடன் எதையும் அனுகாமல் இருந்தால், எந்தப் பிரச்சனை தான் உங்களை கட்டிப் போட முடியும்.
      பிரச்சனைகளின் விளைநிலம் உங்கள் குடும்பமோ, நிறுவனமோ அல்ல; உங்கள் மனம் தான். அற்புத கருவியாக இயங்க வேண்டிய சாதனம் அவலமான கருவியாகிவிட்டது. வேண்டியதை வழங்க வேண்டிய சாதனம், வேதனைகளை வழங்கும் சாதனமாகிவிட்டது.
      என்னையே எடுத்துக்கொள்ளுங்கள், ஈஷா இயக்கத்தில் உலகெங்கும் 10 லட்சத்திறுக்கும் அதிகமானோர் தண்ணார்வத் தொண்டர்களாக இருக்கின்றனர். அவர்கள் வெவ்வேறு கலாச்சாரப் பிண்ணணியில் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள். அவர்கள் இந்த தொண்டிற்கென்று எந்த தனி பயிற்ச்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. இதை புரிந்து கொள்ளாமல் நான் எடுத்ததற்கெல்லாம் டென்ஷனால், நான் எதிர்பார்க்கும் எந்த வேலை நடக்கும்? கோபத்தால் அத்தனை லட்சம் பேரை நான் எப்படி கையாள முடியும்?
      நான் அவர்களுக்கு தகப்பனாக, மகனாக, குருவாக, சேவகனாக, மனநல மருத்துவனாக எவ்வளவோ தளங்களில் இயங்க வேண்டியிருக்கிறது. அப்படி செய்யத் தயாராக இருந்தால் தான் நீங்களும்... குடும்பத்திற்க்கும் நிறுவனத்திற்க்கும் தலைமை பொறுபேற்க்க முடியும்.
      உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் அங்கே நீங்கள் ஒரு பிரச்சனை ஆகிவிடாத அளவிற்க்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் போது எப்போது டென்ஷனே இருக்காது.
      ரிச்சர்டு கவுலி என்ற பிரபல மருத்துவரிடம் ஒருவன் வந்தான்.
      "டாக்டர் எனக்கு 32 வயதாகிறது, கட்டை விரல் சூப்பும் பழக்கத்தை இன்னும் விடமுடியாமல் தவிக்கிறேன்" என்று கூச்சத்துடன் சொன்னான்.
      "இதில் கவலைப் ப்ட ஒன்றுமில்லை, எத்தனை வருடங்களுக்கு தான் இதே விரலை சூப்புவாய், இன்றிலிருந்து கவனமாக வேறுஒரு விரலை பயண்படுத்து" என்று அறிவுறுத்தி அனுப்பினார் ரிச்சர்டு கவுலி.
      ஒரே வாரத்தில் திரும்பி வந்தான் அவன்.
      "முப்பது வருடமாக தவிர்க்க முடியாதபடி இருந்த பழக்கத்தில் இருந்து ஆறே நாளில் எப்படி விடுதலை பெற்றேன் டாக்டர்?" என்றான்.
      "ஒரு விசயத்தை பழ்க்கதோசத்தில் செய்யாமல், ஒவ்வொரு முறையும் புதிதாக முடிவேடுக்க வேண்டி வந்தால், அதை கவனத்துடன் அனுகுவோம். தேவையற்ற பழக்கம் தானாகவே உதிர்ந்துவிடும்" என்றார் கவுலி.
      கோபமும், டென்ஷனும் உங்கள் வாடிக்கையாகிப் போயிருந்தால் இனி ஒவ்வொரு முறையும் அது பற்றிய கவனத்துடன் அனுகிப்பாருங்கள், விஷம் உதிரும், அமுதம் நிலைக்கும்.
.................................................................சத்குரு..................................................................................

No comments:

Post a Comment