Tuesday, October 16, 2012

மனைவியுடன் மகத்தான உறவு? ஆனந்தம்


     
      மிகவும் கஷ்டமான கேள்விதான். மனைவியுடன் சுமுகமான உறவு வேண்டும் என விரும்பினால், முதலில் அவரை உங்களுடைய மனைவி என்ற கண்ணோட்டத்தில் பார்பதை நிறுத்துங்கள். அவரை இன்னொரு மனித‌உயிராகப் பாருங்கள். இப்படிப் பார்த்தால் பிறகு அங்கே எந்தப் பிரச்சனையும் இருக்காது.
      "இவள் என் மனைவி" என்று நீங்கள் பார்க்கத்துவங்கும் கணத்திலேயே அவள் உங்களின் சொத்து என்றாகிவிடுகிறது. உங்களுக்கு சொந்தமான‌ சொத்து என்றாகியவுடனேயே  உங்களின் அனுகுமுறை வேறாகிவிடுகிறது. ஒருவரை உங்களின் உரிமைப் பொருள் என்ற அளவிலே குறைத்துவிடும் பொழுது அவருடன் இனைந்து வாழும் அழகு மறைந்து விடுகிறது.
      வேறு யாரோ ஒருவருக்கு அவள் அற்புதமானவராகத் தெரியலாம். ஆனால் உங்களின் கண்களுக்கு வேறுவிதமாகத் தெரிவாள். அவளை உங்களின் உரிமைப் பொருளாக பார்க்கும் காரணத்தால் அவளுடைய‌ அற்புதத்தன்மை தெரிவதில்லை. உண்மையில் யாரையும் நீங்கள் உரிமை கொண்டாட முடியாது. உங்களுடைய மனைவியோ, கணவரோ, குழந்தையோ யாருமே உங்களின் உரிமை கிடையாது. இந்த நிமிடத்தில் அவர் உங்களுடன் இனைந்திருப்பதை கொண்டாடி மகிழுங்கள்.
      "இந்த உயிர் என்னோடு இனைந்திருப்பதை தேர்வு செய்திருப்பது எவ்வளவு அற்புதமான விஷயம்" என்று நீங்கள் மனதார உணர்ந்தால் மட்டுமே கொண்டாடும் தன்மை உங்களுக்கு வரும். மாறாக, "இவள் என் மனைவி, எப்படியும் எனக்கு  உடமையானவள், என்னிடம் மட்டுமே இருக்க வேண்டியவள்" என்று நீங்கள் நினைக்கும் கணத்திலேயெ பாராட்டும் கொண்டாடுதலும் கானாமல் போய் விடும்.
      இரண்டு உயிர்களுக்கிடையே பாராட்டும், கொண்டாடுதலும் கானாமல் போன பிறகு அவர்களிடையே இருக்கக்கூடிய உறவு நிலையில் என்ன அழகு இருக்க முடியும்? கண‌வரோ, மனைவியோ எந்தத் தன்மையுடன் இருக்கின்றாரோ அதே தன்மையுடன் மதிக்கவும், கொண்டாடவும் முடியவில்லை என்றால், பிறகு அருமையான உறவு முறை அங்கே எப்படி இருக்க முடியும்?
      ஆனால் அவரை இன்னோரு உயிராக நீங்கள் மதிக்க ஆரம்பித்தால் அங்கே மிகவும் ஆழமான அழகான உறவுமுறை மலரும். உங்களுடைய வாழ்க்கைக்குள் வந்த பெண்ணை "இதோ, இங்கே இருப்பது இன்னோரு சக உயிர்" என்ற அளவில் வெறுமனே பாருங்கள். அப்போது இவ்வொரு கணமும் அங்கு கொண்டாட்டம் மட்டுமே இருக்க முடியும்.
      அவளுக்கு வேறு வழியே கிடையாது என்ற வழியை நீங்கள் சமூக ரீதியாக நீங்கள் உருவாக்க முயற்ச்சிக்கலாம். ஆனால் அவளுக்கும் சில வழிகள் இருக்கிறது. எதுவுமே செய்ய முடியாத நிலையில் சிலர் தன்னை மாய்த்துக் கொண்டாவது கணவனுக்கான உரிமையை மறுத்திருக்கிறார்கள், இல்லையா? எனவே தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
      அப்படி யாரோ ஒருவர் சமூக ரீதியாக உங்களுடன் பினைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றால் அது அவர்களின் விருப்பத்தின் பேரில் தான் தொடர்ந்து உங்களுடன் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே அவர் விருப்பத்திறக்கு நன்றி கூறி அவரையும் அவரது அருகாமையும் மகத்தானதாக கொண்டாடுங்கள். இப்படி உறவை மதிக்கவும், கொண்டாடவும் தெரிந்திருந்தால் அங்கே மேன்மையான‌தொரு உறவு மட்டுமே இருக்கமுடியும்! வாழ்க வளமுடன்!

1 comment:

'பசி'பரமசிவம் said...

குடும்பத்தில் அமைதி நிலவ அருமையான அறிவுறுத்தல்.

பாராட்டுகள்.

Post a Comment