Friday, November 26, 2010

ஆனந்தமாக இருந்தால்:

தனக்காக வாழ்பவன் கெட்டவன், பிறருக்காக வாழ்பவனே நல்லவன் என்பது பெரியோர் கூற்று. கடவுள் இதைத்தான் எதிர்பார்க்கிறாரா?

ந‌ல்லது, கெட்டது என்பதெல்லாம் உங்கள் கண்ணோட்டம் தான். ஒன்றைக் குற்றம் என்றோ அல்லது ஒன்றைக் நல்லது என்று நினைக்கும் போதே, மனம் சிதைந்து விடுகிறது. கடவுளைக் கொண்டு வந்து இதில் சேர்க்காதீர்கள்.
கடவுள் நல்லவரா, கெட்டவரா என்றால், இரண்டும் இல்லை, அவர் ஆனந்தமானவர், அவ்வளவு தான்.
டாக்டரிடம் போகிறீர்கள், அவர் உங்கள் உடம்பை பரிசோதித்து முடிவுகள் சொல்வார் என்று காத்திருக்கும் போது, அவர் கண்களை மூடி கடவுளிடம் பிரார்த்திக்க தொடங்கினால், எப்படி உணருவீர்கள்? நீங்கள் செய்ய வேண்டியதை செய்யாமல், கடவுளைப் பற்றி கவலைப்படுவது அப்படித்தான் இருக்கிறது.
நல்லவனாயிருப்பதாகச் சொல்லிக் கொள்வதே கூட ஒருவித நோய் தான்!
வீட்டுக்கு தாமதமாகத் திரும்பிய சங்கரன்பிள்ளையிடம்' "ஏன் இவ்வளவு லேட்?" என்று கேட்டாள் மனைவி.
" அலுவல‌கத்தில் தாமதமாகிவிட்டது!"
"விசாரித்தேன், நீங்கள் அலுவல‌கத்திலிருந்து ஐந்து மணிக்கே புறப்பட்டுவிட்டதாக சொன்னார்கள்!"
மறுநாளும் அதே தாமதம். அதே கேள்வி. அதே பதில். அதே எச்சரிக்கை. மூன்றாவது நாள் அவர் மனைவி பொறுமையிழந்து, " நாளைக்கு பொய் சொன்னால், நாக்கில் சூடு வைப்பேன்" என்றாள்.
அதற்க‌டுத்த நாள் சங்கரன்பிள்ளை வீடு திரும்பியதும், " அடுப்பு எரிகிறதா?" என்று கேட்டார்.
"இல்லையே ஏன்?"
"அப்ப‌டியானால் இன்றைக்கும் அலுவ‌ல‌க‌த்தில் லேட்டாகி விட்ட‌து!" என்றார், ச‌ங்க‌ர‌ன்பிள்ளை.
இப்ப‌டித்தான் த‌ன‌க்கு ஆப‌த்து இல்லாத‌வ‌ரை தான் நல்ல‌வ‌ன், ந‌ல்ல‌வ‌னாக‌ ந‌ட‌ந்துகொள்வான்.
ந‌ல்ல‌வ‌ர்க‌ளுக்கு கெட்ட‌து எதுவும் தெரியாது என்று நினைக்கிறீர்க‌ளா? அவ‌ர்க‌ள் கெட்ட‌து என்று நினைப்ப‌வ‌ற்றை த‌விர்க்க‌ முய‌லுகிறார்க‌ள். அவ்வ‌ள‌வுதான்! ஒன்றைத் த‌விர்க்க‌ முய‌லும் போது அதைப் ப‌ற்றிய‌ க‌வ‌ன‌ம் தான் அதிக‌மாகும். ஒன்றின் மீது க‌வ‌ன‌ம் அதிக‌மாகும் போது அதிலிருந்து விடுப‌ட‌வில்லை என்று தானே அர்த்த‌ம். முற்றிலும் அவைக‌ளில் இருந்து விடுப‌ட‌ வேண்டும்....

"நான் தேடிப்போய் யாருக்கும் உதவமாட்டேன், அதே சமயம் மனதாலும் யாருக்கும் கெடுதல் செய்யமட்டேன், நான் நல்லவனா? கெட்டவனா?"
மூன்று வித நிலைகளில் இயங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
தன்னைப் பற்றிய பொறுப்பை கூட எற்றுக்கொள்ளாமல், யார் கையிலாவது தன்னை ஒப்படைக்க காத்திருப்பவர்கள் ஒரு வகை. அவர்கள் புழுவைவிடக் கேவலமானவர்கள்.
மற்றவர்களைப் பற்றிக் கவலையின்றி தன்னை மட்டும் பார்த்துக்கொள்பவர்கள் அடுத்தவர். இவன் மிருகத்தைப் போன்றவன். மிருகங்கள் பொதுவாக யாருக்கும் தீங்கு நினைப்பதில்லை, சிங்கம் பசித்திருக்கும் போது அதன் எதிரே போனால், அது உங்களை உணவாக மட்டுமே பார்க்கிறது. மற்றபடி அது உங்களை எதிரியாகப் பார்ப்பது இல்லை.
தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒருதேவை என்றால், தாமகவே அவர்களை அண்டி உதவி செய்பவர்கள் மூன்றாவது வகை. இவர்கள் தான் மனிதன் என்ற பதத்துக்கு அருகதையானவர்கள். மற்றபடி யாரோ சொன்னதற்காக மற்றவருக்கு உதவுபவர்கள் எதிலும் சேர்த்தியில்லை.
சங்கரன்பிள்ளைக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஒரு புதிய அறை ஒதுக்கப்பட்டது. தனக்கு கீழே பணிபுரிபவர்களுக்கு எதிரில் தன்னை பெரியாளாகக் காட்டிக்கொள்ள விரும்பினார் அவர்.
அறைக்கதவு தட்டப்பட்ட போது , ட்க்கென்று தொலைபேசி ரிசீவரைக் காதில் எடுத்து வைத்துக்கொண்டார். கம்பெனி முதலாளியுடன் உரிமையோடு பேசுவது போல் பாவனை செய்தார். பிறகுதான் உள்ளே வந்தவனைக் கவனித்தாகக் காட்டிகொண்டு " சொல்தம்பி, உனக்கு என்ன வேண்டும்?" என்றார்.
அவன் நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு சொன்னான், "ஐயா, தங்கள் அறையில் உள்ள தொலைபேசிக்கு கனெக்ஷன் கொடுக்க வந்திருக்கிறேன்!"
மற்றவர்களிடம் செயற்கையாக தன் பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதற்காக முனைபவர்கள் இப்படித்தான் மூக்குடைபடுவார்கள். அவர்கள் போலிகள்!
உங்களிடம் மனிதகுணம் முழுவீச்சில் இயங்கினால், எந்தக் கோட்பாடுகளுக்காவும் காத்திருக்க மாட்டீர்கள்.உங்கள் சக்திக் உட்பட்டு அடுத்தவர்களுக்கு தேவையானதை கவனித்து வழங்குவீர்கள். எங்கெங்கு உதவி தேவையோ அங்கெல்லாம் தாமாகவே உங்கள் கரங்கள் உதவியுடன் நீளும்!

எப்படி எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் உதவி செய்து கொண்டு இருக்க முடியும்?
உங்களால் முடியாததை நீங்கள் செய்யாவிட்டால், அது தவறில்லை. செய்யக்கூடியதை நீங்கள் செய்யாவிட்டால் நீங்கள் மனிதராகவே இருக்க தகுதியற்றவராகி விடுவீர்கள்.
மனிதன் எட்டக்கூடிய உயரங்களை, எட்டாமல் இருப்பது எவ்வளவு பரிதாபகரமான நிலை?
க‌டவுளை விடுங்க‌ள், அடுத்த‌வ‌ர்க‌ளை விடுங்க‌ள், உங்க‌ளைப்ப‌ற்றிய‌ க‌வ‌ன‌ம் கொள்ளுங்க‌ள். நீங்க‌ள் ஆன‌ந்தமாக‌ இருந்தால், உங்க‌ளைச் சுற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஆன‌ந்த‌மாக‌ இருப்பார்க‌ள். வாழ்க்கையும் ஆன‌ந்த‌மாக‌ இருக்கும்.....
ம‌னித‌ன் மேம்ப‌ட்டால் தான், ம‌னித‌த‌ன்மை மேம்ப‌டும், ம‌னித‌த‌ன்மை மேம்ப‌ட்டால் யாருக்கும் எந்த‌ போத‌னையும் செய்ய‌த்தேவை இல்லை.
அத‌னால் தான் யோகமார்க்கம்(ஆனந்தவழி) என்பதில் கடவுளைப் பற்றிய‌ கவனம் என்பதே இல்லை. ம‌னித‌னை, ம‌னித‌த்த‌ன்மையை மேம்ப‌டுத்துவ‌திலேயே இருக்கிற‌து. முழுமையான ஆன‌ந்தத்தை அடைய‌வே வ‌ழிக‌ட்டுகிற‌து......

வாழ்க வளமுடன்!

Tuesday, November 23, 2010

நம்பிக்கை வெளிச்சம்1:

     அந்த சிறுவனுக்கு பன்னிரெண்டு வயதாகும் போது, மோசமான போலியோ தாக்கியது...
     "உங்கள் மகன் இந்த இரவைத் தாண்டுவது கஷ்டம்" என்று தன் பெற்றோரிடம் மருத்துவர் சொல்வதைக் அவன் கேட்டான். அவன் அம்மா அழுகையின் உச்சத்துக்கு போனாள். அந்த இரவைக் கடந்து விட்டால் அம்மாவின் துயரம் சற்றே தீரும் என்று அவன் நம்பினான், இரவு முழுக்க தூங்காமல் விழித்திருந்தான்.
     விடிந்ததும் அம்மாவை எழுப்பி, "அம்மா, பாருங்கள் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்! என்று அம்மாவைக் கட்டிக்கொண்டான்.
     அம்மாவின் சந்தோசக் கண்னீர், அவன் மனதில் ஓர் வைராக்கியத்தை எற்படுத்தியது. அடுத்து வரும் ஒவ்வொர் இரவையும் இதே போல் கடக்க வேண்டும் என்று உறுதி பூண்டான். அவ்வாறே கடந்தான்……..
     கடைசியாக அவனை மரணம் வென்ற போது அவன் வயது எழுபத்திஐந்து.
     அந்த சிறுவன் - மில்டன் எரிக்சன்.
     மனிதனுக்கு அவனே தான் தடை என்பது பற்றிய அவர் எழுதிய ப‌ல புத்தகங்கள் இன்றைக்கும் பிரபலம். மனநல சிகிச்சைகளில் பல புதிய முறைகளை அறிமுகப்படுத்தி, உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.
     பன்னிரெண்டு வயதோடு முடிந்து போயிருந்தால், உலகம் மில்டன் எரிக்சனை இழந்திருக்கும்.
     புரிந்து கொள்ளுங்கள்.... உலகில் எந்த உயிரும் அர்தமில்லாமல் இவ்வுலகுக்கு வருவதில்லை.....

வாழ்க வளமுடன்!

Saturday, November 20, 2010

ஆரோக்கியமே ஆனந்தம்:

    ஆரோக்கியத்திற்க்கு உடலும், மனமும் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். உடலில் நேருவது மனதில் நேரும், மனதில் நேருவது உடலில் பிரதிபலிக்கும்.
    உடலாரோக்கியத்திற்க்கு முதலில், உணவு அளவுக்க‌திகமாக இருக்கக்கூடாது, உடலை அசதியில் தள்ளும் அளவுக்கு இருக்கக்கூடாது. அதிக அளவு உணவு உட்கொண்டால், உடலின் சக்தி முழுவதும் அதை ஜீரணிப்பதிலேயே செலவாகிவிடும், உடல் அசதி அடையும்..... சோம்பேரித்த‌னம் வந்துவிடும்....
    அதே நேரம் உணவு மிகவும் உத்வேகம் அளிக்கும் படியும் இருக்ககூடாது. அந்த அதிக சக்தி வேறு தேவையற்ற உணர்ச்சிகளை எல்லாம் தூண்டிவிடும்.
    உணவு திருப்தியும் சுறுசுறுப்பும் அளிக்கவேண்டும். அந்த மாதிரி உணவே நல்லது. சமமான உணவு.
    உடலாரோக்கியத்திற்க்கு சிறிதளவு உடற்ப்பயிற்ச்சி அவசியம். உடற்பயிற்ச்சி உங்கள் உடளில் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், கற்றோட்டம் இவை அனைத்தையும் சீராக வைத்திருப்பதற்க்கு உதவுகிறது.
    உடற்பயிற்ச்சி உங்கள் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்க்கு உதவும். அப்படி கழிவுகள் வெளியேறி, எல்லா ஓட்டங்களும் சீராகும் போது,  உங்களின் ஆரோக்கியத்தின் ஆழத்தை உணருவீர்கள்.
    உடற்பயிற்ச்சி கூட மிக அசதி தரும் அளவுக்கு இருக்கக்கூடாது. அதிக பயிற்சியும் பாதகம் விளைவிக்கிறது. ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளும் அளவு போதுமான பயிற்சி செய்ய வேண்டும்.
    உடற்பயிற்சி செய்வதைப் போல், ஓய்வும் தேவை. உடல் அசதி நீங்கி புத்துணர்சி பெறும் அளவு ஓய்வு வேண்டும். காலையில் எழும்போது புத்துணர்வு இன்றி எழுந்தால் விவகரங்கள் எதுவும் சரியாக இருக்காது கவனித்திருக்கிறீர்களா?
    இரவு சரியானபடி உறக்கம் இல்லாவிட்டால், காலையில் வரும் பிச்சைக்காரனுக்கு எதுவும் கொடுப்பீர்கள் என்பது சாத்தியமில்லை.
    தற்காலத்தில் உடற்பயிற்சியுமில்லை, ஓய்வுமில்லை, நாம் ஒரு விசித்திரமான நிலையில் இருந்து கொண்டுஇருக்கிறோம். உடலை சரியான முறையில் பராமரித்தால், சாத்வீகமான உணவு, சரியான அளவு உடற்பயிற்சி, சரியான அளவு ஓய்வு கிடைத்தால் உங்கள் நடவடிக்கையே மாறிவிடும் கவனியுங்கள். உடலாரோக்கியமே ஆனந்தம் என்பதை புரிந்து கொள்வீர்கள்……

வாழ்க வளமுடன்!

Friday, November 19, 2010

அச்சம் தவிர்த்தால் ஆனந்தம்:

            “நான் வண்டி ஓட்டும்போதெல்லாம் விபத்தில் சிக்கப்போகிறேன் என்கிற ஒருவித பயம் எழுகிறது, என்ன செய்ய?"
      ஆபத்து என்று பயந்து எதைச் செய்யாமல் விட முடியும்?
      அறையில் உட்கார்ந்திருந்தாலும் சுழலும் மின்விசிறி திடீரென்று கழன்று உங்கள் தலை மேலே விழலாம். சுவிட்சை போடும்போது மின்சாரம் தாக்கலாம். மழைகாலத்தில் இடி விழுந்து பொசுக்கலாம். வாழ்க்கையில் எதில்தான் ஆபத்தில்லை?
      வாகனத்தை சாலையில் செலுத்தும் முன், அது எப்படி வேலை செய்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள், அதை சீராக செலுத்தும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். சாலை விதிகளை மீறாமல், போக்குவரத்தை மதியுங்கள்.
      வாகனத்தை செலுத்தும் போது, வேறு சிந்தனையில் மூழ்கிப்போகாமல், செல்போன் பேசிக்கொண்டு இராமல், வாகனத்தின் மீதே முழுகவனம் செலுத்தி ஒட்டுங்கள், எப்படி விபத்து நேரும்? செய்யும் வேலையை முழுகவனத்தோடு செய்தால் எதற்கு பயம்?
      வாகனம் ஓட்டும் போது, இயல்பாக எழும் அச்சத்தை எவ்வாறு அடக்குவது?
      அச்சத்தை அடக்குவது என்றால் என்ன? அதன் மீது எறி உட்கார்ந்து கொள்வதா? அப்படி அதை அசைய விடாமல் அதன் மீது அழுத்தி உட்கார்ந்து கொண்டால், என்ன ஆகும்? அதனுடன் நீங்கள் தீராத உடன்படிக்கை போட்டுக்கொண்டவராகி விடுவீர்கள். எப்போது நீங்கள் அசைந்தாலும், அது விருட்டென்று நழுவி வெளியே வரப்பார்க்கும். நீங்கள் எழுந்து நின்றால், அது வான்வரை வளர்ந்து, பூதாகரமாக எழுந்து நின்று, படமெடுத்து ஆடும்.
ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது….
      ஓர் அமெரிக்க பெண்மணி சென்னைக்கு சுற்றுலா வந்திருந்தார். சென்னையின் ஆட்டோக்களால் கவரப்பட்டு, அதில் ஒரு ஆட்டோவில் எறி உட்கார்ந்தார், தான் செல்ல வேண்டிய இடத்தை சொன்னார்.
      உடனே ஆட்டோ பந்தய வேகத்தில் சீறிப் புறப்பட்டது. சென்னையின் நெரிசலான போக்குவரத்தினுடையே அந்த ஆட்டோ சடார் சடார் என்று புகுந்து விரைய, அமெரிக்க பெண்மணி பயத்தில் வீறிட்டார்.
      ஒரு திருப்பத்தில் இரண்டு லாரிகள் ஒரு குறுகளான தெருவில் ஒன்றை ஒன்று முந்திய படி தெருவையே அடைத்தபடி வர, அவள் நெஞ்சைக் கையில் பிடித்துக்கொண்டு, ஆட்டோவை நிறுத்தச் சொல்லி கதறினார்.
      ஆனாலும் சற்றும் வேகம் குறையாமல், அந்த ஆட்டோ இரண்டு லாரிகளுக்கிடையே புகுந்து விரைந்தது. காற்றை அதிரடித்து விரைந்து திருப்பி அவர் குறிப்பிட்ட முகவரியில் வந்து நின்றது.
      அந்த அமெரிக்க பெண்மணி அச்சத்தில் நடுங்கியபடி, "லாரிகளுக்கு நடுவில் அவ்வளவு சிறிய இடை வெளியில் எவ்வாறு உன்னால் தைரியமாக‌ வண்டியை செலுத்த முடிந்தது" என்று கேட்டாள்.
            “தைரியமாவது.... அந்த மாதிரி ஆபத்தான சமயங்களில் பயப்படக்கூடாது என்று என் கண்களை இறுக்க மூடிக்கொண்டு விடுவேன்" என்றார் ஆட்டோ டிரைவர்.
      கண்களை இறுக்க மூடிக்கொண்டு விட்டால், அச்சம் அகன்று விடுமா? முதலில் அச்சம் என்பது அகற்றப்பட வேண்டியதோ, அடக்கப்பட வேண்டியதோ இல்லை;
      அச்சம் என்பதே ஓர் அர்தமற்ற உணர்வு என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
      அச்சம் என்பது அடுத்த கனத்தைப் பற்றியது தானே. அடுத்த கனம் என்பது இன்னும் உங்கள் அனுபவத்தில் வராத ஒரு கற்பனை. அப்படியானால் அச்சம் என்பதும் கற்பனை தானே? இந்த கனம் பற்றிய கவனம் மட்டும் இருந்தால், அந்த அனாவசிய கற்பனைகள் உங்களை ஏன் வதைக்கப் போகின்றன?
      உண்மையில், தைரியம் அற்றவர்கள், வாகனத்தை செலுத்துவது மற்றவர்களுக்கு தான் ஆபத்து! உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையென்றால், பேச்சாமல் பொது வாகனங்களில் செல்லுங்கள். உங்கள் வாகனத்தால் சுற்றுப்புற சூழலுக்கும் ஆபத்தில்லை. எரிபொருள் தட்டுப்பாட்டை கணக்கில் கொண்டால் அது நாட்டுக்கும் நல்லது தானே.
      உங்கள் கற்பனை அச்சத்தால் வாழ்க்கையை வீணடிக்காதீர்கள், இந்தகனம் மட்டும் வாழ்ந்து ஆனந்த்தை பருகுங்கள், ஆனந்தமாக வாழுங்கள்..
வாழ்க வளமுடன்!

Wednesday, November 17, 2010

வாழ்க்கை என்பதே ஆனந்தம் தான்:

      பாதி வேலையில் இருக்கும் போது எதற்காக இதைச் செய்துகொண்டிருக்கிறோம் என்று சில சமயம் களைத்துப் போகிறேன். எதை சாதிக்க நான் பிறந்தேன்? என் வாழ்கையின் உண்மையான நோக்கம் என்ன?
      சங்கரன்பிள்ளை தன் மனைவியிடம் சொன்னார்....
            "இந்த பேட்டரி என் வாழ்க்கையை விட உன்னதமானது!"
            "எப்படி சொல்கிறீர்கள்?"
            “இதில் பாசிடிவ் பக்கம் என்று ஒன்று இருக்கிறதே!"
      நம்பிக்கை இழந்து, இதேபோல் துவண்டிருக்கும் சோகமான மனங்களில் தான், வாழ்கைக்கு என்ன நோக்கம் என்ற கேள்வி சுழலும். நீங்கள் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும் போது, இந்த கேள்வி வந்து இருக்கிறதா?
      வாழ்கையின் நோக்கம் என்ன? புகழும் பெருமையும் சேர்ப்பதற்கு தான் என்பார் ஒருவர். மற்றவர்களுக்கு உதவியாக இருந்து விட்டு போவது தான் என்பார் அடுத்தவர். அன்பையும் காதலையும் பிறருக்கு அள்ளிக்கொடுப்பது தான் என்று அடித்துச் சொல்லுவர் இன்னொருவர். இல்லையில்லை, கடவுளை அறிந்துகொள்வது தான் என்று போதனை செய்வார் மதகுரு.
      இப்படி நூறு பேர், நூறு தத்துவங்கள் சொன்னாலும், வாழ்க்கை அவற்றை அடித்து நொறுக்கி விடும். வாழ்க்கை மறந்தாலும் மரணம் அவற்றை தகர்த்து தூள்தூளாக்கி விடும்.
      சங்கரன்பிள்ளை ராணுவப் பயிற்ச்சியில் ஈடுபட்டு இருந்தார்.
"அதிகாரி வந்தார் இன்று துப்பாக்கி சுடும் பயிற்ச்சி கொடுக்க வேண்டியவர் வரவில்லை, நேரத்தை வீணடிக்காமல், கிரவுண்டைச்சுற்றி பத்துமுறை ஓடுங்கள்." என்றார்
      "எதிரிகளை சுட்டுத்தள்ளத் தெரியாவிட்டால் பரவாயில்லை... ஓடித் தப்பிக்கத் தெரிந்திருக்கவேண்டும் என்பதை எவ்வளவு நாசூக்காக சொல்லித்தருகிறார், நம் அதிகாரி" என்றார் சங்கரன்பிள்ளை.
      இப்படித்தான் நீங்களும், வாழ்க்கையின் முதன்மையான நோக்கத்தை விட்டு, வேறு எதிலோ கவனத்தை திசை திருப்பி இருக்கிறீர்கள்.
      அப்படியானால், வாழ்க்கையின் முதன்மையான நோக்கம் தான் என்ன? வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே முதன்மையான நோக்கம் தான். அதை ஆனந்தமாக, உயிர்ப்போடு வைத்திருப்பதைவிட‌ வேறு என்ன முதன்மையான நோக்கம் வேண்டும் வாழ்க்கைக்கு? இதைப் புரிந்து கொள்ளாமல் இது கிட்டவில்லை, அது கிடைக்கவில்லை என்று குறைபட்டுக் கொள்வது எத்தனை முட்டாள் தனம்? குறைபாடு கொண்ட மனம் தான் வாழ்க்கைகு  வேறு நோக்கங்கள் தேடுகிறது. 
      இந்த வாழ்கையை ப்ற்றி நீங்கள் புரிந்து கொண்டதைவிட சற்றே கூடுதலாக புரிந்து கொள்ளும் முயற்சியில் தானே பணம், இன்பம், காதல், கடவுள், சொர்க்கம் என எதன்னெதன் பின்னாலோ ஓடுகிறீகள்.
      ஒரு சிறு சாவித்துவரத்தி வ்ழியே, வானத்தின் முழுமையை பார்க்க முயல்வது போன்றது உங்கள் முயற்சி. அந்த அறியாமையை உங்கள் பலம் என்று நினைத்திருப்பது கொடுமை.
அமெரிக்காவில், புழக்கத்தில் இருக்கும் ஒரு ஜோக்,
      ஜார்ஜ் புஷ் ஒரு முறை, பள்ளிக்கூடத்திற்க்கு சென்று குழந்தைகளை சந்திதார்.
            "பெரும் துயரம் என்பதற்க்கு ஒரு எடுத்துக்காட்டு தரமுடியுமா?" என்று கேட்டார்.
            "விளையாடிக்கொண்டிருக்கும் தோழன் மீது ஒரு கார் வந்து மோதி, அவனைச் சாகடித்தால், அது தான் துயரம்!"
            "அது தான் துயரமல்ல, விபத்து!" என்றார் புஷ்.
      அடுத்த மாணவி எழுந்தாள்...., "பள்ளிக் குழந்தைகள் பயணம் செய்யும் பஸ், மலையிலிருந்து உருண்டு விழுந்து சிதறிப் போனால், அது துயரம்!"
           "அது பேரிழப்பு, துயரமல்ல!"
      கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஜோ எழுந்தான்....
நீங்கள் பயணம் செய்யும் விமானம், ஒரு ராக்கெட் தாக்கி சிதறி எரிந்து நீங்கள் இறந்து போனால், அது துயரம்!"
      புஷ் அமோதித்து புன்னகைத்து, " எப்படி சரியாக சொன்னாய்?"
      உங்கள் விமனத்தை ராக்கெட் மோதினால், அது விபத்தாக இருக்கவும் முடியாது, ஏந்த விதத்திலும் பேரிழப்பாக இருக்க முடியாது, அதனால் தான், சொன்னேன்" என்றான் ஜோ.
      வாழ்க்கைக்கு நோக்கம் கற்பிப்பவர்கள், இப்படித்தான் அறியாமையில் இருந்து கொண்டே, தங்களை புத்திசாலிகள் என்று தீவிரமாக‌ நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
      வாழ்க்கையின் முழு ஆழத்தையும், அகழத்தையும் அதன் வேர்கள் வரை ஊடுருவி மனம் புரிந்து கொண்டதே இல்லை. அதனால்தான் வாழ்க்கைக்கு ஏதாவது மேலோட்டமான நோக்கத்தை தேடிக்கொண்டே இருக்கிறது.
      தத்துவங்கள், கோட்பாடுகள், விவாதங்கள், விளக்கங்கள், புராணங்கள், மறைநூல்கள் எல்லாமே, கேள்வி கேட்கும் மனத்தை சிறிது காலத்துக்கு பயன் படுமே தவிர, அடிப்படை கேள்வி காணாமல் போய் விடாது. மீண்டும் அது தலை நிமிர்ந்தும்.
      ஒரு சிறு மணல் துகளை, முழுமையாக பார்க்க முடிகிறதா என்று பாருங்கள். அதன் ஒரு பக்கத்தை பார்த்துவிட்டு புரட்டினால் தானே மறுபக்கத்தை பார்க்கமுடிகிறது? இப்படி பகுதி பகுதியாக ஐம்புலன்களால் சேகரித்த துண்டுதுண்டான தகவல்களை, கொண்டு முழுமையாக பார்த்துக் விட்டதாக எடை போடமுடியாது.
வாழ்க்கையின் முழுபரிணாமத்தையும் புரிந்து கொள்ள, ஐம்புலன்களின் எல்லையையும் தான்டி போக வேண்டும். ‌
வாழ்க்கையின்  உண்மையான நோக்கம் அதை முழுமையாக வாழ்வது தான். அதை ஒழுங்காகச் செய்யாமல், அதற்கு பெரும் தடையாக இருப்பது நீங்கள் மட்டும் தான்.
      பிரேக்கை அழித்திக்கொண்டே காரை செலுத்தப்பார்த்தால் என்ன ஆகும்? கார் தினறும், நகந்தாலும் கடினமாகத் தோன்றும். தேய்மானம் அதிகமாகும். அப்படிப்பட்ட பிரேக்காக நீங்களே இருக்கிறீர்கள்.
      உஙளைக் கரைத்து விட்டால் வாழ்க்கை அதன் முழுமையை நோக்கி, ஆனந்த்தை நோக்கி அதுவே பயணிக்கும், இயல்பாக மலரும். அதற்குத் தான் யோகா....
வாழ்க வளமுடன்!

Monday, November 15, 2010

Joy and Intelligence

              What is the connection between Joy and Intelligence? A person who is joyful by his own nature is intelligent, how? Whom do you call intelligent? Somebody who gets to fulfill what he wants to do: reaches the goal isn’t it?
              Right now every human being is aspiring to be joyful. So an existentially joyful person is an intelligent. Just unbridled intellectual activity is considered as intelligence but it is not. True intelligence is when you are absolutely thoughtless and fully alert. Intelligence functions in a completely different way.

Sunday, November 14, 2010

கவலைகளை களைந்தால் –ஆனந்தம்:

         மனம் உற்சாகமாக இருந்தால், புல் கூட ஆயுதமாக தோன்றும், தோல்வியும் கூட குருவாக தோன்றும். சாத்தியம் இல்லாததிலும் சாத்தியம் ஆவதற்கான சாத்தியக்கூறுகள் மனக்கண்ணில் தெளிவாகத் தெரியும்.
        மனம் சோர்வுற்றிருந்தால் படையே உடன் இருந்தால் பயம் இருக்கும். வெற்றி கூட இப்போதைக்கு ஒ.கே. அடுத்த தோல்வி எப்போது வருமோ? என்று யோசிக்கத் தோன்றும். மிகச்சிறிய சாத்தியமின்மைகள் கூட பெரியதாகத் தெரியும்.
        "இந்த நூற்றாண்டில் மனிதனை மிகாதிகம் பாதித்த வியாதி எது என்று கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அது எயிட்ஸ், கேன்சர், ரத்தக்கொதிப்பு, சர்கரைவியாதி, வறுமை போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்ற ரீதியில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு. கருத்துக்கணிப்பின் முடிவு சற்றும் எதிர்பாராதது..
        மனிதனை அதிகம் பாதிப்பது துக்கம், மனச்சோர்வு ( Depression) தான் காரணம் என்பது தான் அது.
        ஒரு கிராமத்தில், ஒரு பெண்மணி நகரத்தில் வாழும் தன் மகன்க‌ளையே நினைத்து எப்போதும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருந்தார். பக்கத்து ஊருக்கு ஒரு ஞானி வந்திருப்பதாகவும், அவர் மக்களின் கஷ்டங்களை தீர்த்து வைப்பதாகவும் பெண்மணியின் காதுகளுக்கு எட்டியது. பெண்மணி ஞானியை தரிசிக்க கிளம்பினார்.
        "என் பையன்களைப் பற்றிய கவலை தான் எப்போதும்! என் பையன்களுக்கு நல்ல காலம் பிறக்க வேணடும் அதற்கு ஏதாவது வழி சொல்லுங்க" என்றார் ஞானியிடம்.
        ஞானி, "அப்படியாம்மா.. சரி.. ஏன் எப்போதும் உங்கள் மகன்களை நினைத்தே கவலைப் படுகிறீர்கள்?" என்று கேட்டார்.
பெண்மணி, " என்னுடய மூத்த மகன் உப்பு வியாபாரம் செய்கிறான். மழைகாலத்தில் மழையில் உப்பு எல்லாம் நனைந்து விடுமே. வெய்யில் முழுமையாக இல்லாததால் உப்பளம் கட்டமுடியாதே. அவன் வியாபாரம் மழைகாலத்தில் சரியாக நடக்காதே. என்னுடய இளைய‌ மகன் குல்லா, கம்பளி வியாபாரம் செய்கிறான். வெய்யில் காலத்தில் இளையவனுக்கு வியாபாரம் சரியாக நடக்காதே.
        இப்படி மூத்த மகன் பாதி காலத்திலும், இளைய‌ மகன் பாதி காலத்திலும் சரியாக சம்பாதிக்காத போது, நான் எப்படி சந்தோசமாக இருக்கமுடியும்?" என்றார்.
        ஞானி, "ஏம்மா இப்படி உங்களை நீங்களே தேவையே இல்லாமல் வருத்திக்கொள்ளுகிறீர்கள்? வெய்யில் காலத்தில் மூத்த மகன் உப்பு வியாபாரம் நன்றாக செய்வதையும், இளைய‌ மகன் மழைகாலத்தில் குல்லா, கம்பளி வியாபாரம் நன்றாக செய்வதையும் நினைத்து சந்தோசப்படுங்கள், இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்" என்றார்.
        பலர் இப்படித் தான் எதையாவது நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பர். தொடர்ந்து கவலைப் படும்போது அது துக்கமாக மாறுகிறது. துக்கத்துக்கு காரணம் தேடுவதை நிறுத்துங்கள் கவலையைத் தாண்டி நிம்மதி உணர்ச்சி பெறுவீர்கள்.
        "யாருக்காக கவலைப்படுகிறேன்?, எல்லாம் என் குடும்பத்துக்காகவும், ஊருக்காகவும் தானே கவலைப்படுகிறேன். மத்தவங்க மேல இருக்கிற கருனையால் தானே கவலைப்படுகிறேன். மற்றபடி எனக்கு ஒரு கவலையும் இல்லை என்று சுயபச்சதாபம் தேடும் சிலர் சொல்வதுண்டு. நம் கவலைகளை ஒழிக்க நம் எண்ண ஓட்டத்திலும் ஓடும் சில துன்புறுத்தும் வார்த்தைகளை கண்டுபிடித்து நாமே களையவேண்டும்.
        நான் பிரயோஜனமில்லாதவன், நான் முட்டாள், நான் துரதிருஷ்டசாலி என்று எண்ண ஓட்டத்தில் ஓடும் வார்த்தைகளை களைய வேண்டும்.
        கவலைகளை களைந்தால் வெளிப்படாமல் இருக்கும் ஆனந்த சக்தி வெளிப்பட ஆரம்பிக்கும். ஆனந்தம் பொங்கும்.......

வாழ்க வளமுடன்!

Friday, November 12, 2010

நம்பிக்கை வெளிச்சம் :

      நினைத்தது நிறைவேற வேண்டுமானால், முதலில் உங்களுக்கு எது வேண்டும் என்ற தெளிவு வேண்டும்...உறுதி வேண்டும், உங்களில் பெரும்பாலானவர்களுக்கு எது வேண்டும் என்று கேட்கத்தெரியாது. எது வேண்டாம் என்று சொல்லித் தான் பழக்கம்.
             'நான் தோல்வி அடையக்கூடாது, என் தொழிலில் நஷ்டம் அடையக் கூடாது, இதை நான் இழந்துவிடக்கூடாது' என்று 'வேண்டாம்' களையும்,  'கூடாது' களையும் தான் அதிகம் நினைக்கிறீர்கள்.
      நீங்கள் எதற்கு ஆசைப்பட்டீர்களோ, அதை முதலில் மனதளவில் கற்பனையில் உருவாக்குங்கள் அப்போது தான் அது நிஜத்திலும் உருவெடுக்கும்!
             ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால், மனதில் அதை எழுப்பி, அதை காகிதத்தில் வரைந்து, திருத்தி அமைத்து தானே நிஜத்தில் கட்டுகிறீர்கள்?
      அஸ்திவாரம் போடும் நிலையிலேயே, மனதில் உறுதியில்லாமல், இது என்னால் முடியுமா? என்று சந்தேகப்பட ஆரம்பித்தால், உங்கள் வீடு கற்பனையில் கூட எழும்பாது.
             'கடவுளே, இது வேண்டும்' என்று தீவிரமாக வேண்டிக் கொண்ட சிலருக்கு, ஆசைப்பட்டது கிடைத்திருப்பதை கவனித்திருப்பீர்கள். கடவுளா வந்து அதை நடத்திக் கொடுத்தார்?
      போர்களம் நோக்கி படையை நடத்திக் கொண்டிருந்தான் ஒரு தளபதி. பாதி வழியில் ஒரு ஒற்றன் எதிர்கொண்டான்.
             "தளபதியாரே, நம்மிடம் ஆயிரம் வீரர்கள் தான் இருக்கிறார்கள், எதிரிகளிடமோ பத்தாயிரம் வீரர்கள் இருக்கிறார்கள், நாம் பேசாமல் சரணைந்து விடலாம்" என்றான்.
      தகவல் அறிந்ததும் ஆயிரம் வீரர்களும் தைரியமிழந்தார்கள். அவர்கள் எல்லோரையும் அம்மன் ஆலயத்துக்கு வரச்சொன்னான் தள‌பதி.
             “வலுவான எதிரியை நம்மால் வெல்ல‌ முடியுமா? என்பதை தெய்வத்திடமே கேட்டுவிடுவோம். சந்நிதியில் இந்த நாணயத்தை சுண்டுகிறேன், தலை விழுந்தால் போருக்கு போக அம்மன் உத்தரவு தந்ததாக ஏற்போம். பூ விழுந்தால் இப்படியே திரும்பி விடுவோம்" என்று நாணயத்தை சுண்டினான்.
      தலை விழுந்தது. வீரர்கள் அனைவரும் உற்சாகமானார்கள். போருக்கு போனார்கள். அவர்களைப் போல் பத்து மடங்கு படை பலம் கொண்ட எதிரியை வீழ்த்தி விட்டார்கள். வெற்றியுடன் நாடு திரும்புகையில் அம்மனுக்கு நன்றி சொல்ல, எல்லோரும் அதே கோயிலில் கூடினார்கள்.
      தளபதி அப்போது தான் தம்மிடம் இருந்த நாணயத்தை  எடுத்துக் காட்டினான். அதில் இரண்டு பக்கமும் தலை தான் அசசாகி இருந்தது.
தெய்வமே உத்தரவு தந்துவிட்டதாக எண்ணிய வீரர்கள், எப்படியும் வெற்றி பெறுவோம் என்று முழுமையாக நம்பினார்கள். அவர்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் எழவில்லை, அதனால் வெற்றியே பெற்றார்கள்.
      அந்த விதத்தில் கடவுள் என்பது, மனதை ஒருமுகப் படுத்த பயண்படும் ஒரு கருவி. அவ்வளவுதான்.
மற்றபடி எதற்கெடுத்தாலும் கோயிலுக்கு போய் வேண்டிக்கொண்டால் காரியங்கள் நடந்துவிடுமா? கடவுள் மீது இம்மியளவும் சந்தேகம் இல்லாத பூரண நம்பிக்கை இருக்கிறதா? கள்ளம் கபடமற்ற அந்த குணம் இருந்தால் தான் உங்களுக்கு எதிர்மறையான எண்ணங்கள் எழாது, ஆசைப்பட்டது கிடைக்கும்.
      ஆனால் சந்நிதியில் ஒரு கண்ணும், வாசலில் விட்டு வந்த செருப்பின் மீது ஒரு கண்ணுமாகத்தான் உங்களால் கடவுளுடன் உறவு கொண்டாட முடியும் என்றால், கடவுளை நம்புவதாக நீங்களே உங்களை ஏமாற்றிக் கொள்கிறீர்கள். அவ்வளவு தான். அந்த பொய் விசுவாசம், உங்கள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள உதவாது.
      கடவுளிடம் வேண்டிக்கொண்ட பிறகும், அது நடக்குமோ, நடக்காதோ என்ற பயமும், மனப்போராட்டங்களும் தொடர்ந்திருந்தால், ஆசைப்பட்டது எப்படி கிடைக்கும்?
      சங்கரன்பிள்ளை ஒருமுறை வெகு தூரம் நடந்து, தற்செயலாக சொர்கத்துக்குள் நுழைந்துவிட்டார். அவருக்கு அகோரப்பசி, மிகவும் களைப்பாக இருந்ததால் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தார்.
      அது கேட்கும் வரங்களையெல்லாம் அள்ளித் தரும் கற்பகவிருட்சம். அது தெரியாமலேயே, 'இப்போது மட்டும் வயிறார, விதவிதமாக உணவு கிடைத்தால் எப்படி இருக்கும்?' என்று நினைத்தார்.
      அடுத்த கனம் ஆசைப்பட்ட உணவுவகைகளெல்லாம் அவர் முன் தங்கத் தட்டில் இருந்தன. விரும்பிய பழச்சாறுகளெல்லாம் தங்க கோப்பைகளில் இருந்தன.
      வயிறு நிரம்பியவுடன் தூக்கம் வந்தது. 'வசதியான கட்டில் இருந்தால்?' என்று நினைத்தார். உடனே ஒரு சொகுசான கட்டிலும் மெத்தையும் வந்தது.
      அவருக்கு இப்போது அச்சம் வந்தது.
             'நினைத்தவுடன் எப்படி எல்லாம் கிடைக்கிறது?  இதென்ன பிசாசுகளின் இருப்பிடமா?' என்று நினைத்தார். உடனே பிசாசுகள் அவரை சூழ்ந்தன.
             'ஐயையோ, பிசாசுகள் என்னைக் கொன்று விட்டால்?' என்று நினைத்தது தான் தாமதம், அடுத்த கனம் பிசாசுகள் அவரை கிழித்துத் தின்றன.
      சங்கரன்பிள்ளைக்கு நேர்ந்த கதியை கவனித்தீர்களா? உங்கள் எண்ணங்கள் எதிர்மறையாக‌ இருந்தால் இது தான் விளைவு.
      உங்கள் மனதில் தேவையானதிற்க்கு ஆசைப்படும் எண்ணம் ஒன்று எழுந்தால், நம்பிக்கையின்றி அச்சப்படும் எண்ணங்கள் ஆயிரம் தோன்றுகின்றன. உங்கள் ஆசைஎண்ணத்தின் சக்தியை பலவீனப்படுத்தும் அபத்தத்தை முதலில் விட்டொழியுங்கள்.

             ஆசைப்பட்டதை கொடுக்கும் கற்பகவிருட்சங்களைத் தேடி நீங்கள் காட்டுக்குள் போகத்தேவையில்லை. உங்கள் மனம் உறுதியாக இருந்தால் அதுவே உங்களுக்கு வரமளிக்கும் விருட்சமாக செயல்படும். எண்ணங்களால் ஏற்படும் அதிர்வுகளுக்கு, அந்த சக்தி உண்டு என்று விஞ்ஞானத்திலும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்….  
வாழ்க வளமுடன்!

Wednesday, November 10, 2010

Joy is Deeper and Inner...

If you use any external situation (ex: drinking) to create an inner situation (joy), you naturally get enslaved to that external activity and that becomes the condition for your joy.
            No such external situation (drinking, dancing, and painting) is possible for 24hrs in a day for joy. Joy is inner situation.
           Why do people want to consume alcohol? Why are people mad about sex? Why are people going for drugs? Why do people want to jump off mountains? Why do people want to do risky thing in their life? Somewhere every human being wants to know their life in a deeper way than he knows it right now.
            Most of the people pain is their deeper experience that they have known. They have never known the true pleasantness within themselves.
            Peoples Like artists, musicians, painters and dancers has always sought pain as their expression which gives depth to their work, because they know about only pain as the deepest, joy does not give depth to their work because they don’t know how to depict joy in its highest form. 

Tuesday, November 9, 2010

ஆனந்தமாக செயலாற்றுங்கள்:

      உங்களுடைய ஆசை என்ன? எதைத்தொட்டாலும் வெற்றி கிடைக்கவேண்டும் என்பது தானே.
     மேல்நாட்டு உளவியல் நிபுணர்கள் என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள், 'ஜெயிக்கவேண்டும், ஜெயிக்கவேண்டும் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். வெற்றியை குறிவைத்தே உங்களுடைய ஒவ்வொரு செயலும் இருக்கட்டும்' என்கிறார்கள்.
     பெரும்பாலும் இந்த முயற்சி உங்கள் ரத்தக் கொதிப்பை தான் அதிகரிக்கும், ஏன்?  
  வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகத்தில் படபடப்பு, அச்சம், கவலை, மனஉளைச்சல் என்று ஏராள‌மான பிசாசுகள் உங்கள் மீது வந்து ஏறிக்கொள்ளும்.
     இலக்கின் மீது ஒரு கண்ணை பதித்துக்கொண்டால், அவன் பாதிக்குருடனாகி விடுகிறான் என்கிறது, ஜென் தத்துவம். மிச்சமிருக்கும் ஒரு கண்ணை வைத்துக்கொண்டு எவ்வளவுதூரம் செயலாற்ற முடியும்.

     அப்படி அரைகுறை கவனத்துடன் செயலாற்றாதீர்கள். இந்த கனம் செய்ய வேண்டியதை இரண்டு கண்களையும் பயன்படுத்தி முழுமையாகச் செய்யுங்கள். எட்டிப்பிடிக்க வேண்டிய அவசியமில்லாமல், வெற்றி இலக்கை சுலபமாக தொட்டு விடமுடியும்.
     நீங்கள் கவனமாக உழைக்க வேண்டுமே தவிர, கடுமையாக உழைக்கத் தேவையில்லை. இதை விளக்க ஜென்னில் ஒரு அருமையான சம்பவம் உண்டு...
     சான்ஸு என்ற ஒரு ஜென் குரு இருந்தார், மிகச்சிறந்த வாள் வீரர். அவரிடம் ஒரு புதிய சீடன் சேர்ந்தான். 'இந்த நாட்டிலேயே ஒரு சிறந்த வாள் வீரனாக என்னை ஆக்க முடியுமா?' என்றான்.
     ' அதற்கென்ன பத்து வருடங்களில் உன்னை தயார் செய்துவிடுகிறேன்' என்றார் குரு. 'என்னது பத்து வருடங்களா? ஐந்தே வருடங்களில் சாதிக்க வேண்டும் குருவே, மற்றவர்களை விட இரண்டு பங்கு அதிகமாக உழைக்கத் தயாராக இருக்கிறேன்.'
'அப்படியானால் இருபது வருடங்களாகும்என்றார், சான்ஸு.

     சீடன் திகைத்தான், 'போதாது என்றால், இன்னும் நான்கு பங்கு உழைக்கத்தயாராக இருக்கிறேன்' என்றான்.
     'அப்படி செய்தால், நாற்பது வருடஙளாகுமே' என்றார் குரு. ஆம் உங்களை வருத்திக்கொள்ள வருத்திக்கொள்ள‍, நீங்கள் நினத்ததை அடைய இன்னும் அதிக காலமாகும். அதைத்தான் சன்ஸு அந்த சீடனுக்கு புரியவைத்தார்.
     கடுமையாக உழைப்பவர்கள் சில சமயம் வெற்றி பெறலாம். ஆனால் அதன் சந்தோசத்தை அனுபவிக்க முடியாது.
     உலகின் மிக அற்புதமான கண்டுபிடிப்புகள், விஞ்ஞானிகள் ஓய்வாக இருந்த‌ போதுதான் நிகழ்ந்திருக்கின்றன. மரத்தடியில் சும்மா உட்கார்ந்திருந்த போது தான், ஆப்பிள் விழுவதைக் கவனித்தார் ஐசக் நியுட்டன். புவியீர்ப்பு பற்றிய விதியை கண்டுபித்தார்.
     'பாத் டப்'பில் ஓய்வாக குளித்துக் கொண்டிருந்தபோது தான், மிதப்பது பற்றிய விதிகளை கண்டுணர்ந்தார், ஆர்கிமிடீஸ்.
     டென்சனில்லாமல், ரசித்து முழு ஈடுபாட்டுடன் பணிகளை செய்யும் போதுதான், மூளை அதன் உச்சத் திறனுடன் வேலை செய்யும்.

     கவனித்து பாருங்கள், விளையாட்டில் கூட, வெற்றியை நினைத்து அதிக படபட‌ப்புடன் விளையாடும் குழு தான் தோற்கிறது. விளையாட்டை அனுபவித்து ஆடுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.
     வெற்றி...வெற்றி... என்று உங்களை நீங்களே வருத்திக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் உடலள‌விலும், மனதளவிலும் நீங்கள் பலவீனமாகிப் போவீர்கள்.
     வெற்றியை பற்றிய அச்சத்தை விட்டுவிட்டு, மனதை அமைதியாக வைத்திருங்கள், உடல் தானாகவே வேகமாக உழைக்கும்.
     ஆனால், உங்களில் பெரும்பாலானவர்கள் நேரெதிராக அல்லவா இருக்கிறீர்கள், உங்கள் மனம் நிலையில்லாமல் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது, அதனால் உடலின் வேகம் குறைந்துவிடுகிறது.
     இப்படித்தான் சங்கரபிள்ளையின் வாழ்கையில் ஒரு வேடிக்கை நடந்தது.
     'ஒரு வேலையை, மாலையில் வீட்டுக்குப் போனதும் மறக்காமல் செய்யவேண்டும்' என்று  கைக்குட்டையில் ஒரு முடிச்சுப் போட்டுக்கொண்டார்.
     ஆனால், 'வீட்டுக்குப் போனதும் எதற்காக அந்த‌ முடிச்சுப் போட்டுக்கொண்டோம் என்பது அவருக்கு சுத்தமாக மறந்துவிட்டது.
     படபடப்பானார், மூளையை கசக்கினார், மொட்டை மாடியில் உலாத்தினார், நெற்றியில் தட்டிக்கொண்டார், நோட்டில் என்னென்னவோ கிறுக்கினார்.... உஹூம் நினைவுக்கு வரவேஇல்லை.
     'பேசாமல் படுத்தூங்குங்கள், எதுவாக இருந்தாலும் நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம்' என்று அவர் மனைவி அறிவுரை சொன்னார்.
     'மாட்டேன், எதாவது முக்கியமன விசயமாக இருக்கும், எப்படி தூங்குவது' என்று படுக்கையில் உட்கார்ந்தே இருந்தார்.
     இதுவா, அதுவா என்று மண்டைக்குள் நூறாயிரம் யோசனைகள் போச்சி மாதிரி பறந்தன. கடைசியில் இரண்டு மணிக்கு சலித்துப் போய் கைக்குட்டையை தூக்கி தூர எறிந்தார், சடக்கென ஞாபத்துக்கு வந்தது.
     ' இன்றைக்கு ஒண்பது ம்ணிக்கே தூங்கப் போகவேண்டும்' என்று நினைவுபடுத்திக்கொள்ள‌ போடப்பட்ட முடிச்சு அது.
     படபடப்பாக‌ மூளையை இயங்க விட்டால், சங்கரன்பிள்ளைக்கு நேர்ந்தது தான் உங்களுக்கு நேரும்.
     முடிவைப்பற்றிய கவலையை விடுங்கள், ஒவ்வொரு முறையும் முழுமையான ஆனந்தமான ஈடுபாட்டுடன் செயலாற்றுங்கள், வெற்றி தானாக உங்கள் கதவைத் தட்டும்….

Sunday, November 7, 2010

ஆனந்தமாக எதிர்கொள்ளுங்கள்:

     உங்களுக்கு சந்தோசமானது என்று நம்பி ஏற்றுக் கொண்டது எதுவாக இருந்தாலும், அத்தோடு சில சவால்கள் இலவச இணைப்பாக வந்து சேரும்.
     அது கடின உழைப்பாக இருக்கலாம், மும்முரமான போட்டியாக இருக்கலாம், எதிர்பாராத தடைகளாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் ஆசையோடு, சந்தோசத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.
     உங்கள் வளர்ச்சியில் உண்மையில் விருப்பம் இருந்தால், பிரச்சனைகளை ஆனந்தத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.
     தோற்றுக் களைத்தவர்கள், பொதுவாக சொல்லும் காரணம் என்னவென்று தெரியுமா?
     'எனக்கு மட்டுமே நேரம் சரியில்லை, நான் மாவு விக்கப்போனால் காற்று அடிக்கிறது, உப்பு விக்கப்போனால் மழை பெய்கிறது
     நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும், இந்த உலகம் உங்கள் மீது பிரச்சனைகளை வீசித்தான் பார்க்கத்தான் போகிறது. அப்புறம் ஏன் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயங்குகிறீர்கள்.
     கடினமான சந்தர்ப்பங்கள் உங்களுக்கு கிடைத்த சாபங்கள் அல்ல, உங்களுக்கு அருளப்படும் வரங்கள்.
     ஒரு சினிமாவுக்கு போகிறீர்கள், அடுத்தடுத்த காட்சிகள், நீங்கள் எதிர்பார்த்த மாதியே வந்து கொண்டிருந்தால், அந்த சினிமாவை ரசிப்பீர்களா அல்லது போர் என்று எழுந்து வெளியே வருவீர்களா?
எதிர்பாரத திருப்பங்கள் தானே ஒரு வாழ்க்கையை சுவையானதாக அமைத்து தரமுடியும். கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாக சண்டைக்கு போனான்.
     " உனக்கு பயிர்களை பற்றி என்ன தெரியும், நீ நினைத்த போது மழையை அனுப்புகிறாய், தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்திரவாக இருக்கிறது. பேசாமல் அந்த வேலைகளை ஒரு விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்து விடேன்"
     கடவுள் உடனே, "அப்படியா? சரி, இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பட்டிலேயே இருக்கட்டும்" என்று வரம் அருளிவிட்டு போய்விட்டார்.
     விவசாயிக்கு சந்தோசம் பிடிபடவில்லை, அடுத்த பருவம் வந்தது.
     மழையே, பெய் என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது நிறுத்தியது. ஈரமான நில‌த்தை உழுதான், தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதைகளை தூவினான். மழை, வெய்யில், காற்று எல்லாம் அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைபசேல் என்று வளர்ந்தது, வயலைப் பாக்கவே படுரம்மியமாக இருந்தது.
     அறுவடை காலம் வந்தது, விவசாயி ஒரு கதிரை அறுத்தான். திறந்து பார்த்தான். அதிர்ந்தான். உள்ளே தானியத்தை காணவில்லை. அடுத்தடுது எல்லாவற்றிலுமே தாணியமே இல்லை.
     "ஏ கடவுளே!" என்று கோபத்தோடு கூப்பிட்டான். மழை, வெய்யில், காற்று என்று எல்லாவற்றையுமே சரிவிகிதத்தில் தானே பயன்படுத்தினேன், ஆனால் பயிர் நாசமாகிவிட்டதே? ஏன் என்றான்.

     கடவுள் புன்னகைத்தார்! "என் கட்டுப்பாட்டில் இருந்தபோது, காற்று வேகமாக வீசும், அப்போது கதிர்களெல்லாம், அம்மாவின் மடியை இருக்கிக்கொள்ளும் குழந்தையை போல, பூமிக்குள் தனது வேர்களை எல்லாம் மிக ஆழமாக அனுப்பி பிடித்துக்கொள்ளும். மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை அனுப்பி நாலபக்கமும் அனுப்பும், போராட்டங்கள் இருந்தால் தான் தாவரங்கள் தங்களை பாதுகாத்துக்கொண்டு, மிக வலுவாக வளரும். எல்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில், உன்பயிர்களுக்கு சோம்பேரித்தனம் வந்துவிட்டது. தளதள வென்று வளர்ந்ததே தவிர, அரோக்கியமான தானியங்களை வழங்க தவறிவிட்டது!.
     வேண்டமடா! உன் மழையும், காற்றும்! நீயே வைத்துக்கொள் என்று அவற்றை, கடவுளிடமே திருப்பித் த‌ந்து விட்டான்.
ஆம், வாழ்க்கையில் எல்லாமே செளகிரியமாக அமைந்து விட்டால், அதைப் போன்றதொரு வெறுமை வேறெதுவும் இல்லை.
     பிரச்சனைகள் உங்களைப் போட்டு அழுத்தும் போதுதான், உங்கள் திறமை அதிகரிக்கும். சவால்கள் தான் ஒரு மனிதனை முழுமையாக்கும்.
     இருட்டு என்ற ஒரு பிரச்சனை இருந்ததால் தானே, மின்விள‌க்கை கண்டுபிடித்தீர்கள். பயணம் என்பது ஒரு பிரச்சனையாக‌ இருந்ததால் தானே, வாகனங்களுக்கு உருக்கொடுத்தீர்கள், தொலைவில் இருப்பவர்களை தொடர்புகொள்வது பிரச்சனையாக‌ இருந்ததால் தானே, தொலைபேசியை கண்டுபிடித்தீர்கள்.
      பிரச்சனைகள் இல்லாவிட்டால், உங்களின் மூளையின் திறனை எவ்வாறு அறீவீர்கள். சங்கரன்பிள்ளை வீடு கட்ட விரும்பினார், கட்டட நிபுனர் விதவிதமான பிளான்களைக் காட்டினார்.
"இல்லை, இது இல்லை, நான் நினைத்திருப்பது வேறு மாதிரி என்று, ஒவ்வொரு பிளான்னையும் நிராகரித்தார் சங்கரன்பிள்ளை. நிபுனர் களைத்துப் போனார். "உங்க‌ள் மனதில் என்ன தான் இருக்கிறது?" என்று கேட்டார்.
     ஒரு புராதண பித்தளைக்குமிழை சங்கரன்பிள்ளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் காட்டினார். " இதைக் கதவில் பொருத்தக்கூடியது மாதிரி ஒரு வீட்டுப்பிளானை இதுவரை நீங்கள் எனக்கு காட்டவில்லையே" என்றார்.
     பிரச்சனைகளை எதிர்கொள்ள தைரியம் இல்லை...ஆனால் வாழ்க்கை மட்டும் வசதியாக அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் தான், சங்கரன்பிள்ளையைப் போல் கதவுக்குமிழை வைத்துக்கொண்டு அரண்மனைக்கு அசைப்படுகிறார்கள்.
     எதற்காக எல்லாமே திட்டமிட்டபடி முடியவேண்டும், ஏதாவது ஒன்று பிய்த்துக்கொண்டு போகட்டுமே... அதை எதிர்கொள்வோம், சமாளிப்போம், அது தானே உண்மையான வெற்றி.
     முடிவு சாதகமாக இருக்குமா? இருக்காதா? என்று வீண் யோசனைகள் செய்யாமல். முழுமையான ஈடுபாட்டுடன், ஆனந்ததோடு சவால்களை எதிர்கொள்ளுங்கள்…………

Saturday, November 6, 2010

ஆனந்தத்திற்கான வழி‍ - சக்திமாற்றம்:

      உலகில் சக்தியற்றவர்கள், பாதகங்கள் செய்வதில்லை. சக்திசாலிகளே பாபம் செய்கின்றனர், அவர்களுடைய அபரீதமான சக்தி அவ்வாறு அவர்களை செய்ய வைக்கின்றது. பலசாலிகளே தீயசெயல்களில் இறங்குகின்றனர். ஏனெனில் சக்தியை சரியான வழியில் உபயோகிக்கும் முறை அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் குற்றவாளிகள், பாவிகள் ஆகிவிட்டனர். அவர்களுக்கு சரியான வழி காட்டப்பட்டால் அவர்களும் ஆனந்தத்தை அடைவார்கள். அங்குலிமாலன்  கதை…….
      அங்குலிமாலன் எத்தனை கொலைகள் செய்தான். ஆயிரம் பேர்களை கொல்வதாக சபதம் செய்திருந்தான். தொள்ளயிரத்து தொண்ணூற்று ஒன்பது பேர்களை கொன்று விரல்களை மாலையாக அனிந்திருந்தான்.கடைசி ஆள் தேவை.   
     அங்குலிமாலன் வருவதாக செய்தி கிடைத்தாலே அந்த இடம் ஜனசஞ்சாரம் அற்றுபோய்விடும். சிறிதும் யோசனையின்றி யார் வந்தாலும் கொன்று வந்தான். அரசனும் நடுங்கினான், பெரிய சேனையை அனுப்பி வைத்தும் அவனை பிடிக்கமுடியவில்லை.

      புத்தர் ஒரு கிராமத்தின் வழி வந்தபோது, மக்கள் அவரை எச்சரித்து தடுத்தனர். அந்த வழி போகாதீர்கள் அங்குலிமாலன் வருகிறான் உங்களைக் கூட கொல்லத் துணிவான் என்று சொன்னனர்! ஆனால் புத்தர் நாம் யார் பொருட்டும் பாதை மாறவேண்டாம், மேலும் நாம், அங்குலிமாலன் அங்கே இருந்தால் அந்த வழி செல்ல வேண்டியது அவசியமாகிறது என்று தொடர்ந்தார்..அவன் என்னை அழிக்கிறானா? நான் அவனை அழிக்கிறேனா? என்று பார்ப்போம் என்றார்!
      தங்களிடம் தான் ஆயுதம் ஏதும் இல்லையே நீங்கள் எப்படி அவனை அழிக்கமுடியும்? என்றனர். இவ்வாறு சொன்ன புத்தர் அங்குலிமாலனை எதிர்பாராமல் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தற்காக மிகவும் மகிழ்ந்தார்.
      புத்தர் அந்த‌ வழியே சென்றார். அங்குலிமாலன் அவரை தொலைவில் இருந்தே கண்டுகொண்டான். அயுதமற்ற ஒரு பிட்சு அமைதியாக வந்துகொண்டிருப்பதை கண்டான். உடனே அவன் உரத்த குரலில் "இங்கே வராதே நீ ஒரு சன்யாசி என்பதனால் எச்சரிக்கிறேன் கிட்டே வந்தால் உன்னைக் கொன்று விடுவேன் திரும்பிப்போ, நான் யாருக்கும் கருணை காட்டமாட்டேன்" என்றான்!

      புத்தர், "நானும் யாருக்ககவும் திரும்பிப்போக மாட்டேன், ஒரு சன்யாசி எப்போதும் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டான். நீயும் முன்னே வா நானும் வருகிறேன்" என்று கூறினார்.
அங்குலிமாலனுக்கு ஆச்சரியமாகியது, தன் கோடாரியை எடுத்துக்கொண்டு நேரே புத்தரிடம் வந்தான். இருவரும் ஒரு மரத்தடியில் சந்தித்துக்கொண்டனர். அங்குலிமாலன் அவரிடம் " நீ வலிய வந்து மரணத்தை ஏற்கிறாய்" என்றான்.
      புத்தர். "என்னை வெட்டும் முன் இந்த மரத்தினில் இருந்து நான்கு இலைகளை பறித்துத் தரமுடியுமா?" என்று கேட்டார்.
உடனே அங்குலிமாலன் தன் கோடாரியை வீசினான் அதில் மரத்தின் ஒரு கிளையே வெட்டப்பட்டு விழுந்தது. அங்குலிமாலன் "நான்கு என்ன நாலாயிரம் இலைகள் இதோ" என்றான்.
புத்தர்' "மற்றுமொரு வேலைசெய் என்னைக் கொல்லும் முன் இந்த கிளையை முன்போலவே மறுபடியும் இணைத்துவிடு" என்றார்.
      அவன் விழித்தான்! அது கஷ்டம், இயலாத காரியம்" என்றான்.
புத்தர் "பறிப்பதும், வெட்டுவதும் குழந்தைகள் கூட செய்ய முடியும். இணைக்க முடிந்தவன் தான் சக்தியுள்ளவன், பலசாலி. நீ மிகவும் பலமற்றவன். உன்னால் பறிக்க மட்டுமே முடியும். இனி நீ பலசாலி என்ற எண்ணத்தை இத்துடன் விட்டுவிடு. ஒரு இலையை கூட இணைக்க முடியாதவன்!" என்றார்.
      அவனது சுய அபிமானத்திற்கு முதன் முறையாக அடி விழுந்தது, ஒரு கணம் தீவிரமாக யோசித்தான். பிறரைக் கொல்வதும், அழிப்பதும் எந்த பலவீனனும் செய்ய முடியும் என்பது அவனுக்கு உறைத்தது. நான் பலவீனன் அல்ல?
சரி தான்! "இந்த இலையை இணைக்கவும் ஏதாவது வழியிருக்கிறதா? என்று கேட்டான்.
      ஆம்! நாங்கள் அந்த வழியிலேயே சென்றுகொண்டிருக்கிறோம்! என்றார் புன்னகையுடன்.      அவன் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். நீயும் வா என் பின்னே என்றார்! அங்குலிமாலனும் அவர் பின்னே கோடாரியை வீசிவிட்டு நடக்கலானான்! பிட்சுவானான்! ஆனந்த‌த்தை அடைந்தான்... புத்தர் அங்குலிமாலனுக்கு அவனுள் இருந்த அபரீதமான சக்தியை மாற்ற‌மடைய செய்து ஆனந்தத்தை அடையச் செய்தார்

Wednesday, November 3, 2010

ஆனந்த தாகம்

    கெளதம புத்தர் ஒரு கிராமத்தில் இருந்தபோது, " நீங்கள் தினமும் கூறுகிறீர்கள் ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடையமுடியும் என்று! ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஏன் மோட்சத்தை அடைவதில்லை? என்று கேட்டான்.

    புத்தர்,"நண்பனே! ஒரு வேலை செய்! மாலை கிரமத்தினுள் சென்று எல்லோரும் அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்று தெரிந்து வா. ஒரு பட்டியல் தயார் செய்!" என்றார். "ஒவ்வொருவருடைய பெயரையும் எழுது அதற்கு எதிரே அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்று எழுது!"

    அவன் சென்று ஒவ்வொருவராக விசாரித்தான். அனைவரும் பதிலளித்தனர். இரவு அவன் புத்தரிடம் திரும்பி வந்து தனது குரியீட்டை அளித்தான். புத்தர்," இதில் எத்தனை பேர் மோட்சத்தை அடைய விரும்புகிறார்கள்?" என்று கேட்டார்.

    அவன் ஆச்சரியம் அடைந்தான். அந்த பட்டியலில் ஒருவர் கூட தமது விருப்பம் மோட்சத்தை அடைவது என்று எழுதவில்லை. புத்தர், "ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடைய முடியும் என்று தான் நான் கூறினேன், ஆனால் ஒவ்வொருவரும் மோட்சத்தை அடைய விரும்புகிறவர்கள் என்று கூறவில்லை" என்றார்.

    ஒவ்வொரு அடைய முடியும் என்பது வேறு விஷயம், ஆனால் ஒவ்வொருவரும் அடைய விரும்புகிறனரா என்பது வேறு விஷயம். உண்மையில் நீங்கள் அடைய விரும்பினால், உங்களை இந்த உலகில் வேறு எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த திறமை கொண்டதல்ல!

    நீங்கள் அடைய விரும்பாவிட்டால், உங்களுக்கு இந்த உலகில் வேறு எந்த சக்தியும் அளிக்கத் திறமை கொண்டதல்ல! உண்மையில் உங்க‌ளுக்கு ஆனந்தத்தை, அமைதியை அடையும் விருப்பம் இருக்கிறதா?

    இல்லை என்றால், நீங்கள் எது செய்தாலும் அதில் உயிர் இருக்காது, உயிரின்றி செய்யும் எந்த செய‌லுக்கும் பயன் இருக்காது, பலனின்றி செய்யும் எந்த செயலுக்கும் செயல் பொறுப்பல்ல! நீங்களே பொறுப்பு...............

ஆனந்தமே இயல்பு :

    சாலைகள் கூடும் இடத்தில் சில நிமிடம் நில்லுங்கள், உங்களை கடந்து செல்பவர்களை கவனியுங்கள், எத்தனை முகங்கள் சந்தோசமாக இருக்கின்றன? நூறு பேர் கடந்து போனால், அதில் நான்கோ ஐந்தோ முகங்களில் தான் சிரிப்பி்ருக்கிறது. அவர்களும் இளைஞர்களாகத்தான் இருக்கிறார்கள், மற்றவர்கள் எதோ வாழ்கையை தொலைத்துவிட்டவர்கள் போல் தெரிகிறார்கள். ஏன் இப்படி?
         வெளியெ ஏன் போக வேண்டும்? உங்களையே கண்ணாடியில் பாருங்களேன்.... உங்கள் முகத்தில் ஆனந்தமும் கொண்டாட்டமும் தெரிகிறதா? அல்லது சிரிப்பை வற்புறுத்தி அழைத்து வரவேண்டியிருக்கிறதா?
        உங்களின் ஐந்து வயது விசயங்கள் ஞாபகமிருகிறதா? எப்படி எல்லா விசயங்களுக்கும் பொங்கி பொங்கி ஆனந்தப்பட்டீர்கள் என்று ஞாபகமிருகிறதா? ஐந்து வயதில் உங்கள் உயரமென்ன? இப்போது உங்கள் உயரமென்ன? உங்கள் சந்தோசமும் குறைந்தபட்சம் அதே விகிதத்தில் வளர்ந்திருக்க வேண்டாமா?         
        கள்ளம் கபடமற்ற அந்த வயதில் உங்களுக்கு சந்தோசத்தை தவிர வேரெதுவும் தெரியாது. பிறகு என்ன ஆனது? நீங்கள் வளர்ந்தீர்கள் சசந்தோசமாக இருக்க பல விஷயங்களை தேடி தேடி சேகரித்தீர்கள் பெரிய படிப்பு, கம்ப்யூட்டர்,மோட்டார் சைக்கிள்,கார்,வீடு,டி.வி,கிரெடிட் கார்டு, டி.வி.டி, ஏ.சி, செல்போன் என அவரவர் முயர்ச்சிகேர்ப்ப வசதி சேர்த்து விட்டீர்கள்... ஆனால் என்ன ஆனது? சந்தோசத்துக்காக இவ்வளவு தேடிய நீங்கள், கடைசியில் உங்கள் சந்தோசத்தை மட்டும் தொலைத்துவிட்டீர்கள். எங்கே போயிற்று உங்கள் சந்தோசமெல்லாம்?
         ஒரு முறை சங்கரன்பிள்ளை மூச்சு முட்டக் குடித்துவிட்டு பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார். வந்த பஸில் கூட்டம் பிதுங்கிவழிந்தது. எப்படியோ அதில் ஏறிவிட்டார். பத்து பதினைந்து பேர் காலை மிதித்து, நான்கைந்து பேரை முழங்கையால் நெட்டித்தள்ளி உள்ளே நகர்ந்தார்.
       ஒரு மூதாட்டிக்கு பக்கத்து இருக்கையில் இருந்தவர் எழுந்ததிருப்பதை பார்த்ததும், சங்கரன்பிள்ளை பலரையும் இடித்து தள்ளி பாய்ந்தார். குடிகாரனோடு மல்லுக்கு நிற்கவேண்டமே என்று அனைவரும் முகச்சுழிப்புடன் ஒதுங்கி வழி விட்டனர். சங்கரன்பிள்ளை பெரிமிதத்தோடு அந்த இருக்கையில் தொப்பென‌ அமர்ந்தார்.
        உட்கார்ந்த வேகத்தில் அந்த இருக்கையில் இருந்த மூதாட்டியின் மேல் சரிந்தார். மூதாட்டி மடிமீது வைத்திருந்த பழக்கூடை சரிந்தது. மூதாட்டி கோபமாக பார்த்து "நீ நேரே நரகத்திற்கு தான் போகப்போகிறாய்" என்று ஆத்திரத்தோடு சொன்னார்.
        சங்கரன்பிள்ளை பதறி அடித்துக்கொண்டு எழுந்தார் "ஹோல்டன் ஹோல்டன், வண்டியை நிறுத்துங்கள். நான் போக வேண்டியது காந்தி நகருக்கு, மாறி வேற வண்டியில் ஏறிவிட்டேன் என்று கத்தினார்.
        இப்படித்தான் உங்களில் பலர் எந்த பஸில் ஏறியிருக்கிறோம் என்றே தெரியாமல் ஏறுவதும் இறங்குவதுமாக அல்லாடிக் கொண்டிருக்கின்றோம்.
        ஆசைப்பட்டது கிடைக்காமல், சோகத்தில் முகத்தை தூக்கி வைத்துக்கொள்வதே முட்டாள்தனம். ஆசைப்பட்டது கிடைத்தும் கூட ஏன் சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்கத் தெரியாமல் தவிக்கிறீர்கள்?
        இயற்கையிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.
        தென்னை மரத்தை கவனியுங்கள், உஙள் தோட்டத்தில் நெடு நெடுவென வளர்ந்திருக்கிறது. சுவையான தேங்காய்களாக வ்ழங்கிக் கொண்டு இருக்கின்றது. மற்ற மரங்களை வெட்டிப் போடும் நேரத்தில் கூட தென்னையை வெட்ட மனசு வராது உங்களுக்கு. அதற்கு தண்ணீர் ஊற்றி கவனித்துக் கொள்வீர்கள். ஆனால் உங்களிடம் தண்ணீரை எதிர்பார்த்தா அது தேங்காய்களை சுமக்கிறது?
        அது அதன் இயல்பு. அதன் இயல்பு என்னவோ அதன் படி நடந்து கொள்கிறது. அதற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் தானாகவே கிடைத்துவிடும்.
        இயல்பு, அதை ஒட்டிய செயல், அதற்கான பலன் என்பது தான் இயற்கை வகுத்துள்ள நியதி.
         ஆனால் நீங்கள்? உங்களுக்கு சச்சின் போல கிரிக்கெட் ஆட வெண்டும், ஐஸ்வர்யாராய் போல அழகாக இருக்க வேண்டும், பில்கேட்ஸ் போல ப்ணக்காரராக வேண்டும். அந்த மாதிரி ஒரு கார், இந்த மாதிரி ஒரு பங்களா, அவரைப்போல ஒரு வாழ்க்கை, இவரைப் போல செல்வாக்கு.. இப்படி பலனை முதலில் தீர்மானிதீர்கள், அதை எதிர்பார்த்து செயலில் இற‌ங்கினீர்கள்.அது உங்க‌ளுக்கு சரி வருமோ இல்லையோ அதை உங்களுக்கு இயல்பாக்கப் பார்கிறீர்கள்.
        இப்படி அடுத்தவரைப் பார்த்து, அதே போல் உங்கள் வாழ்கையை அமைத்துக் கொள்ள முயற்சிக்கும் போது உங்கள் வாழ்கை நரகமாகிப் போகும்....ஆம்....உங்கள் இயல்பை புரிந்து கொள்ளாமல் எதிர்திசையில் துடுப்புப் போடுவதே வாழ்கையில் அத்துனை துன்ங்களுக்குமே காரணம்.
       உங்கள் அடிப்படை எண்ணம் குற்றமல்ல. உங்கள் இயல்பை எப்படி புரிந்து கொள்வது? எப்படி ஆனந்தமாக வாழ்வது?